Wednesday, April 25, 2007

தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது: பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி.


தமிழர்கள் பயங்காரவாதிகள் அல்ல எனவும், தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது என்பதை வலியுறுத்தியும், பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.

பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந்தப் பேரணி, இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கைளை பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதுடன், அனைத்துலக ரீதியாக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் பரப்புரையை முறியடிக்கவும் இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியை பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது.
நன்றி>பதிவு.

No comments: