Saturday, March 31, 2007

'விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது': "தி எக்கொனமிஸ்ற்"

"தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். எனவே எப்போதும் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமானது."


ஆசியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொணமிஸ்ற்" சஞ்சிகை தனது ஆய்வுச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அந்த ஆய்வின் முக்கிய பகுதிகள் வருமாறு:

"போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு.

கடந்த மார்ச் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் சிறிலங்காவின் பிரதான வான்படைத் தளத்தை தாக்கியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டி 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கத்துடன் போராடி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் வான்படை வலு இடம்பெற்று வரும் போரில் பயங்கரமான புதியவகை உத்தி.

5 ஆண்டு கால போர்நிறுத்த உடன்பாடு பேச்சளவில் மட்டும் இருக்கும் போது போர் தீவிரமடைந்து வருகின்றது.

தமது வான்படையின் இரு வானூர்திகள் கொழும்பு அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையாக உள்ள சிறிலங்காவின் வான்படைத் தளத்தின் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பி வந்துவிட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவருடன் வானோடிகள் நின்று எடுத்த படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தளத்தில் தரித்து நின்ற வான்படையினரின் வானூர்திகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக இரு தரப்பும் முரண்பாடான தகவல்களை தெரிவித்தனர்.

சிறிலங்காவின் தெற்குப்பகுதி பெருன்பான்மையாக சிங்கள மக்களைக் கொண்ட பகுதியாகும். அங்கு இடம்பெற்ற இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதுவாக நகரும் இலகுரக வானூர்தி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியின் மேலாக 400 கி.மீ (250 மைல்) தூரத்திற்கு யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு பயணித்து வந்தது பெரும் சவாலாகும்.

இந்த தாக்குதலில் பாதிப்படைந்த படையினர் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மேலும் மார்ச் 28 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். இது விடுதலைப் புலிகளுக்கு ஒரு பின்னடைவாகும். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு முன்னரும் விடுதலைப் புலிகளின் பகுதி கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின்படி 155,000 மக்கள் கடந்த 6 வாரங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் கிழக்கின் முழுப்பகுதியையும் விடுவித்து விடலாம் என அராங்கம் நம்புகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது மற்றுமொரு களமுனையையும் திறந்துள்ளது. அதன் பிரதான நோக்கம் மடு தேவாலயத்தை கைப்பற்றுவது தான். அதன் நோக்கம் கிறிஸ்தவர்களின் ஆதரவை பெறுவதாகும்.

தற்போதும் அரசாங்கத்தின் பேச்சாளர்கள் பேச்சுவார்த்தை மூலமான தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாக வாயை திறப்பதில்லை. ஆனால் எதிர்வரும் 3 வருடங்களில் போரில் வெற்றிபெற்று விடலாம் என அதிகாரிகள் பேசுகின்றனர். இந்த போரில் 70,000 மக்களின் உயிரிழந்துள்ளனர். இதில் 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்த மோதல்களில் உயிரிழந்த 4,000 மக்களும் அடங்குவர்.

எப்போதும் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. அவர்கள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் (இங்கு அவர்களிடம் சிறிய கடற்படையும் உண்டு), வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும்.

யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி தெற்கில் வந்து குண்டுகளை வீசிச் சென்ற விடுதலைப் புலிகளின் வான்படையின் வலிமை தென்பகுதிக்கு மற்றுமொரு வடிவில் போரை கொண்டு சென்றுள்ளது. இது கடும் போக்காளரான அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்குகான ஆதரவை மழுங்கடித்து விடும். கடந்த கால இராணுவ நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு மக்களை தள்ளியுள்ளது.
நன்றி>புதினம்.

Friday, March 30, 2007

இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்!!!

-சிங்கள நாளிதழ் திவயின-

இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும்.

முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து ஷ்ரீ லங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன.

ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன.

1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம்.

2. பிரபாகரனின் தாயகக் கொள்கை

3. இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987)

மேற்படி மூன்று விடயங்களில் இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு என்பது ஸ்ரீ லங்காவுக்கு இந்தியா நேரடியாக இல்லாத முறையில் சுற்றி வந்து கொடுக்கும் அழுத்தமாக அமைந்துள்ளது. இதற்கேற்ப இந்தியாவுக்கு வேண்டாத முறையிலான ஸ்ரீ லங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறியடித்தல் மேற்படி இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையில் ஒரு அங்கமாகும். (கட்டுநாயக்கவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலுக்கும் இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையே பொறுப்புக் கூற வேண்டும். இது பற்றி தொடரும் பந்திகளில் விபரித்துள்ளோம்.) ஸ்ரீலங்கா குழப்பங்களற்ற சமாதானமான பிராந்தியமாக முன்னேற்றமடைந்து வருவதை விரும்பாத நிலையில் இந்தியாவே பிரபாகரன் என்ற வியாதியை ஸ்ரீலங்காவில் அறிமுகப்படுத்தியது. இந்தியா ஸ்ரீ லங்கா மீது பலாத்காரமாக 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திணித்ததற்குக் காரணமும் இந்தியாவின் ஆதிக்க விஸ்தரிப்பு நிலைப்பாட்டுக்கேற்ப ஸ்ரீ லங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலத்தை பிரபாகரனிடம் ஏலம் போடுவதற்கேயாகும்.

இனி மேற்படி இந்தியாவின் விஸ்தரிப்பு அழுத்தமும் மற்றும் இந்நாட்டின் மீதான பலவந்தக் கொள்கையும் கட்டுநாயக்காவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம். கடந்த 2002 ஆம் ஆண்டில் அதிநவீனமான ராடர் உபகரணத்தின் தேவை ஸ்ரீ லங்காவுக்கும் ஏற்பட்டிருந்தது.

அது நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராடர் உபகரணத்தைப் பெற வேண்டிய அத்தியாவசிய தேவையாகும். இவ்வாறான உயர் தொழில் நுட்ப ராடர்களை சீனா உற்பத்தி செய்து நியாயமான விலைகளில் விற்று வந்ததால் சீனாவிலிருந்து ராடர்களை விலைக்கு வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா முயற்சி எடுத்தது. ஆனால், சீனாவுடன் பனிப்போரில் நெடுங்காலமாக ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு இவ்வாறு ஸ்ரீ லங்கா சீனாவுடன் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக் கொள்வதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் உடைய ராடர் கருவிகளை ஸ்ரீ லங்காவில் பொருத்தி வைத்தால் இந்தியப் பிரதேசங்களிலுள்ள யுத்த தளங்களின் இரகசியங்கள் அந்நியர் கைகளில் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் இந்தியா தானாகவே முன்வந்து அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ராடர் கருவியை ஸ்ரீ லங்காவுக்கு வழங்கியது.

கட்டுநாயக்க விமானப்படை முகாமில் பொருத்தப்பட்ட இந்தியாவின் ராடர் உபகரணம் இன்னும் முற்றாகப் பொருத்தி முடிக்கப்படாத பழைய வகை ராடர் உபகரணமாகும்.

தொழில் நுட்ப ரீதியில் முன்னைய முதலாம் பரம்பரைக்குரியதென கருதப்படும் இரட்டை அமைப்புடைய அந்த ராடர் கருவி மூலம் பெறக்கூடிய பயனைப் பொறுத்தவரை எந்த பிரியோசனமும் கிடையாது என்பது இப்போது தெரிந்து விட்டது. (அப்படி ஏதேனும் பயன் இருந்திருந்தால் பிரபாகரனின் விமானங்கள் கட்டுநாயக்காவை நெருங்கியிருக்க முடியாது).

இந்தியா அன்று ஸ்ரீ லங்காவுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு பயங்கரமான ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது. இதன் மூலம், நிகழ்ந்து கொண்டிருப்பது யாதெனில், இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பிரபாகரன் எனப்படும் நாசகார சக்தி இந்தியாவின் அழுத்தத்திற்கேற்ப தொடர்ந்து மனிதப் படுகொலைகளை செய்து கொண்டிருக்கப் போகிறது. இந்தியா எம்மீது சுமத்தியுள்ள ராடர் எனப்படும் பழைய இரும்புக் குவியலிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த இரும்புக் குவியலை உருக்கி மண்வெட்டிகள் செய்வதற்காக வைத்துக் கொண்டு வேறுநாட்டிலிருந்து அதிநவீன டாடர் உபகரணங்களை நாம் பெற்றுக் கொள்ளா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து மிகப் பெரியதாகவே இருக்கும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயுள்ள பகைக்கு ஸ்ரீலங்கா பலியாகிவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீ லங்காவின் அனைத்து அரசாங்கங்கள் மீதும் இந்தியா பிரயோகித்த அழுத்தங்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். எமது மூத்த சகோதரன் என்ற ஸ்தானத்தில் இருக்க வேண்டிய நாடு இன்று எங்களை அழித்தொழிக்க முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ளுவதும் கடினமாகும்.

-திவயின ஆசிரிய தலையங்கம்: 28.03.2007-



நன்றி>தினக்குரல்

தமிழீழ வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை!!!




மின் அஞ்சல் ஊடாக சு.ப.தமிழ்ச்செல்வன், "ஜனசக்தி"க்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கேள்வி: விடுதலைப் புலிகள் சமீபத்தில் முதன்முறையாக விமானத்தாக்குதல் நடாத்தி இலங்கைப் படைகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் ஈழத்தமிழருக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் என்னென்ன?

பதில்: சிறிலங்கா அரசும் சிங்களப் பேரினவாதமும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, இன அழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டமையால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் தீவிரமடைந்தது. இப்படிப் படிப்படியாக எமது ஆயுதப்போராட்டம் வளர்ச்சியடைந்து இன்று ஒரு நடைமுறை அரசை இயக்குகின்ற அளவுக்கு வலுப்பெற்றிருக்கின்றது. பெருமளவு நிலப் பிரதேசத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற அளவுக்கும் எமது மரபுவழிக் கட்டுமானங்களைக் கட்டியெழுப்பி எமது மக்களைப் பாதுகாப்பதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுப்பதற்கும் தக்கவாறான பாரியளவு வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.

இந்த வகையில் எமது படைக்கட்டுமானங்களினுடைய வளர்ச்சியும் அதன் தொடர்ச்சியுமே இன்று விமானப் படையின் தோற்றமாக மாறியிருக்கின்றது. எமது விமானப்படை இதுவரை பொறுமை காத்தது. இப்பொழுது சிறிலங்கா விமானப் படை எமது மண்மீது தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் அதன் மீது பதில் நடவடிக்கையொன்றை நடாத்தி அதனைச் செயலிழக்கச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. அதனால் தான் எமது விமானப்படையைப் பயன்படுத்தி இத்தாக்குதலை மேற்கொண்டிருந்தோம். எம்மைப் பொறுத்தவரையில் எமது சுதந்திரப் போராட்டத்தில் இதுவொரு மைல்கல்லாகவே இருக்குமென நான் கருதுகின்றேன். இது ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுடைய வலிமையை அதிகரித்திருக்கிறது. இது விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு உந்துசக்தியாக அமையுமென்றே எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: விமானப்படைத் தாக்குதலுக்கு இது சரியான தருணம் என நினைக்கின்றீர்களா?
பதில்: சிறிலங்கா விமானப்படையினர் அண்மைக்காலத்தில் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக குண்டுகளை வீசி பல நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டு, பொறுமை காத்து இருப்பதென்பது எமது மக்களை ஒரு மிகப்பெரும் பேரழிவுக்குள் இட்டுச்செல்லும் என்றே நான் நினைக்கின்றேன். இந்நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கும் எதிர்காலத்தில் இந்த இனவாத அரசின் விமானப் படையைச் செயலிழக்கச் செய்வதற்கும் நாம் எமது அனைத்து உத்திகளையும் கையாளுவோம். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும்மென்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: புலிகளின் படையிலிருப்பில் செக் விமானங்கள், ஐந்து விமானங்களுக்கு மேல் அவர்களிடம் விமானங்கள் இருக்க வாய்ப்பில்லை, இதனை ஒரு படையென்றெல்லாம் கூறமுடியாது என்பன போன்ற இலங்கை அரசின் கருத்துக்களுக்கு தங்கள் பதில் என்ன?

பதில்: விழுந்தாலும் தங்களுடைய மீசையில் மண்படவில்லை என்ற மாதிரியாகவே சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்கள் அமைகின்றன. நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைகளை வெளிப்படுத்தி வருவது சிறிலங்கா அரசின் வழமையாகும். எமது தாக்குதல்களும் அவற்றின் அழிவுகளுக்குப் பின்னாலுமே அவர்கள் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்கின்ற சூழல் உருவாகும்.இதற்கான பதில்களை எமது நடவடிக்கைகள் ஊடாக வெளிப்படுத்தவே நாம் விரும்புகின்றோம்.

கேள்வி: இலங்கைப் படையினர் இந்த விமானப்படைத் தாக்குதலால் கொந்தளித்திருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் மீது இது திருப்பிவிடப்படலாம். இந்நிலையில் சாதாரண சிங்கள மக்களைக் காப்பாற்ற இந்தத் தாக்குதல் உதவுமா?

பதில்: சிங்கள விமானப்படையினர் எமது மண்ணில் பொதுமக்களினுடைய இலக்குகளைத் தாக்கி அவர்களைக் கொல்வதையே வழமையாக்கிக் கொண்டுள்ளனர். தற்போது தமிழ் மக்களினுடைய விமானப் படை வளர்ச்சியடைந்து அவர்களுடைய பாதுகாப்பு மையத்திற்குள்ளேயே புகுந்து வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு திரும்பி வந்திருக்கிறது.

இந்நிகழ்வு சிங்கள தேசத்தவருக்கும் இனவாதத் தலைவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றேன். எமது இலக்கு சாதாரண பொதுமக்கள் அல்ல. சிறிலங்கா இரணுவத்தின் இயங்கு தளங்களும் பேரினவாத செயற்பாட்டு மையங்களுமே எமது இலக்குகளாக இருக்கும். சாதாரண சிங்கள மக்களை நாம் எப்போதுமே இலக்கு வைக்கப்போவதில்லை.

கேள்வி: 2005 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு வந்த இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அப்போதே தங்களிடம் விமானத்தளம் இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது அது மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது நீங்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றீர்களே?
பதில்: ஒருபோதும் நாம் எமது விமானப் படைத்தளம், விமானங்கள் உள்ளதென்பதை மறுக்கவில்லை. எப்பொழுதும் நாம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம். 1998 ஆம் ஆண்டிலிருந்தே எமது விமானப் படையின் வளர்ச்சி ஆரம்பித்து விட்டது. இன்று ஒரு நல்ல நிலையில் அது இருக்கின்றது.

கேள்வி: தங்கள் விமானப்படையால் இந்தியப் பாதுகாப்பிற்கு ஆபத்து வரலாம். தென்னிந்தியாவிற்கு ஆபத்து வரலாம் என்றெல்லாம் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இக்கருத்துக்கள் மிகவும் தவறானவை. எமது படைக் கட்டுமானங்கள் எப்பொழுதும் எமது மக்களைப் பாதுகாப்பதற்கும் எமது தாயகப் பிரதேசத்தை விடுவிப்பதற்குமாகவே கட்டியெழுப்பப்பட்டவையாகும். ஆகவே எமது மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு எதிராகவே அவை செயற்படுமேயன்றி ஒருபோதும் அவை இந்தியாவுக்கோ ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் மக்களினுடைய சுதந்திரம் என்பதும் அவர்களின் விடுதலை என்பதும் இந்திய தேசத்திற்கும் மிகுந்த நன்மையையும் நல்லுறவையுமே ஏற்படுத்தும். ஒருபோதும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எதிரான ஒரு போக்கை ஈழ விடுதலைப் போராட்டமோ தமிழீழ விடுதலைப் புலிகளோ கடைப்பிடிக்கமாட்டார்கள். தமிழர்களுடைய படைபலம் பெருகுவதையிட்டு எந்த அரசுமே கவலைகொள்ளத் தேவையில்லை. பதிலாக எமது படைபலம் பெருக்கி அதனூடாக சுதந்திரமடைந்தால் அதுவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பூரண அமைதியைக் கொண்டுவரும் என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: அதிகாரபூர்வ போர்நிறுத்தம் என்ற நிலையில் விமானப்படைத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கின்றதா? அல்லது சமரசப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு நெருக்கடி உத்தியென இதை எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: போர் நிறுத்தம் அமுலில் இருக்கின்ற போதே சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான விமானத் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்களினுடைய பெறுமதியான உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்ட போது நாம் பலமுறை இவற்றை நிறுத்தக் கோரினோம். ஆயினும் சிறிலங்கா அரசாங்கம் அதனை மதிக்காமல் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு யுத்தத்தை தொடர்ந்து வரும் சூழலில் நாம் இனியும் பொறுத்துக் கொண்டிருக்கமுடியாத நிலையில் தான் இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். பேச்சுவார்த்தை என்பது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி ஆக்கிரமிப்புக்களை அகற்றி நேர்மையான வகையில் சிறிலங்கா அரசாங்கம் அணுகுகின்ற போதே சிந்திக்கக்கூடிய விடயமே தவிர இத்தகைய இராணுவ முனைப்பைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற சூழலில் அது சாத்தியமற்றதொன்றே.

கேள்வி: தோள்மீது வைத்துப்பயன்படுத்தக்கூடிய ஏவுகணையின் மூலம் கூட இலங்கை விமானங்களை வீழ்த்தமுடியும். சாதாரண தமிழ் மக்களை அதன்மூலம் காப்பாற்றமுடியும். ஆனால் மக்களைக் காப்பாற்றும் அந்த தடுப்பு நடவடிக்கையினை விடுத்து தற்போது தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளதற்கான நோக்கம் என்ன?

பதில்: சிறிலங்கா அரசாங்கத்தினுடைய விமானப் படை விளைவிக்கின்ற மனிதப் பேரவலங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அதனால் தான் அந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் படைத்தளக் கோட்டைக்குள் புகுந்து விமானப் படையின் தாளத்தில் வைத்தே அவற்றை அழித்திருப்பது எதிர்காலத்தில் அங்கிருந்து தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதென்பதைப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. இன்னும் பாரிய இழப்புக்களை சிங்கள தேசத்திற்கு ஏற்படுத்த முடியும் என்பதை இத்தாக்குதல்கள் உணர்த்தி நிற்கும் என்றே நான் நினைக்கின்றேன். ஏனைய எமது மக்களை பாதுகாக்கின்ற உத்திகள் தந்திரோபாயங்கள் தொடர்பாக நான் இப்பொழுது கருத்துக்கள் கூற விரும்பவில்லை. நடைமுறைக்கு வரும் போது நீங்கள் அறிவது பொருத்தமாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

கேள்வி: இலங்கையிலுள்ள ஈழத்தமிழர் வாழும் பகுதிகளின் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடிகளைக் குறைக்க செஞ்சிலுவைச் சங்கத்தின்மூலம் பொருட்கள் அனுப்ப இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விமானப்படைத் தாக்குதல் அதனைத் தடுத்து நிறுத்த வழி வகுக்காதா?

பதில்: எமது தாக்குதல்கள் என்பது சிறிலங்காப் படைகளுக்கு எதிரானதே. எந்தவிதமான சர்வதேச சமூகத்தையோ இந்தியாவையோ உதவியமைப்புக்களையோ குறிவைப்பதாக எமது தாக்குதல்கள் இருக்கப்போவதில்லை. எமது தாக்குதல்கள் எமது மக்களை பாரிய இன அழிப்புக்கு ஆளாக்குகின்ற சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரானதாகவே அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.தமிழ் மக்களுக்கு உதவவிரும்புபவர்கள், மனிதாபிமான உதவிகள் செய்ய முன்வருபவர்களுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி அதற்கான வழிவகைகளை செய்யத் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி என்ற கருத்தினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டீர்கள். பின்னர் அது கைவிடப்பட்டதாகத் தெரிகின்றது. எதிர்காலத்தில் மீண்டும் இந்த அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: ஈழத்தமிழ் மக்கள் அவர்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய முழுமையான ஒரு தீர்வையே விரும்புகிறார்கள். அது எந்த வகையில் அமையவேண்டும் என்பது பற்றி தீர்வை முன்வைக்கின்ற போதுதான் எம்மால் விமர்சனங்களை கூறக்கூடியதாக இருக்கும். எங்களைப் பொறுத்தவரையில் எமது மக்கள் தங்களினுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முழுமையான தீர்வை எட்டுவதற்கே எப்பொழுதும் தங்களது கோரிக்கையை முன்வைத்து வந்திருக்கிறார்கள். அந்த அபிலாசைக்கேற்ற வகையிலேயே எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே எத்தகைய தீர்வை முன்வைக்கப் போகிறார்கள் என்பதை அறியாது நான் கருத்துக்கூறுவது பொருத்தமில்லை என்றே நினைக்கிறேன்.

கேள்வி: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றார்கள். ஆனால் புலிகள் தாக்கியதாக பழியை உங்கள்மீது போடுகின்றார்கள். இத்தாக்குதலைத் தடுக்க இந்திய, இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபடலாம் என்ற ஒரு திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்கின்றது. அது பயனளிக்குமா?
பதில்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களும் ஈழத்தமிழ் மக்களும் எப்பொழுதும் தொப்புள்கொடி உறவுகளாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.

இவ் உறவை சீர்கெடுக்கும் நோக்கோடு சிறிலங்காப் படைகள் தாங்களே தமிழக உறவுகளை சுட்டுக்கொன்றுவிட்டு அந்தப் பழியை எம்மீது சுமத்தி ஈழத்தமிழ் மக்களுடனான தமிழக மக்களின் உறவை இல்லாமல் செய்ய முனைகிறது.

இந்தச் சதிச்செயலை தமிழக உறவுகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். சிறிலங்காப் படைகளினுடைய இத்தகைய அட்டூழியங்களுக்கு இதுவரையும் ஈழத்தமிழ் மக்கள் முகங்கொடுத்துவந்தார்கள். தற்போது தமிழக மக்களை நோக்கியும் தமது துப்பாக்கிகளைத் திருப்பியிருக்கிறார்கள். இதனைத் தமிழகத் தலைவர்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இப்பிரச்சார உத்தியை எவருமே நம்பப்போவதில்லை. அத்துடன் இந்தியக் கடற்படையுடன் இணைந்து ஒரு கூட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடப்போவதாகக் கூறிக்கொண்டு எமக்கும் இந்திய படைக்கும் இடையில் மோதல் நிலையை உருவாக்கி இந்திய அரசோடு முரண்பாட்டை உருவாக்கிவிட்டு அதனால் நன்மையடைய சிறிலங்கா அரசாங்கம் ஒரு சதியைச் செய்கின்றது.

நிச்சயமாக இந்தச் சதிக்குள் இந்திய அரசு விழுந்துவிடாதென்றே நாம் நம்புகின்றோம். தமிழ் மக்களின் நலன் கருதி தமிழகத் தலைவர்களும் தமிழக மக்களும் கூட இதனை அனுமதிக்கமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
நன்றி>புதினம்.

Thursday, March 29, 2007

விடுதலைப் புலிகளின் வான்படை: இந்தியா விலகி நிற்க முடிவு!!!

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலை இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதுடன் அதில் இருந்து விலகி இருக்கவும் முடிவெடுத்துள்ளது என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


இந்தியா, பொதுவாக இடம்பெற்று வரும் வன்முறைகளையே கவனித்து வருகின்றது, வான் தாக்குதலும் அதில் ஒன்றாகும் என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த சில வாரங்களாக சிறிலங்காவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக நாம் கவலை கொண்டுள்ளோம். இந்த சம்பவமும் இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாகவே நாம் பார்க்கிறோம்.

அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள மனித அவலங்கள் எமக்கு கவலையை அளிக்கின்றன. ஒரு தனிப்பட்ட வன்முறைச் சம்பவத்தை எடுப்பதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. இந்த பிரச்சனையின் ஆணிவேர் தான் இன மோதல், அதுவே கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு காரணம்.

வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என விரும்பும் சிறிலங்காவில் உள்ள மற்றும் வெளிநாடுகளில் உள்ள சமூகத்துடன் நாம் இணைந்து குரல் கொடுப்போம். எல்லா மக்களும் அமைதியுடன் இணைந்து வாழும் ஒரு தீர்வு அங்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் வான்படை இந்தியாவிற்கு அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கு பதிலளிப்பதனை அவர் தவிர்த்துவிட்டார். நீண்டகால மோதல்களுக்கான தீர்வே முக்கிய விடயம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் வான்படை தென் ஆசியப் பிராந்தியத்திற்கு குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு ஆபத்தானது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்ததாக ரெடிஃப் இணையத்தளம் தெரிவித்திருந்தது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு வேறு நாடுகளின் படையினரையும் பயன்படுத்தி வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேல், உக்கிரென், பாக்கிஸ்த்தான் போன்ற நாடுகளே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக உக்கிரைன் நாட்டு வானோடிகள் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதான குண்டு வீச்சுக்களில் பங்குபற்றுவதாக சில தகவல்கள் தெரிவிப்பதாக ரெடிப்ஃ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவில் அதிகரித்துவரும் அந்நிய இராணுவ ஆதிக்கங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

இதனிடையே கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த இந்தியாவின் ரடார்கள் விடுதலைப் புலிகளின் வானூர்தியை கண்டறிவதில் தவறிவிட்டதாக கொழும்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதனை மறுத்த மேனன் எங்களுக்கு தெரிந்தவரையில் இந்தியாவின் ரடார்கள் செயற்திறன் அற்றதாகியதில்லை என தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

Wednesday, March 28, 2007

வான்புலிகள் தாக்குதல்: இந்திய தயாரிப்பு ராடார்கள் மீது குற்றம் சாட்டுகிறது சிறிலங்கா!!!

சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட ராடார்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை அவதானிக்க முடியவில்லை என்று சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.


கொழும்பிலிருந்து இன்று புதன்கிழமை வெளியான ஆங்கில ஊடகமான தி ஐலேண்ட் நாளிதழின் முதல் பக்கத்தில் அதன் செய்தியாளர் சமிந்த்ர பெர்னாண்டோ எழுதியுள்ளதாவது:

பண்டாரநாயக்க அனைத்துலக வான் நிலையத்துக்கு அருகாமை வரை வானூர்திகள் வந்ததை இந்தியாவால் வழங்கப்பட்டிருந்த ராடார்களால் அவதானிக்க முடியவில்லை. சிறிலங்கா வான் படையில் இணைக்கப்பட்டிருக்கும் இந்திய ராடார்களானவை இயங்குவதில் சிக்கல் உள்ளன. தாக்குதல் நேரத்தின் போது அது இயங்கவில்லை. அதே நேரத்தில் அனைத்துலக பயணிகள் வானூர்தி நிலையத்தில் உள்ள ராடாரானது ஊடுருவியோரை அவதானித்துள்ளது. அது மிகவும் தாமதமானது. ஏனெனில் அந்தத் தளத்திலிருது 3 கிலோ மீற்றர் தொலைவில் ஊடுருவல்காரர்கள் இருந்தனர்.

ஊடுருவியோரை சிறிலங்கா வான் படையின் ராடார் அவதானித்திருந்தால் திங்கட்கிழமை நிகழ்வானது வேறுவிதமாக இருந்திருக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய ராடார் இயங்காமல் போன விடயம் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் கவனத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை கொண்டு சென்றுள்ளது.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து 3 டி உயர்ரக ராடார்களை கொள்வனவு செய்ய விரும்பினார். ஆனால் அப்போதைய சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் இவ்விடயத்தில் தலையிட்டு, கொழும்பின் பாதுகாப்புக்காக ராடார்களை வழங்குவோம் என்று தெரிவித்திருந்தார். சந்திரிகா குமாரதுங்கவும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

இது விடயமாக தற்போதைய இந்தியத் தூதுவரான அலோக் பிரசாத்தை சந்தித்துப் பேச சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Monday, March 26, 2007

சிறிலங்கா வான்படையின் தாக்குதல் விமானங்களில் 40 வீதமானவை அழிந்தன.

சிறிலங்கா வான்படையின் தாக்குதல் விமானங்களில் 40 வீதமானவை வான்புலிகளின் தாக்குதலையடுத்து பாவனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நெட் தெரிவித்துள்ளது.

Sri Lanka blackout on Air Force losses

[TamilNet, Monday, 26 March 2007, 22:24 GMT]
Sri Lanka’s President held an emergency meeting of the country’s security leadership Monday as the government imposed a total blackout on the Tamil Tiger bombing raid on Katunayake, the island’s main airbase in the early hours. Whilst the government says only two helicopter gunships were slightly damaged, airmen coming off duty told reporters in Colombo that several SLAF jet bombers were put out of action by fierce fires which broke out in the hangers struck by the LTTE aircraft. Up to 40% of the SLAF’s strike capability has been knocked out, they said.
Residents near the airbase which shares a runway with the island’s sole international airport said security had been greatly increased in the area.

Journalists were kept away from the airbase by heavily armed air force troops who searched surrounding areas with dogs.

Sri Lanka Monitoring Mission (SLMM) officials who attempted to visit the Air Force base Monday to initiate inquiries into the attack were refused access to the site by top air force officials, an SLMM spokesman told the Daily Mirror.

SLMM spokesman Thorfinur Omarsson said the monitors however managed to visit the injured at the Negombo hospital and would make another attempt to visit the air base Tuesday stressing it was important that access is granted for the monitors to rule on the incident.

Meanwhile, only two propeller-driven Pucara ground attack aircraft and a seaplane took off from Katunayake all day Monday.

A significant section of the SLAF’s jet bomber fleet, including several Israeli-made Kfirs are based at Katunayake.

At least six Kfirs were housed in the hangers bombed by two LTTE aircraft in the early hours Monday.

The bombs had triggered fires and secondary explosions in the hangers

In an analysis comment for rediff.com, B. Raman, a former counter-terrorism chief of India’s intelligence service, RAW, said that the LTTE airstrike had damaged or destroyed several aircraft.

“Two helicopters, reportedly given by Pakistan, were badly damaged. There was also some damage to the Israeli aircraft of the Sri Lankan Air Force,” he wrote.

The bombing raid by two LTTE aircraft coincided with a Gala musical function being held by Sri Pagnananda Maha Vidyalaya school, located 2 km west of the airport.

Students were lighting firecrackers at the event, which was being attended by several airmen, when the bombs had struck the airbase.

Indiscriminate firing by panicked security personnel in the wake of the explosions had led to a number of friendly fire incidents, with casualties, airmen also said.

சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதல்: ரூ12 பில்லின், பங்குச் சந்தை சரிந்தது!!!

சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது இன்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு ரூ12 பில்லின், பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான தகவல்களை, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே தமிழீழ வான்படையினரால் சிறிலங்கா மீது நடத்தப்பட்ட முதலாவது வான் தாக்குதல் இது என அனைத்துலக ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.

சிறிலங்காவின் ஒரே ஒரு அனைத்துலக வானூர்தி நிலையமான கட்டுநாயக்காவை நோக்கி வந்த மற்றும் அங்கிருந்து புறப்படவிருந்த அனைத்து வானூர்திகளும் பல மணிநேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகவும், நிலைமை முழுமையாக வழமைக்கு திரும்ப மேலதிகமாக 24-36 மணி நேரம் எடுக்கும் எனவும், சிறிலங்கா வானூர்திப் போக்குவரத்து நிறைவேற்று அதிகாரியான பீற்றர் கில் தெரிவித்துள்ளார்.

இப்படியான தாக்குதல் சம்பவங்களை தடுப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது என வானூர்திப் போக்குவரத்து நிறுவனங்களும், தாமும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் ராடார்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு மிகவும் சாதூர்யமாக அதிஉயர் பாதுகாப்புக் கொண்ட வான்படைத் தளத்திற்குள் நுழைந்த தமிழீழ வான்படையின் வானூர்திகள் தாக்குதலை நடத்திவிட்டு அவர்களின் வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்தும் தப்பிச் சென்றது சிறிலங்காவின் பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் படையினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இத்தாக்குதலும், அதற்கு அனைத்துலக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும், பங்குச் சந்தையில் மாத்திரமின்றி ஏற்கனவே சீரழிந்து போயுள்ள சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அவதானிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
நன்றி>புதினம்.

Sunday, March 25, 2007

கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது புலிகளின் விமானங்கள் தாக்குதல்!!!









கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள விமானப்படைத்தளம் திங்கட்கிழமை காலை 1.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் விமானப் படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியுள்ளதாக சற்று முன் கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கருத்துரைத்திருக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவிக்கையில் ....

விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமானத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் அங்கு மோதல்கள் நடைபெறுவதாகவும் இதனால் தேசவிபரங்களை உறுதி செய்ய முடியவில்லை என்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சர்வதேச விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நன்றி>pathivu

Tamil Tiger attacked Sri Lanka's international airport!!!

COLOMBO (Reuters) - Suspected Tamil Tiger rebels attacked Sri Lanka's international airport north of the capital Colombo before dawn on Monday, the military said, and witnesss who live nearby told Reuters they could hear gunfire.

"There is an attack going on , but we don't have any details," said Flight Lieutenant Kanista Rajapakse of the Media Center for National Security. "There is fighting going on."

The attack comes amid an escalating new chapter in the island's two-decade civil war, which has killed around 68,000 people since 1983

சிறிலங்காவை எவரும் பயமுறுத்த முடியாது: சிறிலங்காவிற்கான ஜெனீவா தூதுவர்?

சிறிலங்கா தொடர்பாக சில நாடுகளும், சில அரச சார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்த கருத்துக்களுக்கு தாம் கடும் எதிப்பை தெரிவிப்பதாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.


இக்கூட்டத் தொடரில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய சிறிலங்காவிற்கான ஜெனீவாவின் புதிய தூதுவர் தயான் ஜயதிலக்க தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

சிறிலங்கா அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திட்டங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றது, அனைத்துலக சமூகத்துடனான அதன் பணிகளும் அப்படியானவையே. ஒரு மிகவும் தரம்வாய்ந்த ஜனநாயக நாட்டை அதன் விருப்பங்களுக்கு மாறாக சில செயற்திட்டங்களை எடுக்கும் படியோ அல்லது சில அமைப்புக்களை ஏற்றுக்கொள்ளும் படியோ கட்டாயப்படுத்துதல், திணித்தல், பயமுறுத்துதல் கூடாது.

சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமாயின் அவை சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் தான் எடுக்கப்பட வேண்டும். எமது நாட்டில் உள்ள நிலைமைகளை சீர்செய்வதற்கு நாம் அனைத்துலகத்தின் உதவிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அது ஒரு திறந்த ஜனநாயக சமூகம், தற்கொலைதார பிரிவினைவாத படையினருக்கு எதிராக எம்மை தற்காத்து வருகின்றோம். எம்மால் ஒரு உறுதியான சமூகத்தை அமைக்க முடியாத சந்தர்ப்பங்களில் அனைத்துலகத்தின் ஆதரவுகளையும் நாம் வேண்டி நின்றோம் என்றார்.

இக்கூட்டத்தொடரில் சில் நாடுகள் மற்றும் அமைப்புக்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

சிறிலங்காவில் காணாமல் போதல்கள் கொழும்பிலும், வடக்கு - கிழக்கு மகாகாணங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், எனவே இதனை விசாரணை செய்வதற்கு சிறிலங்கா ஒரு செயற்குழுவை அழைக்க வேண்டும் என மனித உரிமைகள் காப்பகம், கொலம்பியன் நீதியாளர்கள் ஆணைக்குழு, அனைத்துலக ஆணையாளர்கள் ஆணைக்குழு ஆகியன தமது இணைந்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.

மிகவும் அதிகளவான சந்தர்ப்பங்களில் காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பான முறைப்பாடுகள் தீர்க்கப்படாமலே உள்ளன. மேலும் சிறிலங்காவின் தேசிய ஆணைக்குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை கொண்டுள்ளன.

எனவே இந்நிலையில் சிறிலங்காவில் நடைபெற்று வரும் காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன? என அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த பீற்றர் ஸ்பிலின்ரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈராக்கிற்கு அடுத்தபடியாக உலகில் காணாமல் போவோர் அதிகமாக உள்ள நாடுகளில் சிறிலங்கா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது எனவும், சிறிலங்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் கடத்தல்கள், காணாமல் போதல் போன்றவற்றை நிறுத்துவதற்கு இந்த செயற்குழு என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது எனவும் அனைத்துலக செயற்பாட்டாளர் குழுவைச் சேர்ந்த வி.கிருபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிறிலங்கா அரசாங்க செயற்குழு உறுப்பினர்களை அழைப்பதற்கு உரிய காலத்தை அறிவிப்பதுடன், தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களையும் தெரியப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய ஜேர்மன் தூதுவர் அன்றஸ் பேர்க் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் இடம்பெறும் பலவந்தமான கடத்தல்கள் தமக்கு கவலையை தருவதாகவும், எனினும் சிறிலாங்கா அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை நாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் சுவிற்சலாந்து தூதுவர் ஜீன் டானியல் விக்னி தெரிவித்திருந்தார்.

யாழ். மாவட்டத்திலும் கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் 700-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு செயற்குழு ஏதாவது விசேட பரிந்துரைகளை மேற்கொள்ள உள்ளதா? எனவும் விக்னி கேள்வி எழுப்பியிருந்தார்.

தமது செயற்குழு 2008 ஆம் ஆண்டு செல்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் விவாதித்து வந்ததாக பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமல் போவோர் தொடர்பான செயற்குழுவின் தலைவர் சன்ரிகோ கோர்சியுரா கபற்சு தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

Friday, March 23, 2007

கொழும்பு அரசின் கீர்த்தி சர்வதேச ரீதியில் அம்பலம்.

மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மஹிந்தர் அரசின் "கீர்த்தி' தினசரி கொடிகட்டிப்பறக்கும் விதத்தில் அம்பலமாகிக்கொண்டிருக்கின்றது.

சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸில், சிறுபான்மையினரின் உரிமைகளைக் கண்காணிப்பதற்கான சர்வதேச அமையம், அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம் என்று பல்வேறு சர்வதேச அமைப்புகள் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கவலை தெரிவித்து வெளியிடும் அறிக்கைகளும், அறிவிப்புகளும் நாளொரு வண்ணமும் பொழுதொருமேனியுமாக வெளிவந்து, மஹிந்தர் அரசின் "மகத்துவத்தை' சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தி வருகின்றன.

இந்த வரிசையில் அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம், கிழக்கில் அகதிகள் மீளக் குடியமரும் விடயம் தொடர்பாக உள்நாட்டில் இயங்கும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்த சுற்றறிக்கையின் சாராம்சம் நேற்று அம்பலமாகியிருக்கின்றது.
இந்தச் சுற்றறிக்கையில்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டிருப்பதை அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்த அகதிகளை மீளக்குடியமர்த்துவது தொடர்பான விடயத்தில் சில சர்வதேச நடைமுறைகள், பொதுவான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது ஐ. நாவினாலும் ஏனைய சர்வதேச அமைப்புகளினாலும் வகுக்கப்பட்ட நெறியாகும்.

இடம்பெயர்ந்த அகதிகள் மீளவும் தங்கள் சொந்த இடங்களில் குடியேற வேண்டுமானால் அது அவர்களின் சுயவிருப்பின்பேரில் பலவந்தம் ஏதும் பிரயோகிக்கப்படாத நிலையில் அவர்களுக்குரிய கௌரவத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே சர்வதேச மட்டத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய நடைமுறையாகும்.

கிழக்கில் அண்மைக்காலப் படை நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தஞ்சம் புகுந்திருக்கும் சுமார் ஒன்றரை லட்சம் தமிழ் அகதிகள் விடயத்திலும் இதே சர்வதேச ரீதியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றே ஐ. நா. அமைப்புகளும் ஏனைய சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன.

ஆனால், இதற்கு மாறாக கிழக்கில் ஆயிரக்கணக்கான அகதிகள் தத்தமது இடங்களில் மீளக்குடியேற்றப்படுவதற்காக அண்மையில் பலவந்தமாகக் கூட்டிச் செல்லப்பட்டமை குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தமையும், அது குறித்து இப்பத்தியிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமையும் தெரிந்தவையே.

இங்கொன்றும், அங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அவை என்றும், இனி அத்தகைய சம்பவங்கள் இடம்பெறா என்றும் இலங்கை அரசுத்தரப்பில் சமாதானம் கூறப்பட்டது.

ஆனால் அந்தச் சமாதானம், செயற்பாட்டளவில் நடைமுறைக்கு வரவில்லை என்பதை அகதிகளுக்கான ஐ. நா. தூதரகத்தின் பிந்திய சுற்றறிக்கை நிரூபித்திருக்கின்றது.

கிழக்கில் மிகக் கோரமான கொடுமையான படு பயங்கரமான வகையில் இராணுவத் தாக்குதல்களை நடத்தி, அதன்மூலம் பல்லாயிரக்கணக்கில் தமிழர்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, இடம்பெயர வைக்கும் இலங்கை அரசுத்தரப்பு, அதே வேகத்தில் அதே மாதிரி பலவந்தமாக அந்த மக்களை மீளக் குடியமர்த்தவும் முயல்கிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குற்றம் சுமத்தி வருகின்றது. அதை உறுதிப்படுத்துமாற்போல அகதிகளுக்கான ஐ. நா. தூதரக சுற்றறிக்கை அமைந்துள்ளது.

அரசுத் தரப்பு பலவந்தமாக மேற்கொள்ளும் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையோடு இணைந்து செயற்படுவதன்மூலம், அந்த நடவடிக்கையை நியாயப்படுத்தவும், அதற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கவும் தான் தயாரில்லை என்பதைக் குறிப்பிட்டுள்ள அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம், அதன் காரணமாக, ஏற்கனவே கிழக்கில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதாக தனது பிந்திய அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

அரசுப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் புதிதாக வந்திருக்கும் தமது பூர்வீக இடங்களுக்குத் தாங்கள் திரும்பி, மீளக் குடியமர்ந்தால், அரசுப்படைகளுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்கள், துணைப்படைகள் போன்றவற்றின் அச்சுறுத்தலுக்கும், தொந்தரவுகளுக்கும், தொல்லைகளுக்கும், கப்பம் கோரல்களுக்கும் தாங்கள் ஆளாக வேண்டி நேரும் என்ற அச்சமே, இடம்யெர்ந்த மக்களை மீளக்குடியமர விடாமல் பீதிக்குள்ளாக்கி வரும் அடிப்படை விடயம் என்பதும் இப்போது வெளியே தெரியவந்திருக்கின்றது.

மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் மஹிந்தர் அரசின் பெயர் சர்வதேச ரீதியில் தொடர்ந்து மோசமாகக் கெட்டு வருகின்றது. அரசுத் தலைமை இவ்விடயம் குறித்து அதிக சிரத்தை காட்டுவதாகத் தெரியவில்லை. அதனைவிட இராணுவ நடவடிக்கைகளிலும் யுத்த வெற்றிகளிலும் கொழும்பு அதிக முனைப்புக் காட்டுகின்றது. இதன் விளைவு கொழும்பு அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை அது புரிந்து கொள்ளாமல் புரிய எத்தனிக்காமல் இருப்பது மிகவும் விந்தையானது.
நன்றி>உதயன்.

Wednesday, March 21, 2007

சிறீலங்காவிற்குச் செல்லும் தனது பயணிகளிற்கு நெதர்லாந்து அரசு எச்சரிக்கை!!!

நெதர்லாந்து அரசின் வெளிநாட்டமைச்சின் இணையத்தளத்தில் சிறீலங்கா செல்வதை தவிர்க்குமாறு தனதுநாட்டு மக்களிற்கு நெதர்லாந்து அரசானது எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

கடந்த மாதங்களிலிருந்து தமிழீழவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களின்மீதான சிறீலங்கா அரசபடைகளின் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளும் பதில் நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் இவ் எதிர் நடவடிக்கையானது சிறீலங்கா முழுவதையும் பாதிக்கும் என்று விடுதலைப்புலிகளும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதால் சிறீலங்கா செல்வதை முற்றாகத் தவிர்க்குமாறும் தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் நெதர்லாந்து மக்கள் அனைவரையும் வெளியேறுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் வெளிநாட்டு அமைச்சர் கதிர்காமர் கொல்லப்பட்ட சம்பவம்,. கொழும்பு-கண்டி, கொழும்பு-காலி பயணிகளின் பஸ்களின்மீதும் ஜனாதிபதியின் சகோதரர் மீதும் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களையும் சுட்டிக்காட்டிய இச்செய்தியில் கொழும்பு நகரத்திலும் வேறு முக்கிய நகரங்களிலும் இரவு 10 மணிக்குப்பின் பாதுகாப்புக் காரணங்களிற்காக பல வீதிகள் மூடப்படுவதாகவும் பல முக்கிய நகரங்களில் கடும் பாதுகாப்பு இராணுவச்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் மிகவும் கடுமையான பாதுகாப்பற்ற நிலமையும் மத்திய, மேற்கு, தெற்கு பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் நிலவுவதால் சிறீலங்கா முழுவதும் ஒரு பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் உல்லாசப்பயணிகளை அங்கு செல்வதை முற்றாகத் தவிர்க்குமாறு இவ்இணையத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறீலங்காவில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் தற்போது வாழும் நெதர்லாந்தவர்களை கார், மினிபஸ், பஸ் , தொடரூந்து போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்களை வாடகைச்சாரதியுடன் அல்லது போக்குவரத்துமுகவர்கள் ஊடாக பாவிப்பதை தவிர்க்குமாறும் அத்துடன் பொலிஸ், மற்றும் இராணுவத்தினரையோ அல்லது அவர்களது கட்டடங்களையோ போட்டோ, வீடியோ எடுக்கவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

முழு சிறீலங்காவும் தற்போது பாதுகாப்பற்ற நிலமையாகவுள்ளதென அடிக்கடி திரும்பத் திரும்ப தனது இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்அறிவித்தலுள்ள நெதர்லாந்தின் வெளிநாட்டமைச்சின் இணையத்தளமுகவரி:

http://www.minbuza.nl/nl/reizenlanden/reisadviezen,reisadvies_sri_lanka.html

நன்றி : பதிவு

Tuesday, March 20, 2007

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: ஐ. நாவின் மீதும் குற்றச்சாட்டுகள்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெற்று வருகின்றமை குறித்து அத்தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், விசேட குற்றப் பொறுப்பு விலக்களிப்புப் பாதுகாப்பின் கீழ் அவற்றைத் தொடர்ந்து புரிந்துகொண்டிருக்கின்றமை குறித்து இவ்விடயத்தைக் கண்காணித்து, கையாண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய ஐ. நா. அமைப்பு பொறுப்பின்றி மெத்தனப் போக்குடன் செயற்படுகின்றது.

இவ்வாறு ஐ. நா. அமைப்பு மீதே சீறிப்பாய்ந் திருக்கின்றது சர்வதேச மன்னிப்புச் சபை.
இந்தக் குற்றச்சாட்டை விசனத்தை வெளி யிட்டிருப்பவர் மன்னிப்புச் சபையின் கீழ்நிலை அதிகாரியோ அல்லது பேச்சாளரோ அல்லர். லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் இர்னி கான் அம்மையாரே இவ்வாறு கோபித் திருக்கின்றார்.

""விசேட விலக்களிப்பு வசதிகளைப் பயன்படுத்தி மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலோ அதைப் பார்த்துக்கொண்டு நடுக்கத்துடன் செயலற்று இருக்கின்றது'' என்ற சாரப்பட அவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் நாலாவது கூட்டத் தொடரின் அமர்வுகள் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகையில், உலகில் மனித உரிமைகளைக் கண்காணிப்பது தொடர் பான பிரபலமான ஒரு சர்வதேச அமைப்பு இத்தகைய குற்றச்சாட்டை கவுன்ஸிலின் மீது முன்வைத் திருப்பது முக்கிய விடயமாகும்.

""இலங்கையில் குற்றப் பொறுப்பிலிருந்து விலக்களிப்பு வழங்கும் விசேட வசதிகளைப் பயன்படுத்தி படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸில் செயலற்று அதிர்ந்து போய் இருக்கின்றது. சூடானின் டார்பூர் விவகாரத்திலும் அது (ஐ. நா. மனித உரிமை கள் கவுன்ஸில்) மிகவும் பலவீனமாகவே செயற்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் அதன் ஆக்கிரமிப்புப் பிரதேச விடயத்திலும் அது உயிரூட்டமா கவோ அல்லது தந்திரோபாயமாகவோ செயற் படவில்லை.'' என்று கூறும் அவர், இன்னொரு விடயத்தையும் சுட்டிக் காட்டுகின்றார்.
""இந்தப் போக்கினால் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலினதும் மட்டுமல்லாமல் முழு ஐ. நா. கட்டமைப்பினதும் நம்பகத்தன்மை கேள்விக் குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே கவுன்ஸில் வெறுமனே அரசியல் ரீதியான அணுகுமுறையை நாடுவதை விடுத்து, மனித உரிமை மீறல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்குக் கொண்ட செயற்றிட்டத் தந்திரோபாயத்தைப் பின் பற்ற வேண்டும்.'' என்றும் அவர் தெரி வித்திருக்கின்றார்.
தற்போது ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொட ரில் இலங்கை அடித்த "அந்தர் பல்டி'க்கு மத்தியில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பத��
� குறிப்பிடத்தக்கது.

மேற்படி கூட்டத் தொடரில் இலங்கைக்கும் அதன் அரசுக்கும் எதிராக மனித உரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பாக பெரும் குற்றச்சாட்டு களும், கடும் எதிர்ப்பும் எழும் என்ற பின்னணி நிலவிய நிலையில், அதை சமாளிப்பதற்கு இக்கூட்டத் தொடரில் தாம் ஆற்றிய ஆரம்ப உரையில் இலங்கையின் தலைமைப் பிரதிநிதியாக அதில் கலந்து கொண்ட மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சில சமாளிப்பு அறிவிப்புகளை விடுத்திருந்தார்.

""இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையை நேரில் கண்காணித்துப் பார்வையிட, சித் திரவதைகள் சம்பந்தாமான ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட தொடர்பாளரையும், உள் நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகளின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகத் தின் விசேட பிரதிநிதியையும் இலங்கைக்கு வரு மாறு அழைக்கின்றோம்.'' என்று அவர் அங்கு தெரிவித்தார்.

ஆனால் உள்நாட்டுவிவகாரங்களில் வெளி நாடுகளும், ஐ. நாவும் அதிகளவில் தலையிட அமைச்சர் மஹிந்த சமரசிங்க வழி சமைத்துக் கொடுக்கின்றார் என தென்னிலங் கையில் அவர் மீது கடும் எதிர்ப்புக்கிளம்ப, தமது நிலைப்பாட்டில் தடம் புரள வேண்டியவரானார் அவர்.

""இலங்கையில் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ. நா. கண்காணிப்பாளர்கள் இங்கு வரவேண்டிய தேவை ஏதும் இல்லை.'' என்று பின்னர் விளக்கமளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் அவர்.

இவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை களில் ஐ. நாவின் பங்கு பணிகளும் சிக்கலுக்குள் உள்ளாகியிருக்கும் சூழ்நிலையிலேயே ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை விடயம் அலசப்படு கின்றது.

இரு தரப்பினரின் இனப்பிரச்சினைப் போருக் குள் மூழ்கிக் கிடக்கும் இலங்கையில், மனித உரிமை மீறல் தொடர்பான அதிகளவிலான குற்றச்சாட்டுகளும், கருத்து நிலைப்பாடும் சர் வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு எதிராகவே அண்மைக் காலத்தில், முழு அளவில் , முன் வைக்கப்பட்டு, குரல் எழுப்பப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது
நன்றி>uthayan.com

Monday, March 19, 2007

ஐநாவின் கவனத்தை ஈர்க்க உங்கள் கையொப்பம் அவசரம்!!!

அமெரிக்க செனட்டர்களையும், ஐநா பிரதிநிதிகளையும் சந்தித்து ஈழப் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைக்கும் முக்கிய பணியில் தமிழ் புத்திஜீவிகள் இறங்கியுள்ளனர்.



பத்தாயிரம் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான கையொப்பங்களே பெறப்பட்டுள்ளன. பெயர் மட்டும் போதுமானது. அதைக்கூட விரும்பினால் நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் உங்கள் ஆதரவை வழங்கும் வகையில் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அவசியமானதும் அவசரமானதும் கூட.

தமிழ் மக்களின் கையொப்பம் அவசர தேவையாக உள்ளது. உலகத் தமிழர்களின் ஆதரவு ஈழப் பிரச்சனை தொடர்பாக எந்தளவுக்கு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட இந்த விண்ணப்பபங்கள் இலக்க ரீதியான ஆதாரத்தை வழங்குகின்றன.

இதனால், தமிழர்கள் அனைவரும் இந்த இரு இறுதி நாட்களையும் பயன்படுத்தி, உங்கள் நண்பர்கள் உறவினர்களையும் இவ் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, ஈழப் பிரச்சனையின் சர்வதேச கவனத்தைத் திருப்பும் முயற்சிக்கு ஆதரவை வழங்குங்கள்.

CLICK HERE
http://www.gopetition.com/petitions/international-donors-take-action-with-sri-lanka.html

_______________________________________________________________________

உதவி வழங்கும் நாடுகளுக்கு விண்ணப்பம்: உங்கள் கையொப்பம் அவசர தேவை

சில வாரங்களுக்கு முன் ஐ. நா. செயலாளர் நாயகம் பன் கி மூன் அவர்களுக்கு ஈழ மக்கள் நெருக்கடி தொடர்பாக அனுப்பிய விண்ணப்பத்தில் நீங்கள் 6,000 பேர் வரை கை ஒப்பம் இட்டமைக்கு, அதன் ஆரம்ப கர்த்தாவான மருத்துவக் கலாநிதி எலின் ஷாண்டர் அவர்கள் மனதார்ந்த நன்றி தெரிவிக்கிறார்.

அவ் விண்ணப்பப் பிரதிகள் ஐநா மனித உரிமைச் செயலர் லூயிஸ் ஆபர் உட்பட மேலும் 12 ஐநா அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதே அமெரிக்க மருத்துவர் ஷாண்டரும் சக மனித நேய ஆர்வலர் லீசா ஹான்சன் என்பவரும் சிறிலங்காவுக்கு பண உதவி புரியும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அவசர விண்ணப்பம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த கை எழுத்து வேட்டையிலும் உங்களை ஆர்வமுடன் பங்கு கொள்ளுமாறு கேட்டு நிற்கிறார்கள். இது புதிய தளம் என்பதுடன், பணம் எதுவும் கட்டவேண்டிய தேவையில்லை.

விரும்பியவர்கள், கீழே உள்ள இணைப்பை அழுத்தி உள்செல்லவும்.

CLICK HERE
http://www.gopetition.com/petitions/international-donors-take-action-with-sri-lanka.html
நன்றி>புதினம்.

Sunday, March 18, 2007

ஆயுதக் கடத்தலுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தமில்லை!!! ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் கடும்நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் உறுதுணையாக இருப்பர்.

சென்னை, மார்ச் 14- ஆயுதக் கடத்தலுக்கும், விடுதலைப்புலி களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படி கடத்தலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் உறுதுணையாக இருப்பர் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கம் அளித்தார்.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் ராதாமன்றத்தில் 6-3-2007 அன்று இரவு ``ஈழத் தமிழர்களின் இன்றைய பிரச்-சினை என்ன?’’ என்ற தலைப்-பில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

சீனி ஒரு மூட்டை பத்தா-யிரம் ரூபாய். ஒரு கிலோ நூற்றி அய்ம்பது ரூபாய். 2006+ஆம் ஆண்டு டிசம்பர் 31, ஆம் தேதிக்குள் இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இந்தியாவிடம் இலங்கை அரசு கூறியிருந்தது. மத்திய அரசு கேட்க வேண்டாமா? இதுவரை மத்திய அரசு அப்படி நடந்ததா? மத்திய அரசு இதைக் கேட்க வேண்டாமா?

எனவே, தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வுள்ள தமிழன் இதை ஒவ்வொரு தெருமுனைக் கூட்டங்களிலும் எங்கு பார்த்-தாலும் இந்த கேள்வியை எழுப்ப வேணடும் (பலத்த கைதட்டல்).

அருகிலுள்ள நாடான இலங்கையிலே போர் நடந்தால் அதன் தாக்கம் நம்மைப் பாதிக்கத்தானே செய்யும்.

`கடல் உள்ளளவும் கடத்தலும் உண்டு’கடலில் வந்தது, கடத்தினார்கள் கடத்தல்காரர்கள் என்று பிரமாதப்படுத்துகிறார்களே! அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

பழமொழி நீண்ட காலம் இருக்கிறதே.

``கடல் உள்ளளவும் கடத்தலும் உண்டு’’ எந்த கடலிலாவது கடத்தல் இல்லையென்று சொல்ல முடியுமா? அந்த கடத்தல் யாருக்காக?

எந்தக் கடத்தல் எங்கு நடந்தாலும் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று பார்ப்பனர்களும், ஊடகங்களும், பார்ப்பன அடிமை ஏடுகளும் அதேபோன்ற அந்த சிந்தனை வயப்பட்டவர்களும், அவர்களுக்கு ஆட்பட்டவர்களும் இங்கு இருக்கிறார்கள் என்று சொன்னால் முதலில் தமிழர்கள், சிங்களவர்களை விட இவர்கள்தான் எதிரிகள் என்று அடையாளம் காண வேண்டிய மகத்தான பொறுப்பு உண்டு.

முதலில் மக்கள் வெற்றியடைய வேண்டுமானால், தனி வாழ்க்கையிலும் சரி, விடுதலை வாழ்க்கையிலும் சரி, வெற்றி-யடைய வேண்டுமானால், உனக்கு உண்மையான நண்பர் யார்? எதிரி யார்? என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும்.

ஈழப் பிரச்சினை உச்சக்கட்ட நிலைமை

பல நேரங்களில் நம்முடைய இனத்தில் இருக்கின்ற கோளாறே இதுதான். எதிரியை நண்பனாகக் கருதுவான், நண்பனை எதிரியாகக் கருதி பெரிய அளவுக்கு மாறுபடுவார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னாலே பி.பி.சி. நண்பர் சங்கரமூர்த்தி. ரொம்ப நல்ல உணர்வோடு இருக்கக்கூடியவர். சங்கர் அண்ணா என்று மற்றவர்கள் அழைப்பார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே நான் லண்டன் சென்றிருந்தேன். ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை அப்பொழுது உச்சக்கட்டத்திலிருந்த காலம். ஒரு செவ்வி. அங்கு பேட்டி என்று கூட சொல்ல மாட்டார்கள். செவ்வி என்றுதான் சொல்வார்கள்.

ஏன் விடுதலைப்புலிகளை மட்டும் ஆதரிக்கின்றீர்கள்? அப்பொழுது பொறுக்குக் கேள்விகளைத் தேர்ந்தெடுத்து சில கேள்விகளை நறுக்கென்று என்னிடத்திலே கேட்டுக் கொண்டே வந்தார். அது பதிவாயிற்று.

அப்பொழுது அவர்கள் கேட்டார்கள்.

``ஏராளமான குழுக்கள் இருக்கின்றனவே, போராளிகளாக (அப்பொழுது இருந்த நிலை) அப்பொழுது விடுதலைப்புலிகளுக்குத் தடையும் கிடையாது. நீங்கள் ஏன் விடுதலைப் புலிகளை மட்டும் ஆதரிக்கிறீர்கள், உங்களுக்குத் தொடர்பு இருக்குமேயானால், அல்லது நீங்கள் ஏடுகளிலே எழுதியாவது மற்ற குழுக்களோடு இணைந்து எல்லோரும் சேர்ந்து போராடலாம் அல்லவா?’’ என்று கேட்டார்.

ஒற்றுமையாக இருந்து போராட வேண்டியதுதானே இப்படிப்பட்ட சிந்தனை தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு உண்டு. ஏன் தனித்தனியாக இருக்கிறார்கள்? இவர்கள் ஒற்றுமையாக இருந்து போராடலாம் அல்லவா? என்று அவர்கள் கேட்ட நேரத்திலே நான் அவர்களுக்குப் பதில் சொன்னேன்.

இது தத்துவரீதியாக மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நன்றாக இருக்கும். ஒற்றுமையாக எல்லோரும் போராட வேண்டும் என்று சொல்வதெல்லாம் சிறப்பாக இருக்கும்.

யார் உண்மையாகப் போராடுகிறார்கள்?

ஆனால், இந்த நேரத்திலே யார் உண்மையாகப் போராடுகின்றார்கள்? யார் யாருக்காகப் போராடுகின்றார்கள்? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிவிட்டு, அவருக்கு நான் பதிலாக சொன்னேன். தந்தை பெரியார் ஒரு பொதுக்கூட்டத்திலே சொன்ன ஒரு செய்திதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

குரங்கும், நெசவாளியும் கூட்டு சேர முடியுமா?

வேறு ஒரு கேள்வி கேட்டதற்காக பட்டென்று பழமொழியை தந்தை பெரியார் பொதுக்கூட்டத்திலே சொன்னார். ``குரங்கும், நெசவாளியும் கூட்டு சேர முடியுமா?’’ என்று கேட்டார். நெசவாளிக்கு வேலை நூலை கோர்த்துக் கொண்டே போவது. குரங்குக்கு என்ன வேலை என்றால் அதை அறுத்துக் கொண்டே போவது. ஆக இந்த இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்தால் அதனால் ஏற்படப் போகின்ற பலன் என்ன என்று கேட்டார்.

குழி தோண்டுவதற்கே இருக்கிறார்கள்

இவர்கள் என்னென்ன செய்கிறார்களோ அதற்குத் குழி தோண்டுவதற்காகவே மற்றவர் இருக்கிறார்கள் என்பதற்கு வேறு உதாரணம் எங்கும் போகவேண்டாம். கருணா இருக்கக் கூடிய இடத்தைப் பார்த்தாலே இன்றைக்கு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

கருணா போன்றவர்களைத்தானே சிங்கள இராணுவம் தூண்டிவிடுகிறது, தூக்கிவிடுகிறது. எனவே ஆயுதங்கள் கடத்தப்பட்டன என்று சொன்னால் யாருக்காக கடத்தப்பட்டன? என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா?

இதுபற்றி தமிழ்நாட்டிலே பேட்டி கொடுத்தபொழுது சொல்லியிருக்கின்றார்கள்.

ஆயுதக் கடத்தலுக்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை இது புலிகளைக் கொச்சைப்படுத்தப் படுவதற்கென்றே நடத்தப்படுகின்ற பார்ப்பன ஏடு `தினமலர்’ ஏடு.

இந்த ஏட்டிலேயே இருக்கின்ற செய்தியையே பார்க்கலாம். 3-3-2007 `தினமலர்’ ஏடு. அதில் உள்ள செய்தியை படிக்-கின்றேன்.

தலைப்பு: ``ஆயுத கடத்-தலுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை.’’ சொல்கின்றனர் - இலங்கை எம்.பி.க்கள். (எப்படி தலைப்புப் போடுகிறார்கள். பாருங்கள். இவர்களுக்கு உடன்பாடில்லை.)

``இலங்கையைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சிறீகாந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோர் (2-3-2007) சென்னைக்கு வந்திருந்தனர். இவர்கள் டெலோ அமைப்பைச் சேர்ந்திருந்தாலும் விடுதலைப் புலிகளின் ஆதரவில்தான் எம்.பி.க்களாகி உள்ளனர். தமிழகப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 23 எம்.பி.க்களில் தமிழ் தேசிய வாத கூட்டணிக்கு 22 எம்.பி.க்கள் உள்ளனர். இக்கூட்டணியில் டெலோ அமைப்பும் பங்கேற்றுள்ளது.

இலங்கை எம்.பி.க்கள் இருவர் கூறியதாவது

(இது சாதாரணமான அமைப்பு அல்ல). இக்கூட்டணியில் டெலோ அமைப்பும் பங்கேற்றுள்ளது. சென்னை வந்த இரண்டு எம்.பி.க்களும் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தமிழ்நாட்டில் நடக்கும் ஆயுதக் கடத்தலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படி கடத்தலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் உறுதுணையாக இருப்பர்.

இத்தகவலை இந்தியாவுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு விளக்கும்படி விடுதலைப் புலிகளின் தலைவர் எங்களை கேட்டுக் கொண்டார்.

சைக்கிள் தயாரிக்கவே `பால்ர°’ குண்டுகள் ஆயுதங்கள் கடத்தப்படுவது தென் இலங்கையில், அந்த அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குத்தான் என்று தெரியவருகிறது. ஆயுதங்கள் யாருக்குக் கடத்தப்படுகிறது என்பதை இந்திய அரசின் உளவுத்துறை கண்டுபிடிக்க வேண்டும். சைக்கிள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் `பால் ர°களை’ சென்னையிலிருந்து செல்லும்போது சில இலங்கைத் தமிழர்கள் சிக்கிக் கொண்டனர். `பால் ர°களை’ அவர்கள் எடுத்துச் செல்வது சைக்கிள்கள் தயாரிக்கவே.

ஒரு சைக்கிள் விலை ரூ. 10,000

இலங்கையில் ஒரு சைக்கிளின் விலை பத்தாயிரம் ரூபாய்க்குமேல் விற்கப்படுகிறது. சைக்கிள் தயாரிப்பதற்காகவே, அவர்கள் பால் ர°-களை கடத்தும் பணியில் ஈடுபட்டிருக்கலாம். வெடி மருந்துகள் நிரம்பிய பைபர் படகு பிடிபட்டது குறித்து தமிழக டி.ஜி.பி. முகர்ஜியே தெளிவாக தெரிவித்துள்ளார்.

அப்படகில் இருந்தவர்கள், யாழ்பாணத்தை நோக்கிச் சென்றவர்கள்தான், இந்தியாவை நோக்கி வந்தவர்கள் அல்ல என்று டி.ஜி.-பி.யே தெரிவித்துவிட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்’’ என்று தினமலர் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயவர்த்தனே காலத்தில் புலிகள் மீது பழி

ஜெயவர்த்தனே அரசு இருந்த காலத்திலே விடுதலைப்புலிகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே என்ன செய்வார்கள் என்றால், இவர்களிலேயே இன்னொரு போராளியாக இருக்கக் கூடியவரை இராணுவத்தை விட்டே சுட்டுக் கொன்று விட்டு அங்கே விடுதலைப்புலிகளினுடைய துண்டறிக்கை சீட்டுகளை எல்லாம் அந்த இடத்தில் சிதறிவிட்டு அது ஆதாரமாக கிடக்கும்படி இலங்கை இராணுவமே இந்த காரியத்தை செய்துவிட்டுப் போய்விடும்.

அப்பொழுது செய்திகள் வரும்பொழுது எப்படிப் போடுவார்கள் என்றால் இப்படி செய்தவர்கள், சுட்டவர்கள் அவர்கள்தான் என்ற கருத்துப் பரவட்டும். அவர்கள்மீது ஒரு அவப்பெயர் ஏற்படுத்தப்படட்டும் என்பதற்காகவே இதை செய்தார்கள்.

இந்திய அரசு கண்டுபிடிக்கட்டும்

இந்திய அரசின் உளவுத்துறை தாராளமாகக் கண்டு பிடிக்கட்டும். மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்.

உண்மைகள் புரிய ஆரம்பித்துவிட்டன. நியாயங்கள் புரிய ஆரம்பித்துவிட்டன என்று சொல்லும்பொழுது துடியாய் துடிக்கிறார்கள். இப்பொழுது அதற்கு ஒரு மாறான படத்தை வரையவேண்டும். மக்கள் மத்தியிலே அவர்களுக்கு ஒரு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு நாயை கொல்ல வேண்டும் என்றால்கூட அதற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லவேண்டும் என்கிற பழமொழியிலேயே பழகியவர்கள் இவர்கள் எல்லாம்.

அதுமாதிரிதான் பத்திரிகைகள், ஆங்கில ஊடகங்கள் எல்லாம் இருக்கின்றன.

பீடி கடத்திப் போனவர்களைப் பார்த்து

அதாவது ஈழத் தமிழர்கள் ஜான் ஏறினால் முழம் சறுக்க வேண்டும். அல்லது சறுக்காவிட்டால் காலையாவது பிடித்து இழுக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சிகளை செய்கிறார்கள். சரி இரண்டு நாட்களுக்கு முன்னாலே இன்னொரு செய்தி வந்திருக்கிறது.

ராமேசுவரம் பக்கத்தில் பீடி கடத்திக் கொண்டு போனதைப் பிடித்திருக்கிறார்கள். என்னையா விடுதலைப்புலிகள் பீடியைக் கடத்தினார்களா?

முன்பு நான் சொன்ன பழமொழிக்கு எவ்வளவு பெரிய பொருள் உண்டு என்பதை எண்ணிப் பாருங்கள். கடல் உள்ளளவும் கடத்தலும் உண்டு. அதற்காகத்தான் பெர்-மனன்ட் க°டம்° இன்°-பெக்டரைப் போட்டு வைத்திருக்கிறார்கள். அதைக் கண்டு பிடிப்பதற்குத்தானே தனி துறை இருக்கிறது.

ஆர்.எ°.எ°. அமைப்புக் கூட்டத்தில் ஏராளமானோர் போதை ஆர்.எ°.எ°.சின் புண்ணிய பூமி, அதுவும் இந்துத்துவாவை உருவாக்கிய வீரசவார்க்கரின் புனே மண்ணிலே என்ன அற்புதமான காட்சி - தொலைக்காட்சியிலே வந்திருக்கிறது.

இணையத்தின் (இன்டர்நெட்) மூலமாக விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். 227 பேர் போதையில் இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய போதைப் பொருள் ஆர்.எ°.-எ°. கூடாரத்திற்குள் எப்படி நுழைந்தன?

யாருடைய துணையினாலே நுழைந்திருக்க முடியும்? அந்த போதைப் பொருள் நுழைவதற்கு யார் காரணமாக இருந்தார்கள்? இந்தக் கேள்வியை மற்றவர்கள் கேட்க மாட்டார்களா?

வாழ்வா? சாவா? போராட்டம்

ஒரு சமுதாயத்தினுடைய விடுதலைப் போர் நடந்துகொண்டிருக்கின்றது. 20 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. உரிமை பறிக்கப்படக்கூடிய மக்களாக இருக்கிறார்கள்.

இதுதான் எமது வாழ்வில் கடைசி யுத்தம். வாழ்வா? சாவா? என்பதைப்பற்றி இனி கவலை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அங்குள்ள மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகளை கடத்தல்காரர்கள் என்றும், அல்லது வேறு வகையான சில சில்லரைத் தனங்களை ஏன் நடத்துகின்றீர்கள்?

ஒரு கல்லிலே மூன்று மாங்காய் அடிக்கிறார்கள். ஒன்று மத்திய அரசு இந்தப் பக்கம் திரும்ப ஆரம்பிக்கிறது. பிரதமர் உண்மையைப் புரிந்து கொண்டார் இப்பொழுதுதான் பிரதமர் மன்மோகன் சிங் உண்மையைத் தெரிந்திருக்கிறார்.

இன்றைக்குத்தானே பிரதமர் அவர்கள் புரிந்து கொண்டார் என்ற செய்தி இவர்கள் மூலமாகத்தானே நாடு தெரிந்து கொண்டிருக்கிறது. இதுவரையிலே தமிழர்களுக்கு இருந்த மிகப் பெரிய குறைபாடு உண்மையான நிலையை பிரதமர் புரிந்துகொள்ளவில்லைபோல் இருக்கிறதே என்ற வேதனைதானே இருந்தது. முதல்வர் கலைஞர் புரிந்துகொண்ட அளவுக்கு பிரதமர் புரிந்து கொண்டிருக்கிறாரா என்ற செய்தி இருக்கின்றதே, அதுவே இவர்கள் சொன்ன செய்தி நமக்கு ஆறுதலாக உள்ளது. புரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர்கள் புரிந்துகொண்டதை திசை திருப்பாமல் இருக்கக்கூடிய அதிகாரிகளைத் துணையாகக் கொள்ளவேண்டும். அதுதான் மிக முக்கியமானது.

``மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்’’ அடுத்து பின்னாலே வரக்கூடியதை முன்னாலே சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல, இங்கே இன்னொரு செய்தியை சொல்லியிருக்கின்றார்கள். கடல் வழியாக சில பொருள்கள் வருகின்றன. அவற்றை வாங்கும் சக்தி அற்ற நிலையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழ் மக்கள் உள்ளனர்.

நன்றி>விடுதலை

'இலங்கைக்கு அனைத்துலக மனித உரிமை கண்காணிப்புக்குழு தேவையற்றது'

"இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்பாளர்கள் குழு தேவையற்றது" என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை இலங்கையின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க வருமாறு கடந்த திங்கட்கிழமை ஜெனீவாவில் மகிந்த சமரசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.

கொழும்பு அரசியல் கட்சிகளிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதனைத் தொடர்ந்து அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

"சில நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் கேட்டுக்கொள்வது போல ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அவசியமற்றது. சிறிலங்காவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்பாட்டின் பிரகாரம் சிறிலங்காவே தமது பிரச்சனைகளை கையாள்வதற்குரிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் மனித உரிமைகள் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இந்த உடன்பாடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல உடன்பாடுகளில் ஒன்று.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி றொறி மக்கோவன் சிறிலங்காவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குகிறார். வெளிநாட்டு அதிகாரிகள், நீதிபதிகள், மனித உரிமைகள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து அவர் தனது பணியை ஆரம்பிப்பார். இந்த வேலை நடைபெறும் போது மேலதிக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அதில் இணைந்து கொள்வார்கள்.

விசாரணை ஆணைக்குழுவை அரசாங்கம் நியமனம் செய்ததும், வெளிநாட்டு நிபுணர்கள் குழுவின் மேற்பார்வையும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளை தெளிவாக விளக்கியுள்ளது. எனவே அனைத்துலக கண்காணிப்பாளர்கள் தேவையில்லை" என்றார் அவர்.

கருணா குழுவினது சிறார் படைச் சேர்ப்பிலும், மனித உரிமை மீறல்களிலும் அரசாங்கப் படையினரின் பங்களிப்புக்கள் உண்டு என்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி அலன் றொக்கின் அறிக்கையானது அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்திருந்தது.

தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை ஆகியன விடுத்த வேண்டுகோளை ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, சுவீடன் உட்பட பல நாடுகள் ஆதரித்துள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த கூட்டத்தொடரில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதும், அங்கு மனித உரிமை மீறல்களை தடுப்பதில் எந்தவிதமான முன்னேற்றங்களும் தென்படவில்லை. எனவே அனைத்துலக கண்காணிப்புக்குழு அவசியமானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி>புதினம்.

Friday, March 16, 2007

'சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு, அமெரிக்கா ஆதரவளிக்கிறது'

"தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருவதையும், கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கொள்வனவை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதனையும் சில கட்சிகள் மறந்துவிட்டன" என்று கொழும்பு ஊடகம் தனது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியாகியிருக்கும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"அமெரிக்காவின் முன்னாள் கரையோர சுற்றுக்காவல் கப்பல் யுஎஸ்எஸ் கோஸ்ற் கட்டர் கறேஜியஸ் முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. இந்த கப்பலானது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு செப்ரம்பரில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்றதாக கூறி அடையாளம் தெரியாத கப்பலின் மீது கற்பிட்டிக் கடலில் தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த கப்பலின் பங்கு முக்கியமானது.

அண்மையில் மகிந்தவின் அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பொருட்கள் வேவைகள் வழங்குதல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது பல நெருக்கடிகளை தோற்றுவித்தாலும், அமெரிக்காவினதும், சிறிலங்காவினதும் உறவின் வளர்ச்சியின் அடையாளம் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் 5 ஆம் நாள் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் பொருட்களையும், சேவைகளையும் இலகுவாக பரிமாறிக்கொள்ள முடியும். அமெரிக்கா 89 நாடுகளுடன் இதே போன்ற ஒப்பந்தங்களை செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி கண்டனங்களையும், ஜே.வி.பி தனது கவலையையும் இது தொடர்பாக தெரிவித்திருந்தன ஆனால் அவற்றை மூத்த அரசாங்க அதிகாரி நிராகரித்திருந்தார்.

பொருட்கள் வேவைகள் வழங்குதல் ஒப்பந்தமானது கடந்த வாரம் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை ரணிலின் காலத்திலேயே அமெரிக்கா ஆரம்பித்திருந்தது. அன்றைய ரணிலின் ஐக்கிய தேசிய முன்னனி அரசு அதனை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் அது நிறைவு செய்யப்படவில்லை. அன்று இந்த ஒப்பந்தம் தொடர்பான அறிக்கைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என முன்னாள் ரணிலின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் யுஎஸ்எஸ் கோஸ்ற் கட்டர் கறேஜியஸ் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டதுடன் அதன் பெயர் எஸ்.எல்.என்.எஸ் சமுத்ரா என மாற்றப்பட்டது.

இது சிறிலங்காவினால் வாங்கப்பட்ட இரண்டாவது கரையோர சுற்றுக்காவல் ரோந்துக் கப்பலாகும். முதலாவது கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயுரா இந்தியாவிடம் இருந்து 19 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டது. மேலும் ஈகுரேபிள் கப்பல் கட்டும் இடத்தில் கட்டப்பட்ட ரினிற்றி மரைன் வகையை சேர்ந்த ஏழு அதிவேக தாக்குதல் படகுகளும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒரு மைல் கல்லாகும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கும் வேளை, ஐக்கிய தேசியக் கட்சி அதனை சாடியுள்ளது. அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள இரகசிய உடன்பாடு அது விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாட்டைப் போன்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அடுத்த அமர்வின் போது தன்னால் சமர்ப்பிக்க முடியும் எனவும், இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் நாள் கூடவுள்ளது.

ரணிலின் காலத்தில் இரு நாடுகளின் குடியுரிமையாளர்களை அனைத்துலக குற்ற நீதிமன்னறத்தில் ஒப்படைப்பதில்லை என்ற உடன்பாடு அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் எட்டப்பட்டதாகவும். சந்திரிக்காவின் காலத்தில் அமெரிக்க பசுபிக் பிராந்திய சிறப்பு நடவடிக்கைப் பிரிவினால் நடத்தப்படும் இணைந்த கூட்டுப் பயிற்சி நடவடிக்கை திட்டம் அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மகிந்த அரசாங்கத்தினால் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் அண்மைக்காலமாக அதிகரித்து வந்த அமெரிக்க - இந்திய உறவில் ஏற்பட்ட பின்னடைவாகும். அண்மைக்காலமாக ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பொருளாதார நண்பர்களாக உறவைப் மேம்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிறிலங்காவின் சில அரசியல் கட்சிகள் உண்மைத்தன்மையை அறியத் தவறிவிட்டன. தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருவதனையும் கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதனையம் சில கட்சிகள் மறந்துவிட்டன.

மேலும் ஈராக்கின் மீது போர் தொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படின் தமது கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்புவதற்கு அமெரிக்கா சிறிலங்காவின் உதவியை நாடும் என 2002 ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க தூதுவர் அஸ்லி வில்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படா விட்டாலும், இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவின் பங்களிப்பு உண்டு. ஏனெனில் சிறப்பு படையணிகளின் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்காவும் அமெரிக்காவும் தமது உறவைப் பேணி வருகின்றன.

1996 ஆம் ஆண்டு இஸ்ரேலிடம் இருந்து கிபீர் போர் விமானங்களை வாங்கும் போதும் அமெரிக்கா சிறிலங்காவிற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன் பின்னர் அமெரிக்கா பல முக்கிய உதவிகளை செய்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் மோதல்களில் படையினரின் சுடுவலுவையும் அதிகரிக்க அது உதவியுள்ளது."

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நன்றி>புதினம்.

Thursday, March 15, 2007

நோர்வேயில் கரும்புலிகள் பற்றிய விவரணச்சித்திரம் வெளியீடு.


கரும்புலிகள் இருவரைத் தெரிந்தெடுத்து, அவர்களை பேட்டி காணவும், அவர்களது வாழ்க்கை, பற்றுறுதி என்பன சம்பந்தமாக ஆழ்ந்து தகவல் பெறவும் வெளிநாட்டுப் படப்படிப்புக் குழு ஒன்றிற்கு முதற் தடைவையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதி அளித்துள்ளனர் என My daughter the terrorist என்ற விவரணச்சித்திரத்தின் தாயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

58 நிமிடங்கள் நீடிக்கும் இவ்விவரணச் சித்திரத்தின் முதற்காட்சி கடந்த திங்கட்கிழமை நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள பாக்தியேட்டரில் அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.

பெண் இயக்குனரான பீற் ஆனஸ்ரட் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரு பெண் போராளிகளை மையமாக்கி இவ்விவரணச் சித்திரத்தை நெறிப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் தர்சிகா, புகழ்ச்சுடர் எனற இயக்கப்பெயரையும், கத்தோலிக்க மதப்பின்னணியையும் கொண்டவர்கள். அத்துடன் தமது இளவயதுப் பருவத்திலிருந்தே விடுதலைப் புலிப் போராளிகளாக இருந்து, தற்போது கரும்புலிப் படையில் அங்கம் வகிப்பவர்கள்.

இவ் விவரணம் உருவாக்கப்பட்ட காலத்தில், இயக்குநரும் அவரது குழுவினரும், பெண்களை மட்டுமே கொண்ட அந்த முகாமுக்குள் இவ்விரு பெண் கரும்புலிகளினது நாளாந்த வாழ்க்கையை அவதானிக்கவும், சுதந்திரமாகப் புழங்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

"இப் பெண்களிருவரையும் தாமே பேசுவதற்கு வழி செய்வதாலும், அவர்களுடைய சிந்தனைகளையும், கனவுகளையும் அறிவதனாலும், பயங்கரவாதம் பற்றி மேலும் நெருக்கமாகப் புரிந்து கொள்வதற்கும், சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கும் முடியும் என்ற நம்பிக்கையை நான் கொண்டிருந்தேன்" என இயக்குனர் பீற் ஆனஸ்ரட் ஸ்னிற் பிலிம் புரொடக்சன் தயாரிப்பாளர்களின் இணையத்தளத்தில் தெரிவித்தனர்.

இப் பெண் புலிகள் இருவரும் சமாதான பேச்சுக்கள் முன்னேற்றம் கண்ட காலத்தில், விடுதலைப் புலிகளின் சாதாரண போராளிகளாகச் சேவையாற்றிய போதே இவ் விவரணச்சித்திரம் எடுக்கப்பட்டதாகும்.

இப் போராளிகளில் ஒருவரின் தாயாரின் மூலம் இவர்களிருவரின் வாழ்க்கைப் பின்னணியையும் இவ்விவரணம் தேடிப் பதிவு செய்கின்றது.

விவரணச்சித்திரத்தின் கதாநாயகியாகிய தர்சிகா, கத்தோலிக்க மத அருட்சகோதரியாக வேண்டும் எனச் சிறு வயதில் விரும்பினாள் என்றும், அந்த சமயத்தில் தர்சிகாவின் தந்தை, வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது சிறிலங்கா வான்படையினரின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார் என்றும் யுத்தத்தினால் சிதைவுற்ற சமுதாயத்தில் தனது குடும்பத்தை வளர்த்தெடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் அவளுடைய தாயார் கூறுகின்றார்.

"பிள்ளைப் பிராயத்தை உள்நாட்டு யுத்தம் ஊடுருவும்போது அதனனின்று தப்பிப்பது இயலாததொன்று. 12 வயதாக இருக்கையில் தர்சிகா தாயரிடமிருந்து காணாமற்போய், கரந்தடிப் படையினர் கைகளுள் வீழ்கின்றாள்" என தயாரிப்பாளர்கள் விவரணத்தின் சுருக்கத்தில் குறிப்பிடுகின்றனர்.

பெண் கரும்புலிகளின் வாழ்க்கை, அவர்களுடைய சிந்தனைகள் என்பவற்றையிட்டு ஆழமான தகவல்களைத் தருகின்ற ஒரு அலசல் மூலம் என இவ் விவரணச்சித்திரம் விபரிக்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு பொது மனிதரும் கொல்லப்படாத கட்டுநாயக்கா சிறிலங்கா விமானப்படைத் தளத்தின் மீதான யூலை 2001 தாக்குதல், மற்றும் பொதுமனிதர்கள் கொல்லப்பட்ட கொழும்பு உலக வர்த்தக மையத்தின் மீதான 1996 தாக்குதல் என்பன சம்பந்தமான ஊடக விபரங்களையும் இச்சித்திரம் உள்ளடக்கியுள்ளது.

நோர்வேயின் கருத்துச் சுதந்திரத்துக்கான அமைப்பான The jury of the Freedom of Expression Foundation (Fritt Ord) 2004 ஆம் ஆண்டு திரைச்சித்திரத் தாயாரிப்புக்கான ஆதரவு வழங்கத் தகுதியுள்ளவை எனத் தேர்ந்தெடுத்த எட்டுத் தயாரிப்புத் திட்டங்களுள் இவ் விவரணச் சித்திரமும் ஒன்றாகும். இச்சித்திரம், விவாதத்தை மேற்தொடர ஒரு அரங்காக அமையும் எனக் கருதப்பட்டதனால், தயாரிப்புக்கான உதவியைப் பெறத் தகுதி பெற்றது.

இவ் விவரணச் சித்திரத்தின் ஒளிபரப்பு உரிமையை, ரேடியா-கனடா ரெலிவிசன், டென்மார்க் ரிவி - 2, நோர்வே ரிவி - 2, துபாயில் உள்ள அல்-அரேபியா ரிவி சனல், யப்பானிய சற்றலைற் என்எச்கே-பிஎஸ்1 என்பன வாங்கியுள்ளன.

ஊடகத் தொழிற்றுறையில் 25 ஆண்டுகால அனுபவம் உள்ள இயக்குனர் பீற் ஆனஸ்ரட், குடியயேற்றக் காலத்தில், இந்தியாவிலும், இலங்கையிலும் நோர்வேயின் அதிகம் அறியப்படாத பாத்திரம் குறித்து, தனது முதலாவது விவரணச்சித்திரமாகிய Where the waves sing ஐ இயக்கியிருந்தார்.

Director: Beate Arnestad
Producer/Co-Director: Morten Daae
Cinematographer: Frank Alvegg
Production Company: Snitt Film Production

படத்தினை பார்க்க இங்கே சொடுக்கவும்.
Preview URL: http://www.snitt.no/mdtt/prints/movie.htm

தரவிறக்கி பார்க்க இங்கே சொடுக்கவும்.
http://www.snitt.no/movie/webpreview_mediumreal.mov

Wednesday, March 14, 2007

இலங்கையில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதே தீர்வுக்கான முதற்படி: ரொனி பிளேயர்.

இலங்கையில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான முதற்படியாக 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு 2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே வழியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் ஆளும் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கெய்த் வாஷ்ஷினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிளேயர், தனது நல்ல நிர்வாகத்தை பயன்படுத்தி எல்லாத் தரப்புக்களையும் 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை மீள நடைமுறைப்படுத்த வைப்பதுடன், அதன் மூலம் வன்முறைகளுக்கு முடிவு கட்டவேண்டும் என கெய்த் வாஷ் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ரொனி பிளேயர் தெரிவித்ததாவது:

சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன்பாக உள்ள பிரச்சனைகளை என்னால் முற்றாக புரிந்து கொள்ள முடிகின்றது. அது ஒரு சவாலான நிலமை.

நாங்கள் அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம். ஆனால் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை கடைப்பிடிப்பது தான் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரே வழியாகும். பயங்கரவாதமும், வன்முறைகளும் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிகளல்ல என தெரிவித்தார்.

இதனிடையே, எல்லா இன மக்களிற்கும் வன்முறைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்த வாரம் பிரித்தானியாவிற்கு சென்றிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரிடம் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் மாக்கரட் பெக்கெற் தெரிவித்திருந்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை எமது அரசாங்கம் தீவிரமாக அவதானித்து வருகின்றது. மக்கள் பெரும் மனித அவலங்களை சந்தித்து வருகின்றனர். மனித உரிமை மீறல்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை. எனினும் அது சிறிலங்கா தொடர்பாக உலகின் அபிப்பிராயங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது.

இரு தரப்பும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதையே தற்போதைய நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு வழியல்ல என்பதனை நான் உறுதிபட தெரிவித்தக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சிறிலங்காவிற்கு சென்றிருந்த பிரித்தானியாவின் உதவி வெளியுறவு அமைச்சர் ஹிம் ஹாவல் விடுதலைப் புலிகளுடன் பிரித்தானியா எதிர்காலத்தில் பேச்சுக்களை நடத்தும் என தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் தீர்வு என கூறிக்கொண்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மகிந்தவின் நடைமுறை அனைத்துலக ஆதரவை பெறுவதற்காக சந்திரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட சமாதானத்திற்கான போரை போன்றது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

இந்திய - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலினால் பாதகங்களே அதிகம்: கலைஞர் கருணாநிதி.

இந்தியா - சிறிலங்கா நாடுகள் கடலில் கூட்டு சுற்றுக்காவல் பணியை மேற்கொள்வதினால் பாதகங்களே அதிகம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.


சென்னையில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி,

அக்கேள்வி பதில்களின் விபரமாவது:

கேள்வி: சிறிலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய பிரச்சினை என்னவாயிற்று?

பதில்: இப்பிரச்சினை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்த மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்திய மீனவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், சிறிலங்கா அரசுடன் மத்திய அரசு தீவிரமாக இது பற்றி பேசி வருவதாகவும், இந்தியக் கடற்படைத் தளபதி, சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் தமிழக மீனவர்களின் உயிரையும், நலனையும் பாதுகாக்க மத்திய அரசு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கேள்வி: இந்தியா - சிறிலங்கா இராணுவத்தினர் கூட்டாகக் கடலில் சுற்றுக்காவல் நடத்துவதனை இந்தியா ஏற்றுக்கொள்கிறதா?

பதில்: கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் - "கூட்டாக சுற்றுக்காவல்" என்பதால் நாம் நினைத்துப் பார்க்கும் சாதகமான விடயத்தை விடப்பாதகம்தான் அதிகமிருக்கும் என்று அனுபவ ரீதியாக உணரப்படுகிறது - எனவே தவளையும் எலியும் கூட்டுச் சேர்ந்து கால்களைக் கட்டிக்கொண்ட கதையாகி விடக்கூடாதே அன்று கவலையுடன் பலரும் கருதுகிறார்கள்.

நன்றி>புதினம்.

Tuesday, March 13, 2007

கருணாநிதியின் கூற்றுப் பொய்யானது!!!

சிறிலங்கா கடற்கலங்களில் இந்தியப் படையினருக்கு அனுமதியில்லை: சிறிலங்கா அரசு

இந்திய கடற்படை அல்லது கரையோரக் காவல் படையினரை சிறிலங்கா கடற்படைக் கப்பல்களில் அனுமதிக்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.


சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணை தூதுவர் ஹம்சா, இந்திய காவல் படையினரை சிறிலங்கா கடற்கலங்களில் அனுமதிக்க தயாராக இருப்பதாக கூறியதாக இந்திய ஊடகங்களில் வெளிவந்த செய்தியைத் தொடர்ந்தே சிறிலங்கா அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா அரசு தமது கடற்கலங்களில் இந்தியப் படையினரையும் இணைத்து காவல் நடவடிக்கையில் ஈடுபட சம்மதித்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது சிறிலங்காவின் பிரதித் தூதுவரால் தெரிவிக்கப்பட்டதாகவும் கருணாநிதி மேலும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை சிறிலங்கா அரசு நிராகரித்ததுடன் கருணாநிதியின் கூற்றுப் பொய்யானது எனவும் சிறிலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதை அவர் மறுத்துள்ளதுடன், இந்திய மீனவர்கள் சுதந்திரமாக சிறிலங்காவின் கடற்பிரதேசங்களில் மீன்பிடித்தலில் ஈடுபடுவதாகவும் அவர்களின் அதிகரித்து வரும் அழுத்தங்களை கண்டு அரசாங்கம் கண்டும் காணாமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை அடுத்து கடந்த திங்கட்கிழமை தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டதுடன், மாநில மின்சாரத்துறை அமைச்சர் என்.வீரசாமி தலைமையிலான குழுவினர் பேச்சுக்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாக்கு நீரிணையில் இந்திய - சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு ரோந்தையே தாம் விரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறன சந்தர்ப்பங்களில் இந்திய அதிகாரிகளினால் சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை தடுக்கமுடியும் எனவும் அது தெரிவித்துள்ளது.

இணைந்த சுற்றுக்காவல் நடவடிக்கையானது இந்திய கடற்படையினரையோ அல்லது கரையோர காவல் படையினரையோ சிறிலங்கா கடற்கலங்களில் ஏற்றிச்செல்வதாக அர்த்தப்படாது என சிறிலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

நாதியற்ற நிலையில் தமிழ்ச்சாதி இல்லை!!!

தமிழர் தம் தேச இறைமையை மீட்டு தமிழீழம் எய்தும் வரலாற்றின் காலப்பகுதி தற்போது நடைபெறுகிறது எனறே தமிழினம் உணர்கிறது.

ஆபத்தான ‘சமாதானம்’ எனும் நெருப்பாற்றை வெற்றியோடு கடந்து புடம்போட்ட புதிய புலிகளாக தமிழினமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் எழுந்து நிற்கும் இக்காலப்பகுதி, தமிழரின் வீரம் செறிந்த, குருதியாலும் சதைகளாலும் வெல்லப்பட்ட விடுதலைவேள்வியை முடித்துவைக்கும் கணங்கள் என்றே எம் உளங்களும் உயிர்களும் கருதுகின்றன.

புதிய தேசத்தை பிரசவிக்க பிரசவவேதனை தொடங்கிய உணர்வு உலகத்தமிழரை ஆட்கொள்ள தொடங்கிவிட்டது. இவை ஆவேச வார்த்தைகள் அல்ல(rhetoric) அது களயதார்த்தமாகும். ( ground reality).

நீண்டபோராட்டத்தினதும் சமாதானப் பயணத்தினதும் இறுதியில் தமிழரின் அரசியல் நிலைப்பாடும் யதார்த்தமும் அனைத்துலகிற்கு மீளவலியுறுத்தப்பட்ட நிலையில், அமையப்போகும் தேசத்தை உள்ளடக்க (Accomodate) சிலநாடுகள் தயாராவது போன்ற தோற்றம் கூடதெரிகிறது.

இக்கணங்களில் தமிழ்தேசிய நிலைப்பாட்டுடன் செயற்படும் தமிழ் ஊடகங்களின் பங்கு மகத்தானது. வெற்றிக்கு மக்களை தயார்படுத்தும் அதேவேளை எதிரியின் உளவியற்போரை முறியடிக்கும் வல்லமையும் கடமையும் தமிழ் ஊடகங்களையே சாரும்.

அண்மையில் கொழும்பில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாழிதளில் ‘நாதியற்ற நிலையிலா தமிழ் சாதி?’ என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது.

சிறீலங்கா தேசம் தோல்வியுற்ற கேடுகெட்ட நாடாகிவிட்ட (failed & rogue state) நிலையில் தீவெங்கும் நிகழும் அரச படைகளினதும் ஒட்டுக்குழுக்களினதும் கடத்தல், காணாமல் போதல் சித்திரவதைகள், கோரப்படுகொலைகள் அன்றாடம் நிகழும் நிலையில் விரக்கியுற்ற நிலையில் எழுதிய ஆசிரியரின் சிலகருத்துக்கள் தமிழ்மக்களை கவலையுறச் செய்தும் உள்ளன.

நாட்டின் கோர நிலமையை சிறப்பாக வர்ணித்த வீரகேசரி ஆசிரியர் "தமிழ் மக்களின் இரட்சகர் யார் என்பது தான் இதுவரை தெரியவில்லை சிலர் இரட்சகர்களாக காட்சி தருகின்றனர். ஆனால், நடைமுறையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கின்ற அவலங்களுக்கு தீர்வு கிடைப்பதாக இல்லை. அப்படியானால் தமிழ் சாதி நாதியற்ற நிலையில் இருக்கின்றதா?"

என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ மக்களின் இரட்சரககள் யார் என்று தெரியாத நிலையில் அவர் (வீரகேசரி ஆசிரியர்) இருந்தாரா என்பதே இங்குள்ள கேள்வி.

இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிறீலங்கா அரச பயங்கரவாத கொடுமையை நிறுத்த தமிழ்சமூகமும் அதேவழிமுறையை கையாளமுடியாது. வேறுவழிமுறைகளையே கையாள முடியும். மிகக்கவனமாக நகர்த்தப்பட்ட புலிகளின் இராணுவ அரசியல் வியூகமே தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற பல அனைத்துலக நாடுகளின் நிலைப்பாட்டிற்கு காரணமானது.

மிகக்கவனமாக கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத்தின் இராஜதந்திர இருப்பை நாம் உணர்ச்சி வயப்பட்டு உடைக்கமுடியாது. எமது விரக்கியை வெளிக்காட்டும் எழுத்துக்கள் ‘விடுதலை வாசலில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம்’ என்ற இலட்சோப இலட்சம் தமிழ் மக்களின் உளங்களை பாதித்து நம்பிக்கையிழக்கச் செய்யக் கூடாது என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி>பதிவு

Monday, March 12, 2007

உதவி வழங்கும் நாடுகளுக்கு விண்ணப்பம்: உங்கள் கையொப்பம் அவசர தேவை!!!

சில வாரங்களுக்கு முன் ஐ. நா. செயலாளர் நாயகம் பன் கி மூன் அவர்களுக்கு ஈழ மக்கள் நெருக்கடி தொடர்பாக அனுப்பிய விண்ணப்பத்தில் நீங்கள் 6,000 பேர் வரை கை ஒப்பம் இட்டமைக்கு, அதன் ஆரம்ப கர்த்தாவான மருத்துவக் கலாநிதி எலின் ஷாண்டர் அவர்கள் மனதார்ந்த நன்றி தெரிவிக்கிறார்.

அவ் விண்ணப்பப் பிரதிகள் ஐநா மனித உரிமைச் செயலர் லூயிஸ் ஆபர் உட்பட மேலும் 12 ஐநா அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதே அமெரிக்க மருத்துவர் ஷாண்டரும் சக மனித நேய ஆர்வலர் லீசா ஹான்சன் என்பவரும் சிறிலங்காவுக்கு பண உதவி புரியும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அவசர விண்ணப்பம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த கை எழுத்து வேட்டையிலும் உங்களை ஆர்வமுடன் பங்கு கொள்ளுமாறு கேட்டு நிற்கிறார்கள். இது புதிய தளம் என்பதுடன், பணம் எதுவும் கட்டவேண்டிய தேவையில்லை.

விரும்பியவர்கள், கீழே உள்ள இணைப்பை அழுத்தி உள்செல்லவும்.
http://www.gopetition.com/petitions/intern...-sri-lanka.html


நன்றி>புதினம்

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவும் இந்தியாவும் இந்த தருணத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுவதுடன், இந்த இரு நாடுகளும் ஆதரவளிக்காத பட்சத்தில் குறிப்பிட்ட தீர்மானம் கொண்டுவரப்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கு ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவும் கிடைக்கலாம்.

ஜெனீவாவில் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான தீர்மானத்தை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தான் அறியவில்லை என இலங்கை வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டால், இலங்கை பொறுப்புணர்வு வாய்ந்தது, ஜனநாயக நாடு என்பதை நிரூபிப்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கூறவுள்ளதாக கோஹண குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் பலனளிப்பதற்கு சில காலம் எடுக்கும். இலங்கை சர்வதேச தரத்தினை அடைவதற்கு போராடும் நெருக்கடிக்குள்ளான ஜனநாயகம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச நாடுகள் இதற்கு உதவ வேண்டும் விமர்சனம் செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து இந்தியா கவலை கொண்டிருந்தால் கூட அது இலங்கையை தனிமைப்படுத்த விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

சிறிலங்கா - இந்திய கூட்டுக்கடல் கண்காணிப்பை ஏற்படுத்த சிறிலங்கா அரசு சதி!!!

இந்திய மீனவர்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தவில்லை என சிறிலங்கா கடற்படையினர் மறுத்துள்ளதுடன், இரு தரப்பு கடல் எல்லைகளின் இருபுறமும் மீனவர்களை கண்காணிப்பதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து செயற்படும் திட்டம் ஒன்றையும் சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது.

இரு தரப்பும் இணைந்து கடல் எல்லைகளை கண்காணிப்பதுடன், மீனவர்களின் நகர்வுகள் தொடர்பாக தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் திட்டம் ஒன்றை செய்து கொள்ள சிறிலங்கா அரசு விரும்புவதாக அதன் வெளிவிவகார அமைச்சு நேற்று ஞாயிற்றக்கிழமை தெரிவித்துள்ளது.

அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர்களுக்கு காயங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும், அதற்குரிய குழுவை இந்தியாவிற்கு அனுப்புவதாகவும் சிறிலங்கா தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 10 ஆம் நாள் கச்சதீவின் தென்மேற்கு பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர் ஒருவர் பலியாகி இருந்தார். எனினும் எமது கடற்படை ஒருபோதும் இந்திய கடல் எல்லைக்குள் சென்றதில்லை. அவர்கள் நவீன உபகரணங்களை கப்பல்களில் கொண்டிருப்பதனால் தவறுகள் நிகழ வாய்புக்கள் இல்லை எனவும் எம்மீது பழியைப் போடுவதற்காக விடுதலைப் புலிகளே தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் சிறிலங்கா கடற்படையினர் திட்டமிட்டு இந்திய மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி அதன் மூலம் இந்திய - சிறிலங்கா கூட்டுக்கண்காணிப்பு என்ற வலைக்குள் இந்திய கடற்படையினரையும் இந்திய அரசையும் வீழ்த்துவதற்கு முயன்று வருவதாகவும் இந்த தந்திரோபாய விளையாட்டில் அப்பாவி இந்திய மீனவர்களின் உயிர்களும் உடமைகளும் இழக்கப்பட்டு வருவதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

Sunday, March 11, 2007

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுக்கும் முயற்சியில் மகிந்த சமரசிங்க.

ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் நான்காவது மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்காவின் மனித உரிமைகள் பேரனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரபட தீர்மானித்திருக்கும் தீர்மானத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளை திங்கட்கிழமை (12.03.07) ஆரம்பமாகி 30 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் உலகில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது.

இது தொடர்பாக மகிந்த சமரசிங்க தெரிவித்ததாவது:

"அங்கு சிறிலங்கா தொடர்பாக தீர்மானங்கள் விவாதிக்கப்பட மாட்டாது. ஆனால் சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தீர்மானத்தை கொண்டுவர முன்னர் தீர்மானித்திருந்தது. எனினும் அது முன்னர் விவாதிக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் அது விவாதிக்கப்படலாம்.

நான் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர உறுப்பினர்களை சந்தித்து சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிப்பேன். சிறிலங்காவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் கடந்த வருடம் ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் இன்றுவரை விவாதத்திற்கு அது எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது எடுத்துக் கொள்ளப்படுமா என்பது குறித்து எமக்கு எதுவும் தெரியாது.

மனித உரிமைகள் தொடர்பாக நாம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்பதனை குறிப்பாக விசாரணை ஆணைக்குழு மற்றும் அனைத்துலக நிபுணர் குழு தொடர்பாக அவர்களுக்கு நான் விளக்குவேன்.

எமக்கு எதிரான தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என நாம் நம்புகிறோம். இந்த தீர்மானத்தை எடுத்துக் கொள்வதற்கு இது நேரமல்ல" என்றார் அவர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தை முஸ்லிம் மாநாட்டு அமைப்பும் பல ஆசிய நாடுகளும் எதிர்த்திருந்தன.

மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனைகளை அமெரிக்கா எதிர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Saturday, March 10, 2007

கடத்தல்களுக்கான பொறுப்பை சிறிலங்கா அரசு ஏற்க வேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்கள், படுகொலைகள், தடுத்து வைத்தல், மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் பதிலை தரவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளதுடன் சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச்சபை சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
"சிறிலங்காவில் மனித உரிமைகள் மிகவும் மோசமான நிலமையிலேயே தொடர்ந்து உள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்தவும், மனித உரிமைகள் மீறப்படுவதை தடுப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பதை அனைத்துலக சமூகம் அறிவது முக்கியம்.

வன்முறைகள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அங்கு நீதியற்ற கொலைகள், கடத்தல்கள் மிகவும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு இவை தொடர்பாக 1,000 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமலும் போயுள்ளனர்.

சிறிலங்காவில் இது தொடர்பாக 5,749 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வடக்கு - கிழக்கில் மனிதாபிமான அமைப்புக்களின் நடவடிக்கைகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டியது அவசியமானது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை சபையின் கூட்டத்தில் மகிந்த சமரசிங்க உரையாற்ற உள்ள நிலையில் மன்னிப்புச் சபை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆபர் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்து வருகிறார் என்பதும் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள், அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஏனைய அமைப்புக்களும் ஆதரவுக் குரல்கள் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. உள்ளுர் விசாரணைகளில் தாம் நம்பிக்கைகளை இழந்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

அதிகாரப்பகிர்வு அவசியம், இல்லாது போனால் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்துபவர்களின் நோக்கங்களை அது இலகுவாக்கி விடும்: அமெரிக்கா.

"சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனது கவலையை தெரிவிப்பதுடன், நீண்டகால தேசியப் பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு காணப்பட வேண்டும்" என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

"சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கடுமையான நிலைப்பாட்டை" அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தாக சிறிலங்காவிற்கு சென்றிருக்கும் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் ஆசியப் பிராந்திய பிரதி அதிகாரியான ஷ்ரீவன் மான் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சந்தித்த பின்னர் ஊடகத்துறையினருக்கு கருத்து தெரிவிக்கையில் ஷ்ரீவன் மான் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:

"அமைதி வழிகளில் அரசியல் தீர்வை காணுமாறு நான் கேட்டுக்கொள்வது, சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உறுதியான பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்பதற்கான ஒரு மிக முக்கிய செய்தியாகும்.

இது சிறிலங்கா அரசிற்கு முன்னுள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அதிகார பரவலாக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் முன்வருவார்கள் என்பது அமெரிக்காவின் நம்பிக்கையாகும்.
இப்படியான ஒரு தீர்வை காணாது போனால் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்துபவர்களின் நோக்கங்களை அது இலகுவாக்கி விடும். மேலும் மனித உரிமை மீறல்கள், மனித அவலங்களுக்கும் அது வழிவகுத்து விடும்.

மனித உரிமைகள் விவகாரம் அமெரிக்காவிற்கு முக்கியமானது. மனித உரிமைகளை மதிப்பது சிறிலங்காவில் வெற்றிகரமான அமைதித்தீர்வுக்கு வழிவகுக்கும் என்பது எமக்கு தெளிவு.

விடுதலைப் புலிகள் மீதான அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றமில்லை எனினும் விடுதலைப் புலிகள் மீதான எல்லா அணுகுமுறைகளும் அவர்களை அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கான அழுத்தங்கள் ஆகும்.

தரவுகள் மற்றும் நிறுவனங்களின் கணிப்புக்களின் படி நடைபெற்று வரும் மோதல்கள் சிறிலங்காவின் பொருளாதாரத்தை 2-3 விகித வருட ளர்ச்சியாக மந்தப்படுத்தியுள்ளது. இதனால் இரு சகாப்தங்களில் பெருமளவான பொருளாதாரம் இழக்கப்பட்டுள்ளது. இது எல்லா மக்களினது நன்மைகளையும் பாதித்துள்ளது.

வடக்கு - கிழக்கில் அதிகளவான பொருளாதார வளர்ச்சிகள் ஏற்பட்டு, எல்லா இன மக்களும் அதன் பலன்களை பெறுவார்களானால் அது தீர்வுக்கான தடைகளை அகற்றுவதுடன், வர்த்தகத்துறையையும் முதலீட்டாளர்களையும் சிறிலங்காவை நோக்கி அதிகளவில் நாட்டம் கொள்ள வைக்கும்.

அனைத்துலக கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமா என கேட்கப்பட்டபோது. போர் நிறுத்த கண்காணிப்புக்குழு, அரச தலைவர் விசாரணைக்குழு போன்றவற்றுடன் இந்தக்குழு எவ்வாறு தொழிற்படும் என்பதில் தனக்கு தெளிவில்லை" என தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

Friday, March 09, 2007

போரின் விளைவை சிங்கள தேசமும் அனுபவிக்கும்!!!

சிறீலங்காப் படைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள மனித அவலம் தமிழீழ மக்களுடன் மட்டும் நின்றுவிடாது, பாரிய போருக்கு வழி வகுத்து வருவதாக, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்கள், மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில நாட்களுக்குள் மட்டும் 15 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து, பாரிய மனித அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை அவலத்துக்குள் தள்ளும் சிறீலங்கா அரசாங்கம் அதற்குரிய விளைவினையும் சிறீலங்காவிலும் உணர நேரிடும் என, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறினார்.

இதேவேளை, மட்டக்களப்பு புல்லுமலைப் பிரதேசம் நோக்கி சிறீலங்காப் படையினர் பிற்பகல் முதல் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்ததாக இளந்திரையன் நேற்று மதியம் தெரிவித்தார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் முகாம்களைக் கைப்பற்றியதாக சிறீலங்காப் படையினர் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிகளை நோக்கி நேற்றிரவு முதல் சிறீலங்காப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் மூன்று முகாம்களை கைப்பற்றி இருப்பதாகவும், சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருந்தார்.

சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கு ஆதரவாக மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளிலுள்ள தமது படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவதாகவும் சமரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை காலை கூறியிருந்தார்.

சிறீலங்கா இராணுவத்தின் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இராணுவத்தினர் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக் கூறினார்.
நன்றி>பதிவு.

ஐரோப்பிய தமிழர்களே விழிப்பாயிருங்கள்!! புதிய கோசங்களோடு புதிய முகங்கள்!!!

இந்த உதை பந்தாட்ட நிகழ்வு வரும் ஆண்டாகிய 2008இலேயே நடக்க இருக்கிறது. வரும் ஆண்டாகிய 2008ல் சிறிலங்கா தன்னுடைய 60வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டே இந்த உதைபந்தாட்ட நிகழ்வு இருக்கிறது. இந்த உதைபந்தாட்ட நிகழ்வின் பின்னணியில் நெதர்லாந்தில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் இருக்கிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அதுதான் உண்மை.

அண்மையில் பல நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களுக்கு புதிய பணியாளர்கள் சிறிலங்கா அரசினால் அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் சிறிலங்காப் புலனாய்வுத் துறையில் பணியாற்றியவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை, ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்குள் பிரிவினையை உருவாக்குவது.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒற்றுமையை உருவாக்குதல் என்று கோசத்தோடு இவர்கள் இந்த வேலையை செய்ய இருக்கிறார்கள். தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்த பங்குபெறக்கூடிய விழாக்களை நடத்துவது, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது போன்ற பல திட்டங்களோடு இவர்கள் சிறிலங்காவின் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் உதைபந்தாட்ட நிகழ்வு. இந்த உதை பந்தாட்ட நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஓடியாடிச் செய்து வருபவர் உதயன் என்றும் குமார் என்றும் அழைக்கப்படும் உதயகுமார் சிவநாதன் என்பவர். இவர் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் சிறுவர்களுக்கு பல உதவிகளை செய்து வரும் ஒருவராக அறியப்பட்டவர். ஆனால் இவருக்கும் நெதர்லாந்தில் உள்ள சிறிலங்காத் தூதரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது பலர் அறியாது ஒரு விடயம்.

உதயாகுமார் சிவநாதன் ஆரம்பத்தில் டென்மார்க்கில் வாழ்ந்தவர். தற்பொழுது நெதர்லாந்தில் வேற்றினப் பெண் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஐரோப்பாவின் பல மொழிகளை பேசக்கூடிய திறமை படைத்த இவர் தமது சதி வேலைகளுக்கு சரியான முறையில் பங்காற்றக்கூடியவராக சிறிலங்காவின் தூதரகத்தால் கருதப்படுகிறார்.

தமிழ் மக்களை ஏமாற்றி உதைபந்தாட்ட நிகழ்வில் கவர்ந்திழுப்பதற்காகவே "சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் சமாதானம்" என்ற தலைப்பு இடப்பட்டது. ஆனால் இந்தத் தலைப்பும் தமிழர்கள் நடத்துகின்ற ஊடகங்களில் வெளியிடுவதற்காக மட்டுமே. இந்த தலைப்பினால் ஏமாந்து போன சில தமிழ் ஊடகர்கள் தாங்களுடைய இணையத் தளங்களில் இந்த நிகழ்வு குறித்த விளம்பரத்தை வெளியிட்டும் விட்டார்கள்.

ஜனவரி மாதம் 6ஆம் திகதி நியுசிலாந்தில் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் நடந்தது. நியுசிலாந்தில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி பங்குபற்றிய துடுப்பாட்ட விளையாட்டின் போது விமானம் ஒன்றை "தமிழர்களை கொல்வதை நிறுத்து" என்ற வாசகம் தாங்கிய கொடியுடன் பறக்கவிட்டு நியுசிலாந்து தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். அந்த விமானம் மைதானத்தை சுற்றி வட்டமிட்டு பறந்தது. மைதானத்திற்கு வெளியிலும் பல தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான கோசங்களை தாங்கிய பதாதைகளுடன் நின்று போராட்டம் நடத்தினார்கள்.

இவ்வாறான உணர்வுள்ள தமிழ் மக்கள் சிறிலங்காவின் உதைபந்தாட்ட அணியை மட்டும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க மாட்டார்கள். அதுவும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திய தினத்தின் 60வது தினத்தை கொண்டாடுகின்ற ஒரு விழாவில் பங்கேற்கவே மாட்டார்கள்.

ஆனால் சிறிலங்கா தூதரகம் தமிழ் மக்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. இதற்கு உதயகுமார் சிவநாதன் போன்றவர்களும் துணை போகின்றார்கள். சிலர் உதயகுமார் சிவநாதனிடம் இந்த உதைபந்தாட்ட நிகழ்வை நடத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்லியும், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தான் சிறு வயதிலேயே வெளிநாடு வந்துவிட்டதாகவும், தனக்கு தமிழர் சிங்களவர் என்ற வேறுபாடு தெரியாது என்றும், தான் ஒரு சிறிலங்கன் என்று பதில் சொல்லி உள்ளார்.

ஆபிரிக்காவின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குழந்தை படுகின்ற துன்பத்தை உணர்ந்த இவருக்கு, தமிழ் தேசியம் பற்றி தெரியாமல் இருப்பது ஆச்சரியமான விடயம்தான். சிறிலங்கா தூதரகம் கொட்டுகின்ற பணம் இவருடைய கண்ணை மறைக்கிறது என்றே கருத வேண்டி உள்ளது.

இந்த உதைபந்தாட்ட விளையாட்டிற்கான ஏற்பாடுகளில் இருந்து, சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் பிரிவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கு பலவித திட்டங்களை தீட்டி உள்ளது தெரியவருகிறது. இந்தத் திட்டத்திற்கு புதிய கோசங்களோடு புதிய முகங்களை களம் இறக்குகிறது. திட்டம் நிறைவேறுவதற்கு "தமிழீழம்" போன்ற சொற்களை பாவிப்பதற்கும் அது தயாராக இருக்கிறது.

எமது தமிழர்கள் இது போன்ற வார்த்தைகளில் ஏமாறாது விழிப்பாக இருந்து, சிறிலங்கா அரசின் இது போன்ற திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
நன்றி> neruppu.org

Thursday, March 08, 2007

கருணா ஒட்டுக்குழுவிலிருந்து விலகி, வெளிநாட்டுக்கு ஓடுவோரை கொலை செய்யும் கருணா!!!


அண்மையில் கொழும்பு காந்தானை மற்றும் அநுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட சடலங்களும் கருணா ஒட்டுக்கும்பலின் முன்னால் உறுப்பினர்களினதே என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருணா ஒட்டுக்குழுவிலிருந்து விலகி வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடியவர்களே, இவ்வாறு கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருப்பதாக, அவர்களது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இதேவெளை சிறிலங்காப் படையினரின் துணையின்றி, பல சோதனைச் சாவடிகளைக் கடந்து எவ்வாறு கந்தானைப் பகுதியில் சடலங்கள் வீசப்பட முடியுமென பல அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மட்ட்க்களப்பில் கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட சிறார்களில், ஒட்டுக்கும்பலுடன் இணைய மறுத்த பலர் படுகொலை செய்யப்பட்டு வீசியெறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilenews.com/?subaction=showf...amp;ucat=1&

நான்காம் கட்ட ஈழப்போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்.

நான்காம் கட்ட ஈழப் போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு தெரிவித்துள்ளார்.
எதிர்பாராது இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வினோதரனின் வீரவணக்கக் கூட்டம் மாங்குளத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாங்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

பொதுச்சுடரை தளபதி கேணல் பானு ஏற்றி வைத்தார். வித்துடலுக்கான ஈகச்சுடரை மேஜர் வினோதரனின் துணைவியார் ஏற்றி, மலர்மாலை அணிவித்தார்.

தொடர்ந்து வித்துடலுக்கு மலர்மாலைகளை மேஜர் வினோதரனின் தந்தை மற்றும் தாயாரும் தளபதி கேணல் பானு, குட்டிசிறீ மோட்டார் படையணி சிறப்புத்தளபதி கோபால், தமிழீழ வைப்பக ஆளுகைப் பணிப்பாளர் வீரத்தேவன், தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் புகழ், முல்லைத்தீவு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் செம்மணன் ஆகியோர் அணிவித்தனர்.

வீரவணக்க உரைகளை தளபதி கேணல் பானு, சிறப்பு மருத்துவப்போராளி சோபிதா, சிறப்பு மருத்துவ தொண்டர் உமாறஞ்சனி, துணுக்காய் கல்வி வலய பிரதிப்பணிப்பாளர் சு.பரந்தாமன் ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து வித்துடல் கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பண்பாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய தளபதி கேணல் பானு மேலும் தெரிவித்துள்ளதாவது:

"விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டு போராடுகின்ற ஒவ்வொரு போராளியும் மக்கள் படுகின்ற அவலங்கள், துன்பங்கள், துயரங்கள் எல்லாவற்றையும் விரைவில் முடிவுக்குக்கொண்டு வரவேண்டும். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற இலக்கோடு தமது பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த இலக்கை இலட்சியத்தைக் கொண்ட போராளியான மேஜர் வினோதரனை நாம் இழுந்திருக்கின்றோம்.

விடுதலை என்பது சுதந்திரம் என்பது எந்த ஒரு நாட்டிலும் சும்மா கிடைக்கவில்லை. குருதி சிந்தி பல விலைகள் கொடுக்கப்பட்டு பெரும் போராட்டங்களுக்கு மத்தியில்தான் சுதந்திரத்தை மக்கள் பெற்றிருக்கின்றனர்.

எல்லோருக்கும் விடுதலைப் போராட்டத்துக்கான பங்களிப்பு இருக்கின்றது. இன்று வகை தொகையின்றி தமிழ் மக்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கொன்று ஒழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த அவலங்கள் எல்லாவற்றையும் நீக்கவேண்டும் எனில் நாம் எல்லோரும் ஒன்றுதிரண்டு நிற்க வேண்டும். எதிரியைப் பொறுத்தவரை தொடர்ந்து போரின் மூலம் எங்களுடைய வலிமைகளை மழுங்கடிக்கலாம் என்று நினைக்கின்றான். இன்று எல்லோருடைய மனங்களிலும் இது பற்றிய கேள்விகள் இருக்கும்.

கடந்த கால வரலாற்றை நாம் மீட்டிப்பார்க்க வேண்டும். இரண்டரை ஆண்டுகள் மாங்குளம் வரையான பகுதிகளை எதிரி பிடித்து வைத்திருந்தான். இத்தனை காலம் பிடித்து வைத்திருந்த நிலங்களை நாம் பத்து நாட்களுக்குள் மீட்டு விட்டோம். சிங்கள ஆட்சிப்பீடத்துக்கும் இராணுவ தலைமைப் பீடத்துக்கும் மாறி, மாறி ஆட்கள் வரலாம். எங்களிடம் ஒரே தலைமைதான் இருக்கின்றது. அந்த தலைமை தன் இலட்சியம், குறிக்கோள் என்பவற்றில் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாமல் உறுதியுடன் இருக்கின்றது.

சமாதான காலம் என்பது எமக்கு எல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஓன்றல்ல. ஆனால் எம்முடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை வெளி உலகுக்கு காட்ட வேண்டிய தேவை எமக்கு இருந்தது. இன்று அனைத்துலகம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அனைத்துலகத்துக்கு இது புரிகின்றது. அனைத்துலகத்தை எதிர்த்துக்கொண்டு சிங்கள அரசால் நிற்க இயலாது.

அமைதிக் காலத்துக்கு முன் எம்மை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அனைத்துலகத்துக்கு அறிமுகப்படுத்தினர். ஆனால் சமாதான காலம் எங்களை, எமது விடுதலைப் போராட்டத்தை, அதன் நியாயத்தை, நேர்மைத்தன்மையை, மக்கள் படுகின்ற அவலங்களை எம் மக்கள் ஒடுக்கப்படுகின்ற முறைமைகளை அனைத்துலக சமூகம் பார்த்திருக்கின்றது. அந்த ரீதியில் அனைத்துலகம் இதனை உணர்ந்திருக்கின்றது. அப்படி உணர்ந்த காலங்களாக, உணர்த்திய காலங்களாகத்தான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.

நாங்கள் விரைவில் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருக்கின்ற எதிரிகளை விரட்டியடிக்க வேண்டும் அல்லது கொன்றொழிக்க வேண்டும். எதிரிகளை விரட்டியடித்து எமது நிலத்தை பாதுகாத்துக் கொள்கின்ற நிலை வரும் போது கண்டிப்பாக அனைத்துலகம் எங்களை அங்கீகரிக்கும். பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு எங்களை அங்கீகரிக்கும். எமது தனிநாட்டை அங்கீரிக்கும்.

30 ஆண்டுகளுக்கு மேலான போராட்ட காலம் பல நெருக்கடிகளைக் கொண்ட காலமாக இருக்கின்றது. அடுத்த கட்டமாக இருப்பது 4 ஆம் கட்ட ஈழப்போர். இந்தப் போரை நாம் வெல்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எமக்கு வெற்றி நிச்சயம்.

பெரும் வெற்றிகளை பெற்றுத்தந்த எமது தேசியத் தலைவர் அவர்களின் கீழ்தான் நாம் இருக்கின்றோம். தேசியத்தலைவர் அவர்களின் காலத்தில் நாம் விடுதலையைப் பெறுவோம். அதற்கு நாம் அனைவரும் ஒன்று திரண்டு உழைப்போம்" என்றார் அவர்.
நன்றி>லங்காசிறீ