Wednesday, November 12, 2008

இலங்கைக் கடற்படை நடுக்கடலில் வெறியாட்டம் தமிழக மீனவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை - இந்திய இணையத்தளம் தகவல்!!!

கச்சதீவு அருகே இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் வாள் மற்றும் துப்பாக்கியால் அரக்கத்தனமாக - கண்மூடித்தனமாக - விலங்குகளைவிடக் கொடூரமான முறையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் -

"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் தங்களைத் திட்டி - நிர்வாணப்படுத்தி - சித்திரவதை செய்து - மூர்க்கத்தனமாகத் தாக்கினர் - என்று கரை சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார் என்றும் இந்திய இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வருமாறு-

இராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மாலை 5 மணியளவில் கச்சதீவு அருகே சில மீனவர்கள் 10 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது இலங்கைக் கடற்படையினர் 5 கப்பல்களில் அங்கு ரோந்து வந்தனர். தமிழக மீனவர்களைப் பார்த்ததும் சற்றி வளைத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் படகுகளில் ஏறினர். மீனவர்களை வாள் மற்றும் துப்பாக்கி முனைகளால் தாக்கி அவர்களை நிர்வாணப்படுத்தினர்.

மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படகில் இருந்த ஜோதிபாச (வயது-21), வினிஸ்டன், கார்பசேவ் மற்றும் இன்னொரு படகில் இருந்த கிங்ஸ்டன் ஆகியோரை அடித்து உதைத்தனர். துப்பாக்கி முனையால் அவர் களைத் தாக்கியதில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
பின்னர் படகில் இருந்த ஐஸ் பெட்டி, மரப்பலகைகள் ஆகியவற்றை கடலுக்குள் தூக்கி வீசியதுடன், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி நேற்றுக்காலை மீனவர்கள் கரைசேர்ந்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் கியூப் பிரிவுப் பொலி ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களைக் கடந்த 2 மாதங்களில் நடுக்கடலில் இவ்வாறு தாக்குவது இரண் டாவது முறையாகும். முன்னதாக 25 படகுகளைச்சற்றிவளைத்து தாக்கியதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில்,
"இந்திய வேசி மகனே" என்று சிங்களப் பாசையில் திட்டினர் எனக் கூறினர். மீண்டும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளமையால் தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நன்றி:-உதயன்