Wednesday, February 28, 2007

மட்டக்களப்பில் செல்லடி, படம்காட்டுறம் வாங்க.

மட்டக்களப்பில் செல்லடி, ஒளிப்படம்காட்டுறம் வாங்க. படம்பார்க்கும்போது ஒலிப்பேழையை நிறுத்திவிட்டு பார்க்கவும்.

மட்டக்களப்புச் சம்பவம் வெளிப்படுத்தும் உண்மைகள்.

மட்டக்களப்புச் சம்பவம் வெளிப்படுத்தும் உண்மைகள் - காலதாமதம் செய்யாமல் தமது தரப்பு நிலைப்பாட்டைத் புலிகள் வெளிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல அம்சமே.


மட்டக்களப்பில் இராஜதந்திரிகள் உட்பட சில அதிகாரிகளை ஏற்றிவந்த ஹெலிக்கொப்டர் நேற்றுக் காலை தரை இறங்கிய சமயம் நேர்ந்த அனர்த்தம் பலத்த சர்ச்சையையும் வாதப்பிரதிவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தை ஒட்டி, காலதாமதம் செய்யாமல் தமது தரப்பு நிலைப்பாட்டைத் தமிழீழ விடு தலைப் புலிகள் வெளிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல அம்சமே.
இந்தத் தாக்குதலைத் தாங்களே நடத்தியிருக் கின்றார்கள் என்பதை விடுதலைப் புலிகள் ஒப்புக்கொள்ளத் தவறவில்லை.

இவ்விவகாரத்தை ஒட்டி விடுதலைப்புலி களும், இலங்கை அரசுத் தரப்பும் மாறி மாறி ஒரு வர் மீது ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பெரும் இராஜதந்திர சர்ச்சைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.

இந்தச் சம்பவத்தின் விளைவு இராஜதந்திர ரீதி யிலும், போரியல் நடவடிக்கைப் போக்கிலும் எத் தகைய பெறுபேறுகளை அல்லது பிரதிபலன் களையோ, பாதிப்புக்களையோ தரப்புகளுக்கு ஏற்படுத்தப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஆனால் இந்தச் சம்பவம் சில அடிப்படை உண் மைகளைத் தெளிவுபடுத்தத் தவறவில்லை என் பதையும் நாம் நோக்கவேண்டும்.

கிழக்கின் பெரும் பகுதியை விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிட்டோம், அவர்களைத் தொப்பிகலைக் காட்டுக்கு அப்பால் விரட்டியடித்துவிட்டோம் என்றெல்லாம் தென்னி லங்கை மார்தட்டி வரும் பின்னணியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

அதுவும் மட்டக்களப்பு நகரை அண்டி விமா னப்படையின் பிரதான தளத்தின் மூல மையப் பிர தேசமான விமான ஓடுபாதைப் பகுதி மற்றும் மட் டக்களப்பு நகரின் மையத்தில் உயர் பாதுகாப்பு பிர தேசத்தில் அமைந்துள்ள வெபர் விளையாட்டரங்கு ஆகியவற்றை குறிதவறாது இலக்குவைத்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது 122 எம். எம். ரக ஷெல்கள் என இராணுவ வட்டா ரத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்புச் செய்தி கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை, கரடியனாறு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அண்டிய சில பிரதேசங்கள் புலிகளின் கட்டுப் பாட்டிலேயே இன்னும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

புலிகளின் மைய நிலையமான வன்னிப் பெரு நிலப்பரப்புடன் பாதுகாப்பான தரைவழிப் பாதையோ, கடல்வழித் தொடர்போ அற்ற நிலையிலும் இப் பிராந்தியத்தில் கணிசமான பிரதேசம் இவ்வாறு புலி களால் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்கும் நிலை யில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப் பட்டி ருக்கக்கூடிய 122எம்.எம். மோட்டார் ஷெல்களின் பொதுவான அதிகூடிய வீச்செல்லை 17 கிலோ மீற்றராகும். அப்படியானால், கொக்கட்டிச்சோலை யில் இருந்தோ அல்லது அதை அண்டிய பிரதேசம் ஒன்றிலிருந்தோ மட்டக்களப்பு விமானத் தளத்தின் மையத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலைப் புலிகள் நடத்தியிருக்கக்கூடும்.

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் முடிவு கட்டி, அதன் மூலம் இனப்பிரச்சினையை அடக்கி, ஒடுக்கும் எண்ணம் கொண்டிருக்கும் தென்பகுதித் தீவிரப் போக்காளர்களுக்கு இச்சம்பவம் ஒரு செய் தியை எடுத்தியம்பத் தவறவில்லை.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் சில தினங்களுக்கு முன்னர் தெளிவு படுத்திய செய்திதான் அது.

கேள்வி:கேள்வி:சிங்களப் பெரும்பான்மையினரைக் கொண்ட தென்னிலங்கை, இனப்பிரச்சினைக்கு இராணு வத் தீர்வு சாத்தியம் என உணர்கிறது. ஆனால் நான் அந்தக் கருத்துடன் உடன்படவில்லை. தமிழ் சமூ கத்தின் நியாயமான ஆதங்கங்களைக் கவனத்தில் கொள்ளும் சமாந்தர அரசியல் தந்திரோபாயம் இல் லாமல் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது.

கேள்வி:கேள்வி:இராணுவத் தீர்வு சாத்தியமாகும் என நாம் நம்பவில்லை. பயங்கரவாத முறைகளைப் பயன் படுத்தித் தாக்குவதில் புலிகளுக்குக் குறிப்பிடத் தக்க வலிமை உண்டு. அதை நாம் குறைத்து மதிப் பிட்டு விடக்கூடாது.கேள்வி இவ்வாறு அமெரிக்கத் தூதுவர் சில தினங் களுக்கு முன்னர் கூறியவை, நிஜமாகவே அவரது கண் முன்னால் ஏனையோருக்கு ருசுப்படுத்தப் பட்டி ருக்கின்றன.

பயங்கரவாத முறையில் அல்லாமல், அரச படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள விமானப் படை யின் மையத்தளத்தின் மீது இராணுவ இலக்கு மீது மரபு ரீதியான யுத்தத் தாக்குதல் நடவடிக்கை முறை மூலம் தமது வலிமையை இச்சந்தர்ப்பத்தில் புலிகள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

பிரதேசங்களைப் புதிது புதிதாகக் கைப்பற்றி, வழமை நிலையை ஏற்படுத்தி வருகிறோம் என்று சர்வதேச சமூகத்துக்கு தென்னிலங்கை போடும் படத்தின் நம்பகத்தன்மை எத்தகையது என்பதை சர்வதேச சமூகம் நேரில் கண்டறிவதற்கு இந்தச் சம்பவம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருப்பதை யும் நாம் அவதானிக்கலாம்.

பல முக்கிய நாடுகள், தமது இராஜதந்திரிகள் தங்களது நேரடி அனுபவத்தின் அடிப்படையில் தெரிவிக்கும் கருத்துக்களை வைத்துக்கொண்டு உண்மை நிலையை மதிப்பீடு செய்ய இது ஒரு வாய்ப்பையும் தந்திருக்கின்றது.
பெறுமதியும், மதிப்பும், கௌரவமும், கீர்த்தி யும் கொண்ட இராஜதந்திரிகளின் உயிர்களுக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்துமிக்க இந்தச் சம்பவம் இடம்பெற்றமை சகலரையும் பொறுத்தவரை துரதிஷ்டவசமானதே.
ஆனாலும் களநிலையின் யதார்த்தத்தை மெய்யுண்மை நிலையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை அது தந்திருப்பதும் மறுக்கக் கூடியதல்ல.
நன்றி>லங்காசிறீ.

Tuesday, February 27, 2007

'வெடிபொருட்களுக்கோ ஆயுதங்களுக்கோ எமக்கு பெரியளவு தட்டுப்பாடுகள் ஏற்படுவதில்லை': சு.ப.தமிழ்ச்செல்வன்.

"நாம், எமது மண்ணில் ஆக்கிரமித்திருக்கின்ற இராணுவத்தினருடன் போரிட்டு அவர்களிடமிருந்தே பெருமளவு இராணுவத் தளபாடங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றுகின்ற வழமையைப் பேணி வருகின்றோம்"

சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பேட்டியின் முழுமையான விவரம்:

கேள்வி: அமைதி உடன்பாடு ஏற்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அமைதி உடன்பாட்டை நீங்கள் தொடர்ந்து மதிக்கப்போகின்றீர்களா அல்லது மீறப் போகின்றீர்களா?

பதில்: இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறியதும் செயலிழக்கச் செய்ததும் சிறிலங்கா அரசாங்கமே. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பொறுத்த வரையில் இந்த உடன்பாடு என்பது பாரிய எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்குரியதுமான ஆவணமாகவே இருந்தது. ஆனால் சிறிலங்கா அரசு அதில் உள்ள விதிகள் அனைத்தையும் மீறி அதனைச் செயலிழக்கச் செய்திருக்கின்றது. அந்த விதத்தில் இக்கேள்வியை சிறிலங்கா அரசாங்கத்தை நோக்கி கேட்பதே பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

கேள்வி: இருதரப்புமே ஒப்பந்தத்தை மீறியதுதான் வன்முறைகள் அதிகரிக்கக் காரணம் என்று நோர்வே கூறியிருக்கின்றது. இருதரப்பும் மீண்டும் அமைதியில் நாட்டம் காட்டினால் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார் என்றும் நோர்வே கூறுகின்றது. நோர்வேக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

பதில்: இரு தரப்பிலும் யுத்த நிறுத்த மீறல்கள் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அந்த மீறல்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சீரானதொரு முறையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்காக விடுதலைப் புலிகள் எப்போதுமே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.

ஆனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள அடிப்படை விதிகள் அனைத்தையுமே தகர்த்தெறிந்து விட்டு இன்று சிறிலங்கா அரசாங்கம், எமது மக்கள் மீது படுகொலைகளையும், வன்முறைகளையும், யுத்த நிறுத்த உடன்பாட்டை முற்றாகச் சிதைக்கும் விதத்தில் நேரடி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்குள் சிறிலங்கா அரச படைகள் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றும் பல இலட்சக்கணக்கான மக்களை அவர்களின் சொந்த வாழிடங்களில் இருந்து வெளியேற்றியும் பெரும் மனிதப் பேரவலத்தை நடத்தி வருகின்றது. இதுவே இந்த யுத்த நிறுத்த உடன்பாடு முற்றாக செயலிழக்க காரணமாகியது. இந்தப் பின்னணியை நோர்வே புரிந்துகொள்ளும் என்றே நம்புகின்றேன்.

கேள்வி: வாகரையில் அரசாங்கம் தாக்கியபோது இயக்கம் எதிர்ப்பே கொடுக்கவில்லை. இப்போது இராணுவத்தினரின் கை ஓங்கியுள்ளதாக அனைவரும் சொல்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் உடன்பாடு செய்ததே தவறு என்று சொன்னார். இந்த நிலப்பகுதிகள் புலிகளுக்கு என்று அளிக்கப்பட்டது தவறு, புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருக்கவே கூடாது என்கிறார். இதற்கு காரணம் இராணுவ ரீதியில் அரச தலைவர் கை ஓங்கியிருப்பதுதான். இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: சிறிலங்கா அரசானது மூன்று தசாப்தங்களாக இராணுவ ரீதியாக தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும், அவர்களை அடிமைப்படுத்துவதற்கும் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கும் முயன்றிருக்கிறது. ஆனால் எதுவுமே அவர்களுக்கு வெற்றியளிக்கவில்லை. காலத்திற்கு காலம் இராணுவத்தின் வலிமை அதிகரித்திருப்பது போல தோன்றினாலும் ஈற்றில் தமிழ் மக்களின் நீதியான நியாயமான சுதந்திரப் போராட்டமே வெற்றி பெற்றிருக்கின்றது.

அதுபோல ஒவ்வொரு முறையும் அமைதி முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இராணுவ ரீதியான நடவடிக்கைகளைச் செய்திருக்கின்றனர். உதாரணமாக குடாநாட்டை இவர்கள் ஆக்கிரமித்த பின் 'ஜெயசிக்குறு' நடவடிக்கையும் பெரு நிலப்பரப்பில் தொடர் வெற்றிகளினால் இராணுவத்தின் கையோங்கியிருக்கின்றது என்றும் பிரச்சாரம் செய்தனர். ஈற்றில் அந்த இராணுவத்திற்கு நடந்த முடிவை நீங்கள் கடந்த கால வரலாற்றில் பார்க்கலாம். அதுபோல தான் இப்போது ராஜபக்சவும் அதே பாணியில் செயற்படத் தொடங்கியிருக்கின்றார். இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டு அதனை விமர்சித்துக்கொண்டு செயலிழக்கச் செய்திருக்கின்றார். இதற்கு தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எதிர்காலத்தில் சரியான பதிலை வழங்கும் போது உங்களுக்கு உண்மை நிலை புரியவரும்.

கேள்வி: கிழக்கிலும் வடக்கிலும் மட்டுமின்றி தெற்கிலும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இலங்கையின் தமிழர்களின் வாழ்வு பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் நீங்கள் மெளனமாக இருக்கிறீர்கள். புலிகள் அமைப்பு இருக்கின்றதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. சிறிலங்காவின் எந்த அரச தலைவரும் இதுவரை சொல்லாத அளவுக்கு, புலிகளுடன் ஒப்பந்தம் செய்ததே தவறு என்று மகிந்த சொல்லும் அளவுக்கு நீங்கள் அமைதி காத்து வருகிறீர்கள். இது என்ன வியூகம்?

பதில்: நாம் எப்போதுமே கதைப்பதனை விட செயலிலேயே நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். செயற்பாடுகளே எந்த விடயத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு உண்மையான காரணமாக அமையும். அந்த வகையில் மகிந்த ராஜபக்சவின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீதான நடவடிக்கைகள் முன்னைய சிங்களத் தலைவர்களது செயற்பாடுபோலவே இருக்கின்றது.

இலங்கைத் தீவில் தமிழர்களின் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுடைய இன அழிப்பு நடவடிக்கை சகல மட்டங்களிலுமே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. வடக்கிலிருந்து தெற்கு வரை அதுதான் நடைபெறுகின்றது. அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுடைய தாயகப் பிரதேசத்தை சிங்கள இனவாதிகளினுடைய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது ஒன்றே இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை வழங்கும் என நாம் நம்புகின்றோம்.

கேள்வி: மனிதாபிமான அடிப்படையில் தமிழ் மக்களுக்காக வலுவான குரல் எழுப்ப அனைத்துலக நாடுகள் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியிலும் பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையிலும் புலிகளினுடைய குரல் அனைத்துலக சமூகத்தில் முடக்கப்பட்டு விடுகின்றது. இந்நிலையில் அனைத்துலக அரங்கில் தமிழ் மக்களின் அவலங்களை எடுத்துச் சொல்லவும், தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்துலக சமூகத்தை வலியுறுத்தவும் கூடிய ஒரு நடுநிலையான அனைத்துலக அறிவுசார் குழு ஏன் உருவாக்கப்படவில்லை? இதைப் புலிகளும் செய்யத் தவறியது ஏன்?

பதில்: தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடி வருகின்றனர். இன்று அனைத்துலக ஒழுங்கில் நாடுகளுக்கிருக்கின்ற வாய்ப்புக்களும் வசதிகளும் சுதந்திரத்திற்காக போராடுகின்ற அமைப்புகளுக்கோ மக்களுக்கோ இருப்பதில்லை. ஆனால் இந்த நிலையைக் கொண்டு வருவதானால் மக்கள் வேகமாக தமது சுதந்திரப் போராட்டத்தில் முன்னேறி நாடுகளினுடைய அங்கிகாரத்தையும் ஆதரவையும் பெறலாம். எப்போதும் உலக நாடுகள் தங்களினுடைய நலன்களை கருத்திற்கொண்டு அரசுகளோடு உறவுகளை வைத்திருக்கின்றன.

இத்தகைய போக்குக் காரணமாக எங்களினுடைய நியாயங்களையும் நீதியையும் அனைத்துலகத்திற்கு கொண்டு செல்வது என்பது கடினமாக இருக்கும். இருப்பினும் எமது புலம்பெயர்ந்த மக்கள், புத்திஜீவிகள், அறிவுசார் நிபுணர்கள் எல்லோருமே எமது போராட்டத்தின் நியாயத் தன்மையினை எடுத்துக் கூற முயன்று வருகின்றனர். அது இப்போதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கேள்வி: உங்களது அடுத்த ஆலோசகர் அல்லது அனைத்துலகத் தூதுவராக யாரை நியமிக்கப் போகின்றீர்கள்? இன்றைய நிலையில் அப்படி ஒருவர் அல்லது குரல் இயக்கத்துக்குத் தேவை என அரசியல் கணிப்பாளர்கள் சொல்கின்றார்கள். இதற்கு உங்களது பதில் என்ன?

பதில்: எமது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எமது தாயகத்திலிருந்து தான் தன்னுடைய அரசியல் பணியினை ஆற்றிக்கொண்டிருந்தார். இறுதிக்காலத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதனால் அதற்கான சிகிச்சை பெறும் நோக்கிலேயே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பின் அங்கேயே அனைத்துலக அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற நிலை உருவானது.

எம்மைப் பொறுத்த வரையில் எமது தலைமையகம் எமது தாயகத்திலேயே இருக்கின்றது. இங்கிருந்தே எமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வல்லமை எம்மிடம் இருக்கின்றது. அதன் நிமித்தம் ஒவ்வொரு நாடுகளிலும் எமது புலம்பெயர்ந்த மக்களினது அமைப்புக்கள் இருக்கின்றன. அதற்கு பொறுப்பானவர்கள் இருக்கின்றனர். அரசியல் நடவடிக்கைகளுக்கும் எமது பரப்புரை நடவடிக்கைகளுக்கும் கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து நாடுகளிலுமே செயற்பட்டு வருகின்றன. ஆகவே இப்போது அத்தகைய தேவை ஒன்று இல்லை என்றே நாம் நினைக்கின்றோம். அப்படி ஒரு தேவை ஏற்படுமாயின் எமது தலைமை அதற்கான முடிவை எடுக்கும் என்று நம்புகின்றேன்.

கேள்வி: வடக்கில் இராணுவம் படைகளை குவிப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. தென்மராட்சி தாக்கப்பட்டால் உங்களது பதில் தாக்குதல் எப்படி இருக்கும்? வாகரை போன்றா?

பதில்: இராணுவ நடவடிக்கைகள் பற்றியோ அல்லது அதனை முறியடிப்பது பற்றியோ நாம் முற்கூட்டியே எதிர்வு கூறுவது இல்லை. அந்தந்த நடவடிக்கைகளை நாம் அவ்வப்போது எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கூடாகவே அதற்கான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளோம். ஆகவே இராணுவ தீர்மானங்களையும் நான் இப்போது குறிப்பிடுவது பொருத்தமில்லை என்றே நினைக்கின்றேன்.

கேள்வி: புலிகள் நிலையில் மாற்றம் ஏற்பட்டால், அவர்களைப் பற்றிய கொள்கை மாறும் என்று அமெரிக்கா இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: புலிகளினுடைய நிலையில் மாற்றம் என்பது எதன் அடிப்படையில் என்பது எமக்கு விளங்கவில்லை. நாம் எமது மக்களினுடைய கௌரவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடப் புறப்பட்டவர்கள் என்ற வகையில் எங்களுடைய மக்களின் ஜனநாயகம், கௌரவம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படுகின்ற சூழல் வருகின்ற வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கொள்கையை இலட்சியமாகக் கொண்டு அதில் முன்னேறிச் செல்வதுதான் சரியானதாக இருக்கும். ஆகவே அவர்கள் எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கின்றனர் என்பது தெரியாது நான் கருத்துத் தெரிவிப்பது பொருத்தமானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

கேள்வி: இந்திய அரசாங்கம், சிறிலங்கா அரசு, எதிர்த்தரப்பு, தமிழ்க் கூட்டணி என்று அனைத்துத் தரப்பையும் தனித்தனியாக அழைத்துக் கருத்துக் கேட்கின்றது. இந்தியாவில் உண்மையில் என்ன நடக்கிறது? 2002 ஆம் ஆண்டு நோர்வே தலைமையில் நடந்த உடன்பாட்டுக்குப் பதிலாக இந்தியத் தலைமையில் புதிய உடன்பாடு எதாவது செய்யப் போகின்றார்களா? அப்படி ஒரு உடன்பாடு வந்தால் புலிகளின் நிலை என்னவாக இருக்கும்? அனைத்துலக நன்கொடை நாடுகளின் நிலை என்னவாக இருக்கும்?

பதில்: முன்பொரு தடவை இந்திய அரசும் சிறிலங்கா அரசும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஒப்பந்தம் கூட கடந்த காலத்தில் செயலிழந்து போனது. அதற்கு சிறிலங்காவில் இருக்கின்ற சிங்கள இனவாதிகளும் அரசாங்கங்களும் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்க முன்வரவில்லை. ஒரு தலைப்பட்சமாக அவர்கள் செயற்பட்டு ஒப்பந்தத்தைச் செயலிழக்கச் செய்திருக்கின்றனர். அதில் கூறப்பட்ட விடயமான வடக்கு - கிழக்கு இணைப்பைக்கூட இல்லாமல் செய்திருக்கின்றனர்.

அந்த விதத்தில் ஒருபோதும் இந்தியாவும் சிறிலங்காவும் உடன்பாடு காண்பதால் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையிலும் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்ற மக்கள் என்ற வகையிலும் தமிழ் மக்களுடைய அபிலாசைகள், விருப்பங்களை அறிந்து அவர்களுடைய ஆதரவோடும் முழுப் பங்களிப்போடும் ஒரு தீர்வுக்கு வருவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அந்நிலையை தற்போது இந்தியா உணர்ந்திருக்கின்றது என்றே நாம் நினைக்கின்றோம். இங்குள்ள உண்மை நிலமைகளை அவர்கள் அறிய விரும்பலாம். அறிந்து தீர்க்கமானதும் தமிழர்களுடைய எதிர்காலம் தொடர்பானதுமான முடிவுகளை எடுக்கின்ற பட்சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கருத்துக்களை முன்வைக்கக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: இவ்வளவு நாளும் இல்லாமல் இயக்கத்தைப் பற்றி தமிழ்நாட்டில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. பிடிபடும் படகுகளும் ஆட்களும் உள்ளபடியே புலிகளைச் சேர்ந்தவைதானா? தமிழ்நாட்டில் இருந்து உங்களுக்கு வெடிமருந்துகளும் பொருட்களும் கடத்தப்படுகின்றனவா? இந்த செய்திகளில் உண்மை இருக்கிறதா? இதன் பின்னணி என்ன?

பதில்: இங்கு இப்போது, சிறிலங்கா அரசு பொருளாதாரத் தடையை விதித்திருக்கிறது. எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் என்பன தடுக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட நிலையில் அயல் நாடான இந்தியாவிலிருந்து இப்படியான சில பொருட்களைக் கடத்துவதற்கு சில தனிப்பட்டவர்கள் முயலலாம். இதை எமது விடுதலை அமைப்பின் மீது குற்றஞ் சுமத்துவதற்காக பயன்படுத்தி எமது அமைப்பை களங்கப்படுத்தும் முயற்சிகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

நாம், இந்தியாவிலிருந்தோ தமிழ்நாட்டிலிருந்தோ வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் கடத்தவேண்டிய தேவையில்லை. நாம் எமது மண்ணில் ஆக்கிரமித்திருக்கின்ற இராணுவத்தினருடன் போரிட்டு அவர்களிடமிருந்தே பெருமளவு இராணுவத் தளபாடங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றுகின்ற வழமையை பேணி வருகின்றோம். அதனால் வெடிபொருட்களுக்கோ ஆயுதங்களுக்கோ எமக்கு பெரியளவு தட்டுப்பாடுகள் ஏற்படுவதில்லை. இது திட்டமிட்டு தமிழ்நாட்டில் வாழ்கின்ற எமது உறவுகள் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக, மக்களின் அவலங்கள் தொடர்பாக ஏற்பட்டிருக்கின்ற உணர்வலைகளை இல்லாது ஒழிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்ற பொய்ப் பிரச்சார முயற்சியாகவே இதைப் நாம் பார்கின்றோம்.

கேள்வி: 2002 ஆம் ஆண்டு உடன்பாட்டில் திருத்தம் செய்யலாம் என்று அமெரிக்கா சொல்லியிருப்பதற்கு உங்கள் கருத்து என்ன? அப்படி திருத்தம் செய்வதானால் அதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?

பதில்: யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற ஒரு உக்கிரமான போருக்கு தற்காலிகமான முடிவொன்றைக் கொண்டு வந்து தீர்வுக்கான வழியை ஏற்படுத்துகின்ற முயற்சியினால் வந்ததே. முன்னைய அனைத்து உடன்பாடுகளுமே செயலிழந்து போன நிலையில் அனைத்துலக ஆதரவுடனும் பெரும் வரவேற்புடனும் ஒத்துழைப்புடனும் நோர்வேத் தரப்பால் கொண்டுவரப்பட்ட உடன்பாடே இதுவாகும்.

தமிழ் மக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இது இருக்கின்றது. இந்த உடன்பாட்டைத் திருத்துவது என்பதையோ மாற்றியமைப்பது என்பதையோ தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது மீண்டும் அமைதியை கொண்டுவர வழிகோலும் என்றும் நம்பவில்லை. இருக்கின்ற உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவதே அமைதித் தீர்வுக்கான சரியான வழியைத் திறக்குமென நான் நினைக்கின்றேன்.

கேள்வி: அயர்லாந்து பிரச்சினைக்குத் தீர்வு கண்டது போல் இலங்கை இனப்பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காண்கின்றோம். அமைதிப் பேச்சை முன்னெடுத்து, புலிகளுடன் பேச தயாராக உள்ளோம் என்று பிரித்தானிய கூறியிருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இப்போது நோர்வே எடுக்கும் பணியை பிரித்தானிய மேற்கோண்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: நோர்வேயும் பல்வேறு இனப்பிணக்குகள் நடைபெறுகின்ற நாடுகள் மத்தியில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு நடுநிலையோடும் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு அனைத்துலக அரங்கில் மதிப்பைப் பெற்ற நாடாக இருக்கின்றது. அத்தகைய நாடொன்றின் முயற்சிகளைக் கூட இன்று தூக்கியெறிந்து செயலிழக்கச் செய்துள்ளது சிறிலங்கா அரசாங்கம். அவர்கள் ஏனைய நாடுகளின் முயற்சிகளை எவ்வளவு தூரம் அனுசரிப்பார்கள் அல்லது ஏற்றுக்கொள்வார்கள் என்பது எமக்குச் சந்தேகமாகவே உள்ளது. அதனடிப்படையில் எல்லோருமே அமைதி சமாதானத்தின் அடிப்படையில் ஊக்குவிக்கும் முகமாக தமது கருத்துக்களை கூறிவருகிறார்கள். ஆனால் அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவரத்தக்க முயற்சிகளை எடுக்காது செய்யும் எந்தவித முயற்சிகளும் பலனளிக்கப்போவதில்லை. அதனையே நாமும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். அதில் இவர்கள் முன்னேற்றமடைந்த பின்னர் தான் இவர்களுடைய அமைதி முயற்சிகள் தமிழ் மக்களால் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதைச் சொல்லக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: இராணுவமும் கருணா குழுவும் எந்தெந்த வழிகளின் மனித உரிமைகளை மீறுகின்றனர்?

பதில்: இராணுவமும் கருணா குழுவும் சகல வழிகளிலும் யுத்த நிறுத்த உடன்பாட்டு விதிகள் அனைத்தையுமே முறித்து உடைத்து இன்று பெருமளவு மீறல்களைச் செய்து கொண்டிருக்கின்றன. ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், கொள்ளைகள், சிறுவர்களை கடத்தல், பாலியல் வல்லுறவுகள் என சகலவிதமான துன்பங்களையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

கேள்வி: சிறார்களைப் படையில் சேர்ப்பதை புலிகள் இன்னமும் நிறுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளதே. இதற்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

பதில்: நாங்கள் ஏற்கனவே சிறார்கள் படையில் சேர்வதற்கான சந்தர்ப்பங்களை இல்லாது ஒழிப்பதற்கு பல முயற்சிகளை இந்த சமாதான காலப்பகுதியில் எடுத்து வந்தோம். ஆனால் யுத்தத்தினை எங்கள் மக்கள் மீது திணித்து சிறார்கள், பெண்கள் என அனைவருமே இலக்கு வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் பல சிறுவர்கள் எம்மிடம் வந்து தஞ்சம் கோருகின்றனர். தங்களது பாதுகாப்பைத் தேடிக்கொள்கின்றனர். ஆகையினால் நாம் இவர்களுக்குரிய புனர்வாழ்வு, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோமே தவிர சிறார் ஆட்சேர்ப்பில் நாம் ஈடுபடவில்லை. இதனை நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆதாரபூர்வமாக பல புள்ளிவிபரங்களுடன் அனுப்பியுள்ளோம். தொடர்ந்து இந்த ஆண்டில் தமிழீழ தேசிய சட்டத்தில் சிறார் காப்புச் சட்டத்தினையும் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம். சிறுவர்கள் எக்காரணங்களை முன்னிட்டும் எமது ஆயுதப் படையில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்பதனை நாம் ஆணித்தரமாக கூறுகின்றோம்.

கேள்வி: மட்டக்களப்பில் ஐயரை நீங்கள்தான் கொன்றதாகப் பல தரப்பிலும் குற்றம்சாட்டப்படுகின்றது. புலிகள் இயக்கம் வெறும் இராணுவ இயக்கமாக மட்டுமின்றி பெரும் அரசியல் அமைப்பாக இப்போது உருவாகி உள்ள நிலையில், இத்தகைய கொலைகளைச் செய்ய வேண்டியது அவசியம்தானா? அப்படி நீங்கள் அந்தக் கொலை செய்யவில்லை என்றால், அதை யார் செய்தார்கள் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

பதில்: மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவம் இந்த மதகுருவை பலவந்தமாக பயமுறுத்தி, மிரட்டிக் கொண்டு சென்றே வாகரையில் மகிந்த ராஜபக்சவுக்கு மாலை அணிவிக்க செய்ததும் நிகழ்வில் பங்குபெறச் செய்ததும் நிகழ்ந்தது. இதன் பொருட்டு சிறிலங்கா இராணுவத்துடன் பல தடவை இவர் முரண்பட்டதாக எமது விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

ஆகவே, கருணா குழுவோ இராணுவமோ தான் இந்தப் படுகொலையை செய்திருக்கின்றது. பழிவாங்கும் நோக்கத்துடன் இதனைச் செய்துவிட்டு புலிகள் மீது இப்படியானதொரு குற்றச்சாட்டை திணித்து அனைத்துலக அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் தான் இப்படிச் செய்திருக்கின்றனர். உண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய கௌரவம், அதனுடைய வளர்ச்சி, அங்கீகாரத்தைக் குலைக்கும் நோக்குடன் திட்டமிட்டே அரசும், கருணா குழுவும் இதனைச் செய்திருக்கின்றது என்பதனை நாங்கள் இப்போது இரகசியத் தகவல்கள் மூலம் அறிந்திருக்கின்றோம்.

கேள்வி: தலைவர் வேறு நாட்டுக்குச் செல்லப் போகின்றார் என்று சொல்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

பதில்: தமிழீழ தேசியத் தலைவரைப் பொறுத்த வரையில் அவர் தன்னுடைய தாயகத்தையும் தனது மக்களையும் நம்பியே இந்த விடுதலை அமைப்பை ஆரம்பத்திலிருந்து கட்டி வளர்த்து வந்திருக்கின்றார். எந்த நாடுகளினதோ அனைத்துலக உதவிகளையோ நம்பி இதனை அவர் ஆரம்பிக்கவுமில்லை வளர்த்தெடுக்கவும் இமில்லை.

முழுக்க, முழுக்க தன்னிலும் தனது மக்களிலும் தன் தேசத்தின் மீதும் முழு நம்பிக்கையோடுதான் இந்த விடுதலை அமைப்பை பிரமாண்டமான பலமிக்கதாக கட்டியெழுப்பியிருக்கின்றார். எப்போதும் எமது தேசியத் தலைவரோ எமது தளபதிகளோ போராளிகளோ எவருமே எமது தாயகத்தையும் எங்களுடைய மக்களையும் விட்டு அகலப்போவதில்லை. மீன்களுக்கு கடலிலே இருப்பது பலமானது போல காட்டு விலங்குகளுக்கு காடே பலமிக்கதாக இருப்பது போல எமக்கும் எமது சொந்த மக்களுக்குள்ளேயே சொந்த மண்ணிலேயே இருப்பதுதான் பலமாகும். இந்த வலிமையை எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது. அந்த விதத்தில் இது ஒரு தவறான கேள்வியென்றே நான் நினைக்கின்றேன்.
நன்றி>புதினம்.

Sri Lanka's Tamil Tigers said on Tuesday they were sorry--Reuters.

COLOMBO, Feb 27 (Reuters) - Sri Lanka's Tamil Tigers said on Tuesday they were sorry the Italian, German and U.S. ambassadors had been slightly injured by their fire on Tuesday, but blamed the army for putting them in harm's way and for provocation.

The Tigers said they had not been advised foreign diplomats were being transported into what they called a military operational area, and accused the army of firing at them first. The military said the Tigers fired mortars and artillery shells.

"We are sorry that they are injured. But we did not injure them," said Tiger military spokesman Rasiah Ilanthiraiyan. "It is the military's fault for putting them in a war zone."

"These areas are the usual launching pads for military attacks," he added. "Even this morning they fired at us and we retaliated. No one informed us the ambassadors were there."

Hospital officials in the eastern district of Batticaloa treated Italian Ambassador Pio Mariani and German envoy Jurgen Weerth.

U.S. Ambassador Robert Blake's arm was grazed either by shrapnel or a stone, the military said, but he was not taken to hospital and his embassy said he was fine and unharmed.

The attack came as helicopters carrying Disaster Management and Human Rights Minister Mahinda Samarasinghe as well as ambassadors from the United States, European Union, Germany and France landed in Batticaloa on a goodwill mission

மட்டக்களப்பு எறிகணை வீச்சில் அமெரிக்க, இத்தாலிய தூதுவர்கள் காயம்.

மட்டக்களப்பு நகரில் உள்ள சிறிலங்கா விமானப்படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றிச்சர்ட் ஓ பிளேக், இத்தாலிய தூதுவர் பியோ மரியானி ஆகியோர் எறிகணையின் சிதறல்களால் சிறுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணியளவில் இடம்பெற்றது.
ஏறத்தாழ 15 தூதுவர்களும் ஏனைய உயரதிகாரிகளும் மட்டக்களப்பு நகருக்கு பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் உலங்குவானூர்தியை விட்டு இறங்க முற்பட்ட வேளை எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சிறிலங்காவின் பேரனர்த்த நிவாரண அமைச்சரை ஏற்றிச் சென்ற 2 உலங்குவானூர்திகள் மட்டக்களப்பில் வெபர் விளையாட்டரங்கில் தரையிறக்கிய போது நடத்தப்பட்ட 122 மி.மீ ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து 2 உலங்குவானூர்திகள் மயிரிழையில் தப்பியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் காயமடைந்த அமெரிக்க தூதுவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இத்தாலிய தூதுவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் 2 சிறிலங்கா விமானப் படையினரும், காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் 2 சிறப்பு அதிரடிப்படையினரும், பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
நன்றி>புதினம்.

Monday, February 26, 2007

சிறீலங்காவிற்கு, இந்தியாவின் இரண்டாவது யுத்தக்கப்பல் நன்கொடை.



கொழும்பில் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையின்படி இந்தியா தனது மற்றொரு போர்கப்பல் ஒன்றை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதுதொடர்பில் இந்தியாவின் தேசியப்பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் இக்கப்பலானது நன்கொடையாகவோ அல்லது நீண்ட தவணை (லீஸ்) அடிப்படையிலோ சிறீலங்கா இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் அதாவது 2000ம் ஆண்டளவில் வழங்கப்பட்ட சயுரா ஆழ்கடல் யுத்தகப்பலை ஒத்த ‘வராக’ என்ற பெயருடைய கலம் இந்தியாவால் வழங்கியிருப்பதாக அறியமுடிகிறது.

இந்த யுத்தக்கப்பலானது ‘சயுரா’ என்ற கப்பலுக்கு பிரதியீடாக தற்போது செயற்பட்டு வருவதாகவும் (சயூரா திருத்த வேலைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால்) இது சிறீலங்கா கடற்படையின் மூன்றாவது பெரிய கப்பலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா வழங்கிய கப்பலொன்றும் இம்மூன்றில் ஒன்றாகும்.

இதேவேளை சயுரா யுத்தக்கப்பலின் மீள்நிர்மாண வேலை சிறீலங்காவிற்கு இலவசமா செய்து கொடுக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

இதேவேளை வராக கப்பலானது 22 நொட்ஸ் மைல் வேகத்தில் 8500 கடல்மைல் வரை ஒருதடவையில் பிரயாணம் செய்யக்கூடியதும் 75 மீற்றர் நீளமுடையதும் 11 அதிகாரிகள் உட்பட 100 கடற்படையினரை கொண்ட யுத்தக்கப்பலாகும்.
நன்றி>பதிவு.

Sunday, February 25, 2007

சமாதானம் என்ற போர்வையில் போரை செய்யவேண்டும் என பகிரங்கமாகக் கூறும் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர்!




ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில் சிறீலங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் போர் புரிந்து கொண்டு சமாதானம் பேச வேண்டுமென்ற மகிந்த சிந்தனைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வெறும் போரின் மூலம் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும், இதன் காரணமாக பேச்சுவார்த்தைக்கு அவர்களை இழுத்து, அதே நேரம் போரையும் அவர்களுடன் சமகாலத்தில் புரிந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இச்செய்தி ஆங்கிலத்தில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Describing the situation in Sri Lanka as 'serious', the US envoy to the island nation has warned against attempts to underestimate the Tamil Tigers and asserted that they cannot be defeated militarily. Ambassador Robert Blake also said in a telephonic interview from Colombo that his country 'respectfully disagreed' with those in Sri Lanka who feel a military solution was possible to end the dragging Tamil separatist campaign. The ambassador, who took charge in September 2006, made it clear that only devolution of powers that satisfy the 'legitimate aspirations' of the Tamil minority could be the basis for any negotiations between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Blake's comments to IANS came as thousands of Tamil civilians began fleeing northern Sri Lanka amid fears of full-scale war and a declaration by the LTTE that it was resuming its 'freedom struggle'. 'The situation is serious but there is light at the end of the tunnel,' said the envoy, whose country is a key and most outspoken member of the international community that oversees Sri Lanka's now virtually dead peace process. He said a majority in the southern part of Sri Lanka, populated mainly by the dominant Sinhalese community, felt that 'a military solution is possible.We respectfully disagree.The LTTE cannot be defeated militarily without a parallel political strategy to address the grievances of the Tamil community... 'I don't think a military solution is possible without a parallel political strategy. The LTTE has significant capability to attack, using terrorist means. We should not underestimate that. I think there would be costs (to pay) to a military strategy. The most important thing in our view is to come up with a credible (political) process.' Blake, however, suggested that while he thought that Sri Lanka remained committed to peace despite the military pursuing a military strategy, the LTTE's credentials vis-a-vis a negotiated settlement were doubtful. 'The government is committed to peace. Every time I speak to (President Mahinda Rajapakse) and senior members of the government, they assure me they are committed to a peaceful settlement.I have no reasons to doubt that.

'The military believes in a military solution but the policy of the government is to pursue (a negotiated settlement). At this point of time, without a proposal, there is nothing to negotiate over.'As for the LTTE, I cannot say if they are committed to peace. Their record of 20 years shows they have never seriously pursued the peace option. The government will have to soon give them a chance to see if they are ready to negotiate in good faith.' The internationally backed Norwegian-sponsored ceasefire agreement (CFA) signed by Sri Lanka and the LTTE entered its sixth year Feb 22 with all signs pointing to a war again in the island. According to peace monitors, some 4,000 Sri Lankans, mainly Tamil civilians, have been killed in fighting and tit-for-tat attacks and more than 200,000 people, again mostly Tamils, displaced from their homes in the past 15 months. Thousands of Tamils have fled to India while abductions have become routine in parts of Sri Lanka. 'Since last year, the human rights situation has also deteriorated,' Blake said. 'There is therefore an urgent need to end the fighting and resume talks (for) a negotiated settlement.' He said the US believed that a body representing almost all political parties and tasked to come up with power sharing proposals provided an important opportunity to achieve peace. 'We very much hope the proposals that emerge will be credible and meet the legitimate aspirations of the Tamil people in particular but also of the other communities. This could be the basis for the talks between the government and the LTTE... 'The most important thing is the government has an opportunity. It must come up with a credible solution. They have the votes in parliament. There is very strong evidence that (the main opposition United National Party) will support a credible solution. That would be a major, major step forward.'

The ambassador pointed out that there had been 'very significant consequences' for the failure of the LTTE to settle for peace since the last round of talks in Geneva that ended in a fiasco. 'We think there is a strong incentive for both sides to go back to the table.'

But irrespective of what happens, he said 'we cannot imagine a situation' when the US would support an LTTE state, which for all practical purposes now exists in parts of Sri Lanka's north and where Colombo's writ does not run. 'The US takes a very hard line regarding the LTTE.' Asked if India needed to play a more pro-active role, Blake said he disagreed with the surmise of the question.

'India is already playing a very active role and is a major if not the pre-eminent player in Sri Lanka. The US cooperates very closely with our Indian friends on the situation in Sri Lanka. I don't see any difference in our analysis of the situation or what needs to be done. We will continue our cooperation with India.'

Source: Malaysia Sun Sunday 25th February, 2007
http://story.malaysiasun.com/index.php/ct/9/cid/b8de8e630faf3631/id/230256/cs/1/

Saturday, February 24, 2007

சிறிலங்கா மீதான அழுத்தங்களில் இந்தியாவும் இணைந்து கொள்ளலாம்: மங்கள சமரவீர.

சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் நாள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் எழுதிய கடிதத்தின் பிரதிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

"கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. அதாவது இந்திய மத்திய அரசின் கொள்கைகள் தமிழ்நாட்டினால் வழி நடத்தப்படுகின்றன.

இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழ்நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் எந்த நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு எடுக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடுதான் பல தொழில்துறைகளில் அதன் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அபிவிருத்திகளால் இந்தியாவை உலக வரைபடத்தில் இனங்காட்டியுள்ளது.
இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அளித்த உறுதிமொழியில் இந்தியா, உயிராபத்துக்களை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு விநியோகம் செய்யாது என தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவின் நிலையை தெளிவாக காட்டியுள்ளது. இந்தியாவின் இந்த போக்கை மாற்ற வேண்டுமானால் நாம் அதிகாரப்பகிர்வை அங்கிகரிப்பதுடன் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பணிகளிலும் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அரச ஊடகங்களை அரசு தவறாக வழி நடத்துகின்றது. அதன் மீது குற்றம் சுமத்தும் மக்கள் மீதான தாக்குதல்கள் ஒரு குற்றமாகும். அதாவது தகவல் தருபவர்களை கொல்லும் அரசின் திட்டம் அனைத்துலக சமூகத்தை எம்மிடமிருந்து விலகிச்செல்லவே வழிவகுக்கும்.
எனினும் எனது புதுடில்லி விஜயத்தின் போது இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்பட்டது. இது இராணுவ உதவிகளில் கூட சாத்தியமாக இருந்தது. இந்தியா எமது கோரிக்கைகளில் பலவற்றை தந்துதவ முன்வந்திருந்தது. இதில் கடற்படை மற்றும் விமானப்படைக்கான உதவிகளும் அடங்கும்.

உதாரணமாக எனது ஒரு வேண்டுகோளில் நான் இந்தியவின் பிரதமரையும், பாதுகாப்பு அமைச்சரையும் ஏற்றுக்கொள்ள வைத்திருந்தேன். அதனை தொடர்ந்து எமது தேவைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு 48 மணி நேரத்தில் இந்தியா தனது சிறப்பு குழுவை கொழும்பிற்கு அனுப்பியிருந்தது. இது நீங்கள் அரச தலைவர் பதவியை ஏற்ற பின்னர் இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கான உதாரணமாகும்.

இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்தது போன்றதான உதவியை இந்தியா சிறிலங்காவிற்கு வழங்காது என முன்னாள் சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் தெரிவித்திருந்தார்.

கடத்தல்கள், படுகொலைகள் என்பன அரச படைகள், கருணா குழு, விடுதலைப் புலிகள் போன்றவற்றால் மேற்கொள்ளப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது அரச கட்டுப்பாட்டுப்பகுதி மற்றும் கட்டுப்பாடற்ற பகுதிகளில் நிகழ்கின்றன. இவை அரசால் அல்லது பயங்கரவாதக்குழுவால் மேற்கொள்ளப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு அதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாது விட்டால் அரசு மீது இந்தகைய நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கான குற்றச்சாட்டுக்கள் எழ வாய்ப்புள்ளது.

விடுதலைப் புலிகளினதும் அதன் முன்னணி அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரங்களின் மத்தியிலும் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தை விடுதலைப் புலிகள் மீதான தடையை கொண்டு வருவதற்கு சம்மதிக்க வைத்திருந்தது. உங்களின் வழிநடத்தலில் வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திலும் கனடாவிலும் இதை செய்திருந்தது.
அரசு அதிகாரப்பகிர்வை அளிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் தான் ஐரோப்பிய ஒன்றியம் இதை செய்திருந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துலக சமூகம், குறிப்பாக இந்தியாவும் இதை ஆதரித்திருந்தது. எனவே நாங்கள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும், உதாசீனப்படுத்த முடியாது" என அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நன்றி>புதினம்.

தமிழர்கள் தனியரசு அமைக்க உதவுங்கள் சர்வதேசசமூகத்திடம் கோருகிறது கூட்டமைப்பு ஸ்ரீலங்கா அரசு நீதிவழங்க மறுப்பதால் வேறுவழி எதுவுமில்லை என்றுசுட்டிக்காடடு

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரித்து, அதன் பிறப்புரிமையான சுயநிர்ணய அடிப்படையில் எமக்கெனத் தனியரசை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் நல்குமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதனைத் தவிர வேறு வழி கிடையாது என்பதனையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியானதையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையிலேயே மேற்கண்ட கோரிக்கையைக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திடம் விடுத்திருக்கிறது.

கூட்டமைப்பின் அறிக்கை விவரம் வரு மாறு:

இலங்கைத்தீவில் ஸ்ரீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச் சாத்திடப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இக்காலப் பகுதியில் நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உடனடி மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது நீண்ட கால அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் சிங்கள அரசு மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல மக்கள் மரண பயமின்றி வாழக்கூட வழி விடவில்லை.

சிங்கள, பௌத்த பேரினவாத அரசின் கடும்போக்குக் காரணமாக, தமிழ் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கும், உடனடி மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பொருட்டு சர்வதேசத்தின் அனுசரணையுடன் அரசுக்கும் புலிகளுக்கு மிடையில் இணக்காப்பாடு காணப்பட்டு உருவாக்கப்பட்ட உபகுழு, சிரான் அமைப்பு, சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பனவும் ஜெனிவா1, ஜெனிவா 2 உடன் படிக்கைகளும் செயலிழந்து போயுள்ளன.

மறுபுறத்தில் சிங்கள அரசானது இராணுவத் தீர்வின்மீது நம்பிக்கை கொண்டு தமிழ்மக்கள் மீது இராணுவ வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன் அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றினைப் பயன்படுத்தி சமாதான உடன்படிக்கை நடைமுறையிலிருந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2,13,000 தமிழ் மக்கள்அகதிகளாக்கப்பட்டுள்ளதுடன், 1,561இற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டும், 635இற்கும் அதிகமானவர்கள் கடத்தப்பட்டுமுள்ளனர்.

இறைமையைப் பாதுகாப்பதாக அரச பயங்கரவாதம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசதரப்பு எவ்வித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருந்தது மட்டுமல்ல இராணுவத் தீர்வின் மீது நம்பிக்கை கொண்டு தமிழர் மீது இராணுவ முறைகளை ஏவி தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்தும் உள்ளது.
மேற்படி ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்பட்டமையும், படுகொலைகள், ஆள்கடத்தல்கள், சித்திரவதைகள், தமிழர் தாயகப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பலவந்தமாக அகதிகளாக்கப்பட்டமையும் ஸ்ரீலங்காவின் இறைமையைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் இலங்கை அரசின் பயங்கரவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும்.
இவ்வாறான சமாதானத்திற்கான நம்பிக்கைகளைக் கொடூரமாகத் தாக்கிச் சிதறடித்த தொடர்ச்சியானதும் பாரதூரமானதுமான யுத்த நிறுத்த மீறல்களைக் கண்டு கொள்ளாத சர்வதேச சமூகம் இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாடு பிளவுபடக் கூடாது என்றும் மட்டுமே பேசி வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் செய்த தவறு

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடைசெய்தமையானது அந்த அமைப்பின் அவசரப்பட்ட தவறான முடிவாக அமைந்துள்ளது மட்டுமன்றி இலங்கைத் தீவில் மிகப் பாரிய யுத்தம் வெடிப்பதற்கான முழுமையான புறச்சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு சமாதான காலத்தில் தமிழர் தரப்பு எல்லை மீறிய பொறுமையைக் கடைப்பிடித்து வந்துள்ளதுடன் சர்வதேசத்திற்கு மதிப்பளித்து பாரிய விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொண்டுள்ளது. ஆனாலும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பாக சர்வதேசமூகத்தின் அணுகுமுறையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பதானது பெரும் ஏமாற்றத்தினைத் தருகின்றது. இந்நிலைப்பாடு சிங்கள அரசை சமாதானப் பாதையில் இருந்து விலகி யுத்தத்தினை நோக்கிச் செல்லத் தூண்டியுள்ளது.
தனது இறைமை பாதிக்கப்படுவதை சர்வதேசம் அனுமதியாது என்ற நம்பிக்கை
ஏனெனில் தாம் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை அங்கீகரித்தால் என்ன அங்கீகரிக்காவிட்டால் என்ன இலங்கையின் இறைமை பாதிக்கப்படுவதையோ நாடு பிளவுபடுவதையோ சர்வதேச சமூகம் அனுமதிக்காது என்ற நம்பிக்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. உபகுழு, சிரான் அமைப்பு, சுனாமிக் கட்டமைப்பு என்பன செயலற்றுப் போனமைக்கும் இனப்பிரச்சினைக்காண தீர்வு தொடர்பாக விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபை சிங்கள அரசு பரிசீலனைக்காகக் கூட எடுக்காமல் போனமைக்கும், ஜெனிவா1, ஜெனிவா2 பேச்சுகள் தோல்வியடைந்தமைக்கும் சர்வதேச சமூகத்தின் மேற்படியான நிலைப்பாடே காரணமாக அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கைப் பிரித்தமைக்கு சர்வதேசத்தின் தெளிவற்ற அணுகுமுறையே காரணம்

இது மட்டுமன்றி இந்தியாவுடன் 1987இல் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையைக் கிழித்தெறியும் வகையில் 19 வருடங்களுக்குப் பின் தமிழ்த் தேசிய இனத்தின் தாயகத்தினை வடக்கு என்றும் கிழக்கு என்றும் இலங்கை அரசு பிரித்தமைக்கும் சர்வதேசத்தின் தெளிவற்ற அணுகுமுறையே காரணமாகும்.

இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கையினையே அரசினால் மீறமுடியுமாக இருந்தால் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணயமும் பாதுகாப்பும் அங்கீகரிக்கப்படாத நிலையில் சர்வதேசத்தின் முன்னிலையில் இலங்கை அரசுடன் செய்யப்படும் எந்த ஓர் ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட மாட்டாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்பதனை திட்டவட்டமாக நாம் தெரிவித்தே தீரவேண்டியுள்ளது.

கசப்பான யதார்த்தத்தை புரிந்துகொள்ளவேண்டும்
இந்த நிலையில் தமிழ் இனத்தின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு ஏதுவாக எந்தவொரு ஆக்கபூர்வமான அணுகுமுறையையும் கருத்தில் கொள்ளாது முற்றுமுழுதாக இராணுவத் தீர்விலேயே நாட்டம் கொண்டு ஸ்ரீலங்கா அரசு செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதனையும் நாம் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இந்தக் கசப்பான யதார்த்தத்தின் பின் அதன் சகல விதமான பரிமாணங்களிலும் புரிந்து கொண்டு தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரித்து எமது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எமக்கென ஒரு தனியரசை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் நல்குமாறு சர்வதே சமூகத்தினை நாம் கோரி நிற்கின்றோம்.

இலங்கைத் தீவில் மிக நீண்டதும், தொடர்ச்சியுமான வரலாற்றைக் கொண்டிருக்கும் எமது இனத்திற்கு சகல வழிகளிலும், சகல முனைகளிலும் ஸ்ரீலங்கா அரசினால் நீதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனைத் தவிர எமக்கு வேறு வழி கிடையாது என்பதனையும் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>லங்காசிறீ.

Friday, February 23, 2007

தீர்வுகள் பலவிதம், அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்.

-க.வே.பாலகுமாரன்-

பெரும் இரத்தக் களரிகளுக்குப் பின் சர்வதேசம் தலையிட்டுத் தீர்வினைத் தானே முன்வைக்குமொரு செயற்றிட்டத்தின் மிகப் பிந்திய வெளிப்;பாடு கொசோவிற்கான தீர்வுத் திட்டமாகும்.

இம்மாதம் 2 ஆம் திகதியன்று இது சேர்பிய சனாதிபதி போரிஸ் ராடிக்கிடமும் கோசோவோவின் மாகாணத் தலைநகர் பிரிஸ்ரினாவில் வைத்து அதன் சனாதிபதி பாத்திமிர் செய்துவிடமும் கையளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலமும் அதைக் கையளித்த ஐ.நா செயலரின் சிறப்புத் தூதரும் வேறு யாருமில்லை. முன்னாள் பின்லாந்து பிரதமர் மார்ட்டி அதிசாரியே அவர். தீர்வின் முழு விபரமும் வெளியாகாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால ஐ.நா மேற்பார்வையிலான தன்னாட்சியின் பின்னர் கொசோவோ சுதந்திரம் பெறுமெனத் தெரிகின்றது.

அரசொன்றின் அடிப்படைகளை அரசியல் யாப்பு, தேசிய கீதம், தேசிய இராணுவம், சர்வதேச அமைப்புக்களால் உறுப்புரிமை பெறும் உரிமை என்பன இவ் 58 பக்க அமைதிப் பாதை அறிக்கையில் உள்ளதாகத் தெரிகின்றது.

எதிர்பார்த்தது போல சேர்பியாவில் எதிர்ப்பும் கொசோவாவில் வரவேற்பும் உடனடியாகவே வெளிப்படுகின்றன. முன்னாள் புரட்சி புகழ் ருஷ்யாவோ தனக்கு நடந்ததை மறந்து கொசோவிற்கு சுதந்திரம் கொடுத்தால் அது தொடர் கதையாகுமென பழம் பல்லவி பாடுகின்றது. அல்பேனிய இசுலாமியரை பெரும்பான்மையாகவும் சேர்பியரை (1 இலட்சம்) சிறுபான்மையாகவும் கொண்டுள்ள கொசோவோவின் சனாதிபதி சேர்பியர் உரிமைக்கு உத்தரவாதம் தருகிறோம். பூரண சுதந்திரத்தை எதிர்பார்த்து இத்தீர்வினை வரவேற்கிறோம் என்றார்.

இருதரப்பு பேச்சுக்களின் பின் வரும் மார்ச்சில் இத்தீர்வு பாதுகாப்புச் சபையிடம் முன் வைக்கப்படும். அங்கு கொசோவோவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். (1990 களில் முன்னாள் யூகோசிலேவியாவினது குடியரசுகள் பிரிந்ததும் கொசோவோவில் கட்டவிழ்க்கப்பட்ட சேர்பியரின் கொடூரமும், பல்லாயிரம் அல்பேனியர் இறந்ததும் 1999 இல் நேட்டோவின் கடும் வான்வழித் தாக்குதல்கள் சேர்பியப் படைகளை வெளியேற்றியதும் அதன் பின் ஐ.நா.வின் முகதாவில் ருNஆஐமு - யுனிமிக் எனப்படும் விசேட ஐ.நா நிருவாகத்தில் கொசோவோ இருந்து வருவதும் பழைய கதை) எனவே இவ்வாறாக எல்லாவகைத் தீர்வுகளும் முன்வைக்கப்படும் இப்பின்னணியில் எம் தமிழீழ மக்களிடையே பிரதான கேள்வியொன்று இயல்பாகவே எழுகின்றது.

நீண்டகாலமாக விடுதலைக்குப் போராடி அதற்கான பல நிபந்தனைகளை நிறைவேற்றி முக்கிய கட்டமொன்றிற்கு அப்போராட்டம் நகரும் பொழுது- அல்லது கொடிய ஒடுக்குமுறையின் வடிவங்கள் உச்சமடையும் பொழுதும் உலகின் மனச்சான்று சற்று அசைந்து கொடுக்கும் பொழுதும் அப்பொழுதும் இலாப நட்டக் கணக்குப் பார்த்து உலகம் பலவகைகளில் தலையிடுகின்றது.

மேலோட்டமாகப் பார்க்குமிடத்து இரண்டிலொரு வழிமுறையை அது பின்பற்றுகின்றது. இத்தலையீடுகள் தாண்டி வெற்றிபெறும் தேசத்தினை அங்கீகரித்தல் (எரித்திரியா) அல்லது நேரடியாகவே தலையிட்டு தானே பொறுப்பெடுத்து தீர்வுத்திட்டங்களைத் தயாரித்து வழங்குகின்றது. (ஆச்சே, கொசோவோ, சூடான்) அல்லது இத்தகைய தீர்வுகள் காணப்படுமிடத்து அதற்கு ஆதரவை வழங்குகின்றது. (நேபாளம்). பொசுனியா தொட்டு கொசோவோ வரை அண்மைக்காலப் பட்டியல் நீள்கின்றது. தேவைப்படின் படையனுப்பி இரு தரப்பையும் கன்னை பிரித்துவிடவும் அது ஆயத்தமாகவேயுள்ளது.

இந்நிலையில்தான் எம் மக்களின் கேள்வியெழுகின்றது. வாகரையிலேற்பட்டது போன்ற குரூர நிகழ்வுகள் வேறெங்காவது ஏற்பட்டிருந்தால் என்ன செய்யப்பட்டிருக்கும்?. புவிசார் அரசியல், உலக மயமாக்கலின் முதலாளிய நலன்கள், கவனயீர்ப்பிற்கான வளங்கள் போன்றவை அதிக கவனத்திற்கும் குறைந்தளவு கவனத்திற்கும் காரணமாக இருப்பதை ஏற்றுக்கொண்டாலும்- இங்கு நடைபெறும் இனக் கொலைக்கு நிகரான அடக்குமுறைகள் அதற்கெதிரான விடுதலைப் போராட்டம் பெற்ற உயரிய வெற்றிகள், சர்வதேசத் தலையீடு- போர் நிறுத்தமும் அது செயலற்றுப் போகும் ஆபத்தும், உலகின் பிணக்கிடங்காக இத்தீவு மாறுகின்றமையும், பெரும் போரொன்று வெடிப்பதற்கான ஏது நிலைகள் தோன்றுவதும் வேண்டுவது என்ன? அறிக்கைகள் தயாரித்து ஐ.நாவிற்கும் ஏனையவற்றிற்கும் சமர்ப்பிப்பதோடு உலகின் பணிமுடிந்து விடுகிறதா? (ராதிகா குமாரசுவாமியின், அலன் றொக்கினதும் சிறுவர்களைப் படையில் சேர்ப்பது பற்றிய அறிக்கை ஏற்கனவே பாதுகாப்புச் சபையின் செயற்குழுவிற்கு கொடுத்தாகிவிட்டது. பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரனின் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கை மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைய அமர்வில் விவாதிக்கப்படவுள்ளது.)

இக்கட்டத்தில் சர்வதேசத்தின் பிரதிநிதி என்று வகைப்படுத்தும் வகையில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக (1999 ஆம் ஆண்டே தான் முதலில் இலங்கை வந்ததாக
சூல்கெயிம் சொல்கிறார்) செயலாற்றி வரும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல் கெயிம் கூறுவதை கவனத்தில் கொள்ளமுடியும்.

சென்ற ஆண்டு இருபெரும் தொகுதிகளாக குமார் ரூபசிங்கா அவர்களால் தொகுக்கப்பெற்ற 'சிறிலங்காவில் அமைதிக்கான பேச்சுக்கள்: முயற்சிகள், தோல்விகள், பாடங்கள்" என்கிற தொகுப்பில் தனது செவ்வியில் சூல்கெயிம் பின்வருமாறு சொல்கின்றார். 'தற்போதைய நிலையில் (2006) நோர்வே அமைதி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நாடுகளில் சிறிலங்கா முக்கியமானது. சூடானும் கூட. சூடானில் பல்வேறு பரிமாணங்களில் நாங்கள் ஈடுபடுகிறோம். இருந்தாலும் பிரபலமானது பாலத்தீனமே. மத்திய கிழக்கில் இன்னமும் பல பாத்திரங்களை நோர்வே வகிக்க வேண்டியிருந்தாலும் ஈராக்கில் மிகக்குறைந்தளவு ஈடுபாடே எமக்குண்டு. இவற்றைவிட பிலிப்பைன்சு, கொலம்பியா, குவாத்தமாலா, தையிற்றி (வுயாவைi) போன்ற இடங்களிலும் ஈடுபட்டுள்ளோம்" என தமது ஈடுபாடு பற்றிய தகவல்களைத்தரும் அவரிடம் இராணுவ பொருண்மிய வலுமிக்க நாடாக அல்லாத சிறிய நாடான நோர்வே எவ்விதம் அமைதி முயற்சிகளில் செல்வாக்குச் செலுத்த முடியுமெனக் கேட்டபொழுது 'நீங்கள் சொல்கின்ற எடுகோளில் உண்மையிருந்தாலும் அமைதி ஏற்படுத்தும் முயற்சி மலிவானதே.

வெளிவிவகாரக் கொள்கையிலே அதுவே மிக இலகுவானது. போரே நம்பமுடியாத பேரளவு செலவினைத்; தருவது. அபிவிருத்திக்கான செலவைவிட அமைதிக்கான செலவு குறைவானது. அதேவேளை பெரும் வல்லரசுகள் இம்முயற்சியில் ஈடுபடும் பொழுது சம்பந்தப்பட்ட இருதரப்பையும் மடக்கி அமைதிக்குள் அவர்களைத் தள்ளமுடியும்.

உதாரணமாக கடந்த 10 வருடத்தில் பொசுனியா தொடர்பாக அமெரிக்க ஒகியோவில் (ழுhழை) ஏற்படுத்த டேட்ரன் (னுயலவழn) உடன்பாட்டைக் குறிப்பிடலாம். பிரச்சினையில் ஈடுபட்ட முத்தரப்பான சேர்பியரையும், குரோசியரையும், முசுலிம்களையும் ஒகியோ மாநிலத்தின் டேட்ரனுக்கு வருமாறு அழைத்து அங்கு வைத்து ஒழுங்காக நடக்கா விட்டால் உங்களை உலகத்தில் உபயோகடி மற்றவராக்கி (மறுவார்த்தையில் கழிசடைகள்) விடுவோம். நீங்கள் போருக்குப் போகாமலிப்பதை உறுதிப்படுத்த எமது அனைத்து வலிமையைப் பயன்படுத்துவோம். தீர்வொன்றைக் காண நீங்கள் முயலாவிட்டால் உங்களை முற்றாக தனிமைப்படுத்தத் தேவையான பொருண்மிய, இராசதந்திர அழுத்தங்களையிடுவோம் என அமெரிக்கா கூறியது பயனளித்தது. ஒப்பந்தம் உருவானது. அது முழுமையானதாக வில்லாவிட்டாலும் அது இற்றைவரை போரை வராமல் தடுத்துள்ளது.

இந்தியா, சீனா, யப்பான் போன்ற வலிமை மிக்க நாடுகள் இவ்வகையில் அழுத்தம் கொடுக்கக்கூடியவை. ஆகவே சிறிய நாடுகளான எங்களைப் போன்றவர்களால் அது முடியாதுதான். சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அமைதியைக் காண தாமாக முயலாவிட்டால் நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது." இவ்வாறு கூறிய சூல்கெயிம் அதேவேளை இன்னொன்றையும் தம்மை நியாயப்படுத்தச் சொல்கின்றார். 'ஈராக்கில் என்ன நடக்கின்றது? அமெரிக்கா போன்ற வலுமிக்க நாடுகள் அங்கு தலையிட்டாலும், அத்தலையீடுகளுக்கும் வரையறையிருப்பதைக் காணமுடிகின்றது." இவ்விடத்திலேதான் எம் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டியவர்களாகின்றனர். பொசுனியா கோசோவோவினால் தீர்வுகொண்டு வரப்பட்டது ஒருவிதமென்றால் சூடான், நேபாளம், ஆச்சே மாநிலம் போன்றவற்றில் தீர்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இவை சொல்லும் செய்திகள் பலப்பல. முதலில் சூடானைப் பார்க்கலாம். 21 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற கொடிய போரினால் பட்டினியால், இடப்பெயர்வால் 15 இலட்சம் மக்களைப் பறிகொடுத்த சூடானில் உலகம் தலையிட்டது மனிதாபிமானத்திற்காக மட்டுமல்ல. அங்குள்ள அனைத்து எண்ணெய்க் கனிய வளங்கள், இஸ்லாமிய அடிப்படைவாத பரவல் தடுப்பு, தெற்கு கிறித்தவர் மீதான பரிவு எனப் பல்வேறு காரணங்களாலும், ளுPடுயு அமைப்பு கணிசமான தென்சூடான் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தமையை கணக்கிலெடுத்தும் தலையீடு நிகழ்ந்தது.

அமெரிக்கா, பிரித்தானியா ஆதரவோடு மிகுதியாக நோர்வே தலையிட்டு 9 சனவரி 2005 இல் அமைதி உடன்பாட்டினைக் கொண்டுவந்தது. ஒஸ்லோவில் ஏப்ரல் 2005 இல் நடைபெற்ற உதவி மாநாட்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைக்கு முதலில் வழங்கச் சம்மதித்த அதே தொகை) உதவி வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இத்தீர்வின்படி சூடானிய மக்கள் விடுதலை அமைப்புத் தேசிய கூட்டு அரசாங்கமொன்றில் அங்கம் வகித்து தனது பகுதியை தானே நிருவகித்து தேசிய வளங்களை முறையாகப் பங்கிட்டு ஒரு இடைக்கால அரசை ஆறாண்டு நடத்திய பின் தென்சூடான் பிரிந்து செல்வதா? அதாவது தனியரசை அமைப்பதா? இல்லையா? என்பதை தென்சூடானிய மக்கள் (கவனிக்கவும் சூடான் முழுவதுமல்ல) வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பர்.

அம்மக்களின் முடிவு எப்படியிருக்குமென்று இப்போதே தெரியும். இங்கே நாம் கவனத்தில் கொள்ள சில தகவல்கள் கிடைக்கின்றன. 1956 ஆம் ஆண்டிலிருந்தே சூடானிய சிக்கல் தொடங்கிய போதும் 1983 இன் பின்னரே அது கூர்மையடைந்தமை- 2002 ஆம் ஆண்டளவிலேயே இங்கும் முறையான பேச்சுக்கள் தொடங்கியமை, அமெரிக்கா, பிரித்தானிய ஆதரவோடு நோர்வே பெரும் பங்காற்றியமை, நோர்வேப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அப்போதைய நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரான கில்டர் பிறாபிரர்ட் யோன்சன் இருதரப்பிற்குமிடையே நல்லுறவைப் பேணி நம்பிக்கையை கட்டியெழுப்பியமை, இவற்றிற்கப்பால் அமைதி முயற்சியின் வேகமும் சூடும் குறைந்துவிடாமல் 2002 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா பார்த்துக் கொண்டமை.

அதேவேளை இந்த அளவிற்கு அதி முக்கியம் பெறாத போதும் இந்தோனேசிய ஆச்சே மாநிலச் சிக்கலுக்கு வைக்கப்பட்ட தீர்வு இன்னொரு வகை. ஒரு வகையில் பார்க்கப்போனால் ஆச்சே வரலாறும் எம்முடையது போன்றதே.

பல நூற்றாண்டிற்கு முன்னதாகவே தனி நாடாகவேயிருந்த ஆச்சே பிரித்தானியர் பின் டச்சுக்காரர் ஆதிக்கத்தில் தனது இறைமையை இழந்தது. 1900 டச்சுக்காரர் பற்பல இராச்சியங்களை ஒன்றாக்கி இந்தோனேசியாவை உருவாக்கிய போது ஆச்சேயும் அதற்குட்பட்டது. சுதந்திரத்திற்காக டச்சுக்காரருக்கெதிராக 1873-1942 ஆச்சே பெரும் விடுதலைப் போரை நடத்தியது. 1949 டச்சுக்காரர் விட்டகன்ற போது இந்தோனேசிய சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றிய ஆச்சே முற்றிலுமாக புறக்கணிக்கப்படவே சுதந்திர ஆச்சே விடுதலை அமைப்புத் தோன்றியது. (புயுஆ) அதிக அதிகாரம், விசேட தகுதிநிலை கோரிய ஆச்சே விடுதலைப் போராட்டத்திலும் (1976 இல் ஆச்சேயை சுதந்திர நாடாகவும் அது அறிவித்தது) பேச்சுக்கள் நீண்ட காலமாக நடந்தன.

எனினும் 2004 சுனாமி கதையையே மாற்றியது. விடுதலைப் போராளிகள் உயிர்தப்பினாலும் கொல்லப்பட்ட ஏறத்தாழ 175,000 மக்களில் இவர்களின் குடும்பங்களும் உள்ளடங்கின. இருதரப்பும் விட்டுக்கொடுத்து இணக்கப்பாட்டிற்கு வந்ததன் விளைவாக ஓகஸ்ட் 2005 இல் புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்தாகி இப்பொழுது நடைமுறையிலிடப்பட்டுள்ளது. இங்கும் பின்லாந்தின் முன்னாள் பிரதமர் மார்ட்டி அதிசாரியே பெரும் பங்காற்றினார்.

புயுஆ போராளிகளுக்கு அவுத்திரேலிய பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பரி உதவியதாக தெரிகின்றது. முன்னாள் இராணுவத் தளபதியும் இன்னாள் இந்தோனேசிய சனாதிபதியுமான சுசிலோ பம்பா (ளுரளடைழ டீயஅடியபெ லுரனாழழெலழ) உடன்பாட்டினை மதித்து செயற்பட உறுதி தந்தார். போராளிகள் ஆயுதங்களைத் தொகுதி, தொகுதியாக ஒப்படைக்கவும் இந்தோனேசியப் படைகள் பொருத்தமான தொகுதிகளாக வெளியேறவும் சம்மதமானது. இதனை மேற்பார்வை செய்ய ஆசியானும், ஐரோப்பிய ஒன்றியமும் அப்போது முன்வந்தன. இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவின் ஒற்றையாட்சி யாப்பிற்குள்ளே தீர்வுகாணப்படவெண்டுமென உள்ளதுதான். இருந்தபோதும் உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தவிர்ந்த பொது நிருவாகம் ஆச்சேயின் பொறுப்பிலேயே விடப்பட்டுள்ளது. வரி விதிக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது வணிகச் செயற்பாடுகளை மேற்கொள்ள, சர்வதேச உதவிகள், முதலீடுகளை நேரடியாக பெறத்தக்க வகையிலும் ஆச்சேக்கு அதிகாரமுள்ளது. ஆச்சே நிருவாகத்தின் கலந்துரையாடலின் பின்னரே இந்தோனேசிய சட்டவாக்கம் செயற்பட வேண்டும் என்றுமுள்ளது. முக்கியமானது ஆச்சேயின் பழைய எல்லைகள் (அதாவது 1956 யூலை 1 ஆம் திகதிய) ஏற்கப்பட்டதே.

ஆகவே, ஆச்சே இன்னொரு வகை. நேபாளமோ பிறிதொரு வகை. இங்குள்ளது போல ஆழமான இனச்சிக்கல் அங்கில்லாத போதும் ஆழமான வர்க்க முரண்பாட்டின் மோதல் களமே நேபாளம். முடியாட்சி, பார்ப்பனிய உயர்சாதியின் மேலாதிக்கம், ஏழை நேப்பாளியரின் இல்லாமை, அதன் விளைவு மாவோவின் போராட்ட வழிமுறையைப் பின்பற்றி பாரிய தாக்குதல்களை பல்வேறு (சருவதேச அமைப்புக்கள் மீதும்) வகைகளில் தொடுத்தது. நேபாள மாவோயிய பொதுவுடமைக்கட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்கியது. அதனை நிருவகித்தது.

தொடக்கத்தில் இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து செயற்பட்டன. 2001, 2003 என இவ்வாண்டுகளில் அமைதி முயற்சிகள் மேற்கொண்ட போதும் 2006 ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுக்கள் பலனளித்தன. அதனால் சென்ற வருடம் நவம்பர் 16 இல் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. இதன்படி இடைக்கால யாப்பு இடைக்கால நாடாளுமன்றம் உருவானது.

தனது சமாந்தர நிருவாகக் கட்டமைப்புக்களைக் கலைத்து இடைக்கால நாடாளுமன்றில் பங்கேற்க போராளிகள் சம்மதித்தனர். சென்ற நவம்பர் மாதத்திலே ஒவ்வொன்றும் 5,000 போர் வீரரைக் கொண்ட ஏழு டிவிசன்களையும் பல இராணுவ பாசறைகளில் தங்கவைக்கவும் ஏற்பாடானது. இவ்வாறாக முடியாட்சி மக்களாட்சியாக மாறி எவர் தலையீடுமின்றி உள்ளுர் மக்கள் உதவியோடு செய்யப்பட்ட உடன்பாட்டினை வேறு வழியின்றி இந்தியா உட்பட அனைத்துத் தரப்பும் ஆதரிப்பது மட்டுமன்றி உதவவும் முன்வந்துள்ளன. இந்தியா ஆயுதங்களை வைக்க பெட்டகங்களை வழங்கியது.

இப்பெட்டகங்கள் பூட்டப்பட்டு அதன் ஒரேயொரு சாவி போராளித் தலைமையிடமேயிருக்கும். இந்தியாவோடு இப்போது நல்லுறவினைப் பேண ஊPN-ஆ முன் வருகின்றது. வழமைபோல உதவ முன்வந்த ஐ.நா ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை நேரடியாக கண்காணிக்கவும் அதற்குரிய மின்னியல் கருவிகளை வழங்க வீடியோ கண்காணிப்பினை மேற்கொள்ளவும் துணை நிற்கின்றது. இவ்வாறாக சமகால உலகில் தீர்வுகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒருவிதமல்லவா?

இப்போது மீண்டும் கேள்விக்கு வருகிறோம். சில வருடங்களுக்கு முன் இங்கு அமைதி முயற்சிகள் ஆரம்பமான பொழுது இம் முயற்சி தமக்கொரு முன்னோடியாக அமையுமென எதிர்பார்த்து (?) நேப்பாள பிரதிநிதிகள் இது பற்றி அறிய கொழும்புக்கு வந்தார்கள். ஆனால் நடந்தது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதை. அமைதி முயற்சி பற்றி அடிக்கடி எழுதும் குமார் ரூபசிங்க அமைதியிழந்து எழுதுகிறார்.

'இப்பொழுது சிறிலங்கா நேப்பாளம் செல்லவேண்டிய முறை. வடக்கில் மக்கள் தொடர்ந்து பரிதவிக்கின்றார்கள். தெற்கிலோ அரசியல் மாற்றம் கோரிய மக்கள் இயக்கம் எதுவுமில்லை. ஆனால் நேபாளத்தில் மக்களே மாற்றத்தினை ஏற்படுத்தினர். ஆனால் இங்கு? இத்தனை மூன்றாம் தரப்பு இணக்கப்பாட்டாளர்கள் முயன்றும், இடைத் தொடர்பாளர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றும் இன்னமும் தீர்வினை தொடக்கூட முடியவில்லை. இங்கே இணக்கப்பாடு எட்ட பகைமைச் சிக்கலை மாற்றடையச் செய்ய எடுத்த முயற்சி தோற்றுவிட்டது." (நன்றி டெய்லி மிரர்-குமார் ரூபசிங்க- நேப்பாளம் நவம்பர். 2006) இவ்விடத்திலே மறுபடியும் சூல்கெய்ம் சொல்வது நினைவிற்கு வருகின்றது.

'நோர்வே அனுசரணையாளர் பணியை விட்டகன்றால் அந்த இடத்திற்கு வர உலகில் எந்த நாடும் தயாரில்லை. ஏனென்றால் நோர்வே இங்கே எவ்விதம் நடத்தப்பட்டதென்பதை அவர்கள் நன்கறிவர்"

'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது. இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது." என்று போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையின் முழு விபரம்:

"றோயல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பெப்ரவரி 22, 2002 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தினுள் நுழைந்துகொண்டனர்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அப்போதைய சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.

இந்த ஒப்பந்தமானது தற்போது எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும், இலங்கைத் தீவில் சமாதானத்திற்கான தேடலிலும், இனப்பிரச்சினையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை நோக்கிய வரலாற்றுப் பயணத்திலும் இது ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தமானது சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்டு தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிங்களவர்களால் சிங்களவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட, தீவின் ஏனைய சமூகத்தவரை ஒடுக்குவதற்குத் துணைபுரிந்த இலங்கையின் பெரும்பான்மையினரது அரசியலமைப்பினது எல்லைகளைக் கடந்தே போர் நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது. இந்த ஒப்பந்தமானது தமிழீழ நடைமுறை யதார்த்த அரசினது இருப்பினை அங்கீகரித்துள்ளது.

இங்கு நடைமுறை யதார்த்த அரசு எனும் போது அது, தனித்துவமான மக்கள், பாதுகாப்புப் படை, காவல்துறை, நீதித்துறை, சிவில் நிர்வாகம் என்பவற்றுடன் மக்களைச் சிறந்தவகையில் நல்வழியில் ஆளுவதற்கான ஏனைய அனைத்து அம்சங்கள், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக்கொண்ட தமிழர் தாயகத்தின் இருப்பினைப் பிரதிபலிக்கும் கட்டுப்பாட்டு எல்லைகளைத் தன்னகத்தே கொண்டு, ஓர் அரசுடன் உடன்பாட்டினை எட்டும் திறன் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலுள்ள படைவலுச் சமநிலையினை போர் நிறுத்த ஒப்பந்தமானது அங்கீகரித்துள்ளதுடன், அது படை வலுச் சமநிலையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.

இலங்கைத் தீவு பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாள் முதல் தொடர்ச்சியாக வந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தமிழர்கள் அவர்களது தாயகத்திலேயே முகம்கொடுத்து வந்தனர்.

சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து முதல் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களின் நீதிக்கான தொடர்ச்சியான அமைதிவழிப் போராட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவத்தின் துணைகொண்டு ஒடுக்கியது. இதன் காரணமாக தமிழர்களது அமைதிவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டம் மற்றும் ஆயுதந் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் என்பன இடம்பெற்ற காலப்பகுதியில், அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த சிறிலங்காவினது சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

தரப்பினருக்கிடையே படைவலுச் சமநிலை காணப்படாதமையினாலும், சர்வதேச ஈடுபாடு இல்லாதமையினாலும் முன்னர் இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களும் தோல்வியில் முடிந்ததோடு, சிறிலங்கா அரசாங்கம் எட்டப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டது. இதனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் மிகவும் வஞ்சகத்தனமாக ஏமாற்றப்பட்டனர்.

இவ்வாறாக அமைதி முயற்சிகள் தோற்றுப்போன கசப்பான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே 2002 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது. இம்முறை, நோர்வேயினது அனுசரணையும், சர்வதேச சமூகத்தின் தீவிரமான ஆதரவும், பங்களிப்பும் தமிழ் மக்களுக்கு அமைதி முயற்சிகளில் முதற்தடவையாக நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால் இன்று, வருந்தத்தகு வகையில், சமாதான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தினது ஈடுபாடு உண்மையானதாகவோ ஆக்கபூர்வமானதாகவோ காணப்படவில்லை. இராணுவ வழிமுறையில் நகர்ந்து செல்லும் சிறிலங்கா அரசாங்கம் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ, ஆக்கபூர்வமாக எதிர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ சர்வதேச சமூகம் விரும்பமின்றிச் செயற்படுவதே போர் நிறுத்த ஒப்பந்தத்தினைப் பலமிழக்கச் செய்துள்ளது.

தரையிலும் வானிலும் கடலிலுமென சிறிலங்காவினது முப்படைகளும் மேற்கொண்டுவரும் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் மத்தியிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் போதிய பொறுமை காத்து வந்துள்ளனர்.

இக்காலப் பகுதியில் நாம் எமது பல போராளிகளை இழந்துள்ளோம். சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள் மற்றும் பெருந்தொகையான தமிழர்கள் காணாமற்போகிறார்கள்.

ஆனால், அடிப்படை உண்மைகள் இவ்வாறிருக்கின்ற போதும், சர்வதேச சமூகமோ இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த வகையான நடவடிக்கைகளையும் எடுக்காது நீதியற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தண்டனை வழங்கும் வகையிலமையும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு சமதரப்பு என்ற யதார்த்தத்தினை இது சிதைப்பதோடு சமாதான முன்னெடுப்புக்களையும் பாதிப்பதாக அமைகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத்தின் இதுபோன்ற நிலைப்பாடு வலுப்பெறுமிடத்து, தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அதிக கடும்போக்கைக் கைக்கொள்வதற்கே அது வழிவகுக்கும்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மிகவும் கடுமையான முறையில் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுகின்ற போதும் பெரும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் போதும் சர்வதேச சமூகமானது நீதியின்பால் நின்று செயற்பட்டு, அவற்றைத் தடுத்துநிறுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்காதுபோனால், அது தமிழர் தாயகப் பகுதியில் ஒர் போர்ச்சூழல் ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.

சர்வதேசத்தினது பங்குபற்றலுடன் இடம்பெற்ற சமாதான முன்னெடுப்புக்களும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளமை தமிழ் மக்களைச் சினங்கொள்ள வைத்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தமும் சர்வதேச அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புக்களும், ஏனைய ஒப்பந்தங்களைப் போலவும் பேச்சுக்களைப்போலவும் தற்போது தோல்வியடைந்திருப்பதுதான் தமிழ் மக்களுக்குக் கசப்பான ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதோர் புறநிலையில்தான் தமிழர் தேசத்தில் இயல்புநிலையினை ஏற்படுத்தும் வகையில், போர் நிறுத்த உடன்படிக்கையினை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள்.

ஆறு வருடங்களின் முன்னர் டிசம்பர் 2000 ஆம் ஆண்டில் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தினை அறிவித்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 24, 2001 இல் மீண்டும் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தார்கள். நோர்வேயின் முயற்சிகளைத் தொடர்ந்து தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு மேற்குறித்த இந்த அறிவிப்பே வழிவகுத்தது.

போர் நிறுத்த உடன்படிக்கையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பகைமையை முடிவுக்கு கொண்டுவந்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்புநிலையை ஏற்படுத்தி பேச்சுகளுக்கான உகந்த புறநிலையைத் தோற்றுவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த மோசமான போரின் காரணமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் மனிதநேய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை அனைத்து சுற்று அமைதிப் பேச்சுகளிலும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பும் இராணுவக் கெடுபிடிகளும் நீங்காது அமைதிப் பேச்சுகளுக்கான சாதகமான உகந்த புறநிலை ஏற்படமுடியாது என்பதை நேரடி சமாதானப் பேச்சுகளில் வலியுறுத்தினோம்.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இடம்பெற்ற அனைத்துச் சுற்றுப் பேச்சுக்களின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முழுமையான ஈடுபாட்டுடன் அவற்றில் பங்கெடுத்தது.

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கேற்ப தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும், தரப்பினர் மத்தியில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதும், அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுக்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இவற்றை மதித்து நடப்பதற்குத் தவறிய இலங்கை அரசாங்கம், நிலமையினை மேலும் மோசமாக்கும் வகையில் செயற்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழர் தாயகப் பகுதிகளில் இயல்புநிலையினை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை இரண்டு தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் அது ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளைப் புறந்தள்ளி, சிறிலங்கா அரசாங்கமானது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறி, பொதுமக்கள் வாழிடங்களை இன்னமும் ஆக்கிரமித்துநிற்கிறது.
ஓவ்வொரு கட்டப் பேச்சுக்களின்போதும், தமிழர் தாயகப் பகுதியில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தினோம். இது தொடர்பில் தனக்குள்ள கடப்பாடுகளைப் புறந்தள்ளிய இலங்கை அரசாங்கம் காலங் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதேநேரம் மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக அவர்களின் நிலமை மோசமாகிச் சென்றது.

நிலமையை மேலும் மோசமாக்கும் வகையில் அரசாங்கம் தான் மதித்துச் செயற்படவேண்டிய கடப்பாடுடைய ஒப்பந்த விதிகளை மீறி, துணை இராணுவக் குழுக்களின் உதவியுடன் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துத் துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்களை குறிப்பிடதொரு கால வரையறைக்குள் களைந்துவிட வேண்டுமென ஒப்பந்தவிதி 1.8 கூறுகிறது. மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் துணை இராணுவக் குழுக்களின் இருப்பினை சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினது அவதானிப்புகள் உறுதிப்படுத்துவதோடு 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அரச திணைக்கள அறிக்கையும் இந்த உண்மையினை ஏற்றுக்கொள்கிறது.

சிறிலங்காவிற்குத் தகவல் திரட்டும் ஒரு நடவடிக்கையாக விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா சிறப்புத் தூதுவர் சிறிலங்கா இராணுவமும் துணை இராணுவக்குழுக்களும் இணைந்து ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர் ஆட்சேர்பில் ஈடுபடுவதை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

2002 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுக்களில் நாங்கள் எட்டுமுறை பங்கெடுத்துள்ளோம். தமிழர் தாயகத்தில் அவசர மனிதநேய நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கு பல பிரேரணைகளும் கட்டமைப்புகளும் ஆரம்ப கட்டப் பேச்சுகளின் போது உருவாக்கப்பட்டன.

இவ்வாறாக முன்வைக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும் உடன்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால் அது தமிழர்களது வாழ்நிலையினை போதுமானளவு மேம்படுத்தியிருக்கும். இவற்றில் சில பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டபோதும் பின்னர் அவையனைத்துமே நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாக புறந்தள்ளப்பட்டதோடு சிறிலங்கா அரசியலமைப்பைக் காரணங்காட்டி அவை கைவிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தூய மனிதாபிமான அடிப்படையில், இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கு வடக்கு கிழக்குக்கான உடனடி புனர்வாழ்வுக்கான உப குழு (Subcommitee for Immediate Rehabilitation of North East- SIHRN) உருவாக்கப்பட்டது. இருப்பினும் இது சிறிலங்கா அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழ் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்கு முகங்கொடுத்து அடுத்த சுற்றுப் பேச்சுகளுக்கான புறநிலையைத் தோற்றுவிக்கும் பொருட்டு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான (Interim Self Governing Authoriy ISGA) பிரேரணையைச் சமர்ப்பித்தோம்.

இவ்விடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான பிரேரணையின் அடிப்படையில் அமைதிப் பேச்சுகளை ஆரம்பிக்க விரும்பாத அன்றைய சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறிலங்கா பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டும் அடுத்த கட்டப் பேச்சுக்களுக்கான அடிப்படையாக ISGA இனை முன்னிறுத்தியும் போட்டியிட்ட 22 தமிழ் பிரதிநிதிகள் பெரும் வெற்றியடைந்தனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் ஐனநாயக வழிமுறையூடாக வெளிப்படுத்திய விருப்பினை நிராகரித்து ISGA தொடர்பில் பேச்சுகளை மேற்கொள்ள மறுத்தது.
இவ்வாறானதோர் புறநிலையில் டிசம்பர் 2004 ஆம் ஆண்டு இலங்கைத் தீவினை ஆழிப்பேரலை மிக மோசமாகத் தாக்கியது. தொடர்ந்து வந்த இனப்போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களே இலங்கைத்தீவில் ஆழிப்பேரலையினால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். சிறிலங்கா அரசாங்கத்தின் எவ்வித உதவிகளுமின்றிய நிலையில் எமது இராணுவ சிவில் கட்டமைப்புகள் மற்றும் சர்வதேச உள்நாட்டு தொண்டர் அமைப்புகள் தமிழர் தாயகத்தில் மிகப்பெரியதோர் மனிதநேய நெருக்கடிக்கு முகங்கொடுத்து பாராட்டத்தக்க வகையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் எமது புலம்பெயர்ந்த மக்களின் உதவியே உடனடியாக பெரும் மனிதநேய நெருக்கடிக்கு முகங்கொடுக்கத் துணைநின்றது. ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் சர்வதேச உதவிகளைப் பகிர்ந்தளிக்கும் நோக்கில், இவ்வியற்கை அழிவு இடம்பெற்று ஆறு மாதங்களின் பின்னர் நோர்வே அரசின் அனுசரணையுடனும் சர்வதேச உதவி வழங்கும் அமைப்புகளின் உதவியுடனும் சுனாமிக்குப் பின்னான நடவடிக்கை முகாமைத்துவக் கட்டமைப்பு (Post Tsunami Operational Management Structure- PTOMS) உடன்படிக்கை எட்டப்பட்டது.

ஓர் மனிதநேய உதவிக்கான இக்கட்டமைப்பும் சிறிலங்கா அரசாங்கத்தால் அரசியலமைப்பைக் காரணங்காட்டி நிராகரிக்கப்பட்டது. சிறிலங்காவில் சட்ட பன்மைத்துவம் இன்மையினைக் காட்டுவதான இன்னொரு உதாரணமாக இது அமைகிறது. மனிதாபிமானம் மிக்க இந்த இயற்கை அனர்த்த முகாமைத்துவ விடயத்திற்கூட தமிழர்கள் நீதி பெறவுமில்லை, சமமாக நடத்தப்படவுமில்லை. இந்த நிலையில், ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட தமிழர்களது பிரச்சினைகளைக் கையாள்வதற்கு மாற்று வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக சர்வதேச சமூகமோ, பாதிக்கப்பட்ட மக்களை நிர்க்கதியில் விட்டுவிட்டு வெளியேறியது.

இச் சூழமைவிற்தான் 2005 ஆம் ஆண்டு சிறிலங்காவின் தற்போதைய ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அதிகளவிலான சிங்கள வாக்குகளைப் பெற்று சிறிலங்காவின் ஐனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகிந்த ராஜபக்சவின் வரவுடன் தமிழர்களுக்கெதிரான நிழல் யுத்தம் முடுக்கிவிடப்பட்டது. தமிழர் தேசத்தின் இருண்ட பகுதி ஆரம்பமானது. கொடூரமான கொலைகள் மற்றும் காணாமற்போதல்களால் மக்கள் அச்சமடைந்தார்கள்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் காணாமற் போதல்களுக்கும் படுகொலைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும் தமிழ்ப் பொதுமக்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் தொடரும் நிலையில் அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிகள் கொலைக்களங்களாக மாறிவிட்டன. குறித்த பகுதிகளில் வாழும் தமிழ்ப் பொதுமக்கள் இயல்புநிலையினை இழந்து அச்சத்தின் மத்தியில் தமது வாழ்க்கையினை ஓட்டுகிறார்கள்.

கொலைகள், காணாமற்போதல்கள், துன்புறுத்தல்கள் என்பவற்றுடன் சிறிலங்கா அரசாங்கமானது வகைதொகையற்ற விமானக் குண்டுத்தாக்குதல்களைத் தமிழர் தாயகப் பகுதிகளில் நடாத்தி வருகின்றது.

பிரித்தானிய காடியன் பத்திரிகையின் ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டதைப் போல, சூடானிய அரசாங்கத்தினைப் போலவே இலங்கை அரசாங்கமும் மெருமெடுப்பிலான விமானக் குண்டுத்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் வாழிடங்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்கள் மீது விமானக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதானது, ஜெனீவா உடன்பாடு நான்கினது சரத்து 147 இன் அடிப்படையில் ஓர் போர் குற்றமாகும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.3 இற்கு முற்றிலும் முரணான வகையில் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீதும் அவர்களது சொத்துக்கள் மீதும் தாக்குதல்களை நடாத்துவதோடு தமிழர் தாயகத்தையும் ஆக்கிரமித்து நிற்கிறது. இவ்வாறாக, புலிகளை வலிந்து போருக்கிழுக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டபோதும், புலிகள் தங்களால் இயன்ற பொறுமையினைக் காப்பதோடு, சில தற்காப்புத் தாக்குதல்களில் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

மோசமாகிச் செல்லும் இந்த நிலையில்தான் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையின் முழுமையான அமுலாக்கம் குறித்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பேச்சுக்களின்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளித்த சிறிலங்கா அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களையும் களைவதாகக் கூறியது.

ஜெனீவா பேச்சுக்களின் போது அரச பேச்சுக்குழு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணாக, தமிழர் தாயகப் பகுதிகளில் மிகவும் மோசமான இராணுவ நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

தமிழ்மக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டார்கள், காணாமற்போனார்கள். சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவின் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையை (ICCPR:International Covenant on Civil and Political Rights) ஏற்றுக்கொண்டுள்ள நாடென்ற வகையில் இக்கொலைகள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பான பக்கச்சார்பற்ற நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவும் தவறியுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் இப்படுகொலைகள் காணாமற் போதல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆபர் மற்றும் முன்னாள் ஐ.நா பொதுச் செயலாளர் கொபி அனான் ஆகியோரின் ஆழ்ந்த கரிசனைகளையும் கண்டனங்களையும் நினைவுபடுத்த நாம் விரும்புகின்றோம்.

மேலும் சிறிலங்கா இராணுவத்தாலும் துணை இராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட அல்லைப்பிட்டிப் படுகொலைகளுக்கான சான்றுகள் தம்மிடமிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை மே மாதம் 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது கண்டன அறிக்கையில் (AI Index: ASA 37/014/2006 ) வெளிப்படுத்தியது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்படுகொலைகள் குறித்து சர்வதேச சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதானது, தமிழர்களது பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் நேர்மைத்தன்மை மற்றும் வினைத்திறன் தொடர்பில் கேள்வியினை எழுப்பியுள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் மனிதத்திற்கெதிரான குற்றங்கள் அரங்கேறிக்கொண்டிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளோ, அதியுச்ச பொறுமையுடனிருந்தவாறு போர் நிறுத்த உடன்படிக்கையின் முழுமையான அமுலாக்கத்தை வலியுறுத்தினர். குறித்த இந்தச் சூழமைவில், நாம் சர்வதேச சமூகத்தின் அழைப்பை ஏற்று மீண்டும் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் நோர்வேயினது அனுசரணையுடனும் சுவிஸ் அரசாங்கத்தினது ஏற்பாட்டுடனும் ஒக்ரோபர் 2006 இல் அரச தூதுக்குழுவுடன் பேச்சுகளை மேற்கொண்டோம். இப் பேச்சுகளில் நாம் எமது அதியுச்ச நெகிழ்வுப் போக்கையும் பொறுமையையும் வெளிப்படுத்தியிருந்தோம்.

யாழ். குடாநாட்டிற்கான ஒரே ஒரு தரைவழிப் பாதையான ஏ-9 பாதையினை மூடி, அங்கு பெரும் மனித அவலம் ஏற்படுவதற்கு வழிவகுக்கப்பட்டிருப்பதை நாங்கள் பேச்சுக்களின் போது சுட்டிக் காட்டினோம். அண்ணளவாக 50,000 ஆயுதப்படையினர் ஆக்கிரமித்து நிற்கும் குடாநாட்டுக்கான பாதை மூடப்பட்டதன் காரணமாக, அங்கு ஆறு இலட்சம் பொதுமக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலையினுள் அடைக்கப்பட்டவரானார்கள்.

குறித்த இந்த நெடுஞ்சாலையினை திறக்க அரச தூதுக்குழுவினர் உடன்பட மறுத்தமையானது பேச்சுக்கள் தோல்வியில் முடிவதற்கு வழிவகுத்தது. இப்பாதை மூடப்பட்டிருப்பது புதிய "பேர்ளின் சுவரினைத்" தோற்றுவிக்கின்றது என நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான உரிமையை மீறுகின்ற நடவடிக்கையாக அமைந்த ஏ-9 சாலை மூடப்பட்டமை யுத்த நிறுத்த உடன்படிக்கையையும் மீறியுள்ளதோடு, அது பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் செல்வதையும் தடுக்கிறது. குறித்ததொரு மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் செல்லவிடாமல் தடுப்பதானது சர்வதேச சட்டத்தினை (சரத்து 147) முற்றாக மீறும் செயல் என்பதோடு, தமிழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதை உறுதிப்படுத்தத் தவறியது.
ஜெனீவா உடன்பாடு நான்கின் சரத்துக்கள் 55 மற்றும் 59-63 ஆகியவற்றை முற்றாக மீறும் செயலாகும். நாட்டினது இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான ஓர் "முக்கிய நகர்வாக" கொழும்பினது இரண்டு அரசியல் கட்சிகளின் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டினைக் காட்டுவதற்கு ஜெனீவாவில் அரச தூதுக்குழுவினர் முனைந்தார்கள். தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலற்றுக் கிடக்கிறது. அத்துடன், இந்த செயலற்றுப்போகும் அரசியல் முறைமை சிறிலங்காவிற்குச் சுதந்திரம் கிடைத்த நாள்முதல் அதனது மக்களுக்கு துன்பத்தையே விளைவித்து நிற்கிறது.

இன்றுடன் போர்நிறுத்த உடன்படிக்கை தனது ஐந்தாவது வருடத்தை அதாவது 1,826 ஆவது நாளைக் கடக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையின் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான சரத்து 2 பொதுமக்கள் மீதான சகல துன்புறுத்தல்களும் நீக்கப்பட்டு அவர்கள் மீளவும் தமது வாழிடங்களுக்கு திரும்புவதையும் வழிபாட்டிடங்கள், பாடசாலைகள் ஏனைய பொதுக் கட்டடங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்துகின்றது.

ஆனால், இன்றும் தமிழர் தாயகத்தில் மூன்றிலொரு மக்கள் வாழ்விடங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் அமைந்துள்ளது. 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னரும் அதியுச்ச இராணுவ நலன்கள் என்ற போர்வையில் மக்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து வலிந்து வெளியேற்றி தொடர்ந்தும் அவ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கின்றது.

இச்செயற்பாடானது பொதுமக்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து வலிந்து வெளியேற்றுவதைத் தடுக்கும் ஜெனீவா உடன்படிக்கையின் இரண்டாவது மேலதிக இணைப்பின் 17 ஆவது சரத்தினை (Article 17 Geneva Conventions second Additional Protocol 2) மீறியுள்ளது.
மேலும் தரை வழிப் போருக்கான 1907 ஹேக் உடன்படிக்கையின் 46 ஆவது சரத்து (Article 46 paragraph 2 of the 1907 Hague Convention) பொது மக்களின் உடமைகளைப் பறிமுதல் செய்வதைத் தடுக்கிறது. இன்று சர்வதேச அமைதி உடன்படிக்கைகளுக்கான முன்னுதாரணங்களாக இருக்கும் கொசோவோ, பொஸ்னியா, புரூண்டி, ஜோர்ஜியா, மசிடோனியா போன்ற ஏனைய சர்வதேச அமைதி உடன்படிக்கைகள் இராணுவ நலன்களைக் காரணம் காட்டி இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பிச் செல்வதை மறுக்கவில்லை.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் தமிழர் தாயகத்தில், அரச படையினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித அவலம் எமது மக்களை வெறுப்பின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் மாத்திரம் தமிழர் தாயகத்தில் 1591 ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு 674 பேர் காணாமற்போயுள்ளார்கள். உயர் பாதுகாப்பு வலயங்களைக் காரணங்காட்டி வெளியேற்றப்பட்ட 300,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் அகதி முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைவிட அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் மாத்திரம் 210,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறானதோர் நெருக்கடியான கட்டத்தில் சர்வதேச சமூகத்தின் நடுநிலமைத் தன்மையாலும் ஆக்கபூர்வமான பங்குபற்றுதலாலுமே நீதியான நிலையான அமைதியை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்த முடியும். இந்த யதார்த்தத்திற்கு முரணாகவும் பக்கச்சார்புடனும் செயற்பட்டு தமிழர் தரப்பை மாத்திரம் ஓரங்கட்டி பலவீனப்படுத்த முனைவது, சமாதான முனைப்புக்களைச் சிதைப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, தமிழர்களை அடக்கும் வகையிலமையும் சிங்கள அரசினது திட்டத்தை வலுப்படுத்துவதாகவே அமையும்.

மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலமைந்த எந்தவொரு போர்நிறுத்த உடன்படிக்கையினதும் இருப்பு, இரு தரப்பினது படை வலுச்சமநிலையும் சம அந்தஸ்தும் பேணப்படுவதிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையில் சம அந்தஸ்தும் வலுச்சமநிலையும் பேணப்படுவதை உறுதிப்படுத்தவேண்டிய தேவை உணரப்படவில்லை. இந்தத் தேவை, எந்தவொரு பிணக்கினையும் சமாதான வழிமுறை மூலம் தீர்ப்பதற்கு அவசியமானதாக கருதப்படுகிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை சிதைந்து போவதற்கும் அமைதிப் பேச்சுகள் குழம்புவதற்கும் இதுதான் வழிவகுத்தது. சிறிலங்கா அரசின் பரப்புரைகளைச் செவிமடுத்து பேச்சுகளில் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாகப் பங்குபற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளைப் "பயங்கரவாதிகள்" என ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாடுகள் அறிவித்தமை அமைதிப்பேச்சுக்களின் முன்னெடுப்பை கேள்விக்குறியாக்கியதுடன், தமிழர்களது சுய நிர்ணய அரசியல் போராட்டத்தினை நசுக்கி, சிறிலங்கா அரசாங்கத்தின் விட்டுக்கொடாத இராணுவத் தீர்வை நோக்கிய நகர்வை வேகப்படுத்தியது துரதிஸ்டவசமானதே. சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ முனைப்புக்கள் என்பன போர் நிறுத்த ஒப்பந்தத்தினை அர்த்தமற்றதாக்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருவெற்றி மூலம் தமிழ் மக்கள் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் ஓர் தேசிய விடுதலை இயக்கம். எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் சுய நிர்ணய உரிமை கொண்ட மக்களாக வாழ்வதற்கே நாம் விரும்புகிறோம்.
சிறிலங்காவின் இறைமையையும் நில ஒருமைப்பாட்டையும் காரணங்காட்டி தமிழர் தாயகத்தின் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் மறுக்கும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடானது தமிழ் மக்களை விசனமடையச் செய்துள்ளது.

சர்வதேச சமூகமானது இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுகிறது போலத் தெரிகிறது. அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட தென் சூடான் மக்கோ உடன்படிக்கை (Machkos protocols) சூடானின் இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதிக்கின்றது என்றோ, சேர்பிய மொன்ரநீக்ரோ உடன்படிக்கை மற்றும் கொசோவோவின் எதிர்காலத்துக்கான தீர்மானம் சேர்பியாவின் இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதிக்கின்றது என்றோ சர்வதேச சமூகத்தால் நிராகரிக்கப்படவில்லை.

இங்கு குறித்த இம்மக்கள் தமது சுயநிர்ணய உரிமையுடனும் இறைமையுடனும் வாழ வழிசெய்யப்பட்டுள்ளதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வுகாணும் நோக்கில் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாது, நிராகரிக்கப்பட்டுள்ளமையானது எமது மக்களின் நம்பிக்கைகளையும் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பான அவர்களது எதிர்பார்ப்புகளையும் சிதைத்துள்ளது. "பயங்கரவாதத்திற்கு" எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது.
இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது. மாறாக, சுயநிர்ணய உரிமை கொண்ட இறைமையுள்ள மக்களாக வாழ்வதற்கான விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் மக்களை இட்டுச் செல்வதற்கே இது வழிவகுக்கும்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Thursday, February 22, 2007

Marginalisation of CFA compells Tamils to resume freedom struggle - LTTE.

The Liberation Tigers of Tamil Eelam, in a statement marking five years since the signing of 22 February 2002 Cease Fire Agreement (CFA) with the Government of Sri Lanka (GoSL), said the CFA formulated with the full support of the international community, had transcended the parameters of Sri Lanka’s majoritarian constitution, recognizing Tamil Eelam’s de facto existence and the balance of power between the Government of Sri Lanka (GoSL) and the LTTE. However, the international community’s insistence on a solution that does not infringe on the "territorial integrity and sovereignty of Sri Lanka," is deeply frustrating for the Tamil people, the statement said.

The international community has not rejected, for example, the South Sudan Machkos Protocol facilitated by US, UK, Norway and Italy on the basis it is affecting the sovereignty of Sudan, the LTTE statement pointed out.
"Nor has the international community questioned the Serbia-Montenegro agreement and the recent proposal on the future of Kosovo on the basis these contravene Serbian sovereignty. The Papua New Guinea- Bougainville Agreement that was not opposed by the international community on the basis of safeguarding territorial integrity and sovereignty. In all these cases the peoples concerned have exercised their right to self-determination and sovereignty.
"The will of the Tamil people is to determine their own political future."
"The LTTE is a national liberation movement, which has a long history of struggle for the Tamil people’s right to self- determination," the LTTE statement said.

"The landslide victory of the Tamil National Alliance party, which contested the 2004 general election on the platform that LTTE was the sole representative of the Tamil nation, clearly demonstrated the democratic will of the Tamil people."
"In contrast to current international practice with respect to national conflicts in other parts of the world, the international community’s insistence on a solution that does not infringe on the territorial integrity and sovereignty of Sri Lanka is deeply frustrating for the Tamil people.

"The denial of the Tamil people’s will is itself a breach of the law of self-determination.
"The marginalisation of the 2002 CFA, which would have been a step towards just peace, has destroyed the confidence of the Tamil people and their expectations regarding future peace efforts. The Sri Lankan government’s ongoing war of aggression, aimed at the subjugation of the Tamil people under the guise of ‘war on Terrorism’, will add to the bloodstained pages of the island’s history. It has also compelled the Tamil people to resume their freedom struggle to realize their right to self - determination and to achieve statehood."

Full text of the official statement by the LTTE follows:
Statement 22 February 2007
Ceasefire Agreement completes its fifth year

On February 22, 2002, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Government of Sri Lanka (GOSL), entered into the Ceasefire Agreement (CFA) with facilitation by the Royal Norwegian Government. Five years have passed since the signing of this historic agreement by the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Vellupillai Pirapaharan, and the then Prime Minister of Sri Lanka, Ranil Wickremasinghe. Even though today it exists only on paper, it remains a unique document in the search for an end to the national conflict in the island Sri Lanka. Unprecedented in peace efforts in the island, the CFA was formulated with the full support of the international community, transcended the parameters of Sri Lanka’s majoritarian constitution created by the Sinhala people for the Sinhala people which had effectively marginalized the other communities in the island. It recognized Tamil Eelam’s de facto existence, with its unique characteristics: a distinct population; a government comprising a defense force, a police force, a judiciary, a civil administration and other institutions for effective governance of a people, and capability of entering into agreements with other governments with a line of control reflecting the ground reality of the existence of the Tamil homeland demarcated with recognized borders. The CFA recognized the balance of power between the GOSL and the LTTE and was premised on this balance of power.

Since the island gained independence from British colonial rule, the Tamil nation has been subjected to chauvinistic and oppressive rule by successive Sinhala governments. For the first three decades after independence, the Tamil nation’s non-violent resistance to this oppression was met by state violence. Thus, the Tamils’ peaceful struggle was transformed into armed struggle. In all that time, leaders and representatives of the Tamil nation held numerous talks and even signed agreements and pacts with successive Sri Lankan governments. Due to the lack of a balance of power between the two sides and the absence of international participation, all such negotiations failed and the successive Sri Lankan governments unilaterally abrogated all agreements reached. Repeatedly the Tamil people were victims of state deception and duplicity.

It was in the context of the bitter history that the CFA came into being in 2002 with Norwegian facilitation. It was the strong support shown by the international community for this peace effort that gave the confidence to the Tamils in this process. But the international community’s unhelpful engagement in the peace effort has had the effect of encouraging the Sri Lankan state to pursue a military solution to the national question. The international community’s unwillingness to take concrete measures and exert pressure on the Sri Lankan government to abandon its aggression in its pursuit of the military option has contributed to rendering the CFA defunct.

Despite serious and provocative breaches by the Sri Lankan armed forces, the LTTE has exercised considerable patience. During this period of ceasefire, we lost hundreds of our cadres to Sri Lankan military attacks. Throughout the Tamil homeland and in the other parts of the island, civilians, including elected Tamil Parliamentarians, Tamil journalists, Members of Tamil intelligentsia and community activists, are being murdered and have disappeared due to the activities of the State armed forces and state-backed paramilitary forces. In spite of this ground reality, the international community chose to unfairly take punitive measures against the LTTE, seriously undermining the LTTE’s status as an equal party in the negotiation process and thereby weakening the peace process itself. This international bias against the LTTE further strengthened the government’s intransigence and encouraged it to adopt even more hard line positions. The international community’s failure to take concrete action against the Sri Lankan state to stop serious breaches of the CFA or its widespread and systematic human rights violations has contributed to war like conditions in the Tamil homeland.

The failure of the peace process despite the international participation deeply frustrated the Tamil people. To their bitter disappointment, the CFA and the internationally facilitated peace process have, as in all previous peace efforts, failed again. Against this backdrop, over the past five years, the LTTE, heeding the requests of the international community to be patient and flexible, has remained restrained while repeatedly calling for the full implementation of the CFA. Six years ago, in December 2000, the LTTE declared a unilateral ceasefire. It was rejected by the state and the war continued. Five years ago, in December 2001, the LTTE again declared a unilateral ceasefire, which paved the way for the CFA after concerted efforts by the Royal Norwegian government.

The CFA’s overarching purpose was to end the hostilities between the LTTE and the GOSL and to create a conducive atmosphere for peace negotiations by bringing about conditions of normalcy in the war-ravaged Tamil homeland. In every round of the peace talks we emphasized the urgent humanitarian needs of the Tamil people due to three decades of devastating war. We also repeatedly pointed out that the prevailing environment of military occupation and harassment was not conducive to holding talks on resolving the national conflict.

After the CFA came into being, the LTTE participated in several rounds of talks with sincerity and total dedication. In these talks, we urged the GOSL to implement the CFA fully and to jointly take steps to alleviate the humanitarian crisis in the Tamil homeland. It was pointed out, that improving the living conditions of the Tamil people and building confidence and trust should precede discussions on political issues. The CFA requires both parties to the conflict to take necessary steps towards normalizing the lives of people in the Tamil homeland. However, GOSL has failed to comply with these provisions and indeed taken actions to make the situation worse. It continues to occupy the civilians’ homes, schools, and places of worship, denying hundreds of thousands of people the right to return to their homes. These are not only the violations of the CFA but also violations of international humanitarian and human right laws. At each round we raised the issue of a lack of normalcy in the Tamil homeland. The GOSL failed to live up to its pledge at the negotiating table by delaying the implementation and ignoring its obligations. Meanwhile there was no improvement in the humanitarian crisis of the Tamil people, but rather got worse.
Contribution to the deterioration of the situation was the continued support extended by GOSL to paramilitary groups. Article 1.8 of the CFA required GOSL to disarm all paramilitary groups within a specified period of the ceasefire coming into effect. The existence of paramilitary groups and they operating with the support and sponsorship of the Sri Lankan Government, have repeatedly been confirmed by the Sri Lanka Monitoring Mission (SLMM) and, recently, by several other sources, including reports issued last year by the US State Department. The UN Special Representative Alan Rock has also pointed out the collaboration between the state armed forces and paramilitary groups, even citing evidence of the former forcibly recruiting children as combatants for the latter.

From 2002 to 2006, we were engaged in eight sessions of direct talks with the Sri Lankan state under the facilitation of the Royal Norwegian government. In order to address the significant humanitarian crisis of the people in the Tamil homeland, several proposals were put forward and administrative structures were suggested during the early peace talks. All these proposals were later rejected or abrogated by the GOSL. The initial request was for the establishment of an interim administration for the Northeast and it was rejected by GOSL, which cited Sri Lanka’s majoritarian constitution. Subsequently, a purely humanitarian joint structure SIHRN (Subcommittee on Immediate Humanitarian and Rehabilitation in the NorthEast) was created, but was bureaucratically rendered dysfunctional by the GOSL.

Following the failure of the SIHRN, the LTTE submitted a proposal for the Interim Self Governing Authority (ISGA) to the Sri Lankan government in order to resolve the urgent humanitarian needs of our people and take the peace process forward. Unwilling to initiate peace talks based on the ISGA the then President, Chandrika Kumaratunga, dissolved the Parliament. In the subsequent parliamentary election, Tamil people overwhelmingly voted for 22 candidates from the Tamil homeland, who, accepting the LTTE as the authentic representatives of the Tamil nation, contested the election seeking a popular mandate for ISGA. Denying the democratic will of the Tamil people, the newly elected Sri Lankan government also refused to hold talks on ISGA.

Against this backdrop, the island suffered national calamity of unimaginable proportion when a Tsunami struck in December 2004. The majority of the victims were people in the Tamil homeland who had already endured the ravages of war. Thousands of Tamil people died and many more lost their homes and all their possession and they were internally displaced. With no assistance forthcoming from the Sri Lankan state, the LTTE’s military and civilian structures faced up to this humanitarian tragedy with the assistance of international and local NGOs, addressing the immediate evacuation and rehabilitation needs. Six months after the tsunami, with the facilitation of Norway and the insistence of international donor agencies, the LTTE signed an agreement with GOSL to share aid: the Post Tsunami Operational Management Structure (PTOMS). Yet, to the utter dismay of the Tamil people, the GOSL later nullified this purely humanitarian structure, again citing the Sri Lankan constitution. The international community, rather than providing an alternative framework to address the needs of the tsunami victims, simply walked away, leaving the Tamil tsunami victims in a dire situation.

It was in this context that the current Sri Lankan President, Mahinda Rajapakse, assumed power in 2005. Immediately after his term in office began, the shadow war being waged against the LTTE and the Tamil people by Sri Lankan military intelligence wing using the paramilitary groups intensified. A dark phase has begun to unravel in the Tamil homeland; people are being terrorized by cold-blooded killings and ‘disappearances.’ Tamil parliamentarians who spoke out against the gross human rights violations of Sri Lankan armed forces were assassinated. Community representatives, journalists, students, academics, human rights activists are being murdered and ‘disappeared’. In all parts of the Tamil homeland under Sri Lankan military occupation, all sense of normalcy has disappeared in a reign of military terror.

The situation in the Tamil homeland is deteriorating rapidly and the humanitarian and human rights crises are deepening. People in the Tamil homeland are living in traumatic conditions. The continuing bombardments of densely populated civilian areas, including homes, hospitals and schools, are a violation of the Geneva Conventions 4, Article 147 and are thus war crimes. The Sri Lankan military has conducted unprovoked offensives against our forces and occupied our areas in violation of Article 1.3 of the CFA. Even under such grave circumstances we refrained from launching offensive operations and kept ourselves in defensive positions.

Amid this deteriorating situation in the Tamil homeland, in early 2006, talks were held in Geneva concerning the full implementation of the CFA. At the talks, the GOSL promised to implement the CFA and disarm its paramilitary groups. Instead the Sri Lankan military and the paramilitaries intensified the killing of civilians and stepped up their terror campaign. Although a party to the International Convention on Civil and Political Rights (ICCPR), the GOSL refuses to carry out independent, impartial and effective investigations into the killings and disappearances, despite pleas by former UN Secretary General Kofi Anan, and the UN High Commissioner for Human Rights, Louis Arbor who condemned these crimes. Amnesty International report of the Allaipiddy massacre in May 2006 cited credible evidence that the Sri Lankan navy was responsible. The continued failure of the international community, despite the volume of independently gathered evidence, to take effective steps to curb the state’s abuses, is turning the Tamil homeland into an Asian Darfur.

While crimes against humanity are taking place in the Tamil Nation, the LTTE, with immense patience, repeatedly reiterated the need for full implementation of the CFA. At this critical juncture, we accepted the international community’s request and participated in a second round of talks with the GOSL in October 2006 under the auspices of the Royal Norwegian Government and hosted by Government of Switzerland. In this second round of talks in Geneva, we demonstrated utmost flexibility and in agreeing to hold talks on the core issues even while the humanitarian crisis of the Tamil people have not been improved.

We pointed out the suffering of the people and humanitarian crisis in Jaffna caused by the closure of A-9 highway, the only land route linking the peninsula with the rest of the island. The LTTE pointed out the closure of A-9 had set up a new ‘Berlin Wall’ behind which approximately 600,000 Tamil people were under the occupation of 60,000 Sri Lankan troops. The Sri Lankan government’s adamant refusal to open the A9 highway under any circumstances led to the failure of the talks. The closure of the A9 is a standing breach of Clause 2.10 of the CFA. The deliberate withholding of food and medicine from the civilian population is also a grave breach of article 147 and also violates articles 55 and 59-63 of Geneva Convention IV.
At the talks the GOSL while refusing to discuss humanitarian plight of the Tamil people, it insisted on discussing the core issues relating to the national question. However when it was asked for its proposal, there was none, claiming that it had only recently signed the Memorandum of Understanding (MOU) between the two main parties in Colombo which it described as a “significant step” to find consensus in southern Sri Lanka. Today this much touted MOU has achieved nothing having been undermined by the GOSL itself.

Today the CFA completes its fifth year in existence. Article 2 of the CFA contains specific provisions barring the harassment of civilians and requiring civilian areas such as residential homes, schools, places of worship and public buildings returned to the people with the objective of normalizing the situation in the Tamil homeland. Yet, at present the Sri Lankan military occupies a third of the residential areas, leaving more than 300,000 people to suffer in IDP camps. This action breaches Article 46 of paragraph 2 of the Hague Convention on Land Warfare, which is considered the customary international law, prohibiting confiscation of private property. Guidance can also be drawn from article 17 of the second Additional Protocol II to the Geneva Convention, which prohibits the forcible movement of civilians. Moreover, in the current international context, no peace agreements whether it be in Kosovo, or Bosnia, or Brundi, or Georgia, or Macedonia deny the right to return of the people in the pretext of military security.

The worsening of the humanitarian and the human rights conditions despite the 5 years of the CFA has pushed the Tamil people to the brink. In these five years more than 1500 civilians have been killed and over 500 ‘disappeared’ and approximately 300,000 people still live in the IDP camps and welfare centres. Another 210,000 people were displaced in Sri Lankan military operations last year.

In this backdrop, only a neutral and constructive role by the international community can contribute to a just and lasting peace. Any involvement that is partial and attempts to marginalize or weaken one side will only lead to an irreversible process of deterioration. The parity of status and balance of forces between conflict parties in a negotiation process is essential for the survival of a peace agreement. In the case of CFA between the LTTE and GOSL, the need to maintain parity of status and balance of power was later ignored, leading to the CFA being undermined and, thereby, resulting in the disruption of the peace talks. Canada and the European Union, at the behest of the Sri Lankan Government, declared the LTTE, which was participating in the peace process as the authentic representative of the Tamil nation, as a terrorist outfit. These actions served to undermined the peace process, encouraging the Sri Lankan Government to take a hard line approach and to escalate its military offensives. Human rights violations on an unprecedented scale and military assaults and occupation have rendered the CFA meaningless.

The landslide victory of the Tamil National Alliance party, which contested the 2004 general election on the platform that LTTE was the sole representative of the Tamil nation, clearly demonstrated the democratic will of the Tamil people. The LTTE is a national liberation movement, which has a long history of struggle for the Tamil people’s right to self- determination. The will of the Tamil people is to determine their own political future. In contrast to current international practice with respect to national conflicts in other parts of the world, the international community’s insistence on a solution that does not infringe on the territorial integrity and sovereignty of Sri Lanka is deeply frustrating for the Tamil people. The denial of the Tamil people’s will is itself a breach of the law of self-determination. The international community has not rejected, for example, the South Sudan Machkos Protocol facilitated by US, UK, Norway and Italy on the basis it is affecting the sovereignty of Sudan.

Nor has the international community questioned the Serbia-Montenegro agreement and the recent proposal on the future of Kosovo on the basis these contravene Serbian sovereignty. The Papua New Guinea- Bougainville Agreement that was not opposed by the international community on the basis of safeguarding territorial integrity and sovereignty. In all these cases the peoples concerned have exercised their right to self-determination and sovereignty.

The marginalisation of the 2002 CFA, which would have been a step towards just peace, has destroyed the confidence of the Tamil people and their expectations regarding future peace efforts. The Sri Lankan government’s ongoing war of aggression, aimed at the subjugation of the Tamil people under the guise of ‘war on Terrorism’, will add to the bloodstained pages of the island’s history. It has also compelled the Tamil people to resume their freedom struggle to realize their right to self - determination and to achieve statehood.
நன்றி>தமிழ்நெற்.