Wednesday, February 07, 2007

ஜ.நா. கொழும்பு அலுவலகம் அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் அரசாங்கத்திற்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவும் செயற்பட்டு வருகின்றது என ஜே. வி. பி.யின் பிரசார செயலாளரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான விமல் வீரவன்ச சபையில் குற்றம்சாட்டினார்.

கொழும்பிலுள்ள ஐ. நா. அதிகாரிகள், இராஜதந்திரிகளுக்குரிய வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு நாட்டைப்பிரிக்க போராடும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியதும் வழமையான தினப்ப ணிகள் இடம்பெற்றன. அதனையடுத்து சபாநாயகரின் அனுமதியுடன் விசேட கூற்று ஒன்றை விமல் வீரவன்ச எம். பி. சமர்ப்பித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
நன்றி>லங்காசிறீ.

No comments: