Friday, February 16, 2007

'விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேச பிரித்தானியா விருப்பம்': ஹிம் ஹாவெல்.

"இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் வரும் இனப்போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு சிறிலங்காவில் முடங்கிப்போய் உள்ள அமைதிப் பேச்சுக்களில் முக்கிய பங்காற்றவும், விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசுவதற்கும் பிரித்தானியா விருப்பம் கொண்டுள்ளதாக" சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இது தொடர்வில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். இந்த அமைதி முயற்சிகளில் அதிகமாக பங்கு வகிப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மகிந்தவிடம் நான் பிரத்தியோகமான ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். அதாவது, விடுதலைப் புலிகளுடன் நாம் பேசுவது தொடர்பாக உங்களின் கருத்து என்ன எனக் கேட்டேன். அமைதி முயற்சிகள் தொடர்பாக பேசுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என அவர் பதிலளித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு நாம் தயாராக உள்ளோம். அது அமைதி முயற்சிகளை முன்னெடுக்க உதவும் என நாம் நம்புகின்றோம். பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கொள்வனவு மற்றும் நிதி சேகரித்தல் போன்றவற்றை தடைசெய்துள்ளன. சிறிலங்காவில் அவர்கள், படுகொலைகளை மேற்கொள்வதற்காக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கொள்வனவு செய்வதை நாம் தடுப்போம்" என்றார் அவர்.

"அமைதித்தீர்வை எட்டுவதற்கு மோதல்கள் வழிவகுக்காது" என நாம் வட அயர்லாந்தில் பெற்றுக்கொண்ட அனுபவத்திலிருந்து தெரிவிப்பதாக சிறிலங்காவிற்கான பயணத்திற்கு முன்னர் ஹிம் ஹாவெல் தெரிவித்திருந்தார்.
நன்றி>புதினம்.

No comments: