Wednesday, February 21, 2007

24 மணிநேரத்தில் தேசத்துரோகி ஆகும் ராஜபக்சா.

போர் நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்-பிக்குகள் முன்னணி.

24 மணித்தியாலங்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்துச்செய்யாவிடின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பிக்கு முன்னணி அறிவித்துள்ளது.போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்துச் செய்யுமாறு கோரி தேசிய பிக்கு முன்னணி கடந்த 12ஆம் திகதி முதல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா வளவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வருகின்றது.

நேற்று இங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிக்கு முன்னணியின் அமைப்பாளர் கலேவல்ல சந்திரலோகதேரர் 24 மணி நேரத்துக்குள் ஒப்பந்தத்தை ரத்துச் செய்யாவிடின் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

தேசத்துரோக பட்டியலில் ஜனாதிபதி சேராதிருக்க போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளர்.
நன்றி>பதிவு.

No comments: