Wednesday, August 29, 2007

சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்தவே மிகவும் கேவலமான அரச தலைவர்: "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்"

அரசியல் அதிகாரங்களின் செறிவாக்கம் ராஜபக்ச குடும்பத்திடமே இருப்பதால், சிறிலங்காவின் வரலாற்றில் இந்த ஜனநாயக நாட்டை ஆட்சி செய்த தலைவர்களில் மகிந்த ராஜபக்சவே மிகவும் கேவலமான தலைவராக இருக்கலாம் என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

அந்த ஏட்டின் பத்தி எழுத்தாளர் ஹென்றி சூ எழுதிய பத்தியின் தமிழ் வடிவம்:

நாட்டில் உள்ள அத்தனை மக்களினது நடவடிக்கைகளும் ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளாக கிட்டத்தட்ட மாறிவிட்டது. ஏனெனில் அவரது குடும்பமே நாட்டை ஆள்வதுடன், உள்நாட்டுப் போரையும் நடத்தி வருகின்றது.

இதன் நடுவே ராஜபக்சவின் நான்கு சகோதரர்கள் ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்ட்ட சிறீலங்கா அரசின் மிகவும் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ளனர். இவர்களில் எல்லாவற்றிற்கும் நாயகனாக உள்ள அரச தலைவரும் அடங்குவார்.

முக்கிய பதவிகளுக்கு தனது சகோதரர்களை நியமித்ததிற்கு அப்பால், நாட்டின் தேசிய வரவு-செலவு திட்டத்தில் 70 விகிதத்தை தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் மகிந்த உறுதி செய்துள்ளார். இது புருவத்தை விரியச் செய்யும் தொகையாகும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவே அரசின் மிகவும் பெரும் பதவிகளான பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களுக்கு தலைவராக உள்ளார். கடந்த வருடம், நாட்டின் தேசிய செலவீனங்களில் பாதுகாப்பு மட்டும் 19 விகிமாக இருந்தது. போர் நிறுத்தம் முறிவடைந்து அரச படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகியதனால் பாதுகாப்பு இவ்வாறு அதிகரித்துள்ளது.

அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த மோதல்களுக்கான திட்ட வகுப்பாளர் மிகவும் இராணுவ சிந்தனை உள்ள முன்னாள் இராணுவ அதிகாரியான கோத்தபாய ராஜபக்ச ஆவார். பசில் ராஜபக்ச அரச தலைவரின் மூத்த ஆலோசகர், அதாவது அரச தலைவரின் குரலுக்கு பின் உள்ளவர் என இதனை விபரிக்கலாம்.

மகிந்தவின் நான்காவது சகோதரரான சமல் ராஜபக்சவே மகிந்தவைப் போன்று தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் துறைமுகங்கள் வான் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். சிறிலங்காவின் அரசியல் யாப்பின் படியும், 24 வருட கொடுமையான போரின் படியும் பாதுகாப்பு அமைச்சை அரச தலைவர் தனது பொறுப்பில் வைத்திருப்பது ஒன்றும் புதியன அல்ல.

இருந்தபோதும், ஏனைய துறைகளில் இருந்து பெரும்பாலான அதிகாரங்களை அரச தலைவரும் அவரது சகோதரர்களும் வைத்திருக்கின்றனர். தற்போதைய அரச தலைவர் இரு வருடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டவர். அவர் தனது அதிகாரங்களை குடும்ப உறுப்பினர்களுக்காக தன்னிச்சையாக பயன்படுத்தியுள்ளதுடன், விதிகளையும் மீறியுள்ளதாக அரசை விமர்சிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிந்த போருடன் தொடர்புள்ள அமைச்சுக்களையும், திணைக்களங்களையும் நிர்வகிக்கலாம். ஆனால் நிதியை நிர்வகிக்ககூடாது என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பின் பிரகாரம் அவர் எல்லா அமைச்சுக்களையும் தானே நிர்வகிக்கலாம், அது சட்டத்திற்கு முரணானது அல்ல ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றும் அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பாலான அதிகாரங்களை அரச தலைவர் தன்வசம் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மகிந்த நிராகரிக்கவில்லை. ஆனால் அதனைப் புறக்கணிப்பதனை தனது தெரிவாக வைத்திருக்கின்றார். இது தொடர்பான பதிலை அரச தலைவர் செயலகத்திடமும், பிரதமரின் காரியாலத்திடமும் நாம் கேட்ட போதும் அதற்கான பதில்கள் தரப்படவில்லை.

மகிந்தவினதும் அவரது சகோதரர்களினதும் கட்டுப்பாட்டில் அரசு உள்ளதை வெளிக்காட்டுவதற்கான குற்றச்சாட்டுக்கள் பல மாதங்களாக சுமத்தப்பட்டு வருகின்றன. அமைச்சரவையில் ஏற்பட்ட விரக்தியினால் அரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்கள் எதிர்த்தரப்பிற்கு இந்த வருடம் தாவியுள்ளனர். இந்த தரப்பு 50-க்கும் மேற்பட்டவர்களை கொண்டுள்ள போதும் அது மகிந்தவினதை விட குறைந்த வலுவுள்ளது.

சிறிலங்காவின் துரதிர்ஸ்டவசமான எதிர்க்கட்சி பெரும் சவால்களை விடுக்க முடியாத நிலையில் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரச தலைவரின் வன்முறையான இராணுவ தாக்குதல்கள் அவரை நாடாளுமன்றத்தில் உள்ள தேசியவாத கட்சிகளிடமும், பெரும்பான்மையான சிங்கள மக்களின் சில பிரிவினரிடமும் பிரபலப்படுத்தியுள்ளது.

எனினும் அரசின் எல்லா மட்டத்திலும் உள்ள ஊழல்கள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் அதிகாரங்களை தமது சொந்த நலன்களுக்காக மகிந்தவின் சகோதரர்கள் பயன்படுத்துவது தொடர்பான எந்த குற்றச்சாட்டுக்களும் விசாரணை செய்யப்படவில்லை.

இந்த அதிகாரங்களின் செறிவாக்கம் 1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சிறிலங்கா சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ஜனநாயக நாட்டை ஆட்சி செய்த தலைவர்களில் மகிந்தவே மிகவும் கேவலமான தலைவராக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

அரச தலைவரும் அவரது சகோதரர்களும் அதிகாரங்களை கொண்டிருப்பது 100 விகித வரவு-செலவு திட்டமும் அவர்களில் தங்கியுள்ளது போன்றது. எனவே அவர்கள் எதனையும் தடுக்க முடியும். இது ஆரோக்கியமானது அல்ல என தேசிய சமாதான சபையின் தலைவரான ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களும், வர்த்தக சமூகத்தினரும் இதனை ஏற்கவில்லை, அவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் அவர்களால் அதனை மட்டும் தான் செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களுக்கு இடையிலான தேவையற்ற விவாதங்களை விடுத்து, பொதுமக்களின் கருத்துக்களை ராஜபக்சாக்களுக்கு எதிராக திருப்பி அரசை முடக்க முயல்கின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற அரசிற்கு எதிரான பேரணியில் பல பத்தாயிரம் மக்கள் தலைநகரான கொழும்பில் திரண்டிருந்தனர்.

எனினும், மேலதிக கட்சித் தாவல்களால் ஆளும் கூட்டணி பாதிக்கப்படும் வரைக்கும் அல்லது மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவது அதிகரிக்கும் வரைக்கும் மாற்றம் என்பது சாத்தியமில்லை. அந்த நேரம் வரும்வரை சிறிலங்கா அரசின் நடைவடிக்கைகள் குடும்ப அரசியலாகவே இருக்கும் என்று அதில் தெரிவித்துள்ளது.
நன்றீ<புதினம்.

Tuesday, August 28, 2007

அமிர்தலிங்கம் பாவம். அவரது குடும்பதிலிருந்தே அவரை மீட்டெடுக்க வேண்டிவருகிறது-- அமீர் குடும்பத்தை வசைபாடும் தேனீ!!!

அமிர்தலிங்கம் நினைவுச் சொற்பொழிவில் அமளி ஏற்படுத்திய ஆவரங்கால் சங்கக்கடை சின்னத்துரை !
-நமது லண்டன் விசேட செய்தியாளர்
லண்டனில் நேற்று நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுச் சொற்பொழிவை அமளி ஏற்படுத்தி குழப்ப முயன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு ஆவரங்கால் சங்கக்கடை சின்னத்துரை அவர்கள் எச்சரித்து விடப்பட்டார்.

திருவாளர் அமிர்தலிங்கம் அவர்களின் 80வது நிiவு தினத்தையொட்டி ஏற்பாடாகியிருந்த இந்த நிகழ்வில் அடங்காத் தமிழர் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்களும், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு ரட்ணஜீவன் கூல் அவர்களும் சொற்பொழிவாற்ற ஏற்பாடாகியிருந்தது. இந்த இரு சொற்பொழிவாளர்களும் சர்வதேச கீர்த்திமிக்கவர்கள் என்பதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட பெருமைக்குரியவர்களுமாவார்கள்.

இந்த விழாவிற்கு யாழ் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியைச் சேர்ந்த, யாழ்.புத்தூர் கிழக்கு சங்கக்கடை முன்னாள் முகாமையாளர் திரு ஆவரங்கால் சின்னத்துரை அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். திரு ஆவரங்கால் சின்னத்துரை அவர்கள் சங்கக்கடை பதவி இழந்த பின்னர் ஏஜன்சி வேலைசெய்து வெளிநாட்டிற்குத் தமிழ் அகதிகளை அனுப்பிவந்ததில் மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்.சாவகச்சேரி இணக்கசபையினால் விசாரணைசெய்யப்பட்டவராக இருந்திருந்தும், திருவாளர் அமிர்தலிங்கம் அவர்களை அபகீர்த்தி செய்யும்பொருட்டு லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள புலிகள் ஆதரவுக் குழுவினரால் இக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்ற அனுமதிக்கப் பட்டிருந்தார். இவைகளைவிட, ஆவரங்கால் விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் மிக மோசமான ஊழல்களில் ஈடுபட்டு தமிழரசுக்கட்சியிலிருந்த தனது செல்வாக்கால் தண்டணையிலிருந்து தப்பித்துக் கொண்ட திரு ஆவரங்கால் சின்னத்துரையை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவைத் தொடர்ந்து காலியான மதியுரைஞர் பதவியை இலக்குவைத்து மிகக் கேவலமாக இவர் அண்மைக்காலங்களில் இயங்கிவருவது பரவலாகத் தெரிந்திருந்தும், மேற்படி கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி லண்டன் ஆதரவாளர்கள் பலரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருந்தது. இவரையும், இவரைப் போலவே பலமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள திரு சிவசுப்பிரமணியம் அவர்களையும் மேற்படி கூட்டத்திற்கு அழைத்து கௌரவப்படுத்தியிருந்தது லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் பலரிற்கு கொதிப்பேற்படுத்தியிருந்ததை கூட்டத்தில் பங்குபற்றியிருந்த பலருடன் உரையாடும்போது அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

மேற்படி கூட்டத்தில் தமிழர் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்கள் உரைநிகழ்த்தியபோது, தவிர்க்க முடியாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்த படுகொலைகளைப்பற்றிக் குறிப்பிடவேண்டி வந்த சந்தர்ப்பத்தில் திரு சின்னத்துரை அவர்கள் குறுக்கிட்டு அமளி ஏற்படுத்தி நினைவுதின நிகழ்வை குழப்ப முனைந்திருந்தார். அவலமாக இறந்த ஒரு அரசியல் தலைவரின் நினைவுதின நிகழ்வில், அதுவும் குத்துவிளக்கு ஏற்றி அந்நிகழ்வை ஆரம்பித்துவைத்தவரே எந்தவித அடிப்படை நாகரீகமுமின்றி அந் நிகழ்வை குழப்பமுயன்றபோது, கூட்டத்தில் பங்குபற்ற வந்திருந்த பலர் கொதித்தெழுந்து அவரை வெளியேற்ற முயன்றனர். எனினும் திருவாளர் அமிர்தலிங்கம் குடும்பத்தினரின் தலையீட்டால் அம்முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் திரு.தீபன் அவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு, மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைத்தொடர்ந்து அவர் தொடர்ந்தும் கூட்டத்தில் பங்குபற்ற அனுமதிக்கப் பட்டிருந்தார்.

தலைவர் ஆனந்தசங்கரியைத் தொடர்ந்து நினைவுச் சொற்பொழிவாற்றிய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அவர்களும் தனது பேச்சில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்திருப்பினும், அவர் தனது சொற்பொழிவை ஆங்கிலத்திலேயே நிகழ்த்தியிருந்த காரணத்தால் ஆவரங்கால் சங்கக்கடை சின்னத்துரை உட்பட மேற்படி கூட்டத்தில் பங்குபற்றியிருந்த புலிகளின் ஆதரவாளர்களால் அவரது பேச்சைக் குழப்ப முடியவில்லை.

மேற்படி கூட்டத்தில் பங்குபற்றியிருந்த தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் ஆழந்த அனுதாபி ஒருவர், “ஆவரங்கால் சின்னத்துரையைக்கூப்பிட்டு இந்த விழாவை குத்துவிளக்கேற்றி ஆரம்பிக்க வைத்தது, பிள்ளையாருக்கு இறைச்சியால் படையல் செய்தது மாதிரி. தலைவர் அமிர்தலிங்கம் பாவம். அவரது குடும்ப்திலிருந்தே அவரை மீட்டெடுக்க வேண்டிவருகிறது” என கோபத்துடன் கவலை தெரிவித்தார்.
http://www.theneeweb.de/html/2808071.html

Monday, August 27, 2007

லண்டனில் மூக்குடைந்த ஆனந்தசங்கரி - அமிர்தலிங்கத்தின் பிறந்தநாளில் குழப்பம்!!!


அமிர்தலிங்கத்தின் 80வது பிறந்தநாள் அவரது மனைவி மங்கயற்கரசி அமிர்தலிங்கம், மகன் பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

லண்டன் வொறன் ஸ்றீர் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அலுகிலுள்ள “இந்தியன் வை.எம்.சி.ஏ” கட்டிடத்திலுள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திலேயே குழப்பம் ஏற்பட்டிருந்தது.

அமிர்தலிங்கம் குடும்பத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரத்திற்கு என அழைக்கப்பட்ட ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கத்தைப் பற்றிப் பேசாது, தன்னைப் பற்றிப் பேசியதே குழப்பம் ஏற்படுவதற்குரிய ஆரம்ப காரணமாக இருந்தது.

விடுதலைப் புலிகளைக் கடுமையாக வசைபாடிய ஆனந்தசங்கரி, தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுத்துப் பேசிக்கொண்டிருந்தபோது, கோபமடைந்த கூட்டத்தில் இருந்த வயோதிபர் ஒருவர் எழுந்து, ஆனந்தசங்கரியை நோக்கி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதால், ஆனந்தசங்கரி நிலைதடுமாற வேண்டி ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வயோதிபரை வெளியேற்ற வேண்டும் எனவும், வேறு யாராவது தனக்கு எதிராகப் பேசினால் உடனடியாக மண்டபத்தைவிட்டு வெளியேற்றப்படுவர் எனவும் ஆனந்தசங்கரியால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

ஆயுதப் போராட்டம் மூலம் தமிழர்கள் விடுதலையைப் பெற முடியாது என ஆனந்தசங்கரி பேசி முடித்ததும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவால் பேச அனுமதிக்கப்பட்ட மற்றொரு வயோதிபர், நாங்கள் அனைவரும் இணைந்து சிங்களவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டுமெனப் பேசியதால், கோபமடைந்த ஆனந்தசங்கரி அவரை மேடையில் இருந்து இறக்குமாறு கேட்டதால், பேச அழைக்கப்பட்டவர் அவமரியாதை செய்யப்பட்டார்.

சிறீலங்கா அரசின் ஆதரவுடனும், நிதியுதவியுடனும் வெளிநாடுகளுக்கு இரகசிய பயணங்களை மேற்கொள்ளும் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதை தடுத்து நிறுத்துவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முன்வர வேண்டுமென கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் பேசிக்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

அமிர்தலிங்கத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வருமாறு அமிர்தலிங்கம் குடும்பத்தினரால் பலர் வருந்தி அழைக்கப்பட்ட போதிலும், குறைந்தளவான குறிப்பட்ட சிலரே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

44 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை!!!

சிறிலங்காவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த, ஐ. நா. மனிதபிமான விவகாரங்களின் விசேட பிரதிநிதி, சேர் ஜோண் ஹேல்ம்ஸ் கொழும்பில் கூறிய சில கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கும் ஐ. நா. வுக்கும் இடையில் மீண்டும் ஒரு வீரிசலை ஏற்படுத்தியிருந்ததை நாம் யாவரும் அறிவோம். மீக நீண்ட காலமாக, ஐ. நா. வுடன் மட்டுமல்லாது வேறு பல சர்வதேச நிறுவனங்களுடனும், பல முக்கிய புள்ளிகளுடனும் சிறிலங்கா மோதி வருவது என்பது சரித்திரம். ஐ. நா. வின் முன்னாள் செயலாளர் திரு கோபி அணான், ஐ. நா. வின் விசேட ஆலோசகர் அலன் றோக் உட்பட வேறு பலர் சம்பந்தப்பட்ட சம்பவங்களை இவற்றில் அடங்கும்.

இச் சம்பவங்கள் யாவும் எப்படி உருவாகின்றன? இவற்றை யாரால், எந்த சந்தர்பத்தில் உருவாக்கப்படுகின்றன என்பதை ஆராய்வது மிக அவசியம். நாம் இவ் ஆய்வை ஆரம்பிக்க முன் மிக சுருக்கமாக கூற விரும்புவது என்னவெனில், சேர் ஜோண் ஹேல்ம்ஸின் அறிக்கையும், சிறிலங்கா அரசின் சார்பில் பல அமைச்ர்களினால் வெளியிடப்பட்ட மறுப்பு அறிக்கைகளும், ஜனவரி 2006 பின்னர் சிறிலங்காவில் கொல்லப்பட்டுள்ள மனிதபிமான பணிப்பாளர்களை பற்றியதும், சிறிலங்கா மனிதபிமான பணிப்பாளர்களுக்கு பாதுகாப்பானதா? ஆகிய விடயம் மட்டுமே! இவை தவிர மற்றைய சர்வதேச நிறுவனங்களும் அதன் மனிதபிமான பணிப்பாளர்களை மீதான தாக்குதல்கள் பற்றியோ, அல்லது தற்பொழுது இடம் பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றியது அல்லா என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஐ. நா. மனிதபிமான விவகாரங்களின் விசேட பிரதிநிதி என்ற அடிப்படையில், சிறிலங்காவுக்கான தனது விஜயம் செய்த வேளையில், ஜோண் ஹேல்ம்ஸ் கொழும்பில் 'றோயிட்டர்" செய்தி நிறுவனத்திற்கு ஆகஸ்ட் 8ம் திகதி வழங்கிய செவ்வியில், 'ஜனவரி 2006 பின்னர் சிறிலங்காவில் 34 மனிதபிமான பணிப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மனிதபிமான பணிப்பாளர்களின் பாதுகாப்பை பொறுத்தவரையில் உலகில் சிறிலங்கா மிகவும் மோசமான நிலை உள்ளதாகவும் கூறினார்".

இச் செய்தி வெளியாகியதும், சிறிலங்காவின் பிரதமர் திரு ரட்ணசிறி விக்கிரமாநாயக்கா பாரளுமன்றத்தில் ஆகஸ்ட் 10ம் திகதி, 'சேர் ஜோண் ஹேல்ம்ஸின் அறிக்கையை தாம் நிரகரிப்பதாகவும், இவ் அறிக்கை தமது அரசாங்கத்தை எதிர்பவருக்கு ஆதரவு சோப்பதாக உள்ளதாக", கூறினார்.

பிரதமரின் அறிக்கையை தொடர்ந்து, சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சினால், ஆகஸ்ட் 11ம் திகதி, வெளியிடப்பட்ட அறிக்கையில், 'ஜோண் ஹேல்ம்ஸின் அறிக்கை பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளதாகவும்,, தமது கணிப்பின் பிரகாரம் 17 பிரான்ஸ் நிறுவனத்தின் மனிதபிமான பணிப்பாளர்களுடன், 2 செஞ்சிலுவைச் சங்க ஊழியர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆகையால் மொத்தமாக 19 மனிதபிமான பணிப்பாளர்களே கொல்லப்பட்டுள்ளதாகவும்,, அப்படியானால் ஜோண் ஹேல்ம்ஸ் எப்படியாக 34 பணிப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறமுடியும்" என கேள்வி எழுப்பினார்கள்.

சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சின் அறிக்கை வெளியாகி மூன்று தினங்களின் பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரும், மத்திரியுமான திரு கேகலிய ராம்புக்கால, ஆகஸ்ட் 14ம் திகதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், '17 பிரான்ஸ் நிறுவனத்தின் மனிதபிமான பணிப்பாளர்களுடன், 2 செஞ்சிலுவைச் சங்க ஊழியரும், 1 டென்மார்க் நிறுவனத்தின் நிலக் கண்ணி அகற்றுபவருமாக சேர்த்து, மொத்தமாக 20 மனிதபிமான பணிப்பாளர்களே கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆகையால் மிகுதி 14 பற்றிய விபரங்களை தாம் ஜோண் ஹேல்ம்ஸிடம் வினாவியுள்ளதாக" செய்தியாளரிடம் கூறினார்.

இது இவ்வறிருக்கா, ஏரிகிற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல், சிறிலங்காவின் நெடுச்சாலை அமைச்சர், திரு ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை கூறியதாவது, 'நான் கூறுவேன், ஜோண் ஹேல்ம்ஸ் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஓர் முழு பயங்கரவாதி என. நான் எண்ணுகிறேன் எல்.ரி.ரி.ஈ. இவருக்கு லஞ்சம் கொடுத்துள்ளார்களென"! உண்மை என்னவெனில், மிக நீண்ட காலமாக வேறுபட்ட சிறிலங்க அரசாங்கங்களினால், இது போன்ற மிரட்டல் அறிக்கைகள் வெளியீடுவதன் மூலம், சிறிலங்காவின் உண்மை நிலையை சுதந்திரமாக கூறும் சகல முக்கிய புள்ளிகளினதும், சர்வதேச நிறுவனங்களின் கருத்துக்ளை அடக்கி நசுக்கி வருகிறர்களென்பதே.

இவ்வேளையில், ஐ. நா.வின் பொதுச் செயலாளர் திரு பன் கி-மூனின் பேச்சாளரான மிசல் மொன்ரஸ் அவர்கள், ஆகஸ்ட் 16ம் திகதி நடத்திய தமது நாளந்த செய்தியாளர் சந்திப்பில், 'பத்திரிகை செய்திகளின் பிரகாரம், ஜோண் ஹேல்ம்ஸ் அவர்கள் சிறிலங்காவினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நாம் இதை ஓர் தேவையற்ற ஏற்க முடியாத செயலாக பார்க்கிறோம். ஐ. நா.வின் பொதுச் செயலாளர், மனிதபிமான விவகாரங்களின் விசேட பிரதிநிதி ஜோண் ஹேல்ம்ஸின் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறார். இதை மட்டுமே என்னால் தற்போதைய நிலையில் கூற முடியும்", என்றார்.

ஐ. நா.வின் பேச்சாளரின் சுருக்மான அறிக்கையை தொடர்ந்து, திரு ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையினால் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு, ஆகஸ்ட் 19ம் திகதி கொடுத்த செவ்வியில், 'ஐ. நா. வின் பிரதி நிதி என்னை பற்றியோ, சிறிலங்காவை பற்றி கூறுவதையிட்டு எனக்கு அக்கறையே இல்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் ஜோண் ஹேல்ம்ஸ, எல்.ரி.ரி.ஈ. யிடம் லஞ்சம் பெறும் ஒரு பயங்கரவாதி தான்! ஐ. நா.வின் பொதுச் செயலாளர் என்ன சொல்கிறார் என்பதை பற்றி எனக்கு அக்கறையில்லை. எந்த வெளிநாட்டவரும் எமது நாட்டுக்கு வந்து, எமக்கு எதிராக வேலை செய்ய அனுமதிக்க முடியாது", என தனது செவ்வியில் குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசினுடைய விருப்பம் என்னவெனில் - ஆட்கள் காணமல் போகும் விடயத்தில் சிறிலங்கா உலகில் இரண்டாவது இடத்திலிருந்த போதிலும், நாளாந்தம் ஆட்கடத்தல், சித்திரவதை, பாலியல் வன்முறை, படு கொலைகளை அரச படைகளும் ஒட்டுப்படைகளும் மோசமான முறையில் அரச மன்னிப்புடன் மேற்கொள்ளப்படும் வேளையிலும், வெளிநாட்டவர்கள் தம்மை பற்றி நல்ல விதமாக போற்றிப் புகழ வேண்டும் என்பதே!
ஜோண் ஹேல்ம்ஸ் கூறிய விடயமான 34 மனிதபிமான பணிப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளது, ஒரு பிரச்சனைக்குரிய விடயமாகவிருந்தால் - நாம் சில விடயங்ககை உண்ணிப்பாக அவதானிக்க வேண்டியுள்ளது.

(1) ஜனவரி 2006க்கு பின்னர் கொல்லப்பட்ட மனிதபிமான பணிப்பாளர்களுடைய தொகையை, சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சு 19 ஆகவும், சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சளர் 20 ஆகவும் கூறியுள்ளனர். ஆகையால் இவர்களுக்கு இடையிலேயே இந்த புள்ளி விபரங்கள் பற்றி சரியான தகவல் இல்லாததை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
உண்மையை கூறுவதனால், ஜனவரி 2006க்கு பின்னர் இன்று வரை, 44 மனிதபிமான பணிப்பாளர்கள் சிறிலங்காவில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களுடைய பெயர், சம்பவம் தினம், அவர்கள் வேலை செய்த ஸ்தாபனம் போன்ற விபரங்களை தமிழர் மனிதர் உரிமை மையம் ஆகிய எம்மால் இத்துடன் வெளியிடுகிறோம்.

சிறிலங்காவை பொறுத்தவரையில் கொலை செய்யப்படும் முறைகள் வேறுபடுகின்றனா. கடத்தப்பட்டோரில் 98 வீதத்தினர் காணமல் போயுள்ளனர். கடத்தப்பட்டோர் மோசமான சித்திரவதைக்காகும் பொழுது இவர்கள் கொல்லப்படுகின்றனர். இதேவேளை கடத்தப்பட்டவர்கள் பற்றி ஒர் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு எந்த செய்தியும் கிட்டதா கட்டத்தில், கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டோர்களாக கணிக்கப்படுகின்றனர்.

(2) சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சினுடையதும், சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரினதும் அறிக்கைகளை மேலும் நாம் உண்ணிப்பாக ஆராயும் இடத்து சிறிலங்காவில் 19-20 மனிதபிமான பணிப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இவர்கள் கருதும் இடத்து, இச் சம்பவங்கள் பற்றி இன்று வரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? இது வரையில் எத்தனை குற்றவாளிகளை நீதி மன்றத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்? அப்படியானல் தற்பொழுது அங்கு நடைபெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்களை நிறுத்த, ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளார்களா? உண்மையை கூறுவதனால் இவர்கள், அரச படைகளினதும், ஒட்டுப்படைகளினதும் மிக மோசமான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தி வருவதற்கான ஆதரங்களே நிறைய காணப்படுகின்றனா.

இவ்வேளையில், ஆகஸ்ட் 15ம் திகதி, சிறிலங்காவின் ஜனதிபதி மகிந்த ராஜபக்சாவினால் ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் ஸ்தபானத்தின் மாகாநாட்டில் ஆற்றிய உரையில், எப்படியாக சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை மூடி மறைத்துள்ளார் என்பதை நாம் ஒரு கணம் பார்ப்பது சாலச் சிறந்தது. ராஜபக்சா தனது உரையில் கூறியதவாது, 'எமது நாட்டின் காவல் துறையும், பாதுகாப்பு படையினரும் உலகில் மிக ஓழுக்காமானவர்களும், மனித உரிமையை மதிப்பவர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவுறுத் விரும்புகிறேன். தற்செயலாக அவர்கள் ஏதும் தவறு செய்தால், சரியான முறையில் அவர்கள் விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சிறிலங்காவின் காவல் துறை, பாதுகாப்பு படை பற்றி; மிகவும் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதையும், உலகில் பலர் இவற்றை ஏற்றுக்கொள்வதையிட்டு, நான் மிகவும் மனம் வருந்துகிறேன்" எனக் கூறினார்.

(3) சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரும், மத்திரியுமான கேகலிய ராம்புக்கால, ஆகஸ்ட் 14ம் திகதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறியதவாது, 'மிகுதி கொலைகளை எல்.ரி.ரி.ஈ. யினர் செய்திருக்கலாமென நாம் சந்தேகிக்கிறேம்"! அப்படியானால், கேகலிய ராம்புக்கால, இவர் கூறும் 20 மனிதபிமான பணிப்பாளர்களை சிறிலங்காவின் பாதுகாப்புபடைகள் தான் கொன்றுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறாரா? இல்லையேல் ராம்புக்கால, எப்படியாக 'மிகுதி கொலைகளை எல். ரி. ரி. ஈ. யினர் செய்திருக்கலாமென நாம் சந்தேகிப்பதாக கூற முடியும்?

ஆகையால், பெறுமதியான சில ஆதரங்களுடன்,இங்கு சில முக்கிய விடயங்களை கூற விரும்புகிறேம்.. மனிதபிமான, மனித உரிமை செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள், சிறிலங்காவுக்கு விஜயம் செய்யும் பட்சத்தில், உண்மை நிலைகளை மனதில் கொள்ளாது, சிறிலங்காவுக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட தயாராக இருக்க வேண்டும். இதற்கு மாறாக யாரும் அங்கு நடைபெறும் மோசமான மனித உரிமை மீறல்களை மனதில் கொண்டு தமது சுதந்திரமான கருத்துக்களை வெளியிட முன் வருவோர்களேயானால், அவர்கள் 'பயங்கரவாதியாகவோ"
இல்லையேல் 'பயங்கரவாதத்திற்கு துணை போபவர்களாக" சிறிலங்கா அரசினால் பெயர் சூட்டப்படுவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எதிர்வரும் ஐப்பசி மாதம், சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ள, ஐ. நா. வின் மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆபார், இதை நன்கு மனதில் கொள்வார் என நாம் நம்புகிறோம்.

அத்துடன், நாம் கூட்டியே ஆரூடம் கூறவிரும்புவது என்னவெனில், எதிர்வரும் ஐ. நா. மனித உரிமை சபை கூட்டத் தொடரில் சிறிலங்கா விடயத்தில் எதுவித உருப்படியான நடவடிக்கைகளும் நடைபெறப் போவது இல்லை. காரணம் எதிர்வரும் ஐப்பசி மாதம், சிறிலங்காவுக்கு திருமதி லூயிஸ் ஆபார் விஜயம் செய்யவுள்ளதை காரணம் காட்டி, சிறிலங்காவுக்கு எதிரான மனித உரிமை சபையின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி விடுவார்கள். கடந்த காலங்களில் சிறிலங்காவினால் கூட்டப்பட் சர்வதேச நிபுணர்கள் குழுவை காரணம் காட்டி, ஏறக்குறைய ஒரு வருடமாக ஐ. நா. மனித உரிமை சபையின் கண்டனத்திலிருந்து சிறிலங்கா தப்பித்து கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே வேளை சர்வதேச நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகளும் செயல் இழந்துள்ளனா!

இலங்கையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 44 மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் வி. கிருபாகரன் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம்:

பட்டினிக்கு எதிரான அமைப்பு (ஏ.சி.எப்) - 4 ஓகஸ்ட் 2006 (Action Contre La Faim (ACF) 4 August 2006)
1. திரு பிறிமஸ் ஆனந்தராஜா
2. திரு மதாவராசா கேதீஸ்வரன
3. திரு ஜி. சிறிதரன
4. திரு நார்மதன
5. திரு ஆர் அருள்ராஜ
6. திரு பி. பிரதீபன
7. திரு எம். றிஸிக்கேசன
8. திரு வை. கோடீஸ்வரன
9. செல்வி கே. கோவதண
10. செல்வி எஸ் றோமில
11. செல்வி வி. கோகிலவதன
12. செல்வி ஜி. கவித
13. திரு எஸ் காணேஸ
14. திரு அப்துல் லாதிப் முகமட் ஜபார
15. திரு எ. ஜாசீலன
16. திரு கே. கோணேஸ்வரன
17. திரு முரளிதரன

டெனிஸ் அகதிகள் சபை (DRC) டெனிஸ் கண்ணி வெடி அகற்றும் குழு (Danish Refugee Council (DRC), Danish De-mining Group DDG)
18. திரு அருமைநாயகம் ஆலோசியஸ் (23 யூலை 2007)
19. திரு சிவராசா விமலராசா (19 யூன் 2007)
20. திரு தம்பையா தர்மசிறி (11 ஜனவரி 2006)
21. திரு நாராயணமூர்த்தி காண்டீபன் (11 ஜனவரி 2006)

ஹலோ ட்ரஸ்ட் (Halo Trust a non-governmental de-mining organisation)
22. திரு நகராசா நரேந்திரன் (9 பெப்ரவரி 2007)
23. திரு சி ராஜேந்திரன் (9 ஜனவரி 2007)
24. திரு சுப்பிரமணியம் பரமேஸ்வரன் (4 ஜனவரி 2007)
25. திரு குணரத்தினம் லோகிதாஸ் (4 பெப்ரவரி 2006)
26. திரு சாள்ஸ் கட்சன் ரவிந்திரன் (15 நவம்பர் 2006)

ஆழிப்பேரலை வீடமைப்பு திட்டம் - 8 யூலை 2006 (Housing development for tsunami victims, funded by FORUT 8 July 2006)
27. திரு இராசையா முரலீஸ்வரன

கியூடெக் - 10 ஏப்ரல் 2006 (Human Development Centre (HUDEC) 10 April 2006)
28. திரு பத்மநாதன் சண்முகரட்ணம
29. திரு செல்வேந்திரா பிரதீபகுமார

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் - 1 யூன் 2007 (International Committee of the Red Cross (ICRC) 1 June 2007)
30. திரு சின்னராஜா சண்முகநாதன
31. திரு கார்த்தீகேசு சந்திரமோகன

அகதிகளுக்கான் மெதடிஸ் சமூக அமைப்பு - 6 ஓகஸ்ட 2007 (Methodist Community Organization for Refugees (UMCOR) 6 August 2007)
32. திரு முகமட் சாவீர் முகமட் ரீஸ்வ

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamil Rehabilitation Organisation (TRO)
33. திரு காசிநாதர் கணேசலிங்கம் (29 ஜனவரி 2006)
34. திரு தங்கராசா கதிர்காமர் (29 ஜனவரி 2006)
35. செல்வி தனுஷ்கோடி பிறேமினி (30 ஜனவரி 2006)
36. திரு தமிர்ராஜ் வசந்தராஜன் (30 ஜனவரி 2006)
37. திரு சண்முகநாதன் சுயேந்திரன் (30 ஜனவரி 2006)
38. திரு கைலாசாபிள்ளை ராவீந்திரன் (30 ஜனவரி 2006)
39. திரு அருநேசராசா சாதீஸ்கரன் (30 ஜனவரி 2006)
40. திரு கிருஸ்ணபிள்ளை கமலநாதன் (02 யூலை 2006)
41. திரு முத்துராஜா அருளேஸ்வரன் (24 மார்ச் 2007)

ஐ.நா. ஏஜென்சி - 24 ஓகஸ்ட் 2006 (UN agency UNOPS in Amparai 24 August 2006)
42. திரு பி ஜெஸ்லி யூலியன

உலக வங்கி உதவியுடன் வடக்கு கிழக்கு நிர்ப்பாசன விவசாயத் திட்டம் - 26 மே 2006 World Bank assisted North East Irrigated Agriculture Project (NEIAP) 26 May 2006
43. திரு. ரட்ணம் ரட்ணராஜ

அபிவிருத்திக்கான உலக அக்கறை அமைப்பு, திருகோணமலை - 11 செப்டம்பர் 2006 (World Concern Development Organization, Trincomalee 11 September 2006)
44. திரு ராகுநாதன் ராமலிங்கம

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு,புதினம்.

Sunday, August 26, 2007

யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதே புலிகளின் திட்டம்: "த நேசன்"

யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு என்றும் அதற்கான சிறந்த வழியாக அங்குள்ள இராணுவத் தலைமைப்பீடத்தை அகற்ற முற்பட்டுள்ளனர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது.


த நேசனின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:

விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதலில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறீ கடந்த வாரம் தப்பியிருந்தார். இந்த சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

பாதுகாப்புத் தரப்பு அதனை இரகசியமாக வைத்த போதும் "த நேசன்" வார ஏடு அதனை வெளிக்கொண்டு வந்திருந்தது. உலகத்திற்கு அது இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு தாம் என்ன செய்தோம், அது எப்படி தவறியது என்பது தொடர்பாக யாவும் தெரிந்திருக்கும்.

காலம் சந்திரசிறீக்கு சாதகமாக இருந்தது. முகமாலை முன்னரங்க நிலைகளுக்கான அவரது பயணம் தாமதமாகியதனால் பீரங்கித் தாக்குதலில் இருந்து தப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் தனது பயணத்தை கைவிட்டிருந்தார். முன்னணி நிலைகளுக்கான இவரது பயணம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏயர் சீஃப் மார்சல் டொனால்ட் பெரேரா, லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் களமுனைக்கு பயணத்தை மேற்கொண்ட நாளான கடந்த சனிக்கிழமைக்கு (18.08.2007) சில நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

படை நடவடிக்கைகளுக்கான திட்டத்தையும், தற்போதைய யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களையும் சந்திரசிறீ பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கும், படை உயர் அதிகாரிகளுக்கும் அப்போது விளக்கியதுடன் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கி தாக்குதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

மூன்று நாட்களுக்குப்பின்னர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யாழ். குடாநாட்டிற்கு தனது இரண்டாவது பயணத்தை கடந்த செவ்வாய்கிழமை மேற்கொண்டிருந்தார். இந்த தடவை அவரது நடவடிக்கை பணியக தலைவர் மேஜர் ஜெனரல் உதய பெரேராவும் அவருடன் கூடவே சென்றிருந்தார்.

பலாலி பிரிக்கேட் தலைமை அலுவலகத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்ட இரகசிய நடவடிக்கை அறையிலும் கடுமையான பணிகள் நடைபெற்றன.

அந்த நிகழ்வின் போதும், திறப்பு விழா நடைபெற்ற சில நாட்களில் ஏப்பிரல் 24 ஆம் நாள் விடுதலைப் புலிகள் 30 பீரங்கி எறிகணைகளை ஏவியிருந்தனர். அவற்றில் அரைவாசி பலாலியின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வீழ்ந்து வெடித்திருந்தன. தற்செயலாக அதுவும் ஒரு செவ்வாய்க்கிழமை தான் நடைபெற்றது.

கடந்த செவ்வாய்கிழமை எறிகணைத் தாக்குதல் நடைபெற்ற நேரம் நான்கு டசினுக்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணிகள் வானூர்தி ஒன்றும் பலாலியில் தரையிறங்கியிருந்தது.

இந்த சம்பவங்கள் நடைபெற்ற போது படை உயர் அதிகாரிகள் நிலத்தடி பதுங்குகுழிக்குள் பதுங்கிக் கொண்டனர். காயமடைந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் பின்னர் உயிரிழந்தார். கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற பீரங்கித் தாக்குதலிலும் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. ஒக்ரோபர் 11 ஆம் நாள் முகமாலையில் நடைபெற்ற பெரும் சமருக்குப் பின்னர் முகமாலைக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்ற வேளை இது நடைபெற்றது.

சூரிய உதய வேளையில் ஜெனரல் சந்திரசிறீ தனது தலைமை அதிகாரியான ஜெனரல் பொன்சேகாவை வரவேற்பதற்காக பலாலி வான் படைத்தள ஓடுபாதையை நோக்கிச் சென்ற போதும், பொன்சேகா விடுதலைப் புலிகளின் பீரங்கி தாக்குதலைத் தொடர்ந்து தனது பயணத்தை கைவிட்டிருந்தார்.

இதில் இயற்கையும் விளையாடியிருந்தது. பொன்சேகாவை கட்டுநாயக்கா வான் படைத்தளத்தின் ஓடுபாதைக்கு ஏற்றிச் செல்ல தயாராக இருந்த உலங்குவானூர்தியின் ஓட்டி பாதகமான காலநிலையினால் வானூர்தியை செலுத்துவதை தாமதப்படுத்தியிருந்தார். இதனால் இராணுவத் தளபதியை ஏற்றிச் செல்லவிருந்த அன்ரனோவ்-32பி வானூர்தி குறித்த நேரத்தில் பலாலியில் தரையிறங்கவில்லை.

ஆரம்பத்தில் ஏற்பட்ட தாமதம் நேர ஒழுங்குகளில் பல குழப்பங்களை ஏற்படுத்தியதுடன், இராணுவத்தினருக்கும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.

செவ்வாய்கிழமை காலை வீழ்ந்த எறிகணைகள் பலாலியில் இருந்த இராணுவத் தளபதிகளுக்கு பெரும் அதிர்ச்சியான அனுபவங்களை ஏற்படுத்தியிருந்தது. அது பின்னர் கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டிருந்தது.

சந்திரசிறீயின் களமுனைப் பயணம், பொன்சேகாவின் யாழ். குடாநாட்டுக்கான பயணம் ஆகியவற்றின் போது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதல்களின் துல்லியமான நேரத் தெரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது சம்பவத்தில் சந்திரசிறீ இராணுவத் தளபதியை வரவேற்க சென்றிருந்தார்.

பயணிகள் வானூர்தியை இராணுவத் தளபதி பயணம் செய்த வானூர்தி என விடுதலைப் புலிகள் தவறாக எண்ணியது. பலாலியில் இருந்து அல்லது கொழும்பில் இருந்தே அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது அல்லது மேலதிகமான உணவு தயாரிப்பு வகைகள் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் போதான கடுமையான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைப் புலிகள் அதனை அறிந்திருக்கலாம்.

கடந்த பெப்ரவரி மாதம் கொடிகாமத்தில் நடைபெற்ற பீரங்கித் தாக்குதலுக்கும் இறுதியாக நடைபெற்ற பீரங்கி தாக்குதலுக்கும் இடையில் குறிப்பிடத்தக்களவு வேறுபாடு உண்டு. கொடிகாமத்தில் நடைபெற்ற தாக்குதலில் கவசத்தாக்குதல் படைப் பிரிக்கேட்டின் கட்டளைத் தளபதியான லெப்.கேணல் ரால்ஃப் நுகெரா உட்பட ஒரு டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். எனினும் கொடிகாமத்தில் நடைபெற்ற தாக்குதலின் போது அதற்கான தகவல் யாழ்பாணத்தில் இருந்து வழங்கப்பட்டதாகவே தெரிகின்றது.

கடந்த சில மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பில் உள்ள வெபர் மைதானம் மீது நடைபெற்ற பீரங்கித் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திரிகள் வானூர்தியில் பயணித்தது தெரியாது என சிலர் நம்புகின்றனர். விடுதலைப் புலிகள் அமைச்சர்களையும், ஏனைய அதிகாரிகளையுமே குறிவைத்திருந்தனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் இந்த பயணம் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஒழுங்குகளை அதிகாரிகளும், தொண்டர் நிறுவன அதிகாரிகளும், மட்டக்களப்பில் உள்ள ஏனையோரும் ஒருங்கிணைத்திருந்தனர். எனவே இது விடுதலைப் புலிகளுக்கு தெரியும் என ஏனையோர் நம்புகின்றனர். பாதுகாப்பு காரணங்களால் இந்தப் பயணத்தை தவிர்க்கும் படி இராஜதந்திரிகளை பாதுகாப்புதுறை அதிகாரிகள் கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் ஆபத்தை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த வருடத்தில் தெரிவு செய்யப்பட்ட இலக்குகளான மிக முக்கிய பிரமுகர்களை குறிவைத்து விடுதலைப் புலிகள் நான்கு பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்னர் பலாலியின் உயர் பாதுகாப்பு வலயமும் வானூர்தி ஓடுபாதையும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தன. அதன் போது வானூர்தி ஒடுபாதை மூடப்பட்டது. இந்த தாக்குதல் நடவடிக்கை அறை திறக்கப்பட்ட சில நாட்களில் நடைபெற்றது.

யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கான தாக்குதலை விட இராணுவம் முகமாலை நகர்கோவில் அச்சில் இருந்து பளையினூடாக ஆனையிறவைக் கைப்பற்ற முயற்சிப்பதை தடுப்பதில் தான் விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் வடக்கில் பெரும் சமர் ஒன்றிற்கு தயாராகி வருகின்றனர் என்பதில் இராணுவம் உறுதியாக உள்ளது. மன்னார் களமுனையின் முன்னணி நிலைகளில் இருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் பூநகரிக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

பூநகரிப் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதல் யாழ். குடாநாட்டின் முன்னணி நிலைகளில் இருந்து நடத்தப்பட்ட இராணுவத்தினரின் பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளின் கடுமையான தாக்குதல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் பதிவு செய்துள்ளது.

பூநகரிப் பகுதி மீது தாக்குதலை நடத்தி அதனை படையினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமே அந்தப் பகுதியில் இருந்து நடத்தப்படும் பீரங்கித் தாக்குதல்களை நிறுத்த முடியும்.

படையினரால் கிழக்குப் பகுதி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர். திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படையின் தளம் என்பன விடுதலைப் புலிகள் உட்புக முடியாத பகுதிகளாகி விட்டன. எனவே பலாலித் தளத்தினூடான படையினர் மற்றும் பொருட்களின் விநியோகங்களை தடுப்பதே விடுதலைப் புலிகளின் மாற்றீடான உத்தியாகும்.

கடந்த செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பீரங்கி எறிகணைகள் காங்கேசன்துறையிலும் வீழ்ந்து வெடித்திருந்தன. பருவ மழை காலத்தில் வானூர்திகள் மூலம் நடைபெறும் விநியோகங்களை தடுப்பதே பலாலி வான்படை ஓடுதளத்தின் மீதான தாக்குதலின் மற்றுமொரு காரணம். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மூதூரிலும் ஏனைய பகுதிகளிலும் நடைபெற்ற சமர்களில் விடுதலைப் புலிகள் தமது சுடுவலுவின் தன்மையை வெளிக்காட்டியிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலால் பலாலிக்கான பயணத்தை கைவிட்ட இராணுவத் தளபதி பாதுகாப்பு நிலமைகளை ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை வன்னிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். வன்னி களமுனையின் முழு கட்டளைப்பீடமும் அண்மையில் மாற்றப்பட்டிருந்தது. இராணுவத் தளபதியை வன்னிப் பகுதி இராணுவக் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய வவுனியாவில் வரவேற்றார்.

வன்னி மீதான இராணுவத் தாக்குதல்கள் தொடர்பாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும் அது யாழ்ப்பாணத்திலா அல்லது வன்னியிலா? என்பது தெரியவில்லை. ஆனால் இரு பகுதிகளிலும் சந்தர்ப்பம் இல்லை என்பதே வெளிப்படை. ஏனெனில் எதிரியின் பொறிக்குள் செல்ல முடியாது.

குறுகிய மற்றும் நீண்டகாலம் என இரு காரணங்களுக்காக விடுதலைப் புலிகள் ஜெனரல் சந்திரசிறீயை அகற்ற முற்படுகின்றனர். அதாவது யாழ். குடாநாட்டை கைப்பற்றுவது விடுதலைப் புலிகளின் இலக்கு அதற்கான சிறந்த வழியாக அங்குள்ள இராணுவத் தலைமைப்பீடத்தை அகற்ற முற்பட்டுள்ளனர். இலக்கை அவர்கள் அடையாது விட்டாலும், உளவியல் தாக்கங்களை உருவாக்க முற்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசின் இராணுவத் திட்டங்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.

நீண்டகால உத்திகளாக, உறுதியான அரசியல் தலைவர்களை அகற்றியதனைப் போல வலிமையான இராணுவத் தளபதிகளை அகற்ற விடுதலைப் புலிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த வேளையில் லலித் அத்துலத்முதலி, காமினி திசநாயக்க, ரஞ்சன் விஜயரத்ன போன்றவர்கள் நினைவில் வருகின்றனர்.

எதிர்காலத்தில் இராணுவத் தளபதியாக வரும் தகுதி ஜெனரல் சந்திரசிறீக்கு இருப்பதனால் அவர் இயற்கையாக குறிவைக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் மூன்றாம் நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கா கொல்லப்பட்ட பின்னரும், அதன் தளபதியான பொன்சேகா காயமடைந்த பின்னரும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் வட்டாரங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவுவது மிகவும் கடினமாகியுள்ளது.

எனினும் இராணுவத்தினர் தம்மிடம் உள்ள ஒட்டைகளை அடைக்கும் வரைக்கும், தமது உயர் அதிகாரிகளின் பயணங்களை இரகசியமாகப் பேணும் வரைக்கும் பீரங்கிகளே விடுதலைப் புலிகளின் பதிலாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Friday, August 24, 2007

காலக்கணிப்பு சரியான காலத்தின் கணிப்பு.

காலக்கணிப்பு சரியான காலத்தின் கணிப்பு! கண்டனங்கள் பயன்தராது தண்டனையே பயன் தரும்.





Thursday, August 23, 2007

இராணுவத்தளபதியை எங்கும் குறிவைத்து தாக்க முடியும் என்பதனை நிரூபித்துக்காட்டிய புலிகள்: "டெய்லி மிரர்"


கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தளபதியே குறிவைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவானது. இராணுவத் தளபதிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் இராணுவத் தளபதியின் ஒவ்வொரு அசைவையும் தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும், அவரை எங்கும் தம்மால் குறிவைக்க முடியும் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இதன் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர் என்று "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது.


சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு இன்று வெள்ளிக்கிழமை எழுதிய தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

கடந்த செவ்வாய்க்கிழமை (21.08.07) காலை 8.45 மணி அளவில் பலாலி வானூர்தித் தளத்தின் ஓடுபாதை வழமைக்கு மாறாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி வான்படைத்தளத்தில் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறீ தலைமையில் பல மூத்த இராணுவ அதிகாரிகள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்பதற்காக காத்திருந்தனர். அவர் சிறிது நேரத்தில் பலாலியில் தரையிறங்குவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

பொன்சேகாவின் இந்தப் பயணம் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில மூத்த படை அதிகாரிகளைத் தவிர ஏனையோருக்கு அது தெரிந்திருக்கவில்லை. காலை 7.00 மணியளவில் அன்ரனோவ்-32பி ரக இராணுவ போக்குவரத்து வானூர்தி பாலாலி செல்லும் பொருட்டு சில உயர் இராணுவ அதிகாரிகளுடன் இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

ஆனால் அது சில நிமிடங்களே பறந்த பின்னர் பொன்சேகாவை ஏற்றிச்செல்லும் பொருட்டு அது கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் ஓடு பாதையில் தரையிறங்கியது. யாழ். செல்லும் அன்ரனோவ் வானூர்தியில் ஏறும் பொருட்டு கட்டுநாயக்க வான்படைத் தளத்தை அடைவதற்காக பொன்சேகா இராணுவ தலைமையகத்தின் மைதானத்தில் தரித்து நின்ற உலங்குவானூர்தியில் அப்போது தான் ஏறியிருந்தார்.

ஆனால் சிறிலங்கா வான்படையின் மிகவும் முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் செல்லும் உலங்குவானூர்தி பென்சேகா ஏறிய நிலையிலும் பாதகமான காலநிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாகியது. பாதகமான காலநிலை காரணமாக தன்னால் உலங்குவானூர்தியை செலுத்த முடியாதுள்ளதாக அதன் ஓட்டி தெரிவித்திருந்தார்.

அதேசமயம், யாழ்ப்பாணத்தில் 130 மி.மீ பீரங்கி எறிகணைகள் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் தொடர்சிசியாக வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி ஆகிய பகுதிகளில் அவை வீழ்ந்து வெடித்தன. தாக்குதல் 30 நிமிடங்கள் தொடர்ந்தன. அந்த முக்கியமான நேரத்தில் எதிர்பாராத இந்த தாக்குதலால் படைத்தளபதிகள் பெரும் குழப்பமடைந்தனர்.

திடீரென நடைபெற்ற இந்த பீரங்கித் தாக்குதலால் முழு குடாநாடும் முழுமையான உசார்நிலைக்கு கொண்டுவரப்பட்டது. உடனடியாக பதில் நடைவடிக்கை எடுக்கப்பட்டது. பொன்சேகாவின் பயணத்தை நிறுத்தும் படி இராணுவத் தலைமையகத்திற்கும், இரத்மலானை, கட்டுநாயக்கா வானூர்தித் தளங்களுக்கும் தகவல் பறந்தது.

பொன்சேகாவை ஏற்றிய அன்ரனோவ்-32 வானூர்தி புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் அவர்களுக்கு கிடைத்தது. அதே சமயம் விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தும் படி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டார்.

விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் எனச் சந்தேகிக்கப்படும் பகுதியான பூநகரியில் உள்ள கல்முனை மீது பல்குழல் உந்துகணை செலுத்திகள் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் சரமாரியாக நடத்தப்பட்டன. கல்முனையில் இருந்து பலாலி வான்வழியாக 30 கி.மீ விட குறைவான தூரத்தையே உடையது. எனினும் விடுதலைப் புலிகளின் எறிகணைகள் பலாலி வான்படைத் தளத்தின் ஓடுபாதையை தாக்கவில்லை.

130 மி.மீ பீரங்கியின் எறிகணைகள் 27 கி.மீ தூர வீச்சுக் கொண்டவை. அது ஓடுபாதைக்கு அருகில் எங்கும் விழக்கூடியது. விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல் நீண்டநேரம் நீடிக்கவில்லை. அவர்கள் மணல் திட்டிகளில் வைத்து பீரங்கியை பயன்படுத்தியிருக்கலாம் அதற்கு அவர்கள் பீரங்கியை உழவு இயந்திரத்தில் அல்லது வேறு வாகனங்களில் பொருத்தி எடுத்து வந்திருக்கலாம். தாக்குதலின் பின்னர் அவர்கள் அதனை விரைவாக நகர்த்தி விட்டனர்.

இராணுவத் தரப்பு தகவல்களின் படி விடுதலைப் புலிகள் 30 நிமிடங்களில் 18 எறிகணைகளை ஏவியுள்ளனர். யாழில் இருந்து தகவல் கிடைத்ததும் தனது பயணத்தை கைவிட்ட பொன்சேகா இராணுவ தலைமையகத்திற்கு திரும்பியிருந்தார்.

இராணுவத் தளபதி பலாலியில் தரையிறங்கும் நேரம் 8.45 மணி என்பதனால், அவரே குறிவைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவானது. இராணுவத் தளபதிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் இராணுவத் தளபதியின் ஒவ்வொரு அசைவையும் தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும், அவரை எங்கும் தம்மால் குறிவைக்க முடியும் எனபதையும் விடுதலைப் புலிகள் இதன் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகள் தமது போராளிகளிடம் உளவுறுதியையும் அதிகரிக்க முற்பட்டுள்ளனர்.

ஆனால் மிகவும் இரகசியமான தகவல்களான இராணுவத் தளபதி மற்றும் படை உயர் அதிகாரிகளின் நடமாட்டங்கள் எவ்வாறு விடுதலைப் புலிகளை சென்றடைகின்றன என்பது தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளன. இராணுவத்தில் உள்ள பல படையினர் பணத்தைப் பெற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு தகவல்களை வழங்குவதாக அவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் வழமையான எறிகணைப் பரிமாற்றமே இது என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருந்தார்.

இராணுவத் தளபதி யாழில் இருந்திருந்தால் விடுதலைப் புலிகள் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கலாம். அதனை அவர்களின் சார்பு ஊடகங்களின் மூலம் அதிகம் வெளிக்கொண்டு வந்தும் இருப்பார்கள். ஆனால் கடந்த ஆண்டு பலாலித் தளம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் பின்னரும், சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வான் தாக்குதலுக்குப் பின்னரும் இந்த தாக்குதல் நடைபெற்றதனால் இந்த தாக்குதலை இராணுவம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதுகின்றது.

இதனிடையே, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை விடுதலைப் புலிகள் குறிவைத்துள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பீரங்கித் தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். இதனால் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கான அவரின் களமுனைப் பயணம் தாமதமாகி இருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

சிறிலங்காவே ஆசியாவில் அதிக வட்டி விகிதம் உள்ள நாடு: "த புளும்பேர்க்" இணையத்தளம்!

உலகத்தின் கடன் சந்தைகளில் சிறிலங்காவின் நிதி நிலமை மிகவும் மோசமாக உள்ளதனால் சிறிலங்காவின் கடன் மீளச் செலுத்தும் தன்மைக்கான தரம் மேலும் குறைக்கப்படலாம் என்று "பிற்ச்" தரப்படுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளதுதாகவும், ஆசியாவிலேயே அதிக வட்டி விகிதம் கூடிய நாடாக சிறிலங்கா திகழ்வதாகவும் "த புளும்பேர்க்" இணையத்தளம் தனது பத்தியில் தெரிவித்துள்ளது.


அதன் தமிழ் வடிவம் வருமாறு:

இந்த அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட தரப்படுத்தலில் சிறிலங்கா பிபி அல்லது முதலீட்டுக்கான தரத்திற்கு மூன்று தரம் குறைவாக தரப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களே இந்த தரக்குறைவிற்கான காரணம்.

இழப்புக்களைச் சந்தித்த அமெரிக்காவின் வீட்டுக்கடன் திட்ட கொடுப்பனவு நிறுவனங்களின் நிதி சந்தையும் கடந்த மாதம் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. இது குறைந்த வட்டிவீத முதலீட்டாளர்களை முதலீடுகளை தவிர்க்கத் தூண்டியுள்ளது.

சிறிலங்கா தொடர்பில் தொடர்ச்சியாக, எதிரான தரப்படுத்தல்களே வெளிவந்து கொண்டுள்ளன என்ற இந்த அமைப்பின் பிரித்தானியாவை தளமாகக்கொண்ட குழுவின் தலைவரான போல் ராவ்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்ந்தும் கவலையை அளிக்கின்றன. பரந்த பொருளாதார கொள்கையின் சூழ்நிலை தற்போதைய உலக நிதிச்சந்தையின் நெருக்கடி நிலைமையின் பிரகாரம் முன்னேற்றமாக இல்லை என்ற அவர் மேலும் தெரிவித்தார்.

உலகின் உறுதியற்ற பொருளாதார கடன் சந்தை சிறிலங்காவை மேலும் கடினமான பாதையில் தள்ளியுள்ளது.

ஏனெனில் அனைத்துலகத்தில் இருந்து அதிக நிதியை பெறுவதனால் ஆசியாவில் சிறிலங்காவே அதிக கடன், செலவுகள் உள்ள நாடாகும்.

தெற்காசியாவின் தீவான சிறிலங்கா கடந்த ஒகஸ்ட் 2 ஆம் நாள் ஜேபி மோகன் சேஸ் அன் கோ (JPMorgan Chase & Co), பார்கிளேஸ் கபிற்ரல் (Barclays Capital), எச்எஸ்பிசி கோல்டிங்ஸ் (HSBC Holdings Plc) ஆகிய நிதி நிறுவனங்களின் உதவியுடன் பிணைகளைச் செலுத்தி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனைத்துலகத்தில் பெற முனைந்துள்ளது.

20 மில்லியன் மக்களை கொண்ட சிறிலங்காவில் கடந்த இருபது வருட கால போரை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற பேச்சுக்கள் கடந்த ஆண்டு ஒக்ரோபரில் முறிவடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும், அரச படையினருக்கும் இடையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த வருடத்தில் இருந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரான்டட் அன் புவர்ஸ் (Standard & Poor's) என்ற அமைப்பும் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான தனது தரப்படுத்தல்களை வெளியிட்டுள்ளது. அது சிறிலங்காவை பி பிளஸ் (B+) ஆக தரப்படுத்தி உள்ளது. அதாவது இது முதலீட்டுக்கான தரத்தில் இருந்து நான்கு தரம் குறைவானதாகும். ஏதிர்மறையான இந்த வெளிப்பாடுகள் நாட்டின் தரத்தை குறைப்பதை அதிகரிக்கச் செய்யும்.

ஜூலை மாதம் விலையேற்றம் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததைத் தொடர்ந்து, சிறிலங்காவின் வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒகஸ்ட் 14 ஆம் நாள் மாற்றம் இன்றி 10.5 ஆக பேணி வருகின்றது. இதுவே ஆசியாவின் அதி உயர் வட்டிவிகிதமாகும்.

அதிகளவான நிதிக் கொள்வனவுகள், நாட்டில் நடைபெற்று வரும் மோதல்கள் என்பன 26 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது. அது கடந்த இரு வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் கால் பகுதியில் மெதுவாகவே அதிகரித்து உள்ளது.

படைத்துறை கொள்வனவுகள், விடுதலைப் புலிகளுடனான மோதல்கள், எரிபொருள் விலையேற்றம் என்பன விலையேற்றத்தை மோசமாக்கியுள்ளதுடன் மத்திய வங்கியின் விலைக் கட்டுப்பாட்டு நோக்கத்தையும் அச்சுறுத்தி வருகின்றது.

நோர்வேயின் மேற்பார்வையில் உருவான போர் நிறுத்தத்தில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி கண்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் மற்றும் அவரது கொள்கை வகுப்பாளர்களும் இந்த ஆண்டு முடிவுக்குள் நாட்டின் விலையேற்றத்தை ஒற்றை இலக்கத்திற்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர். அவர்களே கடந்த ஆண்டில் கடன் கொள்முதல்களை 1.25 விகிதத்தாலும், இந்த வருடம் பெப்ரவரி 23 ஆம் நாள் 0.5 விகித்தாலும் அதிகரித்தவர்கள்.

விலையேற்றத்தை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வருவது சிறிலங்காவிற்கு முக்கியமானது. அதுவே அதன் கடன் சேவைகளின் செலவுகளை குறைக்கும் என்று "பிற்ச்" தரப்படுத்தல் அமைப்பு முன்னர் தெரிவித்திருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Wednesday, August 22, 2007

சிறிலங்காவின் கடன் தொகை 3 றில்லியன்கள்: "த பொட்டம்லைன்"

சிறிலங்காவின் வெளிநாட்டு மற்றும் உள்ளுர் மொத்த கடன் தொகை 3 றில்லியன் ரூபாய்களை (3,000 பில்லியன் ரூபாய்கள்) எட்டியுள்ளது என்று "த பொட்டம்லைன்" என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.


அந்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் தமிழ் வடிவம்:

உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின் படி கடந்த மே மாதம் வரையிலான சிறிலங்காவின் கடன் தொகை 2.77 றில்லியன் அல்லது 2,771 பில்லியன் ரூபாய்களாகும். இது கடந்த ஆண்டைவிட 387 பில்லியன் ரூபாய்கள் அதிகமாகும்.

இவற்றில்

வெளிநாட்டு கடன் தொகை 1.21 றில்லியன் ரூபாய்களும்,

உள்நாட்டு கடன் தொகை 1.56 றில்லியன் ரூபாய்களும் ஆகும்.

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் வெளிநாட்டு கடன் தொகை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 10 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தின் இறுதிப்பகுதியின் பொருளாதார நிலையை பொறுத்த வரை பொதுமக்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அனைத்துலக பண சந்தையில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அல்லது 50 பில்லியன் ரூபாய்களை அரசாங்கப் பிணைகளை வைத்து கடனாக பெறுவதில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.

அரசாங்கத்தின் இந்த முயற்சியானது எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்த அதிகப்படியான கடன் கொள்வனவுகள் மக்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தும் என சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் வெளிநாட்டு கடன் தொகைகளிற்கான மீள் செலுத்தல் தொகையாக 383 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது. இதில் 311 மில்லியன் டொலர்களே கடன் தொகைகளுக்கான மீள்கட்டுமான தொகையாகும். எஞ்சிய தொகை வட்டியும், ஏனைய செலவுத் தொகையுமாகும்.

இருந்த போதும், மே மாதம் வரையிலும் செலுத்தப்பட்ட கடன் மீளளிப்பு தவணைப்பணம் 2007 ஆம் ஆண்டுக்கான தவணைப் பணமான 860 மில்லியன் டொலர்களில் 44.5 விகிதமாகும்.

அரசாங்கத்தின் மொத்த கடன் தொகைக்கான வட்டிப் பணமானது 71 பில்லியன் ரூபாய்களாகும். இது 15 விகிதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.

"நாட்டுக்கு மேலதிக கடன் தேவையில்லை ஆனால் அதற்கான பெறுமதி தேவை" என்று பொருளியல் நிபுணரான ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடனாக பெறும் 500 மில்லியன் டொலர்களை நாட்டின் உட்கட்டுமானப் பணிகளுக்கு என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதாவது வானூர்தி நிலையத்தின் நிர்மாணத்திற்கும், வானூர்தி சேவையின் தொடக்கத்திற்கும் இதனை அரசு பெறுகின்றது. அவர்கள் இந்த திட்டங்களில் பொது மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்கும் அனுமதியளிக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் அதன் மூலம் அனுகூலங்களை அடைந்தால் அது எல்லோருக்கும் நன்மையானது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் உண்மையான கேள்வி என்னவெனில், உண்மையாகவே இந்த நிதி எதற்காக என்பது தான். இந்த நிதி எதற்கு என்பதற்கான எந்த திட்டங்களும் தற்போது இல்லை. இது உட்கட்டுமானப் பணிகளுக்காக இல்லை என்றால் அரசின் நாளாந்த வீண் செலவுகளுக்கே இந்த நிதி விரயமாகப் போகின்றது.

எனவே பொருளியல் நிபுணர்களின் பார்வையில் அரசு 500 மில்லியன் டொலர்களை கடனாக பெறுவது சரியோ அல்லது தவறோ என்பதல்ல விவாதம். ஆனால் அரசின் நோக்கம் என்ன? என்பது தான் முக்கியமானது. சுகாதாரம், கல்வி போன்றவற்றில் இருந்து எடுத்து வானூர்தி சேவைக்காக பலசரக்கு கடையை நடத்த அரசு முயன்றால் இத்தகைய கடன் பெறும் நடவடிக்கைகள் நீண்டகாலத்திற்கு தொடரலாம் எனவும் ஹர்சா தெரிவித்தார்.

எனினும் இப்படிப்பட்ட கருத்துக்களை நிராகரித்த அரச தரப்பினர் நாட்டின் உட்கட்டுமானப் பணிகளுக்கே இந்த நிதி பெறப்படுவதாக தெரிவித்துள்ளனர். நாட்டின் மொத்த உற்பத்தியுடன் ஒப்பிடும் போது இந்த கடன் தொகை திருப்தியாக உள்தாகவும், தற்போது அது 90 விகிதமாக உள்ள போதும் 2002 மற்றும் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அது 105 விகிதமாக இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொடையாளிகளின் உதவிகளினால் நாடு பலன்களை அனுபவித்து வருகின்றது. கடந்த மே மாதம் வரையிலும் சிறிலங்காவுக்கான அனைத்துலகத்தின் உதவித்தொகையாக 874 மில்லியன் டொலர்கள் அறிவிக்கப்பட்ட போதும் 331 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

மே 31 ஆம் நாள் வரைக்கும் வழங்கப்படாத தொகையாக 4.7 பில்லியன் டொலர்கள் உள்ளன. பொதுவாக இந்த நிதி தொகைகள் கிடைப்பதற்கு 3 தொடக்கம் 5 வருடங்கள் எடுக்கலாம் என திறைசேரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிக அழுத்தங்கள் உள்ள போதும் நாட்டின் செலவீடுகள் திருப்திகரமாக கையாளப்படுகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் ஜனவரியில் இருந்து மே மாதம் வரையில் செலவீடுகள் 12 விகிதத்தால் உயர்ந்துள்ளன. இது 318 பில்லியன் ரூபாய்களாகும்.

பொதுத்துறை, ஓய்வூதியத் திட்டம், வட்டிகளின் மீள் கட்டுமானம், பாதுகாப்பு தொடர்பான செலவீடுகள் போன்றவற்றால் தற்போதைய செலவீடுகள் வேகமாக அதிகரித்துள்ளன. 85 பில்லியன் ரூபாய்களாக உயர்ந்த இந்த தொகை 30 விகித அதிகரிப்பாகும். நாட்டின் வருமானம் 27 விகிதத்தால் அதிகரித்துள்ளது. இது 218 பில்லியன் ரூபாய்கள் அதிகரிப்பாகும், அதாவது மொத்த உற்பத்தியில் 6.7 விகிதம். எனவே 2007 ஆம் ஆண்டுக்கான வருமானத்தின் இலக்கை அடையும் நம்பிக்கை திறைசேரிக்கு உண்டு என்றும் அரச வட்டாரங்கள் தெரித்ததுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Monday, August 20, 2007

மனித உரிமைகளை மதிக்க வேண்டுமாம்- பெருமளவு மக்களை செம்மணியில் புதைத்த முன்னாள் இராணுவத் தளபதி ஜனக பெரேரா சொல்கிறார்!

மனித உரிமைகளை கருத்தில் கொள்ளாது, மக்களின் ஆதரவுகள் இன்றிப் போரை வெல்ல முடியாது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றின் முன்னாள் தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார்.


கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

விடுதலைப் புலிகளை முறியடிக்கும் அதேசமயம் நாம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது முக்கியமானது. படைத்தரப்பு அண்மைக்காலங்களில் சில வெற்றிகளை ஈட்டியுள்ளது. அதனையிட்டு நாம் பெருமை கொள்ள வேண்டும்.

நான் இராணுவத்தில் பணியாற்றிய போதும் எனது எதிர்கால அரசியல் பிரவேசம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் பலரிடம் இருந்தன. எதிர்பார்ப்புக்கள் என்னைத் தொடர்வதாக நான் நினைக்கின்றேன். நான் நினைக்கின்றேன நாடு பெரும் நெருக்கடிகளை சந்தித்த போது அதனை ஒரு படைச் சிப்பாயாக நின்று நான் காப்பாற்றி உள்ளேன். அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் தூதுவராக கடமையாற்றியும் எனது நாட்டை காப்பாற்றி உள்ளேன்.

தூதுவராக நான் கடமையாற்றிய சந்தர்ப்பங்களில் அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை குறைத்ததுடன், இந்தோனேசியாவில் இருந்தான அவர்களின் கப்பல் போக்குவரத்திலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தேன்.

தற்போது நான் இங்கு இருக்கின்றேன், போரில் உயிரிழந்த மற்றும் படையில் இருந்து விலகிய படையினரின் குடும்பங்களுக்கு தொடர்ந்து சேவைகளை செய்யலாம் என நான் நினைக்கின்றேன். இந்த குடும்பங்களின் நன்மைக்காக அண்மையில் நாம் மிகப் பெரும் "ரணவிரு அசிறி" பூசையை நடத்தியிருந்தோம். போரில் உயிரிழந்த படையினரின் மனைவிமாருக்கும், இராணுவத்தில் இருந்து விலகியவர்களுக்கும் தொழில்களை பெற்றுக்கொடுக்கும் சேவைகளை செய்யலாம் என எண்ணுகின்றேன்.

ஏனெனில் தொழில்களை மேற்கொள்ள முடியாததனால் தான் முன்னாள் படையினர் பாதாள உலகக் குழுக்களுடன் செயற்படுகின்றனர். அவர்களுக்கு செய்யும் உதவி அவர்களுக்கு மட்டுமானதல்ல அது சமூகத்திற்கும் நன்மையானது.

ஒரு மனிதனாக நானும் எனது சொந்த குடும்பத்தில் இருந்து மூன்று பேரை இழந்துள்ளேன். எனது சகோதரியின் கணவர், எனது தங்கையின் கணவரான அட்மிரல் மொகான் ஜெயமகா, எனது சொந்த மருமகன் ஆகியோரை இழந்துள்ளேன். இந்த குடும்பங்களின் நிலை என்ன என்பது தொடர்பாக எனக்குத் தெரியும். போர் முடிவடைந் பின்னரும் நீண்டகாலத்திற்கு இந்த நினைவுகளுடன் அவர்கள் வாழ வேண்டியிருக்கும். நானும் துன்பத்தை அனுபவித்துள்ளேன்.

போரில் வெற்றிகளை கண்ட போதும் அதனால் ஏற்பட்ட அழிவுகளையும், கொடூரங்களையும் கண்டுள்ளேன். நான் மீண்டும் எனது வாழ்க்கையை மக்களுக்கு சேவை செய்வதற்கு அர்ப்பணிக்க விரும்புகின்றேன்.

2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் மங்களா சமரவீர மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் என்னை அரசியலுக்கு அழைத்தனர் ஆனால் நான் அதனை நிராகரித்து விட்டேன். அன்றில் இருந்து இன்றுவரை நான் அரசியலுக்குள் நுழையவில்லை. அது எனக்கு பழக்கமில்லை. எல்லா மக்களுக்கும் சேவை செய்யவே விரும்புகின்றேன்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது ஜாதிக கெல உறுமய என்னை தேர்தலில் நிற்குமாறு அணுகியிருந்தது. அந்த கட்சியில் உள்ள எனது அத்தையும் என்னைத் தனிப்பட்ட முறையில் இது தொடர்பில் அணுகியிருந்தார். அது மட்டுமல்லாது ஹைட்பார்க்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான சம்பிக்க ரணவக்கவும், வண. அதுரலிய ராதன தேரோவும் நான் அவர்களின் மேடைக்கு வரவேண்டும் என பகிரங்க அழைப்பையும் விடுத்திருந்தனர். அவர்கள் என்மீது ஒருவகை அழுத்தங்களை போட்டிருந்தனர்.

அரச தலைவர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச எனக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை தருவதாக கூறவில்லை. எனக்கு அவரை நீண்டகாலமாக தெரியும், அவர் எனது நண்பர். அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அவர் என்னுடன் வேறு ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தார். அதாவது தேவை ஏற்படும் போது பாதுகாப்புத்துறைகளில் உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தார்.

கிழக்கின் தற்போதைய வெற்றியைத் தொடர்ந்து, இராணுவம் முதன்முதலாக போரில் திறமையாக செயற்பட்டுள்ளது என்ற கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முதலாவது பெரிய இராணுவ நடவடிக்கை வடமராட்சி பகுதியியே மேற்கொள்ளப்பட்டது. அதனை மேற்கொண்டவர்கள் காலம் சென்ற லெப். ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ, காலம் சென்ற மேஜர் ஜெனரல் விமலரட்ன ஆகியோர். நாடு அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதனை நான் உறுதியாக நம்புகின்றேன்.

1993 ஆம் ஆண்டு கிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றும் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் குறிக்கோளை அடைவதற்கு நான் சிறப்புப் படை பிரிக்கேட்டுக்கு தலைமை தாங்கினேன். நான் கொமோண்டோ மற்றும் சிறப்புப் படை பிரிவுகளுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தேன். என்னிடம் ஒரு கஜபா றெஜிமென்ட், நான்கு சிங்க றெஜிமென்ட், 05 வியஜபா றெஜிமென்ட் என்பனவும் இருந்தன.

நாங்கள் கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆயித்தியமலை வரையில் முகாம்களை அமைத்திருந்தோம். பெரிய போரதீவிலும் எமது முகாம் இருந்தது. மறுபக்கம் பார்த்தால் குடும்பிமலை பகுதியிலும் முகாம் அமைத்திருந்தோம். குடும்பிமலையின் வடக்கு பகுதியான நபதவிலு அதன் தெற்குப்பகுதியான தரைவைக்குளம் ஆகிய பகுதிகளிலும் முகாம்களை அமைத்திருந்தோம்.

குடும்பிமலையின் தென்பகுதியில் போதியளவு நீர்வளம் இருந்தபடியால் நாம் அங்கும் முகாமை அமைத்திருந்தோம். கஜங்கேணி, கஜூவத்தை, பனிச்சங்கேணி, வாகரை, கதிரவெளி, வெருகலுக்கு மறுபக்கம், வெருகல் கோவில் ஆகிய பகுதிகளிலும் முகாம்களை அமைத்திருந்தோம். மேலும் மேஜர் மனோஜ் பீரீஸ் தலைமையில் அங்குடவில்லு பகுதியிலும் முகாமை அமைத்திருந்தோம்.

லெப். கேணல் லோரன்ஸ் பெர்ணான்டோ முதலாவது கஜபா றெஜிமெனடிற்கும், லெப்.கேணல் சுசந்த மென்டிஸ் முதலாவது சிங்க றெஜிமென்டிற்கும், லெப்.கேணல் நளின் பெர்ணான்டோ ஐந்தாவது வியஜபா றெஜிமெனடிற்கும், மேஜர் ஜெயவிரு பெர்ணான்டோ சிறப்புப் படை பிரிவிற்கும், மேஜர் சிறீநாத் பெர்ணான்டோ கொமோண்டோ படைப் பிரிவிற்கும் கட்டளை அதிகாரிகளாக பணியாற்றியிருந்தனர்.

அன்று கிழக்கில் 2,000 ஆக இருந்த விடுதலைப் புலிகளின் பலத்தை 50 ஆக நாம் குறைத்திருந்தோம். கருணா உட்பட பலர் எதிர்த்தாக்குதல்களை நடத்தாது வன்னிக்குச் சென்றிருந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல்களில் 81 விகிதமான மக்கள் வாக்களித்திருந்தனர் என நான் நம்புகின்றேன்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறுவதைப் போல விடுதலைப் புலிகளை முறியடிக்க இரண்டு அல்லது மூன்று வருடங்கள் செல்லலாம். நாம் மரபு வழியான படையுடன் மோதவில்லை, ஒரு கெரில்லாப் போரை எதிர்கொண்டு வருகின்றோம். கடந்த வருடத்தில் அவர்கள் தம்மை பலப்படுத்தியுள்ளனரா அல்லது பலவீனப்பட்டுள்ளார்களா என்பதற்கு அப்பால் அவர்கள் இத்தகைய போரில் நிபுணத்துவம் அடைந்து வருகின்றனர்.

மலேசியாவில் அந்த நாட்டு இராணுவம் மலேசியாவின் கெரில்லாக்களுடன் மோதும் போது, நாடு பொருளாதாரத்தில் பலமாக இருந்தது. அது நல்ல படைக்கட்டமைப்பை உருவாக்க உதவியது. ஒரு நல்ல படைக்கட்டமைப்பை பெற வேண்டுமாயின் வலிமையான பொருளாதாரம் வேண்டும். அதாவது அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அது தான் உண்மையானது.

கோத்தபாயாவைப் போல விடுதலைப் புலிகளை முறியடிக்க முடியும் என்று நம்பும் ஒரு ஜெனரலும் நான் தான்.

இந்தியப் படையுடன் மோதும் போது விடுதலைப் புலிகள் பலமாக இருக்கவில்லை எனினும் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் பலியாகியதுடன் பலர் காயமடைந்திருந்தனர். இது தொடர்பாக என்னிடம் சுவாரசியமான கதை ஒன்று உள்ளது.

அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் வன்போ என்னும் பிரதான தளத்தை கொண்டிருந்தனர். அது மிகவும் பலம் வாய்ந்த தளமாகும். இந்திய இராணுவத்தின் காலத்தில் அவர்கள் அந்த முகாமை அழிக்கும் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு காலாட்படை பிரிவுகளை அந்த காட்டுப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தனர். ஆனால் இன்றுவரை அந்த துருப்பினருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை. அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என நான் எண்ணுகின்றேன்.

ஆனால் ஜெனரல் கொப்பேகடுவவின் கீழ் நான் தலைமை தாங்கி மேற்கொண்ட வன்போ தளத்தின் மீதான படை நடவடிக்கையின் போது 31 நாட்கள் விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபட்டிருந்தோம். இந்தியப் படையினரால் செய்ய முடியாததை நாம் செய்திருந்தோம்.

1995 ஆம் ஆண்டு நடைபெற்ற மணலாறு மீதான தாக்குதல் முயற்சி, யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட "இடி முழக்கம்" நடவடிக்கைகளில் நாம் விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாடு வீழ்ச்சி காணும் நிலையில் இருந்த போதும் நாம் அதனை தக்க வைத்தோம். அந்த நேரத்தில் அரச தலைவரும் யாழ். குடாநாட்டை காப்பாற்ற முடியாது என தெரிவித்திருந்தார். எனவே விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொள்ளலாம் என எனது இராணுவ அனுபவம் மூலம் நம்புகின்றேன். ஆனால் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் போது எமது தரப்பு இழப்புக்களை குறைவாகவும், அவர்கள் தரப்பு இழப்புக்களை அதிகமாகவும் பேணுவது அவசியம்.

யாழ். குடாநாடு 2000 ஆம் ஆண்டு நெருக்கடியில் சிக்கிய போது ஜெனரல் வீரசூரியா என்னை அழைத்து யாழ். குடாநாட்டின் கட்டளைத் தளபதி பொறுப்பை ஏப்பிரல் 20 ஆம் நாள் பொறுப்பேற்கும் படி கேட்டுக்கொண்டார். அப்போது யார் உமக்கு துணை கட்டளை அதிகாரியாக தேவை எனவும் வினவினார். ஆனால் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவது நான் எனவே யாரை நியமித்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என நான் தெரிவித்திருந்தேன்.

அதன் பின் அவர் தற்போதைய இராணுவத் தளபதியான சரத் பென்சேகாவை எனது துணை கட்டளைத் தளபதியாக நியமித்தார். பின்னர் மே மாதம் 4 ஆம் நாள் பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தனர். ஆனால் நான் கொழும்பு செல்வதை படையினருக்கு தெரியப்படுத்த வேண்டாம் எனவும் நான் இரவு சென்று மறுநாள் திரும்பி விடுவேன் எனவும் தெரிவித்திருந்தேன். ஏனெனில் நான் கொழும்பு செல்வது படையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி விடும். அதனைப் போலவே நான் மறுநாள் திரும்பிவிட்டேன்.

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யாழில் இருந்து பின்வாங்கும் திட்டம் கைவிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அரச தலைவர், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், படைத் தளபதிகள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். யாழ். குடாநாட்டில் இருந்து துருப்புக்களை விலக்கிப் பின்னர் வன்னியில் இருந்து படை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தை வான் படைத்தளபதி ஜெயலத் வீரக்கொடி அங்கு தெரிவித்திருந்தார்.

ஜனக, இந்த திட்டம் தொடர்பாக உமது கருத்து என்ன? என அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க என்னிடம் வினாவினார். முடியாது, யாழில் இருந்து துருப்புக்களை வெளியேற்றுவது பேரழிவுக்கு வழிவகுத்து விடும் என்று நான் தெரிவித்தேன்.

நாம் வெளியேறுவதற்குரிய உத்தரவை வழங்கினால் அது கடுமையான அச்சங்களை படையினர் மத்தியில் ஏற்படுத்தி விடும். அப்போது விடுதலைப் புலிகள் பீரங்கி அல்லது மோட்டார் தாக்குதலை நடத்தினால் எல்லோரும் கப்பலில் ஏறுவதற்கு முயற்சிப்பதுடன் பெரும் நெருக்கடிகளும் ஏற்படலாம். எனவே எங்களின் முன் போர் புரிவதே ஒரே வழியாக இருந்தது.

விடுதலைப் புலிகளிடம் இலகு ரக வானூர்திகளே உள்ளன. எனவே தான் அவர்கள் இலகுவாக எமது வான்பரப்பினுள் ஊடுருவி குண்டுகளை வீச முடிந்துள்ளது. ஆனால் அவர்களால் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. அவர்கள் அதற்குரிய நவீன தொழில்நுட்பங்களை பெறும் போது நாம் அதனை கவனத்தில் எடுக்கலாம்.

நாம் அதிகாரப்பகிர்வு போன்ற அரசியல் திட்டங்களை முன்வைக்க வேண்டும். எல்லோரும் ஒரே தன்மையுள்ள மனிதாபிமான உரிமைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு தரப்பினர் தாம் பாரபட்சமாக நடத்தப்படவதாக உணர்ந்தால் பிரச்சனை தொடரும்.

நான் அமைதியை விரும்புகின்றேன். ஏனெனில் ஓய்வுபெறும் வரை நான் முன்னணி களமுனைகளில் பணியாற்றியுள்ளேன். போரின் வலி எனக்கு தெரியும். 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான் நெடுங்கேணி படை நடவடிக்கையை மேற்கொள்ளும் போது. எனது மனைவியின் ஒரே சகோதரர் யாழ். படை நடவடிக்கைக்கான தாயாரிப்புக்களில் ஈடுபடும் போது மாதுரு ஓயாவில் கொல்லப்பட்டிருந்தார். வடமராட்சி படை நடவடிக்கைக்கு முன்னர் அவர் பலியாகியிருந்தார்.

சடலத்தை பெறுவதற்குக் கூட என்னால் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. ஏனெனில் அப்போது நான் படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். நான் வீட்டுக்குச் சென்ற போது எனது மாமியார் ஏன் எமது துன்பத்தை பகிர்ந்து கொள்ள நீ உதவவில்லை? ஏன் தம்பிக்கு இந்தக் கதி நிகழ்ந்தது? என்று இரு கேள்விகளை என்னிடம் கேட்டார். அதற்கு என்னிடம் பதில் இல்லை.

ஜெனரல் கொப்பேக்கடுவ மற்றும் ஜெனரல் விமலரட்னவுடன் அட்மிரல் மொகான் ஜெயமகா பலியான போது எனது கணவருக்கு ஏன் இது நிகழ்ந்தது? என எனது தங்கை என்னிடம் கேட்டார். நீங்கள் பலியான படையினரின் இல்லங்களுக்கு அஞ்சலி செலுத்த செல்லும் போதும் அவர்களின் தாய்மாரும் இதே கேள்வியையே கேட்பார்கள். ஏன்? என்பது தான் அது. அவர்களுக்கு என்ன பதிலை நான் கொடுக்க முடியும். எனவே தான் நாம் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை காணவேண்டும்.

எந்த ஒரு கட்டத்திலும் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க முடியாது. முன்னரோ தற்போதோ அது படையினருக்கும் நாட்டுக்கும் நல்ல பெயரை கொடுக்காது. அது பிரச்சினைகளை தீர்க்கவும் உதவாது. 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடிகளை நாம் கையாண்ட போது பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கருத்தில் எடுத்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்போது நாடுகளுக்கு இடையில் தொடர்புகளோ அல்லது உடனடியான தொடர்பாடல்களே செயற்திறனுள்ளதாக இருக்கவில்லை.

தற்போது உள்ளது போல இலத்திரனியல் ஊடகங்கள் அப்போது இல்லை. தற்போது நாம் ஒரு உலகத்தின் சமுதாயத்தில் வாழ்கின்றோம். தகவல்கள் இலத்திரனியல் முறைகளின் மூலம் உலகத்தை செக்கன்களில் சென்றடைந்து விடும். எனவே அனைத்துலக சமூகத்தின் கவனங்கள் இது தொடர்பில் அதிகமானது. அனைத்துலக சமுதாயம், மனித உரிமை அமைப்புக்கள் என்பன மனித உரிமை மீறல்களில் தற்போது மிகவும் கவனம் எடுக்கின்றன.

நான் இரு நாடுகளில் தூதுவராக பணியாற்றிய படியால் அவர்கள் மனித உரிமை மீறல்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது எனக்கு தெரியும். அவர்கள் அதில் அதிக கவனம் எடுக்கின்றனர். நான் இந்தோனேசியாவில் பணியாற்றிய போது அந்த நாட்டின் அரச தலைவரும் வெளிநாட்டு அமைச்சரும் சிறிலங்காவில் நடைபெறுவதை அறிவதில் ஆவலாக இருந்தனர். நான் அதை விளக்கினேன்.

அண்மையில் நான் அவுஸ்திரேலியவுக்கு சென்ற போதும் பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்திருந்தேன். அந்த நாடு எமக்கு ஆதரவானது. எனவே விரைவாக விடுதலைப் புலிகளின் மீதான தடையை கொண்டு வரும்.

விடுதலைப் புலிகளை முறியடிக்க வேண்டுமானால் நாம் அனைத்துலக சமூகத்தை எம்முடன் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அதிக சக்தி உடையவர்கள். விடுதலைப் புலிகளுக்கான பெருமளவான நிதி இந்த நாடுகளில் இருந்தே கிடைக்கின்றது. அதனை தடுக்க வேண்டுமாயின் எமக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு தேவை.

விடுதலைப் புலிகள் ஐரோப்பாவில் நிதியை திரட்டி கம்போடியா மற்றும் ஏனைய நாடுகளில் ஆயுதங்களை வாங்குகின்றனர். ஐரோப்பா தான் அவர்களின் நிதியை பெறும் மையம். பின்னர் இந்த ஆயுதங்கள் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு எடுத்து வரப்படுகின்றன. எனவே நாம் இந்த நாடுகளின் ஆதரவைப் பெற்றால் அது செயற்திறன் மிக்கது.

உதாரணமாக நான் இந்தோனேசியாவில் பணியாற்றிய போது அமெரிக்கா, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து விடுதலைப் புலிகளின் கப்பல் வலையமைப்பை முறியடிப்பதற்கு முயற்சி செய்திருந்தன.

கிளிநொச்சி மீதான படை நடவடிக்கையின் போது நான் 51 ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியிருந்தேன். அப்போது எனக்கும் ரத்வத்தைக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியிருந்தது. எனவே, நான் 51 ஆவது படையணியின் நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தேன்.

அந்த சமயத்தில் கிருசாந்தி குமாரசுவாமி (கைதடி), ரஜனி வேலுப்பிள்ளை (உரும்பிராய்) ஆகிய பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றன. நான் தனிப்பட்ட முறையில் அதனை விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தேன்.

எமக்கு பொதுமக்களின் ஆதரவு தேவை. 2000 ஆம் ஆண்டு நாம் யாழில் மோதல்களில் ஈடுபட்ட போது 32,000 படையினரையே அங்கு கொண்டிருந்தோம். அப்போது பொதுமக்களும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து எம்மீது தாக்குதல்களை நடத்தியிருந்தால் நாம் பேரழிவை சந்தித்திருப்போம். எமக்குப் பலத்தை கொடுக்குமாறு வேண்டி கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் வழிபடுமாறும் நாம் தமிழ் மக்களை அன்று கேட்டிருந்தோம். யாழ். குடாநாட்டு மக்கள் எமக்கு எதிராக திரும்பியிருந்தால் நாம் அன்று யாழ். குடாநாட்டை தக்க வைத்திருக்க முடியாது.

எனினும் படை நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் இழப்புக்கள் தவிர்க்கமுடியாதது. ஆனால் நாம் அதனை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இவரது காலப் பகுதியில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், செம்மணியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Friday, August 17, 2007

"எனக்குத் தீர்க்க வேண்டிய கணக்கு நீண்ட காலமாக இருக்கின்றது. பல நூற்றாண்டு காலமாக இருக்கின்றது"

எம்மீது அவலங்களைத் திணித்தவர்களுக்கு தீர்ப்பெழுதும் காலத்தில் வாழ்கின்றோம்: க.வே.பாலகுமாரன்.

செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற படுகொலை என்பது நிச்சயமாக எந்த முறையிலும் எவராலும் மறுத்துச் சொல்ல முடியாத அப்பழுக்கற்ற ஒரு இனப்படுகொலையின் வெளிப்பாடாக அமைகின்றது. ஆகவே என்றோ ஒருநாள் இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களுக்கான தீர்ப்புக்களை வழங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.


கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளது முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

செஞ்சோலையில் சிறிலங்கா வான் படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் காயமடைந்து இரண்டு நாட்கள் படுக்கையில் இருந்து தன்னுடைய உறவுகளுடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டு சாவைத் தழுவிக்கொண்ட அந்தப்பிள்ளையை நினைவு கூருகின்றேன். அந்தப்பிள்ளை மிகத் தெளிவாகப் பல செய்திகளை உரையாடிச் சென்றிருக்கின்றது.

அது என்னவெனில், நாங்கள் எங்களுடைய உற்சாகத்தை, எதிர்பார்ப்பை கைவிடக்கூடாது. எங்களுக்குத் தீங்கு விளைவித்த வானூர்திகளை நாங்கள் எப்படியும் வீழ்த்தி அதற்கூடான ஒரு வாழ்வை நாங்கள் அமைக்க வேண்டுமென்ற பொருள்படக் கூறித்தான் அந்தப் பிள்ளை உயிரிழந்தார்.

ஆகவே இதனூடாக நாங்கள் ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றோம். இத்தனை கால அடக்குமுறைகளுக்கான விடையைத் தேட வேண்டிய பாரிய பொறுப்பு எங்கள் தேசியத் தலைமைக்கு இருக்கின்றது. அதனுடன் சேர்ந்து அந்த விடையைக் காண்பதற்கான பாதையை இலகுபடுத்த வேண்டிய பொறுப்பு எமது மக்களுடையது.

நாங்கள் ஒரு சோகம் கவிந்த மௌனத்தில் வாழும் போது சிங்கள தேசத்திலும் ஒரு விசித்திரமான அமைதி நிலவுகின்றது. மிகப்பெரிய ஒரு கொடிய ஆட்சி, உலகத்திலே கடைகெட்ட, தரந்தாழ்ந்த ஒரு ஆட்சி, பிணங்களின் மீது நடத்துகின்ற ஆட்சி மகிந்தவால் நடத்தப்படுகிறது.

ஒரு நாட்டினுடைய அரச தலைவரே கடத்தல் காரணகர்த்தா ஆகிறார். அவர் தீர்மானிக்கின்ற அந்தக் கடத்தல் பணத்தை பங்கு போடக்கூடிய ஆட்சி நடக்கின்றது. அங்கேயும் ஒரு விசித்திரமான அமைதி இருக்கின்றது. அந்த அமைதிக்குள் ஒரு தீர்விருக்கின்றது. தமிழர்களைத் தானே வெல்லுகின்றோம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். இதுபற்றி பேசிப்பயனில்லை. அதனுடைய முடிவு நாள். அந்த நாள் ஊழிப் பெருநாள். புத்தர் தன் செய்தியிலேயே கூறியிருக்கின்றார். நீ கடைசியாகப் போகும் போது கட்டுச்சோறு கூடக் கிடையாது என்று. அது சிங்களவரைத்தான் சேரும் என்று நினைக்கின்றேன்.

ஆகவே 56 ஆம் ஆண்டு தொடக்கம் எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொத்துக் கொத்தான ஒவ்வொரு இனப்படுகொலைக்கும் ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அதற்குக் காரணமானவர்களுக்கு என்றோ ஒருநாள் நாம் நிச்சயமாகக் கணக்குத் தீர்த்துக் கொள்வோம். அண்மையிலே தலைவர் எங்களுக்குக் கூறினார். "எனக்குத் தீர்க்க வேண்டிய கணக்கு நீண்ட காலமாக இருக்கின்றது. பல நூற்றாண்டு காலமாக இருக்கின்றது" என்றார் க.வே.பாலகுமாரன்.
நன்றி>புதினம்

சிறிலங்காவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஹோல்ம்சை பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் விமர்சனம் செய்துள்ளமைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த ஜோன் ஹோல்ம்ஸ், உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்ற மிகவும் ஆபத்தான இடம் சிறிலங்கா என்று சாடியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்றும் விடுதலைப் புலிகளிடம் கப்பம் பெற்றார் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஐ.நா. பேச்சாளர் மைக்கேல் மோண்டஸ் கூறியதாவது:

ஜோன் ஹோல்ம்சை பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. விரும்பத்தகாதது. ஹோன் ஹோல்ம்சின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பு பணிகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் முழுமையாக ஆதரவளிக்கிறார் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

Thursday, August 16, 2007

நாங்கள் பயங்கரவாதிகளா?

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தினால் பலி கொள்ளப்பட்ட செஞ்சோலை சிறார்கள் மற்றும் பணியாளர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வுகள்.





எமக்கான விடுதலையை ஒன்றுபட்டு போராடி அடைவதே எமக்கு முன்னுள்ள ஒரே தீர்வு!!!

ஆசிய பிராந்திய ஆதிக்கத்திற்கான நகர்வுகளில் அமெரிக்கா தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. மிக நுட்பமாக தமக்கு சார்பான அரசுகளை ஆசிய பிராந்தியத்தில் உருவாக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

இத்தாலிய பெண்மணியான சோனியா காந்தியை மிக இலகுவாக தனது வலைக்குள் விளவைத்த அமெரிக்கா, அவருடை நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் தீவிர வலதுசாரிப் போக்குடையவருமான மன் மோகன் சிங்கை இந்தியாவின் பிரதமராக்கி இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை தனதாக்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நகர்வு ஆசிய அரசியல் அரங்கில் அமெரிக்கா கண்டுள்ள மிகப்பெரிய வெற்றி என குறிப்பிடப்படுகின்றது.

ஏற்கனவே அமெரிக்க விசுவாசியான பாகிஸ்தான் அதிபர் பேர்வஸ் முசரப் தெற்காசியாவின் இரண்டாவது பலம் மிக்க பாகிஸ்தானை ஆட்சி செய்வது அமெரிக்காவிற்கு உவப்பானதாக இருந்த போதிலும் அந்த நிலை தற்போது இல்லை என்றே சொல்லப்படுகின்றது.

அல்கைடா அமைப்பினுள் ஏற்பட்டுள்ள பிளவுகள் அமெரிக்காவின் முதலாவது எதிரியான ஒசமா பின்லாடனை பாகிஸ்தான் அதிபர் முஸ்ரபுடன் நெருக்கம் கொள்ள வைத்துள்ளது இது அமெரிக்கா எதிர்பாராத திருப்பம்.

மறு முனையில் இலங்கையில் தீவிர அமெரிக்க எதிர்பாளர்களும் சீன ஆதரவாளர்களுமான ஜே.வி.பியின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது அவர்களின் மறைமுக ஆளுகைக்குள் இருக்கும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவிற்கு பெரிய தலையிடி தான்.

இந்த அரசாங்கத்தை எப்படியேனும் கலைத்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தின் அடிவருடும் அரசாங்கத்தை உருவாக்கவே அமெரிக்கா தற்போது முயல்கின்றது.

இடதுசாரிகளான ஜே.வி.பியின் ஆதரவின்றி மகிந்த ராஜபக்ச ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நிலையை உருவாக்கி அதன் மூலம் மகிந்தவின் அரசையே தமக்கு சாதமானதாக மாற்ற அமெரிக்கா போட்ட திட்டம் இதுவரை வெற்றியளிக்கவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாக வெளிப்படையாக அறிப்பட்ட மிலிந்த மெரொகொடவின் மூலமாக ஆட்சியமைக்க முடியாமல் நலிந்து போய்கிடந்த ஐக்கிய தேசிய கட்சியின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்தும் கூட அமெரிக்கா விரும்பிய விதமாக மகி;ந்த ராஜபக்ச வளைந்து கொடுக்கவில்லை அல்லது வளைந்து கொடுக்க முடியவில்லை.

மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை ஜனாதிபதி பதவியில் 10 வருடங்கள் இருக்க வேண்டும் என்பதும் தனது பதவிக்காலத்தின் பின்னர் தனது மூத்த புதல்வனை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதும் பண்டாரநாயக்கா குடும்பம் போல ராஜபக்ச குடும்பமும் இலங்கையின் நவீன வரலாற்றில் ஆதிக்கம் மிக்க குடும்பமாக மதிப்பு பெற வேண்டும் என்பதுவுமே முக்கியமானது.

இதனைக் கருத்தில் கொண்டே மகிந்த ராஜபக்ச தனது அரசியல் நகர்வுகளை தெளிவாக மேற்கொண்டு வருகின்றார்.

தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிர்காலத்தில் ஆதரவளிக்கக் கூடிய சக்திகளாக ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உருமய ஆகியவற்றையே மகிந்த ராஜபக்ச நம்புகின்றார்.

இதனால் எதிர்காலத்திலும் இந்த கட்சிகளுக்கு விரோதமாக அவர் நடந்து கொள்ளப் போவதில்லை இந்த உண்மை அமெரிக்காவிற்கு கொஞ்சம் தாமதமாகவே புலனாகியுள்ளது.

தற்போது மகிந்தவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்ச்சிகளிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

அண்மைய ஜோன் ஹோல்சின் இலங்கை விஜயம் மனித உரிமை கண்காணிப்பக அறிக்கை என்பவை வெறும் முன்னோடிகள் தான் முக்கிய நகர்வுகள் விரைவில் நடந்தேறும் என்பதும் அது இலங்கை அரசாங்கத்தை ஒட்டுமொத்தமாக அனைத்துலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்தும் தன்மை கொண்டதாகவே இருக்கும் என்பதும் ஊகிக்கத் தேவையற்ற உண்மைகள்.

இதில் அதிர்ச்சியூட்டும் ஒருசில விடயங்கள் வெளிவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அமெரிக்க இராஜதந்திரங்களைக் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தறிபவர்கள் இதனை இலகுவாக ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

அந்த விடயம் அமெரிக்க பிராஜவுரிமை பெற்றவர்களான மகிந்த ராஜபக்சவின் இரு சகோதரர்களையும் அமெரிக்கா தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது என்பது தான்.

இதனை உறுதிப்படுத்த பல காரணங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் சிலவற்றை மட்டும் நோக்குவது இந்த ஆய்விற்கு போதுமானது.

முதலில் பசில் ராஜபக்ச இலங்கை தொழிலாளர் காங்கிரசை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றும் விதமாக மேற்கொண்ட நடவடிக்கைகள்.

மிகச் சிறிய விடயம் ஒன்று பற்றி பேசுவதற்கு சென்ற மலையகத்தின் பிரதான அரசியல் கட்சியின் மூத்த தலைவர்களை மிகக் கேவலாமக அவமதித்து அதன் மூலம் அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நிலையை பசில் ராஜபக்ச ஏற்படுத்தியிருந்தார்.

இது பசில் ராஜபக்சவிற்கும் அரசின் பங்காளிகளுக்குமிடையிலான முதலும் முடிவுமான பிணக்கு அல்ல இது போல் பல சம்பவங்கள் பல கட்சிகளுக்கும் நடந்துள்ள நடக்கவும் போகின்றன. ஆனால் அரசியல் இலாபம் கருதி அவை வெளிவருவதில்லை.

ஏற்கனவே பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் கட்சிகளுடன் முரண்பட்டு அந்த கட்சிகளின் ஆதரவை நீக்க முயற்சிப்பதாகக் கூறி மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசான அவருடைய மூத்த புதல்வாரன நாமல் ராஜபக்சவால் அலரி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

கொழும்பு சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவனான நாமல் ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேத்தலில் தனது காடையர் கும்பலுடன் சென்று தங்காலை பகுதியில் சில வாக்களிப்பு நிலையங்களில் இடையூறு விளைவித்தமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனது 19 வயதிலேயே தேர்தல் அரசியல் வாதிக்குரிய ஆளணி பலத்துடன் தாதாவாக வலம் வந்த நாமலின் ஒரே குறிக்கோள் மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடையும் போது இலங்கையின் இளம் ஜனாதிபதியாக தான் பதவியேற்ற வேண்டும் என்பதுவே.

இந்த குறிக்கோளுக்கு குறுக்கே வந்த பசிலை அலரிமாளிகையில் இருந்து மட்டுமன்றி நாட்டில் இருந்தே சில காலம் துரத்தியடித்திருந்தார் நாமல் ராஜபக்ச.

எனினும் குடும்ப உறுப்பினர்களின் தலையீடுகள் சமரசங்களை அடுத்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச அமெரிக்க விசுவாசம் மற்றும் நாமலின் அரசியல் அபிலாசைகளை தகர்க்கும் நோக்கில் மேற்கொண்ட ஒரு முயற்சியே தொழிலாளர் காங்கிரஸ் மீதான பாய்ச்சல் என்று சொல்லப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க இலங்கைக்கு அனைத்துலக அரங்கில் அபகீர்த்தியையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி வரும் ஆட்கடத்தல் சம்பவங்களின் பின்னணியும் அதிர்ச்சிகரமாகவே இருக்கின்றது.

ஆட் கடத்தல்களின் சூத்திரதாரி என அனைத்து தரப்பினராலும் சுட்டுவிரல் நீட்டி குற்றம் சாட்டப்பட்டு வரும் கோட்டபாய ராஜபக்சவும் அமெரிக்க பிரஜை தான்.

அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் பல முனை அழுத்தங்களின் ஒரு வடிவமாக கோட்டபாய தலைமையிலான ஆட்கடத்தல்கள் நோக்கப்படுவதும் தவிர்க்க முடியாதது தான்.

ஆக மொத்தத்தில் தனது விருப்பங்களுக்கு அடிபணிய மறுத்த மகிந்த ராஜபக்சவை அடிபணிய வைக்க அவருடைய சகோதரர்களையே அமெரிக்கா தந்திரமாக கையாண்டுள்ளது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

இந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கவிழப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கம் பெரும்பாண்மையை இழக்கும் நிலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சிறுபாண்மை கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மாற்று குழு ஆகியவற்றோடு சுதந்திர கட்சியின் கணிசமான பகுதியினரும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கென பரிமாறப்பட்டுள்ள அல்லது பரிமாறப்படவுள்ள பெரும் தொகை பணம் அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான செலவீனமாக காட்டப்படும்.

ஆக மொத்தத்தில் அமெரிக்கா விரும்பும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இலங்கையில் விரைவில் தோற்றம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இன்னும் 4 வருடங்கள் பதவியி;ல் தொடரவுள்ளதால் அமெரி;க்காவின் ஆசைக்கனவுகள் நிறைவேறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அமெரிக்க ஆதரவு அரசாங்கம் ஒன்றை உருவாக்க அமெரிக்கா எவ்வளவு பணத்தை செலவிடவுள்ளதோ அதை விட அதிகமாக செலவிட்டு அமெரிக்காவிற்கு எதிரான அரசாங்கத்தை உருவாக்க சீனாவும் தயாராகவே உள்ளது.

கடந்த முறை சீனாவின் ஒத்துழைப்புடன் 39 ஆசனங்களை கைப்பற்றிய ஜே.வி.பி இம்முறை தேர்தலிலும் தீர்மானிக்கும் சக்தியாகவே மாறும் நிலை காணப்படுகின்றது.

ஆக மொத்தத்தில் சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக மோதல் ஒன்றிற்கு தயாராகிவிட்டன.

களமுனை : இலங்கை
காலம் : விரைவில் அறிவிக்கப்படும்

அப்ப எங்கட நிலை…

போராடினால் தான் வாழ்க்கை என்றாகிப் போன நிலையில் எமக்கான விடுதலையை ஒன்றுபட்டு போரடி அடைவதே எமக்கு முன்னுள்ள ஒரே தீர்வு.

ஐநா வோ, அமெரிக்காவோ, இந்தியாவோ எமக்காக எதையும் செய்யப்போவதுமில்லை பேசப்போவதுமில்லை. ஆகவே எமது வாழ்க்கைக்காக நாம் போராடியே ஆகவேண்டும் என்பதே எதிர்காலம் சுட்டி நிற்கின்றது.
நன்றி>பதிவு.

Wednesday, August 15, 2007

சிறீலங்காவில் வெளிநாட்டுப் படைகளின் தலையீடு - அரசு அச்சம் கொள்வதாக கொழும்பு ஊடகம்!

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அனைத்துலக நாடுகள் கண்டித்துவரும் நிலையில், வெளிநாட்டுப் படைகளின் தலையீடு நிகழ வாய்ப்பு இருப்பதாக, அரசு அச்சப்படுவதாக கொழும்பின் ஆங்கில ஏடு ஒன்று தெரிவிக்கின்றது.

சிறீலங்காவில் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்ற முடியாத நிலை காணப்படுவதாக ஐ-நா துணைப் பொதுச் செயலாளர் கலாநிதி ஜோன் ஹோம்ஸ் வெளியிட்ட கருத்து, மூதூரில் ஏ.சி.எஃப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை பற்றி அவுஸ்திரேலிய நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கை, மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளால் இந்த நிலை தோன்றியுள்ளதாக அரசு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள், மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி போன்றவற்றின் கைப்பாவையாக அனைத்துலகம் திகழ்வதாகவும், மகிந்த அரசு மீது குற்றச்சாட்டுக்களையும், கண்டனங்களையும், முன்வைத்து வருவதாகவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

Tuesday, August 14, 2007

யாழில் உண்டியல் திருடும் சிறிலங்கா இராணுவத்தினர்!!!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் உண்டியல்களை உடைத்து திருடி வருகின்றனர்.

தென்மராட்சி வேம்பிராய், சரசாலை, கைதடி, நாவற்குழி ஆகிய இடங்களில் ஆலயங்களில் உண்டியல்களை சிறிலங்கா இராணுவத்தினர் உடைத்து திருடி வருகின்றனர். அண்மைக்காலமாக இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்து காணப்படுகின்றன.

தேடுதல் நடவடிக்கை

வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சிறிலங்கா இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்தினர்.

கண்களைக் கட்டிய நிலையில் இரண்டு இளைஞர்களை அழைத்து வந்த இராணுவத்தினர் இவர்கள் புலிகளா? என்று கேட்டுள்ளனர்.

இந்த இரு இளைஞர்களும் நேற்று அப்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் பேர்து கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இதனிடையே தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் புதிதாக காவலரண்களை அமைத்துள்ளனர்.

கொடிகாமம் சந்தைக்கு அண்மையாக இந்தக் காவலரண்கள் அமைக்கப்படுவதால் மக்கள் சந்தைக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர்.

மேலும் யாழ். தீவகம், நெடுந்தீவுக்கு பயணம் செய்வோர் ஆக்கூடிய தொகையாக 10,000 ரூபாயை மட்டுமே எடுத்துச் செல்ல சிறிலங்கா இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

"மீள்குடியேற்றம் எனும் வஞ்சக சிறை - நரக வாழ்க்கையை அனுபவிக்கும் கிழக்கு தமிழர்கள்": சண்டே லீடர்.


மீள்குடியேற்றம் எனும் பெயரில் கிழக்கு தமிழர்களை சிறிலங்கா இராணுவத்தினர் சூழ்ந்து நிற்கும் எப்போதும், வெளியேற முடியாத இடைத்தங்கல் முகாம்களில் வஞ்சமாக சிறை வைத்துள்ளதை "சண்டே லீடர்" வார ஏடு வெளிப்படுத்தியுள்ளது.

"சண்டே லீடர்" வார ஏடிட்ல் சோனாலி சமரசிங்க கூறியதாவது:

"அடிமைகளாக இருப்பது அவமானமில்லை. உரிமையாளர்களே அடிமைகளாக இருப்பதுதான் அவமானம்"- 1929 ஆம் ஆண்டு அமெரிக்க நீக்ரோக்களுக்கு காந்தி அனுப்பிய தகவல் இது. இதுதான் அமெரிக்காவின் கறுப்பர்கள் மத்தியில் காந்திக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வாசகங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பாக கிழக்கில் இடம்பெயர்ந்தோர் முகாம்களினூடே நான் நடக்கும்போது என் நினைவுக்கு வந்தது.

கிளிவெட்டியில் உள்ள அந்த முகாம்களில் உள்ள நம்பிக்கை இழந்த கண்களுடன் பச்சிளம் குழந்தைகளை தாய்மார்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். அந்தக் குழந்தைகள் மிக மோசமான கூடாரத்தில் மணலில் போடப்பட்டிருந்த விரிப்பு மீது கிடத்தப்பட்டிருந்தன. தங்களது பிள்ளைகளுடன் சில பெண்கள் ஒரு கூடாரத்தின் அருகே திரண்டிருந்தனர். சிலர் குதிக்காலால் உட்கார்ந்தும் மற்றவர்கள் நின்றும் கொண்டிருந்தன. தங்களுக்கான வாராந்தர உணவுப் பங்கீட்டை அவர்கள் பெற்றுக் கொண்டிருந்தனர். 1.4 கிலோ அரிசியும் 140 கிராம் சர்க்கரையும் வழங்கப்பட்டன. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையுடன் இருப்பவர்களுக்கு பாலும் வழங்கப்பட்டது. 18 வயதுக்குட்பட்டோருக்கு உடைகளும் காலணிகளும்கூட வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேட்பட்டோருக்கு எதுவுமே வழங்கப்பட்டுவதில்லை.
நாங்கள் கொழும்பிலிருந்து வந்த ஊடகவியலாளர்கள் எனத் தெரிந்து கொண்ட 72 வயது சோமசுந்தரம் முத்துப்பிள்ளை என்ற மூதாட்டி எங்களிடம், "எனது பேரன் கடந்த ஜுலை 22ஆம் நாளன்று இராணுவம் அழைத்துச் சென்றது. அவன் பெயர் பி.சந்திரகுமார். 35 வயது. அவருக்கு மனைவியும் பிள்ளையும் உள்ளது" என்று அழுது புலம்பினார்.
அந்த முகாமில் வசிப்போரில் பெரும்பாலானோர் விவசாய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தவர்கள். 900 குடும்பத்தினர் அங்கு தற்போது உள்ளனர் என்று அம்முகாமிலிருந்த ஆண் ஒருவர் கூறினார்.

சம்பூரில் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்தோம். அங்கிருந்து நாங்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளோம்.

எங்களை வஞ்சகமாக இங்கே பலவந்தமாக அழைத்து வந்துவிட்டனர் என்றார் அவர் கோபமாக. சம்பூருக்கான பேரூந்துகள் என்று 40 பேரூந்துகள் அனுப்பி வைக்கப்பட்ட போது நாங்கள் சொந்த பிரதேசத்துக்குத்தான் அழைத்துச் செல்கிறோம் என்று கருதினோம். ஆனால் எங்களை இங்கே இந்த இடைத்தங்கல் முகாமிற்கு கொண்டு வந்துவிட்டனர் என்று அவர் புலம்பினார்.

"எங்களால் வெளியே போகவும் முடியாது. நாங்கள் சிறைக்கைதிகளைப் போல் உள்ளோம். குறைந்தபட்சம் நாங்கள் மட்டக்களப்புக்காவது போக விரும்புகிறோம். நாங்கள் இங்கே பலவந்தமாக தங்க வைக்கப்பட்டுள்ளோம்" என்றார் அவர்.

தொடர்ச்சியான இடப்பெயர்வால் அந்த முகாமில் உள்ள சிறார்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் அவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

"மட்டக்களப்புக்கு நாங்கள் வெறுங்கையோடு சென்றோம். இப்போதும் வெறுங்கையோடுதான் திரும்பியுள்ளோம்" என்றார் ஒரு இளம் பெண்.

அடுத்து வாகரை ஆலங்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்றோம். 480 குடும்பங்களைச் சேர்ந்த 1,615 மக்கள் அங்கு வசித்தனர். தங்களது வாழ்வு மீட்சியடையும் என்று நம்பிக்கையோடு உள்ளனர்.

அப்பிரதேசத்தில் உள்ள மூன்று முகாம்களில் 3,000 பேர் வசிக்கின்றனர். அங்கே தற்காலிக பாடசாலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனத்தின் செயற்பாடு கொஞ்சம் உள்ளது. வாரம் ஒருமுறை நடமாடும் மருத்துவ சேவைக் குழுவினர் அங்கு சென்று பார்வையிடுகின்றனர். "மோசமான கழிப்பிட வசதி, சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவற்றால் இடம்பெயர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர். போசாக்கின்மை பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. வாழைச்சேனைதான் அருகாமையில் உள்ள மருத்துவமனை.
பொலநறுவையில் தங்கிவிட்டு ஏ-15 வீதியூடாக காயாங்கேணி பாலத்தைக் கடந்து வாகரை மற்றும் வெருகல் நோக்கி பயணித்தோம்.

காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு நிலங்களாக்கப்பட்டிருந்தன. மறைவிடங்களாக அவற்றை பயன்படுத்துவதைத் தடுக்க இராணுவத்தினர் இதனை மேற்கொண்டிருந்தனர்.

பனிச்சங்கேணியில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோரின் வீடுகள் என "அடையாளம்" கண்டு கொள்ளும் வகையில் வீடுகள் அமைந்திருந்தன. வான்குண்டுத் தாக்குதலினால் அக்கிராம வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

பல்குழல் உந்துகணைத் தாக்குதல்களின் சத்தங்களைக் கேட்டுக் கொண்டே பனிச்சங்கேணி பாலத்தினூடே உப்பாறு பரவைக்கடல் பகுதி மேலாக வாகரை மருத்துவமனைக்குச் சென்றோம்.

மார்ச் 15 ஆம் நாளுக்கு முன்புவரை வாகரை மருத்துவமனை உள்ளிட்ட அப்பகுதி முழுவதுமே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மருத்துவமனைக்கு சில அடிகள் தொலைவில் பெரிய இராணுவ முகாம், சோதனைச் சாவடி அமைந்துள்ளன. ஆழிப்பேரலையால் மருத்துவமனையின் ஒரு பகுதி சேதமடைந்தது. இருந்தபோதும் பிரசவம் பார்க்கும் பகுதியானது வான்குண்டுத் தாக்குதலில் அழிந்து போய் உள்ளது. 10 நோயாளர்களும் உயிரிழந்திருந்ததாக கூறினர்.

வான்குண்டுத் தாக்குதல் நிகழ்ந்தமைக்கான சாட்சியங்களாக அப்பகுதி முழுமையும் இருக்கிறது. கைவிடப்பட்ட நிலையில் பதுங்குகுழி ஒன்றும் இருந்தது. ஆனால் அது விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியாக முன்னர் இருக்கவில்லை என்று மருத்துவமனை பணியாளர்கள் மறுக்கின்றனர். இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் போது மருத்துவமனை வளாகம்தான் அகதிகள் முகாமாகவும் இருந்ததாகவும் அவர்கள் வான் குண்டுத் தாக்குதலில் இருந்து பதுங்கிக் கொள்ள அந்த பதுங்குகுழி அமைக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார். மருத்துவமனைக்கு எதிரே ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தேவாலயம் அமைந்துள்ளது. குண்டுகள் துளைத்த சுவர்களோடு அது இருக்கிறது.

அதேபோல் கருணா குழுவினர் நடமாட்டத்தையும் நாம் காண முடிந்தது. இராணுவ முகாமிலிருந்து சிறிது தொலைவில் அவர்கள் இருந்தனர். என்னதான் ராஜபக்ச அமைச்சரவையில் உள்ள சிலர் மறுத்தாலும், கருணா குழுவினருடன் அரசாங்கம் இணைந்துதான் செயற்படுகிறது.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.சி.எம்.செரீஃப் கூறுகையில், 42 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். மோதல்கள் வெடித்த பின்னர் அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டன என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

பெருந்தொகையான ஆழிப்பேரலை நிதி வந்தும் இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாமல் முகாம்களில்தான் மக்கள் வாழ்கின்றனர். 1,249 வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டு 343 வீடுகள்தான் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 193 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
மூதூர் கிழக்கில் அல்லது சம்பூரில் 11 பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. 4 ஆயிரம் குடும்பத்தினர் இதனால் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்ட இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

அதி உயர் பாதுகாப்பு வலயத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு எப்படியான உதவிகள் செய்ய வேண்டும் என்கிற உத்தரவு எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும் வெளியேறிய 4 ஆயிரம் குடும்பத்தினருக்கும் பட்டித்திடல் மற்றும் கிளிவெட்டி ஆகிய இடங்களில் இடைத்தங்கல் முகாம்களை அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு சிலர் சென்றபோதும் பலரும் மட்டக்களப்பில்தான் உள்ளனர் என்றார் அவர்.

அரசாங்கம் கூறும்படி புலிகளிடமிருந்து கிழக்கு விடுவிக்கப்பட்டாலும் வறுமையாலும் பேதங்களாலும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதம் தாங்கியோர் சூழ நிற்க இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.

கிழக்கு வெற்றி என்று அரசாங்கம் போற்றிக் கொள்வது அதனது அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கலாம். ஆனால் கிழக்கில் உள்ள அப்பாவி பொதுமக்கள் இந்த பூமியின் நரகம் போன்ற மிகக் கொடூரமாக வாழ்கின்றனர் என்று அவர் எழுதியுள்ளார்.

நன்றி>பூதினம்.

Monday, August 13, 2007

GENOCIDE OF SRI LANKAN TAMILS AND HUMAN RIGHTS VIOLATIONS.

GENOCIDE OF SRI LANKAN TAMILS AND HUMAN RIGHTS VIOLATIONS

http://www.petitiononline.com/GLOBE/petition.html

View Current Signatures - Sign the Petition


To: Japanese Government

From
The Australians for Human Rights of the Voiceless (AHRV)
PO Box 991, Strathfield, NSW-2135, Australia

August 2007

Honourable Shinzo Abe
Prime Minister of Japan

Copies to ;
Mr. Erik Solheim (Norwegian International Development Minister)
Mr. Richard Boucher (US Assistant Secretary of State)
Mr. Yasushi Akashi (Special Representative of Japan)
Mr. Andreas Michaelis (Director-General of EU Presidency)
Mr. James Morran (Acting Deputy Director-General of European Commission)

Dear Prime Minister,

GENOCIDE OF SRI LANKAN TAMILS
AND HUMAN RIGHTS VIOLATIONS

The Australians for Human Rights of the Voiceless (AHRV) is a human rights organisation registered in Australia advocating human rights issues on behalf of the oppressed people, who we consider voiceless and without the power to represent on their own behalf. In this instant case, we address you out of our serious concern for the Tamil People in Sri Lanka currently facing the threat of genocide.

You would be well aware of the continuing armed conflict between the Sri Lankan Government and the Tamil leadership, known as the Liberation Tigers of Tamil Eelam (LTTE), demanding a free and independent State for the Tamil People.

Your special envoy, Mr Yasushi Akashi, has been visiting Sri Lanka several times during the past two years with the view to bringing a negotiated settlement between the warring parties, but to no avail so far. We appreciate the sustained and abiding interest in this matter of your government and unreservedly extend our sincere gratitude for such efforts.

Since the establishment of the regime of the current executive President Rajapakse, human rights violations directed against the ordinary innocent Tamil civilians have escalated to a level comparable to the rule of tyrants of modern era like in Zimbabwe under President Mugabe and Iraq under Saddham Hussein. We are led to believe that a planned action of sophisticated genocide is being carried out by the Rajapakse regime leading to the denial of aspirations of the Tamil People to live with dignity and security in their home land.

Among the other atrocities, which the Tamil civilians presently and regularly face are:
Aerial bombing
Extra judicial killings
Abductions, Tortures and Human Rights Violations
Students, Journalists and Parliamentarians killed and harassed to silence them
Attacks on places of worship of all denominations
Denial of free movement of food and medicine
Evictions from their own traditional homes and lands
Denial of access to their means of livelihood
Prevention of children pursuing their education at all levels
Occupation of schools and religious places by the security forces.

Besides, international and local aid workers have either been murdered, abducted, or their access to internally displaced persons prevented.

For 35 years since Sri Lanka attained independence, peaceful agitations by the minority Sri Lankan Tamils went unheeded, only to be met with violent reprisals giving rise to the 25- year old armed conflict for an independent State. Successive governments, composed of the majority Sinhalese, have failed to honour agreements, however minimal in content, which were reached with certain Tamil political parties.

Recently, various international human rights organisations and Governments have condemned the Sri Lankan State sponsored terrorist activities. The Co-chairs, with the exception of Japan, decided to suspend all financial aid to Sri Lanka. Sri Lanka depends on foreign aid to finance its war machinery. Foreign aid has facilitated to the fullest extent, the diversion of other funds to implement the governmentʼs program of genocide. Japan, by continuing to provide aid to Sri Lanka, is in fact assisting it in pursuing its agenda of war and genocide.

Further, during the past five years, we are aware that huge amounts were donated by your government in good faith as financial aid for the welfare and economic development of the Sri Lankan people. You would naturally expect that an equitable proportion would have gone for the welfare of the people of the North East of Sri Lanka. We can assure you that only a little amount of your aid has reached the people of the north east as could be seen in the rehabilitation and reconstruction efforts in the Tamil speaking areas. We are confident that we would be proved correct in the event of your calling for a report from the Sri Lankan government on the expenditure on a geographical basis.

We earnestly request that your Government, like other Governments and international organisations, suspends all aid to Sri Lanka until the Sri Lankan Government puts in place definite arrangements to arrest the worsening human rights situation. Further, the Sri Lankan Government should take meaningful and positive steps to bring about a peaceful resolution of the ethnic conflict that has besieged the beautiful island nation for the last so many decades.

Thanking you,

SINGED BY SUPPORTING INDIVIDUALS AND ASSOCIATIONS

Sincerely,
The Undersigned
http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?GLOBE

மூதூர் அரபாத் நகரில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது - மக்கள் படையினரால் விரட்டியடிப்பு!!!

திருகோணமலை மூதூரில் தமிழ் மக்களை மீளக்குடியேறவிடாது தடுத்துவரும் சிறீலங்காப் படையினர், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள தமிழ்-முஸ்லீம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மூதூர் தெற்கிலுள்ள அரபா நகரில் மீளக்குடியேறியிருந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 251 முஸ்லீம்கள் படையினரின் உத்தரவுக்கு அமைவாக வெளியேற்றப்பட்டு, பாலி நகரிலுள்ள பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2006ஆம் ஆண்டு சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின்போதும் இப்பிரதேச மக்கள் இடம்பெயர்வைச் சந்தித்திருந்ததாக அந்தப் பிரதேச கிராம அலுவலர் தெரிவித்தார்.

அரபா நகர மக்களைச் சந்திக்க வருமாறு கடந்த வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்த சிறீலங்காப் படையினர், மறுநாள் காலை அரபா நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தனர்.

அரபா நகர மக்கள் வெளியேற்றப்பட்ட தகவலை திருகோணமலை பிரதேச செயலாளர் கீத்சிறி தயானந்த, சிறீலங்காப் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ஆகியோரும், மூதூர் காவல்துறையினரும் மறுத்துள்ளனர்.

தமிழ் மக்களை தொடர்ச்சியான இடப்பெயர்வு அவலத்திற்குள் தள்ளிவரும் சிறீலங்கா அரசு, தற்பொழுது முஸ்லீம் மக்களையும் குறிவைத்திருப்பதாக, சிறீலங்காவின் பிரபல முஸ்லீம் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்திருந்த நிலையில், மீள் குடியேற்றத்திற்கு என பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள், மீளக்குடியேற்றப்படாது தொடர்ந்தும் கிளிவெட்டியில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

Sunday, August 12, 2007

மனித நேயப் பணிகளை முன்னெடுக்க முடியாத நாடாக மாறியுள்ளது - மீண்டும் ஜ.நா!!!

மனித நேய பணியாளர்கள் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை மாறியுள்ளமையை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் தெளிவு படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா சபையின் மனிதாபிமான பணிகளுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோல்ஸ் உலகில் மனிதாபிமான பணியாளர்களுக்கு அதிக அச்சுறுத்தல் இலங்கையிலேயே ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

ஹோல்சின் இந்த கருத்து குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் கடுமையான ஆட்சேபம் தெரிவித்திருந்ததோடு ஜோன் ஹோல்சை பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாயக்கா பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ஜோன் ஹோல்ஸ் இலங்கையில் மனதாபிமான பணியாளர்கள் அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே பணியாற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்த கருத்தை தவறு என்று நிரூபிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் போதிய ஆதாரங்கள் இல்லை எனற்கு கொழும்பில் உள்ள ஐநாவின் வதிவிட பிரதிநிதி வலன்ரின் தெரிவித்துள்ளார்.

தமது பணிப்பாளர் தெரிவித்த கருத்து உண்மையற்றது என்றால் அதனை நிரூபிப்பதற்கும் மனித நேய பணியாளர்கள் அச்சுறுத்தல்கள் இன்றி பணி புரிகின்றார்கள் என்தை அனைத்துலகிற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி>பதிவு.

Thursday, August 09, 2007

மனித உரிமை மீறல்கள் உள்ள மிகவும் ஆபத்தான நாடு இலங்கை-பிரித்தானியா சிறப்பு நீதிமன்றம்!!!

தமிழர்களை திருப்பியனுப்பும் போது இலங்கையில் சித்திரவதைகளுக்கான ஆபத்துக்கள் அதிகம்: பிரித்தானியா சிறப்பு நீதிமன்றம்.

தமிழர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பும் பட்சத்தில் அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளுக்கான ஆபத்துக்கள் அதிகம் என்று அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பிரித்தானியாவின் அகதிகள் மற்றும் குடிவரவிற்கான சிறப்பு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.


உயர்மட்ட விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களே இலங்கையில் தடுத்து வைக்கப்படுவதாகவும், சித்திரவதை செய்யப்படுவதாகவும், விடுதலைப் புலிகளுடன் குறைந்த அளவு தொடர்புகளை உடையவர்களை சிறிலங்கா அதிகாரிகள் தடுத்து வைப்பதில்லை என்ற உள்நாட்டு அலுவலகத்தின் வாதத்தையும் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பின்வரும் பட்டியலில் கீழ் உள்ளவர்களுக்கு இலங்கையில் ஆபத்துக்கள் அதிகம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

1. தமிழ் மக்கள்

2. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் அல்லது சந்தேக நபர்கள்

3. முன்பு குற்றச்செயல்களை புரிந்தவர்கள் அல்லது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள்

4. தடுப்புக்காவலில் இருந்து தப்பியவர்கள் அல்லது பிணையில் செல்ல அனுமதித்த போது தப்பியவர்கள்

5. குற்றங்களுக்காக கையெழுத்திட செல்பவர்கள்

6. படையினரால் தகவல் தருபவராக செயற்படுமாறு கேட்கப்படுபவர்கள்

7. உடற்காயங்களுக்கு உள்ளானவர்கள்.

8. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளை செய்த பின்னர் பிரித்தானியா அல்லது வேறு நாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோர்

9. சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியோர்

10. அடையாள அட்டைகள் அல்லது வேறு ஆவணங்கள் அற்றவர்கள்

11. வெளிநாடுகளில் புகலிடத் தஞ்சம் கோரியவர்கள்

12. விடுதலைப் புலிகளின் உறவினர்கள்.

மனித உரிமை மீறல்கள் உள்ள மிகவும் ஆபத்தான நாடாக இலங்கை உள்ளதனை நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையிலிருந்து வந்து புகலிடத் தஞ்சமடையும் தமிழர்களை வெளியேற்றுவதை போத்துக்கல் அரசு அண்மையில் நிறுத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் மேலும் ஒருவரின் வழக்கு விசாரணையின் போது அவரை மறு அறிவித்தல் வரை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்த வேண்டாம் என கடந்த ஜூன் 25 ஆம் நாள் உத்தரவிட்டிருந்தது.
நன்றி>புதினம்.

Monday, August 06, 2007

வான்புலிகள்-சிங்கள அரசு நடுக்கம், திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை!!!

தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் முக்கியமான ஒரு நட்பு நாடு (இந்தியாவாக அல்லது அமெரிக்காவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது) இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளது. தனது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினால் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த இரகசிய அறிக்கையை குறிப்பிட்ட அந்த நேச நாடு தயாரித்திருந்ததாக கூறப்படுகின்றது.

தற்பொழுது இலங்கையின் படைத் துறை தளபதிகள் மத்தியிலும், ஒரு சில முக்கிய அமைச்சர்கள் மத்தியிலும் பரபரப் பாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக இந்த அறிக்கை மாறிவிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்கள்தான் இலங்கைத் தரப்பின் இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

முதலாவது அதிர்ச்சி
அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கும் முதலாவது விடயம்: விடுதலைப் புலிகள் வசம் குறைந்தது பத்து வான் கலங்களாவது இருக்கலாம்; அவற் றில் ஜெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வான்கலங்களும் அடக்கம்" என்பதுதான்.

இலங்கைப் படைத்துறைத் தலைமையினை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ள முதலாவது முக்கிய விடயம் இதுதான். ஏனெனில் வான் புலிகள் வசம் அதிகபட்சமாக சுமார் ஆறு வான் கலங்கள் வரையில்தான் இருக்கும் என்றும் அவற்றில் இரண்டு அல்லது மூன்று வான்கலங்கள் மாத்திரமே தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய அளவிற்கு தரம் வாய்ந்தவை என்று தான் இலங்கை படைத்துறைத் தலைமை கணக் கிட்டிருந்தது. கொழும்பிலும், பலாலியிலும் வான் தாக்குதல்களை மேற்கொண்ட வான் புலிகளின் அணிகளில் இரண்டு விமானங் கள் இருந்ததாகவே தெரிவிக்கப் பட்டிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் புத்தளம் வழியாக விடுதலைப் புலிகளின் மூன்று விமானங்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் அந்த மூன்றில் ஒன்று சர்வதேச பயணிகள் விமானம் என்று இலங்கையின் வான்படை அறிவித் திருந்தது. கொழும்பை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த வெளிநாட்டு விமானத்தை பின் தொடர்ந்து, வான் புலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பில் தாக்குதல் நடத்தச் சென்றதாக, பின்னர் இலங்கை படைத்தரப்பால் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதாவது புலிகள் வசம் மூன்று விமானங்கள் இருப்பதாக சிங்களத் தலைமை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

அப்படி இருக்கின்ற நிலையில் விடுதலைப்புலிகள் வசம் பத்திற்கும் அதிகமான விமானங்கள் இருப்பதான தகவல் அவர்களைப் பலத்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

அதற்கும் மேலாக விடுதலைப் புலிகள் வசம் ஜெட் எஞ்சின்கள் பொருத்தப் பட்ட வான்கலங்கள் சிலவும் இருப்பதாகக் கூறப்பட்டதானது, அவர்களை அதிர்ச்சி யின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. விடுதலைப் புலிகளின் விமானங்கள் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட வான் தாக்குதல்கள் பற்றியும் இலங்கை அமைச்சர்கள் பலரும் மலினப்படுத்தப்பட்ட செய்திகளையே வெளியிட்டிருந்தார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்த்து ஆச்சரியப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர்கள் வெறும் அரசியல்வாதிகள். இராணுவ விவகாரங்கள் பற்றி எதுவும் அறிந்திருக்காத அவர்கள் அரசியலுக்காக அப்படித்தான் கருத்துக் கூறவேண்டும். ஆனால் சிங்கள இராணு வத்தின் தளபதி திரு. சரத் பொன்சேகா முன்னர் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். "பறக்கும் பொம்மை விமானத்தில் இருந்து கைக்குண்டு போன்ற பொருட்களை வீசியெறிவதையெல்லாம் ஒரு வான் தாக்குதல் என்று கருதிவிட முடியாது" என்று ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். விடுதலைப் புலிகளிடம் ஜெட் இயந்திரங் கள் பொருத்தப்பட்ட விமானங்களும் இருப்பதான செய்தி வெளியானதைத் தொடர்ந்து பாரிய அச்சம் அவரைத் தற்பொழுது சூழ்ந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பொழுது அவர் வாயே திறப்பதில்லை. விடுதலைப் புலிகள் தம்மிடம் உள்ள பத்திற்கும் அதிகமான விமானங்களைப் பயன்படுத்தி சமகாலத்தில் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் என்ன செய்வது என்பதுதான் தற்பொழுது அவர்களுக்குள்ள பெரிய கவலை.


இரண்டாவது அதிர்ச்சி

அந்த இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது முக்கிய விடயம், இலங்கை படைத்துறைத் தலைமையை மட்டுமல்ல வான் புலிகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அந்த இரகசிய அறிக்கையைத் தயாரித்த நாட்டை யும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்துவதாகவே இருக்கின்றது.

வான்புலிகளின் இரண்டாவது வான் தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து இலங்கைப் படைத்துறைத் தலைமைக்கு ஒரு உண்மை நன்றாக விளங்கி இருந்தது. அதாவது தம்மிடம் இருக்கின்ற விமானங் களை வைத்துக்கொண்டோ, அல்லது தம் வசம் இருக்கின்ற விமான எதிர்ப்பு சாதனங்களை வைத்துக்கொண்டோ வான் புலிகளின் விமானங்களை வானில் வைத்து சுட்டு வீழ்த்த முடியாது. ஒரு பாரிய மரத்தை வீழ்த்துவதானால் அதன் வேரை வெட்ட வேண்டும். அதாவது விடுதலைப்புலிகளின் வான் கலங்கள் தரித்து நிற்கும் இடத்தில் வைத்து அவற்றை அழித்துவிடவேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். இலங்கை வான் படையினரிடம் உள்ள கிபீர் மற்றும் மிக் ரக விமானங்களினால் இந்தக் காரியத்தை இலகுவாகச் செய்துவிட முடியும். தரையில் நிற்கும் வான்புலிகளின் விமானங்களை மட்டுமல்ல அந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்ப தாகக் கருதப்படும் பிரதேசத்தையே முற்றாக அழித்துச் சாம்பலாக்கிவிடக்கூடிய அளவிற்கு இலங்கை வான்படையில் உள்ள விமானங்களால் முடியும்.

ஆனால் அவர்களுக்கு ஒரு சிறிய சிக்கல் இருந்தது. அதாவது, வான்புலிகளின் விமானங்கள் எங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்வதில்தான் அவர்களுக்குச் சிக்கல் இருந்தது.

ஏனெனில் வான் புலிகள் தங்கள் விமானங்களை எங்கு நிறுத்தி வைத்திருக் கின்றார்கள் என்று எவருக்குமே தெரியாது. வான் புலிகளது விமானங்களின் ஓடுபாதை எங்கிருக்கின்றது என்றும் எவருக்கும் தெரியாது. இரணைமேடு, மல்லாவி உட்பட வேறு சில இடங்களில் விமான ஓடு பாதைகள் இருந்ததை இலங்கை வான் படையினரின் ஆளில்லா வேவு விமானங் கள் படம் பிடித்துக் காண்பித்திருந்தன. விமான ஓடுபாதைகள் இருந்தால் அந்த இடங்களுக்கு அருகில்தான் வான் புலிகளின் விமானங்கள் நிச்சயம் தரித்திருக்கும் என்ற அடிப்படையில், புலிகளின் வான்கலன்களை அழிப்பதற்கான பல முயற்சிகளில் இலங்கை வான்படை ஈடுபட்டிருந்தது. இருந்தபோதிலும் அது கைகூடவில்லை. வன்னியின் பல பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகளால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள விமான ஓடு பாதைகள் போலியானவைகள் என்பதுடன், இலங்கை வான் படையினரைத் திசை திருப்பி ஏமாற்றுவதற்காகவே விடுதலைப் புலிகள் அவற்றை நிர்மாணித்திருந்தார்கள் என்ற உண்மை அவர்களுக்குப் பின்னரே விளங்கியிருந்தது. வான் புலிகள் தமது வான் கலங்களை அடர்ந்த காடுகளின் மத்தியில் நிலத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ள தரிப்பிடங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளதாகவும், வான் புலிகளின் நிஜமான ஓடுபாதைகள் உருமறைப்பு செய்யப்பட்டு, எவருமே கண்டுபிடிக்காத வகையில் பேணப்பட்டு வருவதாகவும் இலங்கைப் படைத் தரப்பிற்குத் தெரியவந்துள்ளது.
வான் புலிகளின் விமானங்களை அதன் தரிப்பிடங்களில் வைத்துத் தாக்கி அழிக்கும் தனது திட்டத்தை நடைமுறைப் படுத்த, வான்புலிகளின் விமானங்கள் தரையில் இருந்து புறப்படுவதை அல்லது தரை இறங்குவதை அவதானிப்பதன் மூலம்தான் அதன் இருப்பிடங்களை அறிந்துகொள்ள முடியும் என்று இலங்கை விமானப் படை திட்டமிட்டது.

வன்னி வான்பரப்பில் இலங்கை யின் விமானங்களோ, அல்லது வேவு விமானங்களோ பறந்துகொண்டு கண் காணிப்பை மேற்கொள்ளும் சந்தர்ப்பங் களில், வான்புலிகள் தமது விமானங்களை வெளியே எடுக்கமாட்டார்கள். அதற்கு மேலாக, 24 மணி நேரமும் வான்பரப்பில் தொடர் பறப்புக்களை மேற்கொண்டபடி இருப்பதும் சாத்தியமில்லாத ஒரு விடயம். எனவே இலங்கைப் படைத் துறைத் தலைமை ஒரு முடிவிற்கு வந்தது. நட்பு நாடொன்றிடம் இந்த உதவியைக் கோருவது என்று அது தீர்மானித்தது. அதாவது சாட்டிலைட் ஊடான கண்காணிப்பை மேற்கொண்டு வான் புலிகளது விமானங்களின் தரிப்பிடங்களை அறிந்து கொள்வது என்ற முடிவிற்கு வந்தது. வான் புலிகளின் விமானங்கள் அடிக்கடி பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். தாக்குதலுக்கு என்றும், புதிய விமானிகளைப் பயிற்று விப்பதற்காகவும், விமானங்களைப் பரீட்சிப்பதற்காகவும் வான்புலிகள் தமது விமானங் களை மேலெழுப்பியாக வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் பல நூறு மைல்களுக்கப்பால் விண்ணில் நகரும். "ஹப்பிள் ஸ்பேஸ்" என்ற தொலைநோக்கிகள் பொருத்தப் பட்ட நவீன தொழில் நுட்பத் துடன் கூடிய செய்மதிகளினால் வான்புலிகளது விமானங்களின் இருப்பிடங்களை இலகுவாக அடையாளம் கண்டுவிடமுடியும். இந்த எதிர்பார்ப்பில் இலங்கை அரசாங்கம் தனது நட்பு நாடொன்றிடம் செய்மதித் தகவல்களைத் தந்துதவுமாறு கோரியிருந்தது. ஆனால், தனது செய்மதிகள் சேகரித்த துல்லியமான புகைப்படங்களை அந்த நாடு பார்த்தபோது, அதற்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது, குறிப்பிட்ட அந்தச் செய்மதிகள் வன்னிப் பிரதேசத்தில் தமது கழுகுப் பார்வையைச் செலுத்தும் நேரங்களைத் துல்லியமாகக் கணிப்பிட்டு அந்த நேரங்களில் தமது அனைத்து பறப்பு நடவடிக்கைகளையும் வான்புலிகள் கவனமாகத் தவிர்த்திருந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, செயற்கைக் கோள் ஒன்று வன்னிக்கு மேலாக ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே பறப்பையும், கண்காணிப்பையும் மேற்கொள்ளும், குறிப்பிட்ட இந்த நேரத்தில் எடுக்கப்படும் படங்களை அடிப்படையாக வைத்தே விடுதலைப் புலிகளின் விமானங்களின் தரிப்பிடங்களை அறிவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், வான் புலிகள் தம்மைக் கண்காணிக்கும் பணியில் எந்தெந்தச் செய்மதிகள் ஈடுபடுகின்றன, அந்தச் செய்மதிகள் எந்தெந்த நேரங் களில் வன்னியைக் கடந்து தமது பறப்புகளை மேற்கொள்கின்றன போன்ற விவரங்களைக் கணினி மூலம் துல்லியமாகக் கணிப்பிட்டு, குறிப்பிட்ட அந்த நேரங்களில் தமது பறப்புகளைத் தவிர்த்து, எதிரியை வியப்பில் ஆழ்த்தி யுள்ளார்கள். உண்மையிலேயே பாரிய தொழில்நுட்ப வசதி களும், நுண்ணறிவும் இருந்தால் மாத்திரமே ஒரு அமைப்பால் இவற்றைச் செய்யமுடியும். விடுதலைப் புலிகள் தரப்பில் இப்படியான ஒரு பலம் இருப்பது என்பது, நான்காம் கட்ட ஈழ விடுதலை யுத்தத்தைப் பொறுத்த வரையில் சிங்களப் படை யினருக்கு மிகமிகப் பாதகமான ஒரு அம்சம் என்று அந்த இரகசிய அறிக்கையில் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளதாம்.

இலங்கைப் படைத்துறைத் தலைமைக்கு அதிர்ச்சி ஏற்பட்ட தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

நன்றி>தென் செய்தி