Monday, February 18, 2008

ஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்!!!






கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.

சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.

"சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.

கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

படங்கள்: ஏபி, ஏ.எஃப்.பி., ரொய்ட்டர்ஸ்
நன்றி>புதினம்.

Wednesday, February 13, 2008

உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல், "சமாதானம் 2005" புலிகள் பாவிப்பு!

பேரழிவு தரக்கூடிய ஷெல் அல்லது பீரங்கி வகையைச் சேர்ந்த இராட்சத ஏவு வெடி கருவி ஒன்றை மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.

"சமாதானம் 2005' என நாமம் சூட்டப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கருவி முன்னர் புலிகள் தாங்களே தயாரித்துப் பயன்படுத்திய "பஸிலன்' ஷெல் வகையை ஒத்ததாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.

"சமாதானம் 2005' என்ற இந்தப் பெயர் இதற்கு புலிகள் சூட்டியதா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அந்தப் பெயரில் அக்கருவியை இனங்கண்டு குறிப்பிடுகின்றதா என்பதை அறியமுடியவில்லை.

இந்தக் குண்டு சுமார் முந்நூறு கிலோ வெடிப் பொருளுடன் சுமார் ஐந்நூறு கிலோ எடையுடையதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ள புலனாய்வு வட்டாரங்கள் அது வந்து விழுந்து வெடிக்கும் பிரதேசத்தில் 50 மீற்றர் முதல் நூறு மீற்றர் வரையுள்ள சுற்றுப் பகுதியில் பேரழிவையும் பெரு நாசத்தையும் ஏற்படுத்தும் என்றும் கருதுகின்றனர் எனத் தெரிகின்றது.
இந்த மோட்டார் அல்லது ஷெல்லின் ஏவு வீச்சு எவ்வாறு என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அத்துடன், ஏவுகணைப் பொறிமுறையை அல்லது பீரங்கிப் பொறிமுறையை அல்லது இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தி இதனை ஏவுவதற்கான ஓர் உத்தியை தொழில்நுட்ப ரீதியில் புலிகள் உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
90 களில் "பஸிலன்' என்ற உள்ளூர் தயாரிப்பு பாரிய ஷெல் மூலம் யுத்த முனைகளில் புலிகள் பெரும் சேதத்தையும் படையினருக்குப் பீதியையும் விளைவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கடத்திவர முடியாத முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் புலிகள், தாமே தங்களுக்குரிய இத்தகைய ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு அரச உயர்மட்டத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
http://www.sudaroli.com/pages/news/today/04.htm

Tuesday, February 12, 2008

சிறிலங்கா மீதான தடைகளுக்கு ஜேர்மனி முயற்சி!!!

போரை நிறுத்தி அரசியல் தீர்வினைக் காணும் முகமாக சிறிலங்காவுடனான அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவர ஜேர்மனி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் சிறிலங்காவிற்கு சென்று அங்கே உள்ள தற்போதைய நிலை தொடர்பாக ஆராய உள்ளனர். அதன் போது போரில் இருந்து விலகி அரசியல் தீர்வை காணுமாறு அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின கேட்டுக்கொள்வார்கள்.

எனினும் ஜேர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கமானது போரை தொடருமாக இருந்தால் சிறிலங்காவுடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இருந்து அதன் பணியாளர்களில் அரைவாசி பேரை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், கொழும்பில் உள்ள ஜேர்மனி அபிவிருத்தி வங்கியை மூடுவதற்கும் ஜேர்மனி தீர்மானித்துள்ளது.

ஜேர்மனியின் இந்த கடுமையான நிலைப்பாடு அதன் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சர் ஹெடிமேரி வியக்சொரக் சோல் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜேர்மனியிலிருந்து வெளிவரும் "தஜேஸ் ஸ்பைகல்" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

போரை நிறுத்தி இருதரப்பும் அரசியல் தீர்வை காண்பதற்கு அனைத்துலக சமூகம் தமது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். தொடர்ந்து இராணுவத்தீர்வு முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடுமானால் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்துடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களில் இருந்து வெளியேற வேண்டும்.

இந்த நடவடிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் மீது பொருளாதார அழுத்தங்களை கொண்டுவர உதவும். ஐரோப்பிய ஒன்றியம் தற்போதைய நிலமைகளை ஏற்றுக்கொள்ளுமாயின் இந்த ஒத்துழைப்புக்களில் பயன் இருக்காது.

புடவைப் பொருட்களையே சிறிலங்கா பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புடவைகளின் பெறுமதி ஆண்டுக்கு 1.2 பில்லியன் டொலர்களாகும். இவை தவிர அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளும் உண்டு.

இது தொடர்பில் நாம் அமெரிக்காவுடனும் கலந்தாலோசிக்க வேண்டும். கடந்த வாரங்களில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவும் தீவிரமான போக்கை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு வருடங்களில் சிறிலங்காவுடன் ஒத்துழைப்புக்களுக்கான உடன்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதற்குரிய நிதியான 38 மில்லியன் ஈரோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையிலும் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பன் கீ மூன் சிறிலங்காவின் நிலைமைகளை ஆராய சிறப்புத் தூதுவரை அனுப்ப வேண்டும்.

சிறிலங்காவில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்து வருவதை தொடர்ந்தே நாம் அங்குள்ள ஜேர்மனி அபிவிருத்தி வங்கிகளை மூடவும், பணியாளர்களை வெளியேற்றவும் தீர்மானித்துள்ளோம் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

Sunday, February 10, 2008

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த எம்.ஜி.ஆரை மிரட்டினார் ராஜீவ்: புலவர் புலமைப்பித்தன!!!


இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளியாகும் "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் இடம்பெற்றுள்ளதாவது:

"புலிகள் நடமாட்டம்" தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், "ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்" என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம்.

"அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாயமல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல" என்கிறீர்களே. எப்படி?

"மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடி கோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) "ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டார். தம்பி கொஞ்ச நேரம் யோசித்து "நூறு கோடி தேவைப்படும்" என்றார். "சரி பார்க்கலாம்" என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர்.

அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்டமன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒரு காலத்தில் ஜெ.வும் புலிகளை ஆதரித்தவர்தான். 1989 ஆம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ் ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜொனியை பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார்.

ஒருநாள் நான் புரட்சித்தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி "நான் லண்டன் போய் வரட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆமாம். ஜொனி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்' என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப்போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள்.

இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து "ஒரு கொலையை" மட்டும் வைத்துக்கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள். ஒரே சரக்கை எத்தனை காலத்துக்குத்தான் விற்பனை செய்வது?"

தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே?

"அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், "ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள்" என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம். அந்த நிலையில் வேறு வழியில்லாமல்தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29 ஆம் திகதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஒரு பாராட்டு விழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர்., ஜூலை 31 ஆம் திகதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை 5:00 மணியளவில் இராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் தாமஸ்மலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழிமறிக்கப்பட்டது. "அமெரிக்காவுக்குப் போகக்கூடாது. விழாவில் பங்கேற்கவேண்டும்" என அறிவுறுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ராஜீவ் காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம்கோத்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ் காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது. இந்திய இராணுவத்தால் ஈழப் பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ் காந்தியிடம் பொன்மனச்செம்மல் அழாத குறையாக முறையிட்டார்.

அதற்கு ராஜீவ் காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை.

அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா?

"நான் ராஜீவ் கொலையை இரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், "இஸ்மாயில்" என்று பச்சை குத்திக்கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேயின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை?

இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை.

அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா? மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, "உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?" என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. "நீ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய் விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு" என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீவ் காந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை, உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?"

ஒரு காலகட்டத்தில் ராஜீவ் காந்தியே புலிகளுடன் சமரசம் செய்ய முன்வந்தார் என்கிறார்களே?

"உண்மைதான் அது. இந்திய இராணுவம் புதைமணலில் காலை விட்டு மாட்டிக்கொண்டது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, புலிகளோடு சமரசம் செய்து கொள்ள ராஜீவ் விரும்பினார். ஒருநாள் என் நண்பர் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் அழைப்பையேற்று மந்தைவெளியில் உள்ள அவரது அலுவலகத்துக்குப் போனேன். புலிகளுடன் ராஜீவ் போர்நிறுத்தம் செய்ய விரும்புகிறார். இதுபற்றி டெல்லியில் ராஜீவ் காந்தியோடு சிதம்பரம் பேசிவிட்டு, எஸ்.ஜி.வினாயகமூர்த்திக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். நீங்கள் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த இயக்கத்தின் சார்பில் நீங்கள் பேச முடியுமா?" என்றார்.

நான் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டு உடனே திருவான்மியூருக்குச் சென்றேன். அங்கே வீட்டுக்காவலில் இருந்த தம்பி கிட்டு, கோலை ஊன்றியபடி வந்து நலம் விசாரித்தார். போர் நிறுத்த கோரிக்கை பற்றி கிட்டுவிடம் கூறினேன். "அண்ணே! உங்களுக்குத் தெரியாதா? இந்தியாவை எந்தக் காலத்திலாவது நாம் எதிர்க்க நினைத்திருப்போமா? இந்தப் போரை நாம் விரும்பியா ஏற்றுக் கொண்டோம்? இது நம்மீது திணிக்கப்பட்ட போர்" என்று வருத்தப்பட்டார்.

"சரி. இயக்கத்தின் சார்பில் நான் டெல்லி சென்று சமரசப் பேச்சில் கலந்து கொள்ள முடியுமா?" என்றேன். கிட்டு உடனே உள்ளே சென்று வவுனியாவில் இருந்த தம்பியிடம் (பிரபாகரனிடம்) பேசி அனுமதி பெற்றார். "இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கை இணைத்து "தமிழீழத் தாயகம்" என அறிவிக்க வேண்டும். ஈழப்பகுதிகளில் உள்ள இருநூறு சிங்கள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழர் மறுவாழ்வு நிதியாக நூறு கோடி ரூபாய் நிதி தரவேண்டும் என்று கோரிக்கைகளை கிட்டு எழுதித் தந்தார். முக்தா சீனிவாசனிடம் போய்ச் சொன்னேன். அவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

இரண்டு நாள் கழித்து ஒரு நாள் மாலை டெல்லி புறப்படத் தயாரானேன். அன்று பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2:30 மணிக்கு வீடு வந்தேன். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவி தமிழரசிக்கு நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனே விஜயா மருத்துவமனையில் சேர்த்து நான்கைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். ஒத்திவைத்த டெல்லிப் பயணம் இரத்தானது. ஒரு சம்பவம் தவறிப்போனதால் ஒரு சரித்திரமே தவறிப்போனதே என்று வேதனையடைந்தேன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு முக்தாவே சாட்சி. பழங்காலத்தில் மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது புலவர்கள் சந்து (சமரசம்) செய்ததுபோல இந்த ஏழைப்புலவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தும் அது கைநழுவிப்போனது."

புலிகளைக் காரணம் காட்டி காங்கிரசார் தி.மு.க. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்களே?

"பாவம். காங்கிரஸ்காரர்களுக்கு நீண்டகாலமாக ஆட்சிப்பசி, அதிகாரப்பசி இருக்கிறது. நாற்பத்தியொரு ஆண்டுகாலமாக தமிழகத்தில் நாட்டாமை செய்யும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள். இப்போது கூடு விட்டுக் கூடு பாய (கூட்டணி மாற)த் துடிக்கிறார்கள். அதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? அந்த வகையில் விடுதலைப் புலிகள் அவர்களுக்கு உதவி இருக்கிறார்கள். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிற பாசமிகு தோழர்களே! நீங்கள் சத்தியமூர்த்தி பவனை யுத்த பூமியாக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்."
நன்றி>புதினம்.

Wednesday, February 06, 2008

எமது போராட்டம் புதுடில்லியில் ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியிருக்கின்றது: கொளத்தூர் தா.செ.மணி!!!


இந்திய அரசே! இலங்கைக்கு ஆயுத உதவி வழங்காதே என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடில்லியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒரு சிறு பொறியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் கனடிய தமிழ் வானொலியில் (CTR) ஒலிபரப்பாகும் "வணக்கம் ரொறன்றோ" நிகழ்ச்சியில் இன்று புதன்கிழமை தொலைபேசியூடாக பங்கேற்று கொளத்தூர் மணி தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:

பெரியார் திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் தமிழீழச் சிக்கல் குறித்து எமக்கு பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.

இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு "இந்திய அரசே! இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே!" என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டும் முன்வைத்து தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெறப்பட்ட ஏறத்தாழ 7 லட்சம் கையெழுத்துகள் கொண்ட கையெழுத்துப் படிவங்களை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கச் செல்வதற்கு முன்பாக அதனை ஜனநாயக முற்போக்குச் சக்திகளின் கவனத்தை ஈர்க்க மக்கள் மத்தியில் ஒரு பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.

எமது ஒற்றைக் கோரிக்கை இந்திய அரசே! இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என்பதுதான்.

புதுடில்லியிலிருந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய நிகழ்வில் பங்கேற்றனர்.

மராட்டிய மாநிலம் மும்பையிலிருந்தும் கர்நாடகம் மாநிலம் பெங்களுரிலிருந்தும் பெரியார் திராவிடர் கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு ஏறத்தாழ புதுடில்லி வாழ் பொதுமக்கள் என்கிற அளவில் 50 பேர் கலந்து கொண்டனர்.

இன்று முற்பகல் 11:30 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக் குழுவில் இருக்கின்ற வழக்கறிஞர் துரைசாமி முதலில் தொடக்க உரை நிகழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோரும் தமிழ்நாடு மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக நான் உரையாற்றினேன். அதன் பின்னர் பேரணி தொடங்கியது. பேரணி தொடக்கத்தின் முன்பாக

இந்திய அரசே! இந்திய அரசே!
இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!
எங்கள் தமிழரைக் கொல்லாதே!

எங்கள் வரிப்பணத்தில்
எங்கள் தமிழர்களைக் கொல்ல
ஆயுதம் கொடுக்காதே!

கொடுக்குது கொடுக்குது
காந்திதேசம் கொடுக்குது!

கொல்லுது கொல்லுது
புத்ததேசம் கொல்லுது!

அங்கே எம்
தமிழர்களைக் கொல்லுது!

இலங்கையிலே நடக்கிற கொடுமைகளை
உலக நாடெல்லாம் கண்டிக்குது
இந்தியாவோ ஆயுதம் கொடுக்குது
உடனே அதனை நிறுத்திடு!

ஆகிய முழக்கங்கள் தமிழில்- ஆங்கிலத்தில்- ஹிந்தியில் எழுப்பப்பட்டன.

இந்தியத் தலைமை அமைச்சரான பிரதமரிடம்தான் அந்தக் கையெழுத்துப் படிவங்களை கையளிக்க இருந்தோம். ஆனால் அவரைச் சந்திப்பதற்கு எமக்கு நேரம் ஒதுக்கித் தருவதில் சிக்கல்கள் இருந்த காரணத்தால் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். இன்று மாலை 4:30 மணிக்கு அவர் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால் வேறு சில சிக்கல்கள் காரணமாக நாளை முற்பகல் 10:00 மணி முதல் 10:15 வரை இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்தில் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள். தேவைப்பட்டால் நேரத்தை கூட்டிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் கையெழுத்துப் படிவங்களை கையளிக்கின்ற போது, புவியல் சார் இந்தியாவின் அரசியல் நலன்களைக் கருத்தில் கொண்டு நாங்கள் உதவி செய்வதாக அவர் கூறும் நிலையில் இந்தச் சிக்கலில் சிறிலங்காவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் உதவுகிற நிலைமையைக் கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளோம்.

அதேபோல். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த இந்திரா காந்தி மேற்கொண்ட நிலைப்பாடுகளையும் எடுத்துக்காட்டி தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக சிறிலங்காவிற்கு ஆயுதங்களைக் கொடுப்பதன் மூலமாக் ஒரு காலத்தில் அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்த இந்தியா, வழிதவறப் போய்க்கொண்டிருப்பதாக உலக நாடுகள் எண்ணிக் கொண்டிருப்பதனையும் நாம் சுட்டிக்காட்ட எண்ணிக்கொண்டு இருக்கின்றோம்.

இந்திய அரசின் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றிருப்பதன் மூலமாக ஒரு பெரும் கொள்கை மாற்றத்தை- தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று நாம் உறுதியாக நம்பவில்லை.

ஆனால் இப்படிப்பட்ட எந்தக் கோரிக்கையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படவில்லை.

தமிழ் மண்ணைத் தவிர வேறு பகுதிகளில் இது தொடர்பிலான கவன ஈர்ப்பு- கருத்து ஈர்ப்பு செயற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதனை மாற்றுகின்ற ஒரு புதிய தொடக்கமாக மட்டுமே இந்த நிகழ்வு அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

இதன் தொடர்ச்சியாக புதுடில்லியில் உள்ள முற்போக்கு சக்திகள்- புரட்சிகர அரசியல் எண்ணம் கொண்ட சக்திகள் -மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களிடமும் இந்தப் பிரச்சனையை விளக்கி புரியவைத்து அவர்களுடைய தலையீட்டையும் கொண்டுவருவதற்கு ஒரு பெரும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதின் தொடக்கமான இதனை நாம் கருதுகிறோம்.

பொதுவாக இந்திய நாடாளுமன்றத்தைச் சுற்றி உள்ள பகுதிகள் ஏறத்தாழ ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியாகத்தான் காணப்படுகின்றது.

அலுவலர்களும் உணவு விடுதிக்காரர்களும்தான் பெரும்பாலும் இருக்கின்றனர்.

ஆனாலும் கூட அந்த நேரத்தில் முதலில் எங்கள் தோழர்களின் குழந்தைகள்- பெண்கள் ஈழத்தில் நடைபெறுகின்ற தாக்குதலை நினைவூட்டும்படியாக காயக்கட்டுகளை தங்களது தலையில் நெற்றியில் பதியவைத்துக் கொண்டு- கால்கள் பாதிக்கப்பட்டவரைப் போலவும் சதைகள் பிய்ந்து தொங்குவது போலவும் தங்களை காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளோடு வந்தனர்.

அதனை அவர்கள் கண்டபோதுதான் எங்கள் பக்கம் வந்தனர். அப்போது எங்கள் முழக்கங்கள் அவர்களிடத்திலே சென்றடைந்திருக்கின்றது.

கோரிக்கைகள் தொடர்பான பதாகைகள்- ஈழத்தில் நடைபெறுகின்ற படுகொலைகள் தொடர்பிலான படங்களைக்கொண்ட பதாகைகளும் எடுத்து வரப்பட்டன.

அவை ஒரு புதிய எண்ணத்தை உண்டாக்கியிருக்கக்கூடும்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் புதுடில்லியில் கல்லூரியில் கல்வி கற்கக்கூடிய தமிழரல்லாத பிறமொழி பேசும் மாணவர்கள் தொடர்ந்தும் எங்களுடன் பேசி வருகின்றனர். ஒரு கிளர்ச்சியை இங்கு உருவாக்கியிருக்கின்றது என்று சொல்லலாம்.

புதுடில்லியில் உள்ள செய்தி நிறுவனங்கள் இந்தச் செய்திகளைப் பதிவு செய்து சென்றிருக்கின்றனர். நாளை அவை வெளியாகக் கூடும்.

தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகள் எல்லாம் இந்த ஊர்வலத்தை விரிவாகக் காட்டிக் கொண்டிருப்பதாக தமிழ்நாட்டிலிருந்து எங்களுக்கு தொலைபேசிச் செய்திகள் வருகின்றன.

எனவே ஒரு சிறு தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றது- ஒரு சிறு பொறியை உண்டாக்கியிருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம்.

இந்த மாத இறுதியில் நாடாளுமன்றம் கூடுகின்றபோது இந்தப் பகுதியில் ஒருவார காலமாவது தங்கியிருந்து இதில் தொடர்புள்ள அறிஞர்களையும் அழைத்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் இதனை விளக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருக்கின்றோம். அது ஒருவேளை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தமிழக நிலைமை

பொதுவாக, ஈழச் சிக்கல் என்பது தமிழ்நாட்டில் விவாதிக்கப்படுகின்ற போது அதனைத் தீர்த்து வைக்கின்ற நோக்கம் இருக்காது. தங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம்தான் இருந்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இது.

தங்களுக்குப் பேச செய்தி கிடைக்காத காங்கிரஸ் கட்சியினர் இதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களது அரசியல் துணை தேவை என்று கருதுகின்ற அரசு அதற்கு கொஞ்சம் தலையாட்டி சம்மதித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிற சூழல் உள்ளது.

ஆனால்

ஈழத் தமிழர்களுக்காக பட்டினிப் போராட்டம் நடத்தினால் கூட ஏதோ தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக நடத்துகின்றார்கள் என்று கூறி தடை செய்ய வேண்டும் என்று கேட்கிற காங்கிரஸ் கட்சி-

அதனைத் தடை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கின்ற காங்கிரஸ் கட்சி

இப்போது டில்லியில் அந்தக் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் பகுதிகளில்- நாட்டின் தலைநகரில் ஊர்வலம் நடத்த அனுமதித்திருக்கும் நிலையில்

தமிழ்நாட்டில் இனி அப்படிப்பட்ட எதிர்ப்புக்குரல் எழுப்பமாட்டார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.

தமிழ்நாடு அரசும் இதனை சுட்டிக்காட்டி அவர்களுக்கு மறுப்புக்கூற ஒரு வாய்ப்பாக அமையும் என்று நாம் நம்புகின்றோம்.

இந்தியாவின் தற்போதைய நிலைமையும் எதிர்காலமும்

இந்தியா- இந்தியாவை இப்போது வழிநடத்துகிற அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் இந்த சிக்கல் குறித்து முடிவெடுக்கின்ற உரிமையை தங்கள் கையில் வைத்துக் கொள்ளாமல்- அதிகார வர்க்கத்தின் கையில் விட்டிருப்பதுதான் பேரவலமாக இருக்கிறது.

அதனை மாற்றி அரசியல் தலைவர்கள் அந்த அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும்

தமிழர் சிக்கல் என்கிறபோது தமிழ்நாட்டுத் தலைவர்களினது கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற போக்கே காணப்படாமல் இருப்பதும்

தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதில் உறுதியாக இருந்து கூட்டணியில் இருக்கின்ற தலைவர்களும் உறுதியாக வலியுறுத்தாத சூழலும்தான் இப்போது உள்ளது. உண்மைதான்.

ஆனால்

இது எப்போதும் மாறாதது என்று சொல்ல முடியாது.

காரணம் இப்போது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியாக இருக்கிற அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகள் இறுதியில் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் என்பதனை உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.

அந்தச் சூழலில் நாங்கள் எடுக்கின்ற போராட்டங்கள் ஒரு தாக்கத்தை ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றோம் என்றார் அவர்.
நன்றி>புதினாம்.

சிறிலங்காவுக்கான ஆயுத உதவியைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான ஆர்ப்பாட்டம்!!!

சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்திய நாடாளுமன்றம் முன்பாக இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.

பேரணி நடைபெற்ற பகுதி எங்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தினது இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் பதாகைகளாக தொங்க விடப்பட்டிருந்தன.

இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து-

இனப்படுகொலைக்குத் துணை போகாதே!

ஆயுத உதவி வழங்காதே!

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை ஒரு பாரிய கவன ஈர்ப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெருந்திரளாக அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்கக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ள படிவங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பெரியார் திராவிடர் கழகத்தின் இன்று மாலை 4:00 மணியளவில் நேரில் கையளிகக் உள்ளனர்.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

- தமிழீழ நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.

- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை இந்திய அரசிடம் நாங்கள் முன்வைக்க வேண்டியுள்ளது.

இருப்பினும் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்காதே என்ற ஒற்றைக் கோரிக்கையையே இப்போது நாம் வலியுறுத்துகின்றோம்.

இந்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எதிராக இந்திய அரசே இராணுவ வழித் தீர்வுக்காக இராணுவ உதவிகளை வழங்கும் முரண்பாட்டை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழ்நாட்டினது அனைத்து கட்சியினரும்- மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட- தமிழ்நாட்டு அமைச்சர்கள்- தமிழகத்தின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்துத் தரப்பு தமிழ்நாட்டு மக்களும் இந்த கோரிக்கைகாக கையெழுத்திட்டுள்ளனர். இந்த கையெழுத்தியக்கத்தை முன்னெடுத்தது பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதும் இந்தக் கோரிக்கை இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கை என்றார் அவர்.

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில், அமைதி வழித் தீர்வை வலியுறுத்திக் கொண்டே இராணுவ வழித் தீர்வுக்கான ஆயுத் உதவிகளை செய்யக் கூடாது என்று நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். சிறிலங்கா அரசுக்கான ஆயுத உதவிகளை தொடர்ந்தும் மத்தியிலே ஆளும் காங்கிரசு அரசாங்கம் வழங்குமேயானால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்பது வேரடி மண்ணோடு வீழ்ந்துபோய்விடும் என்று புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு நாம் சொல்லவும் விரும்புகிறோம் என்றார்.
நன்றி>புதினம்.

Monday, February 04, 2008

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி!!! கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் !!!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி: முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர!!!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லாம் தனக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளிப்பதாகவும் கருணாநிதி கூறியிருககிறார்.

கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டஅமைச்சர் துரைமுருகன் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுககப்படும் என எச்சரித்திருந்தார். இருந்தும் தொடர்ந்து காங்கிரசார் இவ்வாறு குறைகூறுகின்றனர், இதற்குமேலும் இப்பிரச்சாரம் தொடர்ந்தால் பதவியிழக்கவும் தயார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் முதல்வரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் தயங்குகின்றனர். சிறிதுநேரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் தெரிவிப்பது போன்று நாகர்கோவிலில் எதையும் அவர்கள் பேசவில்லையென்றும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுககு ஆதரவாக எவரும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.

தொடர்ந்து கருணாநிதி பேசியது குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நன்றி>BBC

Sunday, February 03, 2008

சிறீலங்காவின் 60வது சுதந்திர நாளை தமிழீழ மக்கள் துக்க நாளாக் கடைப்பிடிக்க முடிவு!!!

சிறீலங்காவின் சுதந்திர நாள், வரும் திங்கட்கிழமை உலகெங்கும் வாழும் தமிழீழ மக்களால் துக்க நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. அன்று தமது இல்லங்களில் இருந்து வெளியில் செல்லும் ஒவ்வொரு புகலிட தமிழீழ மக்களும், கறுப்புப் பட்டிகளை அணிவதற்கு முடிவு செய்திருப்பதோடு, பரவலாக எதிர்ப்பு போராட்டங்களையும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இருக்கின்றனர்.
நன்ரி>பதிவு.

Friday, February 01, 2008

பாடசாலைச் சிறாரின் பேருந்து மீது சிறிலங்கா அரசின் இனவெறியாட்டம், கானொளியில்.

மன்னாரில் நடைபெற்ற, பாடசாலைமாணவரின் பேருந்துமீதான கிளைமோர் குண்டுத்தாக்குதல்.