Saturday, February 03, 2007

லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் பாரிய அடையாள ஒன்றுகூடல்!!!

-"பிரித்தானிய தமிழ் ஒன்றியம்"-

இலங்கையை பிரித்தானிய சாம்ராஜ்யம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கையில் ஒப்படைத்து அறுபது வருடங்களாக தமிழ் மக்கள் பாரிய இனவழிப்பிற்கு உட்பட்டு வருவதை நினைவு கூர்ந்தும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியாவை அங்கீகரிக்கக் கோரியும் வரும் திங்கள் கிழமை(05/02/07) லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பாரிய அடையாள ஒன்றுகூடல் நடைபெற உள்ளது.

இனவழிப்பு, பட்டினிச்சாவு, காணாமல் போதல் என்று சொல்லொனாத் துயரங்களை ஈழத்து தமிழ் மக்கள் அனுபவித்து வரும் நிலையில், எமது துயரங்களை உலகிற்கு எடுத்துரைப்போம். அனைவரும் திரளாக ஒன்று கூடுவோம்!!

இவ்வொன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் ஒன்றியம்" ஒழுங்கு செய்துள்ளதாக அறிய முடிகிறது.

தொடர்புகளுக்கு: 07751717097, 07932400271, 07967565477,07958083456, 07861690408, 07941694413, 07904183286, 07793942910.

No comments: