Monday, March 19, 2007

ஐநாவின் கவனத்தை ஈர்க்க உங்கள் கையொப்பம் அவசரம்!!!

அமெரிக்க செனட்டர்களையும், ஐநா பிரதிநிதிகளையும் சந்தித்து ஈழப் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைக்கும் முக்கிய பணியில் தமிழ் புத்திஜீவிகள் இறங்கியுள்ளனர்.



பத்தாயிரம் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான கையொப்பங்களே பெறப்பட்டுள்ளன. பெயர் மட்டும் போதுமானது. அதைக்கூட விரும்பினால் நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் உங்கள் ஆதரவை வழங்கும் வகையில் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அவசியமானதும் அவசரமானதும் கூட.

தமிழ் மக்களின் கையொப்பம் அவசர தேவையாக உள்ளது. உலகத் தமிழர்களின் ஆதரவு ஈழப் பிரச்சனை தொடர்பாக எந்தளவுக்கு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட இந்த விண்ணப்பபங்கள் இலக்க ரீதியான ஆதாரத்தை வழங்குகின்றன.

இதனால், தமிழர்கள் அனைவரும் இந்த இரு இறுதி நாட்களையும் பயன்படுத்தி, உங்கள் நண்பர்கள் உறவினர்களையும் இவ் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, ஈழப் பிரச்சனையின் சர்வதேச கவனத்தைத் திருப்பும் முயற்சிக்கு ஆதரவை வழங்குங்கள்.

CLICK HERE
http://www.gopetition.com/petitions/international-donors-take-action-with-sri-lanka.html

_______________________________________________________________________

உதவி வழங்கும் நாடுகளுக்கு விண்ணப்பம்: உங்கள் கையொப்பம் அவசர தேவை

சில வாரங்களுக்கு முன் ஐ. நா. செயலாளர் நாயகம் பன் கி மூன் அவர்களுக்கு ஈழ மக்கள் நெருக்கடி தொடர்பாக அனுப்பிய விண்ணப்பத்தில் நீங்கள் 6,000 பேர் வரை கை ஒப்பம் இட்டமைக்கு, அதன் ஆரம்ப கர்த்தாவான மருத்துவக் கலாநிதி எலின் ஷாண்டர் அவர்கள் மனதார்ந்த நன்றி தெரிவிக்கிறார்.

அவ் விண்ணப்பப் பிரதிகள் ஐநா மனித உரிமைச் செயலர் லூயிஸ் ஆபர் உட்பட மேலும் 12 ஐநா அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதே அமெரிக்க மருத்துவர் ஷாண்டரும் சக மனித நேய ஆர்வலர் லீசா ஹான்சன் என்பவரும் சிறிலங்காவுக்கு பண உதவி புரியும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அவசர விண்ணப்பம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த கை எழுத்து வேட்டையிலும் உங்களை ஆர்வமுடன் பங்கு கொள்ளுமாறு கேட்டு நிற்கிறார்கள். இது புதிய தளம் என்பதுடன், பணம் எதுவும் கட்டவேண்டிய தேவையில்லை.

விரும்பியவர்கள், கீழே உள்ள இணைப்பை அழுத்தி உள்செல்லவும்.

CLICK HERE
http://www.gopetition.com/petitions/international-donors-take-action-with-sri-lanka.html
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

தகவலுக்கு நன்றிகள், எம்மால் முடிந்ததை செய்வோம்.