Monday, March 12, 2007

உதவி வழங்கும் நாடுகளுக்கு விண்ணப்பம்: உங்கள் கையொப்பம் அவசர தேவை!!!

சில வாரங்களுக்கு முன் ஐ. நா. செயலாளர் நாயகம் பன் கி மூன் அவர்களுக்கு ஈழ மக்கள் நெருக்கடி தொடர்பாக அனுப்பிய விண்ணப்பத்தில் நீங்கள் 6,000 பேர் வரை கை ஒப்பம் இட்டமைக்கு, அதன் ஆரம்ப கர்த்தாவான மருத்துவக் கலாநிதி எலின் ஷாண்டர் அவர்கள் மனதார்ந்த நன்றி தெரிவிக்கிறார்.

அவ் விண்ணப்பப் பிரதிகள் ஐநா மனித உரிமைச் செயலர் லூயிஸ் ஆபர் உட்பட மேலும் 12 ஐநா அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதே அமெரிக்க மருத்துவர் ஷாண்டரும் சக மனித நேய ஆர்வலர் லீசா ஹான்சன் என்பவரும் சிறிலங்காவுக்கு பண உதவி புரியும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அவசர விண்ணப்பம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த கை எழுத்து வேட்டையிலும் உங்களை ஆர்வமுடன் பங்கு கொள்ளுமாறு கேட்டு நிற்கிறார்கள். இது புதிய தளம் என்பதுடன், பணம் எதுவும் கட்டவேண்டிய தேவையில்லை.

விரும்பியவர்கள், கீழே உள்ள இணைப்பை அழுத்தி உள்செல்லவும்.
http://www.gopetition.com/petitions/intern...-sri-lanka.html


நன்றி>புதினம்

1 comment:

Anonymous said...

நல்லதொருமுயற்சி