Thursday, March 08, 2007

கருணா ஒட்டுக்குழுவிலிருந்து விலகி, வெளிநாட்டுக்கு ஓடுவோரை கொலை செய்யும் கருணா!!!


அண்மையில் கொழும்பு காந்தானை மற்றும் அநுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட சடலங்களும் கருணா ஒட்டுக்கும்பலின் முன்னால் உறுப்பினர்களினதே என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருணா ஒட்டுக்குழுவிலிருந்து விலகி வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடியவர்களே, இவ்வாறு கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருப்பதாக, அவர்களது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இதேவெளை சிறிலங்காப் படையினரின் துணையின்றி, பல சோதனைச் சாவடிகளைக் கடந்து எவ்வாறு கந்தானைப் பகுதியில் சடலங்கள் வீசப்பட முடியுமென பல அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மட்ட்க்களப்பில் கருணா ஒட்டுக்கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட சிறார்களில், ஒட்டுக்கும்பலுடன் இணைய மறுத்த பலர் படுகொலை செய்யப்பட்டு வீசியெறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilenews.com/?subaction=showf...amp;ucat=1&

No comments: