Monday, March 05, 2007

தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள்.

சிறிலங்காப் படையினரின் கடல்வழி வழங்கலை தடுப்பதற்கான தாக்குதல்களை உடனடியாகவே தொடங்ககவுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் பயணிப்பதை தவிர்க்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.


யாழ். குடாநாட்டில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்து எனக்கூறிக்கொண்டு குறைந்தளவிலான பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பெருமளவு படையினரையும் ஆயுதத் தளபாடங்களையும் சிறிலங்காப் படையினர் கப்பல்களில் கொண்டு செல்கின்றனர். பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி படையினர் பாரிய படையெடுப்புகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றது.

படையினரின் கடல்வழி வழங்கலை தடுப்பதற்கான தாக்குதல்களை உடனடியாகவே ஆரம்பிக்கவுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் பயணிப்பதை தவிர்க்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வேண்டுகோளில் தெரிவித்திருக்கின்றனர்.
www.tamilwin.com

No comments: