Thursday, April 12, 2007

மன்னார் முறியடிப்புச் சமர்: கைப்பற்றப்பட்ட 8 சிறிலங்கா இராணுவச் சடலங்களும் கையளிப்பு.





மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட எட்டு சிறிலங்கா இராணுவத்தினரது சடலங்களும் அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத் தரப்பிடம் கையளிக்கப்படுவதற்காக இன்று வியாழக்கிழமை அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவிடம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளன.

மன்னார் முள்ளிக்குளம் பகுதி நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னகர்வு நடவடிக்கை விடுதலைப் புலிகளால் நேற்று காலை முறியடிக்கப்பட்டது.

இம்முறியடிப்புத் தாக்குதலில் 8 இராணுவத்தினரின் உடல்கள் மற்றும் ஆயுதங்களைக் கைவிட்டு சிறிலங்கா இராணுவத்தினர் பின்வாங்கியிருந்தனர்.
நன்றி>புதினம்.

No comments: