Thursday, April 19, 2007

கடற் புலிகள் பலமானவர்கள் - அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் மிகப் பலம் பெற்றிருப்பதாக, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் தெரிவித்துள்ளார்.

கடற் புலிகள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு அண்மையிலுள்ள சீனக் கடற் படையும் பலமடைந்து வருவதாகவும், இதனால் இந்தியா போன்ற அண்மையிலுள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் கூறியிருக்கின்றார்.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி, ஊடகர் மத்தியில் பேசும்போது இந்தக் கருத்தினை வெளியிட்டார்.

இந்தியாவில் 4 நாட்கள் தங்கியிருக்கும் அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தவுள்ளார்


http://www.pathivu.com/

No comments: