Tuesday, April 17, 2007

கனேடியப் பிரதமர் தமிழ் மக்களுக்கு வாழ்த்து - சிங்களவர்கள் சீற்றம்!

கனடாவின் பிரதமர் ஹார்பர் தமிழ் மக்களுக்கு மட்டும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதற்கு சிங்கள மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புதுவருடமாக வர்ணித்து கனடியப் பிரதமர் ஹார்பர் கடந்த 14ஆம் நாள் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், கனடாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கனேடிய தமிழ் மக்கள் ஆற்றும் பணிக்கும் பிரதமர் தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருந்தார்.

சித்திரைப் புத்தாண்டை தமிழ் மக்கள் மட்டுமன்றி, சிங்களவர்களும், ஆசியாவிலுள்ள இந்துக்கள் செறிந்து வாழும் நாடுகளில் பலவற்றிலும் கொண்டாடப்படுவதாகவும் சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனேடியப் பிரதமர் ஹார்பர் தமிழ் மக்களுக்குக் கூறிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அரசியலாக்கி, கனேடிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையில் கனடாவிலுள்ள சிறீலங்கா தூதரகமும், சிங்களவர்களும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நன்றி>பதிவு

No comments: