Friday, April 20, 2007

சிறிலங்காவிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது இந்தியா!!!

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்குவதில்லை என்ற உறுதிமொழிகளை மீறி சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உயர் ரக வெடிமருந்து மற்றும் ரிபிரி வகை 40 மி.மீ எறிகணை செலுத்திகளுக்குரிய குண்டுகள் உட்பட பெரும் தொகையான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியுள்ளது.


மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் இதன் மூலம் புறக்கணித்துள்ளது.

சிறிலங்காவிற்கு ஆபத்துக்கள் அற்ற தற்பாதுகாப்பு உபகரணங்களையே வழங்குவது என்ற உறுதிமொழிகளில் இருந்து மீறிய மத்திய அரசாங்கம் பின்வரும் நாசகார ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது.

அந்த ஆயுதங்களின் விபரம்:

கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் - 30

'வாரகா' என்ற கரையோர ரோந்துக் கப்பல் - 01

40 மி.மீ எறிகணை செலுத்திக்கான குண்டுகள்

உயர் ரக வெடிபொருட்கள் - 60

பாதுகாப்பு உடைகள் - 2,000

குண்டுதுளைக்காத உடற்கவசம் - 4500

பிளாக் உடைகள் - 2,800

பாதுகாப்பு தலைக்கவசங்கள் - 3,245

குண்டுப் பாதுகாப்பு வாகனங்கள் - 10

25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறைநிலை கொள்கலன்கள்

சிறிய உளவு இயந்திரங்கள்

குண்டு துளைக்காத வாகனங்கள் - 10

இரவுப்பார்வைச் சாதனங்கள் - 400

கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள் - 50

3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொலைத்தொடர்பு சாதனங்கள் இவற்றில் இன்ரெல் பி -4 கணணிகள், அவற்றுடனான யுஎஸ்பி 200

உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்கள் - 35

மின் நிறுத்த பலகைகள் - 25

பாதுகாப்பான தளங்கள் - 35,

யுஎச்எஃப் கையடக்க சாதனங்கள் - 350 என்பன இதில் அடங்கும்.

பொறியியல் சாதனங்களை கொண்ட 1.2 மில்லியன் டொலர் பொருட்களும், 4.4 மில்லியன் டொலர் பெறுமதியான உடைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 8,550 குண்டுதுளைக்காத உடற்கவசங்கள், 12,300 பிளாக் உடைகள், 22,733 பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன வழங்கப்பட்டன.

இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டிக்கு நாசகார ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கி அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்காவினால் நடத்தப்பட்டு வரும் கொடூரமான போரை உக்கிவித்து வருவது மிகவும் வருந்தத்தக்கது என அவதானிகள் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

No comments: