Sunday, April 15, 2007

புலிகளின் வலையமைப்புத் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வுத்துறை தகவல் சேகரிப்பு!



தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள வலைப் பின்னல் தொடர்பான விபரங்களை இந்திய மத்திய புலனாய்வுத்துறை சேகரித்து வருகின்றது.

ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட உலகின் 17 நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலைப் பின்னல்கள், மற்றும் தொடர்பாடல்கள் குறித்தே தகவல் சேகரிக்கப்படுகின்றது.

இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கு பற்றிய இறுதிக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவினரே இந்தத் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல நாடுகள் விடுதலைப் புலிகள் பற்றிய தகவலை வழங்க மறுத்திருப்பதுடன், தமது தகவல்களை இந்திய அரசு தவறாகப் பயன்படுத்த முடியும் எனவும் அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தகவல்களை வழங்கிய நாடுகள், இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தமது தகவலின் அடிப்படையில் மரண தண்டனை வழங்கக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த வாரம் கொழும்புக்குச் சென்ற, ரஜீவ் காந்தியின் கொலை வழக்கு பற்றிய இறுதிக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், விடுதலைப் புலிகளின் வலையமைப்பு பற்றி சிறீலங்கா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நன்றி>பதிவு.

No comments: