Tuesday, April 03, 2007

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 14 பேர் கடத்தல்: உருட்டுக்கட்டையால் அடித்து சிங்களகுண்டர்கள் சித்ரவதை!!!

இதுவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி யில் இருந்து மீன் பிடிக்க செல்பவர்களைதான் சிங்கள கடற்படையினர் தாக்கி வந்தனர்.....

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் 5 மீனவர்கள் பலியாகி விட்டனர்.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து நாகர்கோவிலில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிங்கள கடற்படையினரின் காட்டு மிராண்டி தனத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் 14 பேரை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று சித்ரவதை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

கடந்த 28-ந்தேதி பாம்பனில் இருந்து செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆர்.எம்.எஸ். 2673, இன்னாசி என்பவருக்கு சொந்தமான ஆர்.எம்.எஸ். 3191, மைக்கேல் ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான ஆர்.எம்.எஸ். 2688 என்ற எண்கள் உள்ள என்ஜின் பொருத் தப்பட்ட 3 நாட்டு படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

கிறிஸ்துராஜ், சுரேஷ், தாவீது, கொலம்பஸ், அடிமை, செல்வம், மில்டன், ரீகன், ராஜ், அமுதன், மரியடேவிட், குழந்தை, ராயப்பன், கென்னடி என்ற 14 மீனவர்கள் 3 படகுகளிலும் மீன் பிடிக்க சென்றனர்.

கடந்த 29-ந்தேதி நடுக்கட லில் வலைவிரித்து அவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது 6 விசைப் படகு களில் சிங்கள மீனவர்கள் விரைந்து வந்தனர். அவர்களது கைகளில் உருட்டுக்கட்டை, அரி வாள், கத்தி போன்ற பயங்கர ஆயு தங்கள் இருந்தன. பாம்பன் மீனவர்களை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கிய அவர்கள் 3 படகுகளுடன் 14 மீனவர்களை கடத்தி சென்றனர்.

தலைமன்னார் அருகே உள்ள கல்பட்டி என்ற இடத்தில் 14 மீனவர்களையும் ஒரு வீட்டில் சிறைவைத்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்தனர். "எங்கள் எல்லையில் வந்து மீன் பிடிப்பதால் எங்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. மேலும் எங்கள் வலைகளை தமிழக மீனவர்கள் அறுத்து எறிந்து செல்கின்றனர். எனவே தான் தமிழக மீனவர்களை எச்சரிக்கை செய்வதற்காக உங்களை கடத்தி வந்து இருக்கிறோம் என்று கூறி சிறைவைத்தனர்.

தொடர்ந்து 3 நாட்கள் சிறை வைத்து அடித்து உதைத்த சிங்கள மீனவர்களிடம் பாம்பன் மீனவர்கள் கெஞ்சி கூத்தாடிய பிறகு நேற்று திடீரென 14 மீனவர்களையும் 2 படகுகளில் ஏற்றி திருப்பி அனுப்பினர். 3191, 2688 என்ற 2 படகுகளிலும் 14 மீனவர்களும் இன்று அதிகாலை பாம்பன் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

3 நாட்கள் உருட்டுக்கட்டை அடிவாங்கியதுடன் சாப்பாடு எதுவும் சாப்பிடாததால் பாம்பன் மீனவர்கள் 14 பேரும் சோர்ந்து காணப்பட்டனர். கரைக்கு திரும்பிய அவர்கள் தங்களை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று சிறைவைத்து சித்ரவதை செய்தது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் செய்தனர். போலீசிலும் இதுகுறித்து புகார் செய் யப்பட்டது.

முதல் உதவி சிகிச்சைகளுக்கு பிறகு 14 மீனவர்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.

இந்த சம்பவம் பாம்பன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
maalaimalar.com
நன்றி : Tamilwin.com

1 comment:

Anonymous said...

"அவர்களது கைகளில் உருட்டுக்கட்டை, அரி வாள், கத்தி போன்ற பயங்கர ஆயு தங்கள் இருந்தன."

இவர்கள் என்ன மீனவர்களா? அல்லது குண்டர்களா?

இதற்க்கு ஏ.கே அந்தோனி என்ன சொல்லப்போகிறார்? புலிகள் தாக்கியிருக்க வாய்ப்பு இருக்கும்மெனப் போறாரா?