Friday, April 13, 2007

இந்திய கடற்படைத் தளபதி விடுதலைப் புலிகளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பழ. நெடுமாறன்.

இந்திய கடற்படைத் தளபதி விடுதலைப் புலிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை விடுதலைப் புலிகளே சுட்டுக்கொன்றுவிட்டு, சிறீலங்கா கடற்படை மீது பழி சுமத்தி வருவதாக, இந்திய கடற்படைத் தளபதி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற 12 சிங்களவர்களை இந்திய கடலோரக் கடற் படையினர் கைது செய்திருப்பதன் மூலம் உண்மை தெரிய வந்திருப்பதால், பழ. நெடுமாறன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள சிங்களவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் எனவும், சுட்டுக் கொல்லப்பட்ட 5 கன்னியாகுமரி கடற்றொழிலாளர்களுக்கும் சிறீலங்கா அரசு நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி>பதிவு

No comments: