Thursday, November 30, 2006

கொழும்பில் குண்டு வெடிப்பு!!!





குண்டுத்தாக்குதலில் தப்பிய கோத்தபாய ராஜபக்சவை கட்டியணைக்கும் மகிந்த.

சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர், கோத்தபாய ராஜுபக்சவை இலக்கு வைத்து நடாத்தப்பட்டதாக கருதப்படும் குண்டு தாக்குதல் இன்று காலை கொழும்பில் இடம் பெற்றுள்ளது. என சர்வதேச செய்தி நிறுவனங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளனர்.

இதே வேளை இந்த தாக்குதலில் கோத்தபாய ராஜபக்ச காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளதாக, சிறீலங்கா இராணுவப்பேச்சாளர் சமரசிங்க தெரிவித்தார். என ஏ.எப்.பி டிசெய்தி வெளியிட்டுள்ளது.


ஆனால், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இது பற்றி மேலதிக விபரங்கள் தெரிவயில்லை என்றும் கொழும்பு நகரில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி: தமிழர் இணைப்பகம்.

பிந்திக்கிடைத்த செய்திகளின் படி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், கால்பிட்டிய பித்தளைச்சந்தியில் கோத்தபாய சென்று கொண்டிருந்த வாகனத்தொடரணி மீதே தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கோத்தபாய ராஜுபக்ச அலரிமாளிகையில் பத்திரமாக இருப்பதாகவும். அறியப்படுகின்றது.

இத்தாக்குதலில் 8 வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக சக்தி வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment:

Anonymous said...

பாவிப்பயல் தப்பிட்டானா?