Tuesday, November 28, 2006

மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்கவேண்டும்-திருமாவளவன்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை வரவேற்றதற்கு இந்திய மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தொல். திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும்போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வந்தார். அவரை இந்திய அரசு வரவேற்றது.
இது எட்டுக் கோடி தமிழர்களையும் அவமானப்படுத்திய செயலாகும். மேலும் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் அவரை வரவேற்றது தமிழர்களை அவமானப்படுத்திய செயல் ஆகும்.

இந்த செயலுக்கு தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். அதே நேரத்தில் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் கடற்படையில் கூட்டுப்படை உருவாக்கப் போவதாக தெரிகிறது. அப்படி ஒரு ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசுடன் மத்திய அரசு செய்து கொண்டால் கடுமையான போராட்டத்தை இந்திய அரசு சந்திக்க நேரிடும் என்று அவர் கூறினார்.
நன்றி>புதினம்.

No comments: