Thursday, November 30, 2006

தமிழீழமானாலும், மாற்றுதீர்வானாலும் மகிழ்சி- கருணாநிதி.

இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியான தமிழீழம் ஒன்று உருவானால் தான் மகிழ்ச்சியடைவேன் என்றும் ஆயினும் அனைத்துத் தரப்பாலும் ஏற்கக்கூடிய மாற்றுத்தீர்வு ஒன்று ஏற்பட்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தற்போது தனி ஈழம் ஒன்றே வழி என்று விடுதலிப்புலிகள் அமைப்பின் தலைவர் வே, பிரபாகரன் அவர்கள், கூறியது குறித்து அவரது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதிலளிக்குமுகமாகவே கருணாநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி தான் முன்னரே கூறியிருப்பதாகக் குறிப்பிட்ட கருணாநிதி அவர்கள், தற்போதைய நிலவரம் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியிடம் புதுடில்லியில் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழ் நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டுவது தொடர்பில் தான் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

No comments: