Thursday, November 16, 2006

யாழில் முதல் பட்டினிச் சாவு.

யாழ். குடாநாட்டில் ஒருவர் பட்டினியால் இறந்தது இதுவே முதல் தடவை என்று மரண விசாரணை நடத்தி இறப்புச் சான்றிதழ் வழங்கிய பருத்தித்துறை பதில் நீதவான் நடராஜா தங்கராஜா அறிவித்திருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை யாழ். வடமராட்சியைச் சேர்ந்த 50 வயதான முத்தையா சந்திரபாலா என்பவர் பருத்தித்துறைக்கு அருகே பட்டினியால் மரணமடைந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினியால் மரணமடைந்தவர் ஒரு குடும்ப ஆதரவற்றவர் என்றும் வதிவிடம் அற்றவர் என்றும் உதிரித் தொழில்களை செய்து வந்தவரென்றும் தெரிவித்த மரண விசாரணை நீதவான் இந்த மரணத்தை உணவுப் பற்றாக்குறையுடன் இணைப்பதை தவிர்க்கும்படியும் கேட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை சிறிலங்கா இராணுவம் மூடிவிட்டதால் யாழ். குடாநாட்டு உணவுப்பற்றாக்குறைக்கும் பட்டினிச் சாவுக்கும் உள்ளாகும் என சர்வதேச உதவி நிறுவனங்களும் மனிதாபிமான பணியாளர்களும் எச்சரித்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதனை ஓர் அபாய அறிவிப்பு என்றே செய்தி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி>புதினம்.

No comments: