Friday, November 24, 2006

தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்க இந்தியா கோரும.

இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா கோரும் என இந்துஆசிய சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்படலாம் என இந்திய அரசியல் தரப்புக்களை கோடிட்டு அச்சேவை தெரிவித்துள்ளது. அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்க போவதில்லை என்றும், இலங்கை ஜனாதிபதி இந்திய தலைவர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் போது அதில் தமிழீழ விடுதலைப்புலிகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாது ஏனைய தமிழ் அமைப்புகளையும் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கை இதில் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினையை இந்தியாவின் எண்ணப்படி தீர்ப்பதற்கு பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் செல்லலாம் எனவே அது தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில்லை என்ற முடிவை இந்திய தரப்பு கொண்டுள்ளதாகவும் நாரயண்சாமி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.

No comments: