Sunday, November 26, 2006

மாவீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.


இதுவரை வீரமரணம் அடைந்த எமது காவல் தெய்வங்களுக்கு, எமது வீர வணக்கங்கள்.

சர்வதேசமே எதிர்பார்க்கும் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை.

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒன்று சேரப்போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் நாளை திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நாளை திங்கட்கிழமை தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் புனித வேளை தொடங்குவதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உரையைத்தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு ஒரு மணித்துளி நேரம் மணியொலி எழுப்பப்படும்.

தொடர்ந்து 6.06 மணிக்கு மாவீரர்களுக்காக அகவணக்கம் செலுத்தப்படும்.

அதனைத்தொடர்ந்து 6.07 மணிக்கு சுடரேற்றப்படும்.

ஐந்து ஆண்டு சமாதான காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எந்த ஒரு சரத்தையுமே சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றாத நிலையில்
கடந்த ஆண்டு மகிந்த அரச தலைவராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு உரிய கால அவகாசம் கொடுத்து உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளாது போனால் எமது விடுதலைப் போராட்டத்தை தொடங்க நேரிடும் என்று எச்சரித்திருந்த நிலையில்

யாழிலும் வாகரையிலும் 6 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் பட்டினிச்சாவுக்கு முகம் கொடுக்கின்ற நிலையில்

சர்வதேச சமூகத்தின் குற்றவாளிக் கூண்டில் சிறிலங்கா நிறுத்தப்பட்டுள்ள நிலையில்-
சர்வதேச சமூகத்தை மட்டுமே நம்பி அமைதிப் பேச்சுக்களில் தமிழர் தரப்பு பங்கேற்றும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில்

இனியும் எதுவுமே செய்ய முடியாத நிலையில்

தென்னிலங்கையும் சர்வதேச இராஜதந்திரிகளும் நாளை தேசியத் தலைவர் ஆற்றவுள்ள உரை குறித்த ஆருடங்களையும் கட்டுரைகளையும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவரின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சர்வதேசம் இப்போது காத்திருக்கிறது.
நன்றி>புதினம்.

2 comments:

Anonymous said...

எம்மூர்க் காவாற் தெய்வங்களான மாவீரர்களுக்கு என் வீரவணக்கஙகள்!

Anonymous said...

VEERA VANAKKAM

trinco boys