Friday, December 29, 2006

மகிந்தவின் பதுங்கு குழியை அம்பலப்படுத்திய சண்டேலீடர்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனதும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக இரகசியமாக அமைத்து வரும் 400 மில்லியன் ரூபாய் செலவிலான பதுங்கு குழி தொடர்பான தகவல்களை வெளியிட்டதற்காக சண்டே லீடர் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு குற்றப் புலனாய்வுத்துறையை பணித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் லசந்த விக்கிரமதுங்கவிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ஊடகவியலாளர்கள் சண்டே லீடர் பத்திரிகை காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை சூழ்ந்து கொண்டனர்.

அரசினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டமும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகளும் இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை மிகவும் பாதிக்கும் என்று சுதந்திர ஊடக அமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது.

தொடர்புபட்ட செய்தி: 400 மில்லியன் ரூபாய் செலவில் மகிந்த அமைக்கும் பதுங்கு குழி
நன்றி>புதினம்.

No comments: