Thursday, December 28, 2006

சிறிலங்கா அரசின் ஊழல் விவகாரம்: அமெரிக்கா கவலை?

சிறிலங்காவில் அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து அந்த நாட்டு அரசு அக்கறை கொள்வதில்லை என்று அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு கவலை தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல் தருகையில், சிறிலங்கா அரசு அந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்று தெரிவித்துள்ளன.

சிறிலங்காவில் எந்த கூட்டு உடன்பாடுகளும் இல்லாததால் கண்காணிப்பு அமைப்புக்கள் அரசியல், பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக மிரட்டப்படலாம் என்று அச்சமடைகின்றன.

அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள ஜனநாயக நடைமுறைகளை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆசியப் பிராந்தியத்தில் ஜனநாயகத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று அது விரும்புகிறது.

இந்த குழு சிறிலங்கா, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, ஆபிரிக்கா, மத்திய ஐரோப்பா, மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
http://www.eelampage.com/?cn=30261

No comments: