Thursday, December 14, 2006

இலங்கைக்கு வெடிபொருள் சப்ளை செய்கிறதா தமிழ்நாடு?


-குமுதம் ரிப்போர்ட்டர்-

இலங்கைக்கு வெடிபொருள் சப்ளை செய்கிறதா தமிழ்நாடு? - வெடிபொருள் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் பகீர் பேட்டி.

இலங்கை ராணுவத்திற்கு இந்திய வெடிபொருட்கள் சப்ளையாகி வருவதை, மேலூர் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி சென்ற இதழில் நாம் விரிவாகவே வெளியிட்டுள்ளோம். இதனை மையப்படுத்தி டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘இலங்கைக் கடற்படைக்கு வெடிபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத் தலைவர்கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


இதற்குப்பதில் அளிக்கும் விதமாக,டெல்லியில் இருந்து கருணானிதி பதில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் வெடி பொருள் சப்ளைக்கு மத்திய அரசு எந்த வித அனுமதியும் அளிக்கவில்லை' என்று தான் விசாரித்ததில் தெரியவந்துள்ளதாக அறிக்கை கொடுத்திருக்கிறார் முதல்வர்.

டெல்லியில் இருந்த முதல்வர் கருணானிதி, மத்திய அமைச்சர் தயானிதிமாறன் மூலம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் , பிரணாஜ் முகர்ஜிடம் 'வெடி மருந்து சப்ளை' விவகாரம் சம்பந்தமாக விசாரித்துள்ளார். இதற்கு 'அப்படி எந்த அதிகார பூர்வமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை' என்று அமைச்சர் பிரணாஜ் முகர்ஜி பதில் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியை 9.12.06 அன்று நேரில் சந்தித்து இது குறித்துப் பேசியுள்ளார். அப்போது' வெடிமருந்து சப்ளைக்கு எதுவும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், உடனே இது குறித்து விசாரணை நடத்துவதாகவும் முதல்வரிடம் அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.

இவ்விசயத்தை முதல்வர் இதோடு விட்டுவிடவில்லை.' வியாபார ரீதியாக அரசுக்குத் தெரியாமல் எதாவது நடந்திருக்குமா என்பது குறித்தும் உடனடியாக விசாரித்து அறிய, தமிழக காவல் துறைக்கு டெல்லியில் இருந்தே முதல்வர் கருணானிதி உத்தரவிட்டுள்ளார்.

இத்தனை காரியங்களையும் செய்துவிட்டுத்தான், தமிழக முதல்வர், ராமதாஸின் அறிக்கைக்குப் பதில் அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தமிழக அரசின் இந்த அறிக்கையை அதிரடியாக மறுக்கின்றனர் 'டெல்' என்கிற தமிழ்னாடு வெடிமருந்து நிறுவனத்தினைச் சேர்ந்த தொழிற்ச்சங்கத்தினர்.

'தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் துளியும் உண்மையில்லை'. இந்த 'டெல்' தொழிற்ச்சாலையில் இருந்து கடந்த 88ம் ஆண்டு முதல் இலங்கைக்கு வெடிபொருட்கள் சப்ளையாகிறது. இலங்கையைச்சேர்ந்த அக்ரம் என்பவர் 'ஸிட்டர்ஸ்' என்கிற பெயரில் சரக்கை எடுக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட, ஒரு லோடு வெடிபொருள் சப்ளையானது.அதுமட்டுமில்லாமல
, அடுத்தமாதமும் ஒரு லோடு கேட்டு அட்வான்ஸ் புக்கிங் செய்துள்ளார்.

சிறிலாங்காவிற்கு மட்டுமல்லை, ஜோர்டன், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கூட எங்கள் தொழிற்ச்சாலையிலிருந்து வெடிபொருட்களை வாங்க ஏஜெண்டுகள் இருக்கின்றனர்.

கடந்த ஆண்டுவரை இங்கு முதன்மை இயக்குனராக இருந்த திரிபால் ஜ.ஏ.எஸ் அவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியுமே. தற்பொழுது திரிபால் தமிழக முதன்மைச் செயலாளராக இருக்கும் வேளையில், முதல்வருக்கு இது குறித்து தெளிவாக விளக்கியிருக்கலாமே" என்று கேட்டவர்கள் "தயவு செய்து எங்கள் பெயரை வெளியிட வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இவர்கள் சொல்வது உண்மையென்றால், தமிழக முதல்வர் அதிரடியாகப் பல இடங்களில் விசாரித்துவிட்டு வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கு என்ன அர்த்தம்?. இதற்கு முதல்வர் தான் பதில் சொல்லவேண்டும்.
நன்றி> குமுதம் ரிப்போர்ட்டர்

1 comment:

Anonymous said...

INDIA plays Dirty Game.

Chennai Tamilan