Wednesday, December 13, 2006

சிங்களக் கிராமங்களில் பதுங்கு குழிகள்.

ஹொரவப்பொத்தான, சேருநுவர உட்பட பல்வேறு சிங்கள குடியேற்ற கிராமங்களில் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு சிறிலங்காப் படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஹொரவப்பொத்தான பிரதேசத்திலுள்ள சிங்களக் கிராமங்களான, கல்லாறு, சேருநுவர, சிறீமங்களபுர, றைற் லிங் வன், றைற் லிங் ரூ, லெப்ட் லிங் ரூ, மேதகம உட்பட, பல்வேறு எல்லைக் கிராமங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

சில சிங்களக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கிராமிய விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இதற்கான முன்னெடுப்புக்களை உடன் மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது.

சிங்கள கிராம மக்கள் தற்போது இடம்பெயர்ந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிங்களக் கிராமங்கள் எறிகணை வீச்சுக்களால் பாதிப்படைந்ததால், அப்பகுதி மக்கள், தங்கள் பாதுகாப்புக்காக, ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழி அமைக்கும்படியும், அரசு இதற்கு உதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: