Tuesday, December 05, 2006

அதிகளவில் இளைஞர்கள் மனிதஉரிமைகள் ஆணையத்தில்சரண்.

யாழ்பாணத்தில் அண்மைக்காலத்தில் சிறீலங்கா படையினரால் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களாலும், இளைஞர்கள் தாம் சிறீலங்கா இராணுவத்தால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுவோம் என்ற பயம் காரணமாக மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடைந்து வருவதல் அதிகரித்து வருவதாக மனிதஉரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த இரு மாதத்தில் மாத்திரம் யாழ்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 இளைஞர்கள் இவ்வாறாக சரணடைந்துள்ளதாகவும் பின் இவர்கள் யாழ் நீதிவான் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு யாழ் சிறையால் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை ஒரு இளைஞனும், செவ்வாய் கிழமை ஒரு பாடசாலை மாணவன் உட்பட இருவர் சரணடைந்ததாக அறியமுடிகிறது.
நன்றி>பதிவு.

No comments: