Friday, December 08, 2006

சிறிலங்கா கடற்படையினருக்கு இந்திய வெடிபொருட்கள்!!!

சிறிலங்கா கடற்படையினரின் பாவனைக்காக மகாரஷ்ர மாநில நாக்பூரில் இருந்து வெடி பொருட்கள் அடங்கிய லொறி மதுரை வந்த்போது அதனை சோதனையிட்டனர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள் மதுரை பொலிஸார்

என இந்திய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது ஆனால் இதற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வந்தமையினால் பொலிஸார் பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதித்தனர்.

இதேவேளை மத்திய அரசு உத்தரவாதத்தையும் மீறி ஆயுத உதவி செய்வது குறித்து தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

40 பெட்டிகளில் வெடிமருந்துகள் டெட்னேட்டர்கள் மற்றும் 4 லட்சம் ரூபா மதிப்புள்ள வெடிபொருட்கள் மேற்குறித்த லொறியில் காணப்பட்டதாகவும் நாகபூர் சோலார் எக்ஸ்புளோசிங் நிறுவனத்தின் வெடிப்பொருட்கள் எனவும் தூத்துக்குடியில் இருந்து கடல்மூலமாக இலங்கைக்கு வெடிப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இலங்கையில் உள்ள ரக்சமா- வல்சரா என்ற கடற்படையினரின் ஆயுத களங்சிய சாலை என முகவரி ஆவனங்களில் இருந்து பெறப்பட்டதாவும் பொலிஸார் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி>லங்காசிறீ.

No comments: