Monday, December 18, 2006

சிறிலங்கா வான் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி!!!

சிறிலங்கா வான் படையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு அரசின் அண்மைய கொள்முதலான மிக்-27 ரக ஜெட் போர் விமானங்களை ஓட்டுவதற்கு இந்தியாவின் வான் படைப் பயிற்சி நிலையமான சண்டிகாரில் பயற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ஒக்ரோபரில் தொடங்கிய இந்தப் பயிற்சி எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழு பயிற்சி முடிந்து வந்ததும் மூன்றாவது குழு பயிற்சி பெறச் செல்லும் என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா வான் படை 1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது. தற்போது இந்தியாவில் பயிற்சி பெற்று வருகிறது என ரைம்ஸ் ஓஃப் இந்தியா செய்தி ஊடகம் கூறுகிறது.
நன்றி>புதினம்.

No comments: