Tuesday, December 26, 2006

சுனாமியின் 2ம் ஆண்டு நிகழ்வில் வான்கலங்கள் தாக்குதல்.

சிறீலங்கா இராணுவத்தின் கிபிர் வான்கலங்கள் இன்று செவ்வாய் காலை 9.25 மணியளவில் வாகரை கதிரவேலி வாழைச்சேனைப் பகுதியல் விக்னேஸ்வர் ஆலயத்தில் சுனாமியின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தியுள்ளன.

இதேவேளை மாங்கேணி, கஜவத்தை சிறீலங்கா இராணுவ முகாம்களில் இருந்தும் பலத்த எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.

இத்தாக்குதலில் 5 வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.pathivu.com

No comments: