Friday, December 08, 2006

கண்காணிப்பு குழுவிற்கு அரசு விளக்கமளிக்கதேவையில்ல.

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

சிறீலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.2 வது சரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்திருந்தது

இந்த விடயம் குறித்து அரசாங்கம் தமக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்திருந்தது

இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டுள்ளார்.

யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் பதிலளிக்க வேண்டிய தேவை தமது அரசாங்கத்திற்கு கிடையாது என்று அவர் கூறினார்.

புயங்கரவாத நடவடிக்கைகள் தொடருமானால் அதனை கட்டுப்புடுத்துவதற்கு சர்வதேச சமூகத்திடம் ஆலோசனை கேட்கவேண்டிய தேவை தமது அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் ஹெனலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.

No comments: