Sunday, December 10, 2006

இலங்கை பாதுகாப்பபான நாடு அல்ல - பிரித்தானியா!!!



பிரித்தானியா அரசாங்கம் தனது வெள்ளைப் பட்டியலில் (white list) இருந்து இலங்கையை நீக்கவுள்ளது.

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து
இலங்கையைப் பிரிட்டிஷ் அரசு நீக்கும்
மனித உரிமை மீறல்கள் அதிகரித்ததே காரணம்
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பாதுகாப் பான நாடுகள் பட்டியலில் இருந்து இலங் கையை நீக்க உள்ளதாக உள்நாட்டு அலுவலகம் அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு இம்மாதம் 8ஆம் திகதி வெளியிடப்பட்டது.

மக்களுக்குப் பாதுகாப்பான நாடுகள் என்று உள்நாட்டு அலுவலகத்தினால் கரு தப்படும் நாடுகள் "வெள்ளைப் பட்டிய லில்' சேர்க்கப்படுவது நடைமுறையா கும்.

வெள்ளைப் பட்டியலைச் சேர்ந்த நாடு களில் இருந்து ஐக்கிய இராச்சியத்துக்கு சென்று தஞ்சம் கோருவோரின் விண்ணப் பங்கள் தஞ்சம் கோருவதற்கும் குடியுரிமை கோருவதற்கும் அப்பீல் செய்யமுடியாத விதிகள் உள்ளன. நாட்டின் பொதுவான நிலையைக் காரணம் காட்டி தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்கள் உள் நாட்டு அமைச்சினால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதனை எதிர்த்து அப்பீல் செய்வது தடுக்கப்பட்டிருந்தது.

அவரவரின் தனிப்பட்ட பாதுகாப்பு பாதிக்கப்பட்டிருந்ததா என்று அடிப் படையில் அவர்கள் அங்கு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு தங்குவதற்கே வசதி செய்யப்பட்டு வந்தது.

இலங்கையில் 2002ஆம் ஆண்டில் கைச் சாத்தான போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஜூலையில் அது வெள் ளைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால் மனித உரிமைகள் வழக்கறி ஞர்கள் உள்நாட்டு அமைச்சின் இந்த ஏற் பாடுகளை ஆட்சேபித்து வந்தனர்.

இலங்கையை பாதுகாப்பான நாடுகள் (வெள்ளைப் பட்டியலில் ) இருந்துநீக்க வேண்டும் என்று கோரி மேல்நீதிமன்றத் தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந் தது.
அந்த வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 13,14ஆம் திகதிகளில் விசாரணைக்கு வர இருந்தது.
அதற்கு முன்னதாக இலங்கையை "வெள்ளைப் பட்டியலில்' இருந்து நீக்க உள்ளதாக உள்நாட்டு அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்திருக்கிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல் கள் அதிகரித்து வருவதைதத் தொடர்ந்தே அதனை வெள்ளைப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள தாக உள்நாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி>உதயன்

No comments: