Tuesday, December 12, 2006

வாகரை பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா அவசர கோரிக்க!!!

ஐக்கிய நாடுகள் சபை இன்று விடுத்த அவசரகோரிக்கை ஒன்றில் வாகரைப் பிரதேசத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் வாழும், தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீதான எறிகணைத்தாக்குதலை உடன் நிறுத்துமாறும், பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச உதவி நிறுவனங்களை இப்பிரதேசங்களில் செயற்பட அனுமதிக்குமாறும் கோரியுள்ளது. சர்வதேச சட்டங்களை கடைப்பிடிக்கும்படியும் கோரியுள்ளது.

தற்போது இராணுவ நடவடிக்கை இடம்பெறும் பிரதேசங்களில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் யாவும் மீறப்பட்டுள்ளன என்று ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
நன்றி>பதிவு.

No comments: