Sunday, December 24, 2006

ஸ்ரீலங்காவிற்கான உதவிகளை நிறுத்த வேண்டும் - ஜேர்மனி.

புதிய சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பமாகாவிட்டால், ஸ்ரீலங்காவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும் என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவின் சமாதானப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே மேலதிக நிதி மற்றும் பொருளாதார உதவிகளை சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் என ஜோமன் அபிவிருத்தி அமைச்சர் ஹெயிற்மேரி விசோரக-ஸியல் (Heidemarie Wieczorek-Zeul) தெரிவித்துள்ளார்.

ஆழிப் பேரலையின் இரண்டாவது நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் முகமாக பேர்லின் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

ஸ்ரீலங்காவிற்கான அனைத்து உதவிகளையும் தனது அமைச்சு நிறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நடவடிக்கையினை ஏனைய மேற்கத்தைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

http://www.playfuls.com/news_10_6165-Minister-No-Money-For-Sri-Lanka-Without-New-Peace-Process.html

No comments: