Monday, December 18, 2006

நிபுணர் குழு பரிந்துரையை, சிறிலங்கா நிராகரிக்கவுள்ளது.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட 17 பேர் அடங்கிய நிபுணர் குழு பல நாள் ஆய்வுக்குப் பின்னர் தீர்வுத் திட்டப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளை அனைத்துக்கட்சிக் குழுவினால் நிராகரிக்கப்படவுள்ளது என உள்வட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்தப் பரிந்துரையை முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களுக்கு உரிய உரிமையையும் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் அனைத்து நிலையிலும் வழங்க வேண்டும் என்பதே இப்பரிந்துரையின் சாராம்சம்.

இந்தப் 17 பேர் குழுவில், 11 பேர் கையெழுத்திட்ட பரிந்துரை ஒன்றும் இருவர் கையெழுத்திட்ட வெவ்வேறு பரிந்துரைகள் இரண்டும் ஒருவர் சமர்ப்பித்துள்ள பரிந்துரை ஒன்றுமாக மொத்தம் நான்கு பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டன.

இந்த பரிந்துரைகளை ஒருங்கிணைத்துத் தருமாறு அரச தலைவர் மகிந்த கேட்டிருந்தார். எனினும் அதிக அளவில் 11 பேர் கையெழுத்திட்ட பரிந்துரையே அனைத்துக்கட்சிக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கருதப்படுகிறது.
நன்றி>புதினம்.

No comments: