Sunday, December 17, 2006

வல்வையில் 40 வயது பெண், பாலியல் வல்லுறவுசெய்து கொலை.

மக்கள் பயக்கெடுதியில் இராணுவத்தின் அடாவடித்தனம்.
நேற்று முன்தினம் வல்வையில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாய் இராணுவத்தின் சுற்றி வளைப்பில் நிர்வாணமாக்கி ஓட விரட்டப்பட்டு கற்பழித்து கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார் என்று வல்வையில் இருந்து நமது நிருபர் அறிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்மணி வல்வையின் பழம் பெரும் நாடக நடிகர் திரு பெரியதம்பி அவர்களின் மகள் என்றும் கடற்கரும்புலி சிதம்பரத்தின் சகோதரியார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது மரண விசாரணைகள் நடைபெறுவதாகவும், உடலம் கணவன் பிள்ளைகளிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் வல்வை நடராஜா வீதி இராணுவத்தின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும்
அத்தருணம் பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டதாகவும், இராணுவ முற்றுகையால் அந்த இடத்திற்கு யாரும் போக இயலாமல் இருந்ததாகவும் அறிய முடிகிறது. இது குறித்த விசாரணை அறிக்கைகளும், பிரேதபரிசோதனை அறிக்கைகளும் இதுவரை கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பலத்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊர்ஜிதம் செய்யப்பட்ட செய்திகள் கிடைக்க தொடர்பான செய்திகள் வெளிவரும்.

http://www.alaikal.com/index.php?option=co...8&Itemid=34

4 comments:

நாமக்கல் சிபி said...

:(

கானா பிரபா said...

இராணுவ மிருகங்களின் இன்னொரு இழி செயல்.

ஒரு வேண்டுகோள், கற்பழிப்பு என்ற வார்த்தைக்குப் பதில் பாலியல் வல்லுறவு என்பதே ஈழத்தில் தற்போதய வார்த்தைப் பிரயோகம்.

ஈழபாரதி said...

தலைப்பு திருத்தப்பட்டுள்ளது வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, கானாபிரபா,நாமக்கல் சிபி.

Jay said...

nenju valikkiratheeee!!!!!!