Thursday, May 31, 2007

சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு!!!

சிறீலங்கா அரசு கேட்கும் ஆயுத தளபாடங்களை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இன்று சென்னையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாக இருக்கும் போது அண்டை நாடான இலங்கை பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய இந்திய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆயுதங்களை வழங்கப் போவதில்லை. தற்காப்பு ஆயுதங்களையே வழங்கவுள்ளோம் என எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த கடற்ரோந்தே சிறந்த வழிமுறை என நினைக்கிறேன். தமிழக மீனவர்கள் கடல்லெல்லையைத் தாண்டி அத்துமீறி உள்நுழைந்தாலும் அவர்களை சுடவேண்டாம் என இலங்கை அரசிடம் வலியுத்தியுள்ளோம். இதற்கு இலங்கை அரசும் இணங்கியுள்ளது எனவும் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

2 comments:

Anonymous said...

this is very reason they staged the fishmean drama couple of week back.

Anonymous said...

FRAUD நாராயணன் சொல்றதை நம்ப முடியாது. பொறுத்திறுந்து பார்க்கலாம்.

கலைநர் அதை ஒத்துகொண்டிருப்பார் என நான் நம்ப மாட்டேன்