Tuesday, May 15, 2007

சிங்களவர்களுக்குத்தான் சிறிலங்கா: அமைச்சர் சம்பிக்க ரணவக்க!

சிறிலங்காவில் சிங்களவர்கள்தான் வாழ வேண்டும் என்று சிறிலங்காவின் சுற்றுச் சூழல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.


மகரகமவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சம்பிக்க ரணவக்க பேசியதாவது:

சிறிலங்காவில் சிங்களவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். சிங்களவர்கள் வரலாற்று இனம். சிங்களவர்களால்தான் இந்த சமூகம் கட்டமைக்கப்பட்டது. இங்கே இனப்பிரச்சனை ஏதும் இல்லை.

இனப்பிரச்சனை என்பதற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தினால் சிங்களவர்களின் அபிலாசைகளைப் புறக்கணிக்கக் கூடாது. அது சிங்களவர்களின் மனநிலையைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும்.

தற்போதைய அரசமைப்பு முறையானது கிராம சபை நிலைக்கு மாற்றப்பட வேண்டும். சிறிலங்கா எப்போதும் ஒற்றையாட்சித் தன்மை கொண்ட அரசாங்கமாகத்தான் இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 270 ஆக இருக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய பரிந்துரைத்துள்ளது.

தேர்தல்களானது ஒவ்வொரு 6 ஆண்டுக்கும் ஒருமுறை நடத்தப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார முறை கொண்ட அரச தலைவர் அமைப்பை மாற்றியமைக்க கூடாது. அதே நேரத்தில் நீதித்துறைக்கு பதிலளிக்கக் கூடிய அரச தலைவர் பதவி அமைய வேண்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: