
இன்று காலை 9.15 மணியளவில் திருகோணமலை மொறவாவி மாகவிதுலவாவிப் பகுதியில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய புத்தபிக்கு ஒருவர் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறீலங்காப் படைப்புலனாய்வாளர் பிரார்த்தனையில் ஈடுபட்ட பெளத்த துறவி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட புத்தபிக்கு நந்தரத்னதேரோ ( NANDARATHNA THERO ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட புத்தபிக்கு திருமலையில் 2005ம் ஆண்டு நடைபெற்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாரக தமிழில் உரையாற்றியதோடு, பொங்குதமிழ் பிரகடனத்திற்கும் ஆசி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சிறீலங்கா படைப்புலனாய்வாளர்ளாலும் சிங்களக் காடையர்களாலும் கொலை அச்சுறுத்தல்கள் ஏற்கனவே விடுதிருந்த நிலையில் இவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நன்றி>பதிவு.
No comments:
Post a Comment