Sunday, May 20, 2007

சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை யூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவரவுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றம் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது. சிறீலங்கா அரசின் ஜனநாயக மரபுகளை மீறி மனித உரிமை மீறல்கள் தொடர்ப்பில் இந்த தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்த நாடாளுமன்ற ஒன்றுகூடல் பிரான்ஸ் ஸ்ராஸ்போர்க் நகரில் எதிர்வரும் 5ம் நாள் நடைபெறவுள்ளது. இதிலேயே சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டுவரவுள்ளதாகத் தெரியவருகிறது.

அன்றைதினம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 அங்கத்துவ நாடுகளும் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை ஆமோதித்தால் இந்த நாடுகளினால் சிறீலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறீலங்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை இணக்கத்தில் கையெழுத்து இட்டதால்தான் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரக் காரணமாகின்றது.

இதேநேரம் சிறீலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றில் 750 பேர் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே சிறீலங்காவுக்கு எதிராக பிரேரணை சாத்தியமாகும் என அரசியல் அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நன்றி>பதிவு.

No comments: