Saturday, May 26, 2007

நெடுந்தீவில் இருந்த முக்கிய ராடாரை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்:

கடந்த வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு ராடார் நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கிருந்த முக்கியமான ராடார்களையும், ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.


கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:

இந்த தாக்குதலை அடுத்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, 51 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான பிரிக்கேடியர் லிஓநாட் மார்க்கை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பாக விவாதித்ததை தொடர்ந்து அவர் தனது பிரிக்கேட் கட்டளை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நெடுந்தீவை மீட்பதற்கான எதிர் நடவடிக்கைகள் குறித்து திட்டங்களை வகுத்திருந்தார்.

நெடுந்தீவை மீட்பதற்கு இரு பற்றலியன் துருப்புக்கள் தயார்படுத்தப்பட்டன. அந்தப் பகுதிக்கு காங்கேசன்துறை கடற்படைத்தளத்தில் இருந்து 10 டோராக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மேற்கு கரையிலான நடமாட்டங்களை கண்காணித்த ராடார் நிலை அழிக்கப்பட்டுள்ளது. சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நடுக்கடலில் உள்ள தமது கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கும் திட்டத்தையும் விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கு மிக அருகில் உள்ளதனால் அது படையினரின் மேற்கு கரையோர கண்காணிப்புக்களுக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: