Wednesday, May 16, 2007

உலக நாடுகளின் தயவில் நாம் தங்கவில்லை – மகிந்த எள்ளிநகையாடியுள்ளார்!!!

சிறீலங்காவின் ஜகாதிபதி மகிந்தராஜபக்ஸ உலகநாடுகள் சில சிறீலங்காவிற்கான தமது உதவியை இடைநிறுத்தி மற்றும் குறைத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ‘தாம் உலகநாடுகளின் தயவில் ஆட்சி செலுத்த தேவையில்லை எனவும் அவர்கள் உண்மையாக உதவி வழங்கின் ஏற்றுக் கொள்வதாகவும் அவ்வாறு இல்லை எனின் தாம் தமது வேலையை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

உலகநாடுகள் நிபந்தனையுடன் நிதியுதவ முன்வருமாயின் அதனை தாம் ஏற்க தயாராக இல்லை எனவும் தமது சொந்த காலில் இருந்து தமது நாட்டை அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் காரணமாக சிறீலங்காவிற்கான நிதியுதவிகளின் ஒரு தொகுதியை பிரிட்டனும், அமெரிக்காவும் இடைநிறுத்தியுள்ளன. இதேவேளை சுவீடனும், ஜப்பானும் இதனை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
நன்றி>பதிவு.

No comments: