Wednesday, May 16, 2007

கருணா குழு முகாம்களை உடனே மூட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்.

சிறிலங்கா அரசாங்கப் பகுதிகளில் உள்ள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் முகாம்களை உடனே மூட வேண்டும் என்று அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.


படையணிகளில் சிறார் சேர்ப்பு குறித்து அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையத்தின் பாதுகாப்பு சபைக்கான செயற்பாட்டுக் குழு வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா துணை இராணுவக் குழுவினரின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி ஜோ பெக்கர் தெரிவித்துள்ள கருத்து:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறார்களை படையணிகளில் சேர்த்து வரும் கருனா குழுவின் அனைத்து முகாம்களையும் சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக மூடவேண்டும்.

ஆயுதம் தாங்கிய கருணா குழுவினர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்க வேண்டும்.

ஆட்கடத்தல்கள் மற்றும் சிறார் சேர்ப்பு தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: