Thursday, May 17, 2007

சிங்கக்கொடியை ஏற்றிவாறு சென்ற இழுவைப் படகு மாலைதீவுக் கடற்பரப்பில் மூழ்கடிப்பு!

மாலைதீவு தென்கடற் பிரதேசத்தில் பயணித்த இழுவைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சிறீலங்கா கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாலைதீவு தென் கடற்கரை ஓரத்தில் சென்றுகொண்டிருந்த இழுவைப் படகை வழிமறித்த மாலைதீவு கரையோரக் காவல் கடற்படையினர் 12 மணி நேரம் இழுவைப் படகை முற்றுகைக்குள் வைத்துள்ளனர்.

இதன்பின்னர் இழுவைப் படகை மாலைதீவின் கடலோரக் காவல்படையினர் பீரங்கிவேட்டுக்களைத் தீர்த்து மூழ்கடித்ததோடு படகில் இருந்து ஜவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தென்னிந்தியாவைச் சேர்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் மலையாள மொழி பேசுகின்றார் எனவும் மலைத்தீவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட ஐவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அகமட் அகமட் ஹெசின் தனது கூற்றை வாபஸ் பெற்றுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரின் உரை தமிழ் மொழி போன்று இருந்ததால் முதல் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட நேர்ந்ததாகவும் மாலைதீவு தலைமைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தமது அமைப்பு எதுவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

No comments: