Sunday, May 20, 2007

மீனவர்களைக் கடத்தியது சிறீலங்கா கடற் படையினரே! கடத்தப்பட்ட சிறுவன் வாக்குமூலம்.


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 கடற்தொழிலாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் காணமல் போயிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இராமேஸ்வரம் வடக்கே உள்ள பிசாசுமுனையில் மற்றும் தங்கச்சிமடத்தில் கரைதிரும்பியிருந்தனர்.

இந்த நிலையில் கரைசேர்ந்த மீனவர்கள் உடனடியாக தமிழக காவல்துறையினரால் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தமிழக முதல்வர் கலைஞர் கருனாநிதியைச் சந்தித்த பின்னர் தமிழக காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறையினரின் விசாரணையின் பின்னர் அவர்களது சொந்த இடங்களுக்குத் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணையின் பின்னர் விடுதலைப் புலிகள் தான் மீனவர்களைக் கடத்திச் சென்றதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்திருந்த நிலையில் கடத்தப்பட்டிருந்த சிறுவனான 13 அகவையுடைய அனித்தன் தங்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள் அல்ல சிறீலங்கா கடற்படையினரே கடத்திச் சென்றதாக மக்கள் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் இந்த வாக்குமூலம் பலரையும் வியப்புக்குள் ஆழ்தியதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது.

மூகமூடியணிந்த நபர்கள் தங்களை படகு மூலம் கடத்திச் சென்று சிறீலங்கா கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் தங்களை சிறீலங்கா கடற்படையினர் என கூறிக்கொண்டார்கள் அத்துடன் தங்களைக் கடத்திச் சென்ற முகமூடிதாரிகளும் சிறீலங்காப் கடற்படையினருடன் இணைந்திருந்தார்கள்.

கடத்திச் செல்லப்பட்ட நாங்கள் 13 நாட்கள் வீடு ஒன்றினுள் தங்கவிடப்பட்டதாகத் அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தங்களை சிறீலங்கா கடற்படையினரே கடலில் கொண்டு வந்து விடுவித்ததாகவும் அச்சிறுவன் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

No comments: